Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com
புதிய பூமி

கலகம் இல்லா உலகம் காண்போம்;
"ஒன்றே குலம்-ஒருவனே தேவன்"
நன்றாய் மனம், மொழி,மெய்யால்
நடத்தி காட்டுவோம்;
தாயும் ஒன்றே- தந்தையும் ஒன்றே ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே? படைத்தவன் ஒருவனுக்கே பயந்து விட்டால்....
படைப்பினம் யாவும்
வசமாகும் நம்மிடம்!!!
சமத்துவம் என்னும்
மரத்தினை
வேரறுக்கும்
சுயநலக் கோடாரியைத் தொட வேண்டா.
இவையெல்லாம்
இன்றே நடந்து விட்டால்.....
ஆதாம் ஏவாள்
ஆனந்தமாய் உலா வந்த
சுவனத்து சுகம்போல்

அமைதி பூங்காவாய்

அகிலமே மாறிவிடும்...



கவனமாகயிரு...

இளைஞனே
வாழ்க்கையை லட்சியத்தோடு வாழ்ந்து
வெற்றி பெறவேண்டிய நீ
சிலரது வார்தைகளில்
உன்னை இழந்து விடாதே
கவனமாகயிரு…

மருத்துவனாக
கணினியாளனாக
கணிதமேதையாக
விஞ்ஞானியாக
பொறியாளனாக
இதில் ஏதோயொன்றாய்
நீ சமைந்திடவே
உன்னைசமைத்தவர்களின்
கனவு
அதை கலைப்பவர்களின்
கைகளில் சிக்கிவிடாதே
கவனமாகயிரு…

பள்ளிப் பாடநூல்களை
சுமக்கவேண்டிய உன்கரத்தில்
கலவரச்செய்திகளையும்
மதவாத பிரச்சனைகளையும்
சுமந்து வரும்
பத்திரிக்கைகள்
திணிக்கப்படுதை அனுமதிக்காதே
கவனமாகயிரு…

கல்லூரி வாயில்களில் சில
புல்லுருவிகளின் கோலங்கள்
உன் தோழமைக் கண்ணோட்டத்திற்கு
அவர்கள் உனக்கு அணியவிக்கப்படுவது
மதவாத கண்ணாடி
கண்ணிலியாய் நீ
உன் வகுப்புத் தோழர்களுடன்
வகுப்புவாதம் செய்வதற்கு
கவனமாகயிரு…

சமுதாயம் என்ற சாயத்தில்
உன்னை நிறமேற்றி
உனக்கு வர்ணத்தை கொடுப்பதற்கு
சிலர் தருணத்தை தாரைவார்க்க
தயாராகி இருக்கிறார்கள்
கவனமாகயிரு…

எங்கோ நிகழக்கூடிய
சில சம்பவங்கள்
படமெடுக்கப்பட்டு
உன் சிந்தனை அரங்கில்
திரையிடுவதற்கு
திட்டங்கள் தயாராகி
வினியோகிக்கப்படுகிறது
கவனமாகயிரு…
தடுக்கப்படுகிறோம்
ஒடுக்கப்படுகிறோம்
நசுக்கப்படுகிறோம்
என்ற தலைப்புகளில்
மூலைச்சலவைகள் செய்து
முணைப்போடு
முயற்ச்சிப்பார்கள்
மருள்கொள்ளாதே
கவனமாகயிரு…

வேதத்தை காண்பித்து
உனக்கு ஞானம்போதிக்கின்றோம்
கலங்கரை விளக்காய்
நேர் வழிகாட்டுகின்றோம் என்று
மெய்ஞ்ஞானியாகவேண்டிய
உன்னை
அஞ்ஞானியாக்கி விடுவார்கள்
கவனமாகயிரு...

மனிதநேயத்தை
நீ விதையுண்டுருக்கிறாய்
அது துளிர்விடுவதை துண்டித்து
தீவிரவாதம் பேசி
சுதந்திரமாய் வாழவேண்டிய
உன்னை
நான்கு சுவற்றுக்குள்
சிறைவைத்து விடுவார்கள்
கவனமாகயிரு…

நீ என்பது
இன்னொருவரின்
ஆளுமையல்ல
நீ சுயமிக்கவன் சூத்திரம் நிறைந்தவன்
உன் பலம் தெரியாமல்
உன்னை பலவீனர்களிடம்
ஒப்படைத்து விடாதே
கவனமாயிரு….!
யார் நீ..?!

