Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

அழகிய கடன் (Goodly Loan)



அன்புள்ள சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.

அழகிய கடன் (Goodly Loan) www.azhahiyakadan.com உதவியில் கல்விக்கென்று உதவுவதற்கு விண்ணப்பங்கள் கீழ்கண்ட வகையில் பரிசீலிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

1. உண்மையில் விண்ணப்பதாராரின் விபரங்கள் அனைத்தும் அளிக்கப்பட்டு, உதவி செய்ய விரும்பும் புரவலர் (Leader/Sponsor) களின் முடிவுப்படிதான் எந்த உதவியும் அளிக்கப்படுகிறது. ஆகவே விதிமுறையென்று எதுவும் இல்லை, மனிதாபிமானமே குறி.

2. ஆனாலும், உதவுபவர்களை விட, தேவைகள் அதிகம் வரும்போது, கீழ்கண்ட ஆலோசனைகளை அமைப்பாளன் அல்லது ஏற்பாட்டாளன் என்ற வகையில், சில யோசணைகளை முன் வைக்கிறேன்:

2.1 கவுன்ஸிலிங் மூலம் தேர்வாகி அரசு வாக்களித்துள்ள கடனுதவி மற்றும் குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு உள்ள சலுகைகள் பெற்றும், முதலாண்டு கட்டணம் தாமதிக்காமல் செலுத்தவும், அல்லது கடனுதவி போக இன்னும் தேவைப்படும் தொகையில் ஒரு பங்கை கடனாக பெற முயலுபவர்களுக்கு முன்னுரிமை.

2.2. இதுவரை ரூபாய் 20000 (after a few exceptions) -க்குமேல் யாருக்கும் கடன் அளிக்கப் பட்டதில்லை.

2.3. சாதாரண படிப்பாவது படிப்போம் என்று மானேஜ்மென்ட் கோட்டா என்றெல்லாம் சேராமல் அருகில் உள்ள கல்லூரிகளில் சேர்ந்து படிக்கக்கூட வசதியில்லையே என்போருக்கும் அதிக முன்னுரிமை.

2.4. படிப்பு முடிந்து வேலையில் சேர்ந்த பின் திருப்பிச்செலுத்துவதில் கவனம் இருப்பவர்கள் விண்ணப்ப படிவத்தை சரியாக படித்து முழுவதும் விபரங்களை சரியாக கொடுக்க வேண்டும். இல்லையெனில், விண்ணப்பம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிடும். கடந்த ஆண்டு பலர் இதுபோன்ற விபரங்களைக் கொடுப்பதிலும், தாங்கள் வங்கிக் கடனுதவி பெற்ற அல்லது பெற முயன்ற விபரத்தையும் சரியாக தரவில்லை. இருப்பினும், மனிதாபிமான அடிப்படையில் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி பின் அவர்களது விண்ணப்பங்கள் உதவிக்காக ஏற்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் அதிக விண்ணப்பங்கள் வருமாகையால், இதுபோன்ற விசாரிப்புகள் இருக்காது.

2.5. 'தானே' புயலால் பாதிக்கப்பட்ட பகுதியைச்சேர்ந்த மாணவ/மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படலாம்.

3. நீங்களும் உங்கள் நட்பு வலையத்துள் இருக்கக்கூடிய வசதியானவர்களிடம் இந்த அழகிய கடன் திட்டம் பற்றிக்கூறி அவர்களையும் உதவிசெய்வதில் கலந்துகொள்ளச்செய்யவும்.

4. 'அழகிய கடன் அறக்கட்டளை' என்ற பெயரில் பல ஊர்களிலும் இயங்கிவருவதாக நாம் கேள்விப்படும் அமைப்புகளுக்கும், நமது இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை எனபதையும், இந்த இயக்கத்தில் எவ்வித வசூலுக்கும் இடமில்லை, இது ஒரு தகவல் பறிமாற்றத் தளம் மட்டுமே என்பதையும் தெளிவாக எல்லோருக்கும் அறிவுருத்திவிடவும்.

அன்புடன்
அமைப்பாளர்
www.azhahiyakadan.com