Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

கூகுளில் என்ன புதிது ?

சாப்ட்வேர், ப்ளக் இன், பிரவுசர், அப்டேட், இன்னும் என்னனென்னவோ கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கான சாதனங்களை, அவ்வப்போது கூகுள் தந்து கொண்டிருக்கிறது. புதிதாக என்ன தந்து கொண்டிருக்கிறது என்று அறிய, நாம் பல பிரிவுகளுக்குச் சென்று தேட வேண்டியதில்லை. கூகுள் தன் தளத்தில் இதற்கென Google New என்று ஒரு லிங்க் தந்துள்ளது. இதில் கிளிக் செய்தால், http:/www.google.com/newproducts/ என்ற முகவரியில் உள்ள தளம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்படுகிறோம். இங்கு கூகுள் தந்துள்ள பல புதிய வசதிகளைக் காணலாம். இவை கூகுள் அண்மையில் தந்துள்ள கூகுள் இண்ஸ்டன்ட் என்னும் பெரிய விஷயமாகவும் இருக்கலாம். அல்லது பழைய வசதிகளுக்கான அப்டேட் ப்ளக் இன்களாகவும் இருக்கலாம். இதில் பல நமக்குத் தெரியாத வசதிகளாகவும் இருக்கலாம். வரிசையாகக் கட்டங்களில், ஒரு நாளுக்கு முன், இரண்டு நாட்களுக்கு முன் என கூகுள் தந்த புதிய வசதிகள் கட்டம் கட்டப்பட்டு தரப்பட்டுள்ளன. அனைத்து வசதிகளையும் காண ஒரு கீழ்விரி மெனு ஒன்று பட்டியலாகத் தரப்பட்டுள்ளது. மேலும் நமக்கு ஆர்வம் உள்ள பிரிவுகளுக்கு எனவும் ஒரு கட்டம் தரப்பட்டுள்ளது. இதில் வர்த்தகம், கல்வி, பொழுது போக்கு எனப் பல பிரிவுகள் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாகவும் நாம் தேடிப் பார்க்கலாம். இப்படியே பல பக்கங்கள் தரப்பட்டுள்ளன.
ஆனால், இந்த தளத்தின் சிறப்பு, புதிய விஷயங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதுதான். கிட்டத்தட்ட, இது கூகுள் அக்கவுண்ட்ஸ் பக்கம் போலத்தான். இங்கு சென்றால், உங்களின் இமெயில் அக்கவுண்ட்டில் என்ன என்ன வசதிகளை ஏற்படுத்திக் கொண்டீர்களோ, அவை அனைத்தும் பட்டியலிடப்பட்டுக் கிடைக்கும்.
இருப்பினும் கூகுள் தந்துள்ள சில புதிய வசதிகள் சிலவற்றை இங்கு காண்போம். கூகுள் மிக புத்திசாலித்தனமாக ஒரு தளத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் முகவரி Google Image Labeler (http://images.google.com/imagelabeler/) இங்கு சென்றால், கேம்ஸ் போல ஒரு செயல்பாடு கிடைக்கிறது. உங்களுக்கு ஒரு கூட்டாளியை கூகுள் கண்டறிந்து தரும்.அவருடன் இமேஜ்களுக்கு பெயர் சூட்டும் விளையாட்டினை விளையாட வேண்டும். கூகுள் தேடுதளம் கண்டறியும் இமேஜ்களுக்குப் பெயர் சூட்ட வேண்டும்.உடன் உங்கள் கூட்டாளி அதனை ஏற்க வேண்டும். ஏற்றுக் கொண்டால், உங்களுக்கு பாய்ண்ட். இப்படியே தொடர்ந்து விளையாடலாம். கூகுள் தளத்திற்கு, அதன் இமேஜ்களுக்குப் பெயர் கிடைக்கிறது. அதே நேரத்தில், இதற்கென எந்த செலவும் அதற்கு ஏற்படப் போவதில்லை. இதில் நிறையப் பேர் உற்சாகத்துடன் கலந்துகொள்கின்றனர். அடுத்ததாக கூகுள் பேக் மேன். பேக்மேன் என்ற பிரபலமான கேம்ஸ் (Pacman )அறிமுகப்படுத்தப்பட்டு, 30 ஆண்டுகள் ஆனதற்காக, சென்ற மே மாதம், கூகுள் தன் தளத்தில் இந்த விளையாட்டினை அளித்தது. லட்சக்கணக்கான பேர், தங்களின் வேலைக்கு இடையே இதில் விளையாடி மகிழ்ந்தனர். சிலர் தங்களின் வேலையில் கவனம் செலுத்தாமல், விளையாண்டு கொண்டே இருந்தனர். பின்னர், சில நாட்கள் கழித்து, இந்த கேம் நீக்கப்பட்டது.
ஆனால் இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், இதனைத் தனித் தளத்தில் தந்துள்ளது கூகுள். அதன் முகவரி http://www.google.com/pacman/. இந்த தளம் சென்றால், இந்த கேம் விளையாடி மகிழலாம். இந்த கேம் கீழாக, கூகுள் தேடுதளமும் கிடைக்கிறது.
அடுத்து கூகுள் லேப்ஸ் (GoogleLabs) என்ற தளத்தைக் கூறலாம். இங்கு கூகுள் தளத்தின் புதிய இலக்குகள், தொழில் நுட்பம், அதன் சோதனைச் சாலையிலிருந்து புதியதாக என்ன வந்துள்ளது என்று அறியலாம். இதன் தளம் http:/www.googlelabs.com. இதுவே நமக்கு கூகுள் தரும் புதிய வசதிகளுக்கான நுழைவு வாயிலாகவும் அமைகிறது.