உணர்ச்சிவசப்படுவது
ஆரோக்கியமல்ல...!

இது,
சிரிப்பவர் உலகம்..
உன் கண்கள் மட்டும்
ஒழுகுவதேன்..?

இது,
இருப்பவர் உலகம்..
திருவோட்டை
நீ இன்னும்
தழுவுவதேன்..?

நண்பா..
முட்டைக்குள்
கருவை வைத்தான்..
கருவுக்கு..
காற்றும் வைத்தான்..

ஆனால் உனக்கு..
ஆறாம்
அறிவை வைத்தான்..!

உனக்கென்ன..

சிறு பிராயம்
விளையாட மட்டும் தானா..?

இளமை..
காதல் கேளிக்கைக்கு
அர்ப்பணமா..?

முதுமை என்ன
சம்சார வாழ்க்கைக்கும்
சாரயத்திற்கும்
தர்ப்பணமா..??

நண்பா..

வாடிக்கொண்டிருப்பது
உன் வாழ்க்கைச் செடி..
உரமிட ஊரை அழைப்பது
மடமையடா..!

கீழே..
விழுந்துவிட்ட
வைரத்தை தேடும்போழ்துதான்..
அதன்
விலை மதிப்பே புரியும்
மனிதனுக்கு..!!!

***
உன்னைச் சுற்றிப் பார்..

நீராவதில்
நீருக்குச் சிரமமில்லை..
அது நீரின் தர்மம்..

நெருப்பாவதில்
நெருப்புக்கும் சிரமமில்லை..
அது நெருப்பின் தர்மம்..!

வீசுவதில்
காற்றுக்குச் சிரமமில்லை
சுற்றுவதில்
பூமிக்கும் சிரமமில்லை..!

ஆனால் மனிதா..

மனிதனாவதில் மட்டும்..
உனக்கு
ஏன் இவ்வளவு சிரமம்..???!!!
குறைகள்...

அது
இல்லாமல் இருக்க
நாம்..
இறையும் அல்ல..

அதைச்
சுட்டுபவர்கள்
நக்கீரர்களும் அல்ல..!

குறைகளை களையவே
மனிதப் பிறப்பு..
குறைகளை
களைந்துவிட்டால்
இனி ஏது பிறப்பு..??

இங்கே..
யாருக்கு இல்லை
குறை..?

குறையுள்ளவந்தானே
நிறையைத் தேடி
அலைகிறான்..

பையின் கணம்
குறையும்போது
பணத்தைத் தேடி
அலைகிறான்..

அனைக்கும்
அன்பு
குறையும்போது
காதலைத் தேடி
அலைகிறான்..

உடலில்,
வாலிபம்
குறையும்போது
வாழ்க்கையைத் தேடி
அலைகிறான்..

வாழ்க்கையின்
வாலிபம்
குறையும்போது
கடவுளைத் தேடி
அலைகிறான்...!!!

நண்பா..

குறைகளைக் கண்டு
குரைப்பதும்..
நிறைகளைக் கண்டு
நகைப்பதும்..
இயந்திர மனிதனின்
இயற்கை..

அதைச்
சிலர் செய்யாதிருப்பதுதான்..
செயற்கை..!!

குறைகளின்
குணங்களை
குறிப்பறிவதை விட்டுவிட்டு..

குறைகளில்
நிறையைக் காண்போம்..
எழுந்து வா....!!!!!!!
சிந்திக்க மறந்த என்னவனே!

மனிதனே..
என் இனத்தவனே..
சிரிக்கத் தெரிந்த நீ..
ஏன் சிந்திப்பதே இல்லை?!

இல்லாத வானத்தை
வருணிக்கும் நீ..
இருக்கும் மானத்தை
மறந்து விட்டாய்!

அழகாய்
வளர்ந்து வளர்ந்து
மீண்டும் தேயும் நிலவு போல..

உயரே
பறந்து பறந்து
தரைக்கு இரங்கும்
பருந்து போல..

கடலில்..
புரண்டு, எழுந்து, பின்
ஒடுங்கி விழும்
அலையைப் போல..

மண்ணில்..
பிறந்து வளர்ந்து..
மண்ணோடு மண்ணாவதுதானா
மனித இயல்பு??!

மனிதா..

உன் செவிகளை கொஞ்சம்
என் பக்கம் வை..

நிலவுக்குச்
சரித்திரம் தேவை இல்லை..

பருந்துக்கு
பணங்காசு தேவை இல்லை..

