என் வேண்டுதல்...!
இறைவா…!
அன்புக்கு அடையாளமாக
எப்பவும் தோற்பது நானாகவே இருக்கட்டும்
மற்றவரை ஜெயித்து
மகிழ்ச்சி அடைய என் மனம் விரும்பவில்லை
வலிகளும் வருத்தமும் எனக்குக் கொடு !
வசந்தமும் வாசமும் பிறருக்குக் கொடுக்கணும் !
சுமைகளையும் சோகத்தையும் எனக்குக் கொடு !
சுகத்தையும் சுதந்திரத்தையும் பிறர்க்குக் கொடுக்கணும் !
இழப்பையும் இறப்பையும் எனக்குக் கொடு !
இனிமையையும் இன்பத்தையும் மற்றவர்க்குக் கொடுக்கணும் !