வெந்தயம் ஒரு சிறந்த மணம் மற்றும் வாசனையூட்டும் தாவரப் பொருளாகும். இது அஞ்சரைப் பெட்டியில் தவறாமல் இடம்பெறும் ஒன்றாகும். பல்வேறு மருத்துவத் தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளதால் இது மருத்துவத் தாவரமாகவும் விளங்குகிறது. மட்டுமின்றி வெந்தயத் தழை சிறந்த கீரையாகவும் பயன்படுத்தப்படுகிறது. முற்காலத்திலிருந்தே வெந்தயம் உணவு வகைகளில், மணமூட்டவும், சுவையூட்டவும் பயன்படுத்தப்படுகிறது.

இது உணவில் பல்வேறு முறைப்படி சேர்க்கப்படுகிறது. உணவுப் பொருளுக்கு மணத்தை ஊட்டுவது மட்டுமின்றி, சத்துக்களையும் தருகிறது. கறி, கூட்டு, தோசை, இட்லிகளிலும், சாம்பார்பொடி, ரசப்பொடி, மல்லி, மஞ்சள் இவைகளோடு சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு குழம்புகளில் சேர்க்கப்படுகிறது. பேக்கரி, பிஸ்கட், ரொட்டி தயாரிப்பிலும் வெந்தயம் பயன்படுகிறது.

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் "ஏ" போன்றவைகளும் அடங்கியுள்ளன.

பயன்கள்:
வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.

வெந்தயத்திலிருந்து ஈதரை பயன்படுத்தி வாலை வடித்தல் முறையில் ஒருவகை எண்ணை எடுக்கப்படுகிறது. இந்த எண்ணை சோப்பு தயாரிப்பிலும் சமையலிலும் பயனாகிறது.

மேலும் வெந்தயத்திலிருந்து ஒரு மணமுடைய எண்ணை எடுக்கப்படுகிறது. இது சென்ட், மணப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

ஒருவகை மஞ்சள் சாயம் தயாரிக்கப்பட்டு துணிகளுக்கு வண்ணமேற்ற மாத்திரைகளுக்கு வண்ணம் கொடுக்க பயன்படுகிறது.
வெந்தயத்தை ஊற வைத்து எடுக்கப்படும் பசை நூற்பு ஆலைகளிலும், அச்சு தொழில்களிலும் பயன்படுகிறது.

சீயக்காய் தூளில் வெந்தயம் சேர்க்கப்படுகிறது.

வெந்தயத்தின் தன்மைகள்:
வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. வறட்சியகற்றும் தன்மை கொண்டது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.

சித்த யுனானி முறைகளில் வெந்தயம்:
சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம், சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத்தொல்லையை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எண்ணையாக, கரைப்பானாக, லேகியமாக, பொடியாக பயன்படுத்தப்படுகிறது. யுனானி மருத்துவ முறையில் சளி நீக்கவும், மூல நோய் தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவப் பயன்கள்:
சீதபேதி குணமாக:-
20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்குமுறை சாப்பிட சீதபேதி நிற்கும்.

சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மோரில் கலக்கி குடிக்க குணமாகும்.

வெந்தயத்தை இளநீரில் ஊற வைத்து அரைத்து குடிக்க சீதபேதி கடுப்பு தீரும்.

