Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com
என் வேண்டுதல்...!
இறைவா…!
அன்புக்கு அடையாளமாக
எப்பவும் தோற்பது நானாகவே இருக்கட்டும்

மற்றவரை ஜெயித்து
மகிழ்ச்சி அடைய என் மனம் விரும்பவில்லை

வலிகளும் வருத்தமும் எனக்குக் கொடு !
வசந்தமும் வாசமும் பிறருக்குக் கொடுக்கணும் !

சுமைகளையும் சோகத்தையும் எனக்குக் கொடு !
சுகத்தையும் சுதந்திரத்தையும் பிறர்க்குக் கொடுக்கணும் !

இழப்பையும் இறப்பையும் எனக்குக் கொடு !
இனிமையையும் இன்பத்தையும் மற்றவர்க்குக் கொடுக்கணும் !


மீளாத சோகம் எனக்குள்..
யாராலும் தீர்க்க முடியாத சோகம்..

பாசத்தோடு வளர்த்த பறவையை
பருந்து ஒன்று வந்து கொத்திக்
கொ(ன்று)ண்டு போனதே...

ஆசையோடு கட்டிய மணல் வீடு.
அலை வந்து சிதைத்து விட்டதே...

பக்கம் பக்கம் பார்த்து ஒட்டிய பட்டம்..
பனை மரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டதே...

மூச்சுப் பிடித்து ஊதி ஊதி பெரிசாக்கிய
பலூனும் உடைந்து போனதே...

மழை பெய்த வெள்ளத்தில்
நான் விட்ட காகிதக் கப்பல்
கரை சேராமல் தாண்டு போனதே...

இன்று நினைத்தாலும் மீளாத சோகம் எனக்கு..
யாராலும் தீர்க்கமுடியாத சோகம்...!!! ???