அலைகள்
புகழைத் தேடுவதே இல்லை..!

மனிதா,
நீ மட்டும் ஏன்..
நில்லாமல் ஓடுகின்றாய்?
நிலையில்லா செல்வம் தேடுகின்றாய்..?
நிம்மதி இன்றி வாடுகின்றாய்???

கொஞ்சம் பொறு!

ஒரு மேட்டை இடித்தால்தான்
ஒரு நாட்டை ஆக்க முடியுமா?

ஒரு காட்டை அழித்தால்தான்
உன் வீட்டை எழுப்ப இயலுமா??

ஓர் உயிரை
கொன்றால்தான்..
உன் வயிறு நிரம்புமா???

அடுத்தவன் அழிவில்தான்..
நீ,
வாழ்ந்தாக வேண்டுமா..?

நீ..
பகுத்தறிவு படைத்தவன்..
மறந்து விடாதே!

தன்னை வருத்தி..
பிறர்க்கு ஒளிதரும்
மெழுகுவர்த்தியை
படைத்ததும் நீ தானே..!

அதன் மேன்மை
விளங்கவில்லையா
உனக்கு?

யோசி..

விண்ணில் எழும் கதிரவனால்
ஊருக்கு நன்மை..

மண்ணில் விழும் மழைத்துளியால்
வேருக்கு நன்மை..

பெண்ணுள் இருக்கும் பொறுமையினால்
ஊருக்கு நன்மை..

உன்னுள் உறங்கும் திறமையினால்
யாருக்கு நன்மை??

நில்...!

பேசு..
மென்மையாக பேசு..
உண்மையே பேசு..

பொழுதுக்களை
பழுதாக்கியே
பழக்கப் பட்டவனா நீ?

இனியொரு விதி செய்..

ஊறார் குறையை
உளவு பார்ப்பதைவிட..
உன் குறை எதுவென்று
யோசி!

கடைசியாக ஒன்று..

உன் இனத்தால்
நீ வாழ்ந்தது போதும்...

இனியாவது..

உன்னால்,
உன் இனம் வாழ வேண்டும்..
உன் மொழி வாழ வேண்டும்..
உன் தாயகம் வாழ வேண்டும்..
இவ் வையகம் வாழ வேண்டும்..
உனை ஈன்றாள் வயிறு
வைகை போல் குளிர வேண்டும்!!!
விடுப்பில் செல்பவன் இதயம் சுமையாகும்

நாடும் பொழுது பக்குவமாய் வந்து
நின்றிடும் குடும்ப நினைவும் குழந்தைகள் முகமும்
மாதம் முதல் தேதி என்றால்
தொலைபேசிக்கு முதலிடம் அங்கு

பேசினால் காசு கரைகிறது
பேசாவிட்டால் இதயம் கரைகிறது
சோதனையின் சொந்தக்காரர்கள் நாங்கள்
வேதனையின் மொத்த குத்தகைக்காரர்கள்

மூன்று ஆண்டுகள் கழிந்தால்
மூன்று மாத விடுமுறை
அவை விடுமுறை அல்ல
ஆயுள் கைதிகளின் பரோல்கள்

பிரயான தேதி நெருங்கிவிட்டால்
பித்தான நெஞ்சம் தொலைப்பது
மிச்சம் மீதி இருந்த கண் தூக்கத்தை
மலை ஏறுபவன் இதயம் இலேசாகும்

விடுப்பில் செல்பவன் இதயம் சுமையாகும்
விலை கொடுத்து வாங்க வேண்டும்
சம்பாதித்து விட்டு வருபவன் இங்கே
செய்தே தீர வேண்டிய பணிகள்

உற்றார் சுற்றார் அனைவரையும்
கொடுத்து திருப்தி படுத்த வேண்டும்
பணமாக பொருளாக உணவாக உடையாக
மனித மனம் அல்லவா

என்றைக்கு திருப்தியிரும் அது
ஒருபோதும் அடைவதில்லை
எழுதி தொடர்ந்தால் மலை முகடுகளும் தாழ்வுரும்
நீ வாகன ஓட்டியாய் இருந்திருந்தால்

விபத்து ஒன்று ஏற்பட்டுவிட்டால்
கண்ணை மூடிக்கொண்டு சொல்வார்கள்
நீதான் குற்றவாளி என்று

திருடன் உன்னிடத்தில் வந்து தாக்க
தற்காப்புக்கு நீ அவனை தாக்கினாலும்
சட்டம் வெளிநாட்டவனாம் உன்னைத்தான்
குற்றம் சுமத்தி சிறைப்படுத்தும்

உதாரணங்கள்தாம் இவை எல்லாம்
தொடரும் ரணங்கள் எண்ணற்றவை
இவை நமக்கு நாமே
இட்டுவிட்ட முல்வேழியாகும்

காலங்களும் சோகங்களும்
தொடர்கதையாகும் நமக்கு
கால சக்கரம் விடைபகரட்டும்
நாளை சமூகமாவது நல்வழி வாழட்டும்
வரதட்சணை எனும் வன்கொடுமை!

