"Peace be with you." "And peace be with you as well."
முகத்தைக் கழுவினால் எப்படி புத்துணர்ச்சி கிடைக்கிறதோ அது போல கையை கழுவும் போது மனக் குழப்பம் அகல்கிறது என்கிறது ஒரு ஆராய்ச்சி.
அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழக உளவியல் வல்லுனர்கள் செய்த ஆய்வின் முடிவில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
சிக்கலான நேரங்களில் கை கழுவிவிட்டு வந்தால் தெளிவாக முடிவெடுக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைகளை சுத்தம் செய்வதும உடலியல் ரீதியாக அழுக்கு, கிருமிகளை மட்டும் சுத்தம் செய்வதில்லை.
உளவியல் ரீதியாக அந்த நேரத்துக்கு முந்தைய குழப்பங்கள், அவசியமற்ற பழக்கங்களில் இருந்தும் விடுதலை தருவதாக அமைகிறது. எனவே குழப்பங்களுக்கு தீர்வு காண்பது எளிதாகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
நாமும் ஏதேனும் பிரச்சினையில் சிக்கி குழம்பும் போது கையை கழுவிவிட்டு யோசிப்போம். தீர்வு கிட்டும் என்று நம்புவோம்.
‹
›
Home
View web version