வெந்தயத்தை வாழைப் பழத்திற்குள் வைத்து மூடி இரவு பனியில் வைத்து காலையில் மூன்று நாட்கள் சாப்பிட சீதபேதி குணமாகும்.

வயிற்று வலி, பொருமல் நீங்க:-
மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வாய்வு, பொருமல் நீங்கும்.

வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள், இந்துப்பு இவைகளை சம அளவு எடுத்து நெய் வறுத்து பொடியாக்கி உணவுடன் உண்ண வயிற்று வலி தீரும்.

இரவில் வெந்தயத்தை அரிசி கஞ்சியில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வலி தீரும்.

வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்த்து தேன் சேர்த்து சாப்பிட வயிற்று கடுப்பு தீரும்.

திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும்.

ஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும்.
இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் அரைத்து சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.

கணைச்சூடு நீங்க:-
வெந்தயத்தை நீராகாரத்தில் ஊற வைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிடவும்.

20 கிராம் வெந்தயம் 50 கிராம் வெங்காயம் இரண்டையும் அரை லிட்டர் விளக்கெண்ணையில் காய்த்து, வடிகட்டி, பாலில் அரை கரண்டி எண்ணெய் விட்டு காலையில் இருபது நாட்கள் குடிக்க கணைச்சூடு தீரும்.
மாதவிடாய் வயிற்று வலி நீங்க:-

100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி நீங்கும்.

வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தாலும் வலி தீரும்.

உடல் பலம் ஏற்பட:-
200 கிராம் வெந்தயத்தை பாலில் ஊற வைத்து, மீண்டும் இளநீரில் ஊற வைத்து, உலர்த்தி பொடியாக்கி, கற்கண்டை சேர்த்து, காலை உணவுக்குப் பின் ஒரு கரண்டி சாப்பிட்டு சுடுநீர் அல்லது பால் சாப்பிட்டு வர (40 நாள்) உடல் பலம் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும்.

தோசைக்கு சேர்க்கும் உளுந்துடன் சிறிதளவு வெந்தயம் சேர்க்க பலம் ஏற்படும்.

முகப்பரு நீங்க:-
ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து பருவில் பூச பரு மறையும்.


பேன், பொடுகு நீங்க:-
தேங்காய் எண்ணையில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு ஒழியும்.
பாலில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு தீரும்.

வெந்தயம், பாசிப்பயறு இவற்றை இரவு ஊற வைத்து காலையில் அரைத்து உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். இதை தலையில் தேய்த்து குளிக்க முடி உதிராது. கண் குளிர்ச்சி ஏற்படும். தலைச்சூடு நீங்கும். பேன், பொடுகு, அரிப்பு நீங்கும்.

வெந்தயத்தை மாவாக்கி, இனிப்பு சேர்த்து களி போல கிளறி உண்டு வர தோல் நோய்கள் நீங்கும். உடல் சூட்டையும் கட்டுப்படுத்தும் இந்த களி.