எழுதியோர் கைகளும் ஓய்ந்துவிட்டன
இந்த வன்செயலை கண்டித்து
பேசியவர்கள் நாவுகளும் வரண்டாகிவிட்டது
பித்தம் தெளிவது எப்போது?

எந்த காலத்திலும் திருந்துவதில்லை
இந்த பொல்லாத ஜென்மங்கள்
பொன் வேண்டுமாம் பொருள் வேண்டுமாம்
பிள்ளையாம் இவனைப் பெற்றதற்காக;

பையனாக இவன் பிறந்ததற்காக!
பண்பில்லாத சிறுமதி யாளர்களே;
அவதாரம் எடுத்தா நீ இங்கு
ஆண் பிள்ளையாக புவி இறங்கினாய்?

பெற்றோர் உனைப் பெறுவதற்காக
பிரத்யேக தவம் ஏதும் செய்தார்களா?
வரம் ஏதும் பெற்று வந்தவனா நீ?
வரதட்சணை ஏன் பெறுகின்றாய்?

என்ன வித்தியாசம் கண்டுவிட்டாய் நீ
எதை இழந்து விட்டாய் நீ ஆனாய் பிறந்து?
பெண்ணை பெற்றவன் தர வேண்டுமாம்
உன்னை பெற்றவர் பெற வேண்டுமாம்

மண்ணில் புதையப் போகும் நாள்
மனிதனே உனக்கு நினைவில்லையா?
ஒப்புக் கொண்டு விடு உன்னை
உழைத்துப் பிழைக்க தகுதியற்றவன் என்று

மனப்பந்தலிலேயே சாசனம் எழுதிவிடு
மண்ணில் வாழும் தகுதியை;
இன்றோடு இழந்து விட்டேன் என்று!
இனி தலைநிமிர்ந்து நடவேன் என்று!!


நற்காரியம் நடைபெறும் போது அபசகுனம் பேசமாட்டீர்
நல்ல காரியம் தடை பட்டு விடுமாம்
மனப் பந்தலே உனது பாவத்தில் அல்லவா
மிகுந்து நிற்கிறது இங்கு

ஏழையாய் பிறந்துவிட்ட பெண்
உன்னை மனம் முடிக்க தகுதியற்றவளா?
எழுபதுக்கு எழுபது என்று
எண்ணித் தர வேண்டுமா உனக்கு?

எவன் கற்றுத் தந்தான் உனக்கு
எப்படி கழுவப் போகின்றாய்
ஏழைக் குமரிகள் சிந்தும்
இரத்தக் கண்ணீர்களின் கறைகளை?

வரதட்சணை ஏற்கும் வாலிபர்களே
வரவில் வைத்துக் கொள்ளுங்கள்
உங்கள் பாவங்களின் பொதி மூட்டைகளில்
உங்களையும் அறியாது நீங்கள் சேர்ப்பதை

வங்கியில் வைப்பு நிதியாகவும்
வீடு வாசல் நிலமாகவும்
வண்டி வாகனங்களாகவும்
வீட்டு சாதனங்கள் அணிகலன்களாகவும்

தந்தவர்களிடம் பெற்றுக் கொண்டீர்கள்
தர இயலாதவர்களை வாட்டி வதைத்து
தூண்டிய இன்னல்களால்; - அவர்களின்
தற்கொலைகள் எல்லாமே;

நீங்கள் செய்யும் கொலைகள் தாம்
நாட்டில் எங்கே வரதட்சணை கொலை
நடந்தேறினாலும் உனக்கும் அதிலே பங்குண்டு
நடக்கும் தீமைகள் அனைத்திலும் தான்.



வரதட்சணையாக உனக்கு வாரி வாரி
வழங்கிவிட்டு வட்டி கடனாளியாக
வீதிகளில் நிற்கும் மணப்பெண்ணின் தந்தைகள்
வீடுதோறும் இங்கே உண்டு

முப்பதுகளை எட்டியும் மணமுடிக்காது
முதிர் கன்னிகளாய் ஊரெங்கும்
கரை சேராமல் தவித்திருக்கும் அவர்களின்
கண்ணீர்த் துளிகள் ஆழிகளாய் உள்ளனவே

இத்தனை பாவாங்களிலும் வாலிபனே உனக்கு
எள்ளளவும் குறையாது பங்கு உண்டு
எந்த மதத்திலே நீ இருந்தாலும்
எத்தனை சமாதானங்களை நீ கூறினும்

உல் நெஞ்சம் என்ற ஒன்று
உன் வசம் உண்டல்லவா .... அது
கல் நெஞ்சர்களை கூட
கேள்விகளால் துளைக்காமல் ஓய்வதில்லை


மாறாது எதுவுமே இல்லை இங்கு
மாற்றம் என்னும் சொல்லை தவிர
மாறுவதற்கு முயற்சி செய்யுங்கள்
மறுமணம் வீசும் பூந்தோட்டங்க ளாகட்டும்

பெற்றதை எயல்லாம் திருப்பி கொடுங்கள்
அடகு வைக்கப்பட்ட மானங்களை
அடமானங்கலாய் திரும்பப் பெறுங்கள்
பெண்களின் பெற்றோர்களிட மிருந்து.
நட்பு

கண்டங்கள் கடந்து விட்டாலும்
நெஞ்சில் கனன்றுக் கொணடிருக்கும்
உறவு அந்த உறவு

காலங்கள் கடந்து விட்டாலும்
கடல் அலையாய்
மீண்டும் மீண்டும்
இதயத்தை நனைக்கும் உறவு
அந்த உறவு

அன்னையிடமும்
அருமை மனைவியிடமும்
பகிர முடியாத
அந்தரங்கங்களை எல்லாம்
பகிர்ந்துக் கொள்ளும்
அற்புத உறவு அந்த உறவு

சோகங்களையும்
தாகங்களையும்
பகிர்ந்துக் கொள்ளும்
சத்தான உறவு அந்த உறவு

உள்ளத்திலும் உதட்டிலும்
ஒருமித்திருக்கும்
உறவு அந்த உறவு
இதற்கு தாய் வழியும் இல்லை
தந்தை வழியும் இல்லை

அது ஒரு சோகங்களை
இறக்கி வைக்கும்
சுமைதாங்கி

அது ஒரு மகிழ்சியை
பகிர்ந்து கொள்ளும்
பள்ளிக் கூடம்

அது ஒரு
பட்டாம் பூச்சியாய்
பறந்து மகிழ்ந்த
மலர் வனம்

அது ஒரு
மாறத மணம் விசும்
நந்தவனம்

சொற்களால் வடிக்க
அது கம்பர் கால காவியம் இல்லை
கற்களில் வடிக்க அது
சோழர் கால கற்சிலையும் இல்லை

நதியோரத்து
தென்றலின் சுகம் அது
கோடை மழையின்
சாரலின் சுகம் அது

உள்ளத்தால் மட்டுமே
உணர்ந்து கொள்ளும்
அற்புத உணர்வு அது

இந்த உறவுக்கு மட்டும்
என்னவோ தெரியவில்லை
வயசாவதே இல்லை

இது ஒரு
ஒளிர்ந்து மறையும்
மத்தாப்பூ அல்ல

இது ஒரு
பூத்து உதிரும்
உதிரிப் பூவும் அல்ல

உதிரும் பூக்கள்
உள்ள உலகில்
உதிரா பூ

இந்த நட்பு
சில நேரங்களில்
சில மனிதர்களிடம்
ஒரு முறை மட்டுமே
பூக்கும் அதிசய பூ
இந்த நட்பு...
கொடுங்கள்.. பெறுவீர்கள்!....


பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."

அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள்!!

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !
வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !
நட்பின் சுவடுகள் எங்கே???

நட்பின் சுவடுகள்
எங்கே
இன்று???

மனம் மட்டும் ஆட்சி
செய்யும்
படிக்கும் காலத்தில்
இருந்தது நட்பு என்று
வலிசுமக்கும்
மனம் பதிலளிக்கையில்

பணம் மட்டும் ஆட்சி
செய்வதால் தான்
சிதறி போனது
நட்புக்கால சுவடுகள் என்று
சொல்லாமல் சொல்கிறது
இன்றைய சூழல்...