வைரஸ் பாதிப்பா ? கம்ப்யூட்டரை ஒதுக்கி வை

பாட்நெட்(Botnet) என்னும் வைரஸ் புரோகிராமினை, அடக்கித் தடுப்பது பெரிய வேலையாய் உள்ளது. இந்த வகை வைரஸ்கள் தாக்கும் வழிகள் பலவாய் அமைந்துள்ளன. எனவே இதனை எதிர்க்கும் புதிய வழி ஒன்று குறித்து மைக்ரோசாப்ட் எண்ணி வருகிறது.
இந்த பாட்நெட் வைரஸ் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் ஸ்காட் சார்னி, இதற்கான மாற்று வழியினை அறிவித்துள்ளார். பாட்நெட் பாதித்த கம்ப்யூட்டர்களை, இணைய இணைப்பில் இருந்து ஒதுக்கி வைத்திடும் வழிகளை ஆய்வு செய்து வருகிறார். இவருடைய திட்டப்படி, ஒவ்வொரு கம்ப்யூட் டரும் இணைய இணைப்பில் இருக் கையில் சோதனை செய்யப்பட்டு ஒரு ""ஹெல்த் சர்டிபிகேட்'' வழங்கப்படும். முதலில் ஒரு கம்ப்யூட்டர் அனைத்து பேட்ச் பைல்களாலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா, அதன் வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு அப்டேட் செய்யப்பட்டு சரியாக இயங்குகிறதா என்று அறியப்படும். பின் வைரஸ் பாதிப்பு குறித்து சோதனை நடத்தப்படும். பாட்நெட் வைரஸ் இருப்பின் உடனே, அந்த கம்ப்யூட்டர், ஆன்லைனிலேயே, குவாரண்டைன் எனப்படும் நோய் தடுப்பு பிரிப்பு கூடத்திற்கு ஒதுக்கப்படும்.
இது இறுதி நடவடிக்கையாகத்தான் இருக்கும். இதனால், இந்த கம்ப்யூட்டரிலிருந்து, இணையத்தில் இணைந்திருக்கும் மற்ற கம்ப்யூட்டர்களுக்கு, இந்த வகை வைரஸ்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். இந்த திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு வரும் என்று இவர் எதிர்பார்க்கிறார். வைரஸ்கள் அதிகம் பெருகி வரும் இந்நாளில், ஒருவர் செய்யாத குற்றத்திற்கு இணைய தடுப்பு தண்டனை என்பது அதிகம் என்று எதிர்ப்பு வரலாம். இருப்பினும் இவர் தன்னுடைய திட்டத்தினையும் நியாயப் படுத்துகிறார். எப்படி அம்மை போன்ற தொற்று நோய்க்கு எதிரான தடுப்பு ஊசி போடாதவர்கள், அந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களுக்கு இதே நோய்களைத் தர முடியுமோ அது போலத்தான் தடுப்புமுறைகளை மேற்கொள்ளாத, வைரஸ் பாதித்த கம்ப்யூட்டர்களும் உள்ளன. எனவே நோயாளிகளை பாதுகாப்பு தடுப்பு மையங்களில் வைப்பது போல, கம்ப்யூட்டர்களையும் ஒதுக்கி வைப்பதில் தவறில்லை என்கிறார். அமெரிக்காவில் சில இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள், இது போன்ற திட்டங்களை இப்போதும் அமல்படுத்தித்தான் வருகின்றன. இருப்பினும், உலகம் முழுமையும் என்கிற போது, இதனை அமல்படுத்துவதில் தடைகள் ஏறபடலாம். இந்த திட்டம் முழுமையாக அறிவிக்கப்படும்போதுதான், எதிர்ப்பு குறித்து நாம் அறியலாம்.

முகவாத நோய்க்கு சித்த மருத்துவம்

குளிர் காலத்தில் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் ஆகியவை ஏற்படுவது சகஜம். ஆனால் எவ்வித தடுப்பும் இல்லாமல் பனியில், குளிரில் இருப்பவர்களுக்கு முகவாதம் என்னும் நோய் தாக்குகிறது. காது, மூக்கு வழியே செல்லும் குளிர் காற்று முகத்துக்கு செல்லும் ரத்தநாளங்களை தாக்குவதால் முகம் கோணலாகும்! ஏழாவது முக நரம்பு பாதிப்பினால் இந்த பாதிப்பு உண்டாகிறது.

இதற்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவும் ஒரு காரணம். இந்த நோய்க்கு `பெல்ஸ் பாஸ்சி'- முகவாதம் என்று பெயர். ஆண்களைவிட பெண்களை இந்த நோய் அதிகம் தாக்கும்!

பிறவியிலேயே அல்லது குளிர்காலத் தாக்குதலால் முகம் கோணல் ஆகும்போது அதை சித்த மருத்துவத்தில் முழுமையாக குணப்படுத்த மருந்துகள் உள்ளன.

* மாவிலங்கு மரப்பட்டை - 20 கிராம்
* மூக்கிரட்டைப் பட்டை வேர் - 20 கிராம்
* வெள்ளைச் சாரணை வேர் - 20 கிராம்

ஆகிய மூன்றையும் நன்கு இடித்து முதல் நாள் இரவில் 250 மில்லி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை கொதிக்க வைக்க வேண்டும். 50 மில்லி அளவு வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் 60மில்லி கிராம் `நண்டுகல் பற்பம்' சேர்க்க வேண்டும். தினமும் பல் துலக்கியதும், இதை அருந்தி வர இரண்டு, மூன்று மாதங்களில் நிரந்தர குணம் ஏற்படும்.

அதேபோல், சர்க்கரை நோயாளிகளை துன்புறுத்தும் பிரச்சினை `தோள்பட்டை உறைவு'. இந்த நோய்க்கான காரணம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையையும் மாவிலங்கம், மூக்கிரட்டை, வெள்ளைச் சாரணை வேர், நண்டுகல் பற்பம் மூலம் இரண்டு மாதங்களில் குணப்படுத்த முடியும்.

- டாக்டர் சோமசுந்தரம், சென்னை.