நண்பர்களையும்
நல்ல உள்ளங்களையும்
தேடிய காலங்கள் போய்
இன்று
பணங்களையும்
பணத்திற்கான வழிகளையும்
தேடி ஓடுகிறது ஒரு கூட்டம்...

நேரில் பார்த்து
நெடுநேரம் பேசி
நட்பை வளர்த்தவர்கள்
இன்று
முகமும், ஒலியும் அற்ற மின்னன்சலில்
வளர்க்கிறார்கள் நட்பை...
அதிகமாய் ஒலி என்று பார்த்தால்
அது குறுன்செய்தி வரும் ஓசை மட்டுமே...

வாழ்வீர்க்கு தேவை பணம் மட்டும் அல்ல
நல்ல மணங்களும் தான்....
நல்ல மனங்களின் நட்பை பெற்றவனே
உலகில் ஜெயித்தவன்...செல்வந்தான்...

உண்மையில்,
பணங்கள் பேசுவதில்லை
மணங்கள் செல்லரிப்பதில்லை....
ஆனால் இன்று செல்லரித்து போனது
பணங்களை மட்டும் தேடும் சில படுப்பாதக மணங்கள்....

தங்களின் சுவடுகளையே தொலைத்தவர்களிடம்
நட்பின் சுவடுகளை எப்படி எதிர்பார்ப்பது....??
மன்னிக்கட்டும் நல்ல உள்ளங்கள்
நட்பை மறந்த நாகரிக மனிதர்களை..
அயல்தேசத்து ஏழை

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ
அயல்தேசத்து ஏழைகளின் ..
கண்ணீர் அழைப்பிதழ் !

விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற ...
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது !

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால்
வாழ்க்கையில்...?

தூக்கம் விற்ற காசில்தான்....
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!

எங்களின்
நிலாக்கால நினைவுகளையெல்லாம்...
®'ரு
விமானப்பயணத்தூனூடே விற்றுவிட்டு
கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம் !
மரஉச்சியில் நின்று ...
®'ரு
தேன் கூட்டை கலைப்பவன் போல!

வாரவிடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள் கடந்து விட்டன!
இங்கே
அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!


பழகிய வீதிகள்
பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள்
தினமும்
®'ரு இரவு நேர
கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு
ஆற்றில் விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள் !
®'வ்வொரு ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த
உள்ளுர் உலககோப்பை கிரிக்கெட் !
இவைகளை நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ®'ன்றாய் வளர்ந்த
நண்பர்களின் திருமணத்தில் !
மாப்பிள்ளை அலங்காரம் !
கூடிநின்று கிண்டலடித்தல் !
கல்யாணநேரத்து பரபரப்பு!
பழையசடங்குகள் மறுத்து போராட்டம் !
பெண்வீட்டார் மதிக்கவில்லை எனகூறி
வறட்டு பிடிவாதங்கள் !
சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ®"ரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும் " என்ற
சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு
®'ரு
தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!


எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள்
அயல்தேசத்து ஏழைகள்தான்!
காற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின்...
நண்பர்களின் ...
மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!

ஆம்
இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...
®'ரு
கடலைத்தாண்டிய கண்ணீரிலையே... கரைந்துவிடுகிறார்கள்;!
" இறுதிநாள் " நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!

இருப்பையும் - இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது
இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் ...
முதல் பேச்சு...
முதல் பார்வை...
முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ ?

®'வ்வொருமுறை
ஊருக்கு வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின்
திடீர்மறைவு ...


இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...

மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...
தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி
அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!
விடியல்

தோழனே
போராட துணிவிருக்கும் போது
போர்வைக்குள் சுகம் தேடுகிறாயே?
நீ போர்களத்தினுள்
பூத்திருக்கிறாய்
போராடினால் தான் வாழலாம் !

சாதனை படைத்தவர்களெல்லாம்
ஜாம்பவான்கள் அல்ல...
ஜனனத்தில் நம்மோடு
சமமானவர்கள் தான்
ஆனால்
சாதிக்க வேண்டுமென்ற
ஆதிக்கத்தை
அடிமனது வரை
ஆக்கிரமிப்பு செய்தவர்கள் !

தோழனே...
துணிவோடு போராட புறப்படு
இருண்டு கிடக்கும்
வாழ்க்கை ஒளிமயமாக
ஒரு நாள் உனக்கும்
கிழக்கு வானம் வெளுக்கும்!