Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

தூக்கம் எவ்வாறு ஏற்படுகிறது

தூக்கம் மனிதனுக்கு அவசியத் தேவை. ஒருவருடைய ஆழ்ந்த தூக்கமே அவனை எப்போதும் விழிப்புடையவனாக இருக்கச் செய்யும். குறைந்த நேரம் தூங்கி அதிகம் உழைப்பவர்கள் பலர் உள்ளனர். ஆனால் இவர்கள் குறைந்த நேரத்தில் நல்ல தூக்கம் பெறுவதால் தான் இவர்களால் நன்கு உழைக்க முடிகிறது.

அளவான தூக்கம்தான் மனிதனை ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.

தூக்கம் எவ்வாறு ஏற்படுகிறது

தூக்கம் என்பது ஒரு இயற்கையான திரும்பத்திரும்ப நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வாகும். இந்த தூக்கம்தான் உடலில் வளர்சிதை மாற்றம் நன்கு நடைபெற்று உடல் வளர்ச்சி அடைய பெரிதும் உதவுகிறது. அனைத்து உறுப்புகளும் புத்துணர்வும் பலமும் பெற ஏதுவாகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. நரம்பு, தசை, எலும்பு சம்பந்தப்பட்ட மண்டலங்களை பலப்படுத்துகிறது. பொதுவாக தூக்கம் என்பது களைப்புற்ற உடல் உறுப்புகள் மற்றும் மனதிற்கு இயற்கை கொடுத்த ஓய்வுதான்.

உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் நன்கு தூங்குவார்கள். ஆனால் உழைப்பின்றி மன உளைச்சல் உள்ளவர்கள் தூக்கமின்றி தவிப்பார்கள்.

சிலர் தூக்கம் வருவதில்லை எனக்கூறி இரவு மது, புகை பிடித்தல் போன்ற செயல்களை செய்வார்கள். மது ஆரம்பத்தில் மயக்கத்தைத் தருமே ஒழிய நல்ல தூக்கத்தைத் தராது.

மனப்பாதிப்பு, தீராத சிந்தனை, பயம், கோபம், தாழ்வு மனப்பான்மை, இயலாமை போன்ற குணம் கொண்டவர்கள் தூக்கமின்றி தவிப்பார்கள்.

உடல் உழைப்பு

உடலும் மனமும் ஒருங்கே ஓய்வு எடுத்தால் தான் சிறந்த தூக்கம் உண்டாகும். உடல் உழைப்பு என்பது தற்போது மறந்தே போய்விட்டது. இவர்களிடம் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றால் நான் அலுவலகத்திற்கு நடந்தே போகிறேன். அதனால் எனக்கு எதற்கு தனியாக உடற்பயிற்சி என்று கேட்பார்கள். ஆனால் இவர்கள் தூக்கத்திற்காக மருத்துவரை தேடுவார்கள்.

எவ்வளவு நேரம் தூங்கலாம்

ஒவ்வொரு மனிதனுடைய உடல் மற்றும் வயதைப் பொறுத்து தூக்கம் வித்தியாசப்படும். இளம் வயதினருக்கு ஒரு நாளைக்கு 7-8 மணிநேரம் தூக்கம் தேவை. ஆனால் பிறந்த குழந்தை 16-18 மணி நேரம் தூங்கவேண்டும். பள்ளிக்குச் செல்லாத வயதில் உள்ள குழந்தைகளுக்கு 10-12 மணி நேரம் தூக்கம் அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் டீன்ஏஜ் பருவத்தில் உள்ளவர்களுக்கும் 9 மணி நேரத் தூக்கம் அவசியம். முதியவர்களுக்கு 7-8 மணி நேரம் தூக்கம் தேவை.

உடலில் உள்ள கடிகாரம்

நம் உடலில் நம்மை அறியாமல் ஒரு கடிகாரம் இருக்கிறது. இதுவே நம்மை தூக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் விழிப்படையவும் செய்கிறது. இந்த நேரக்காப்பாளர் செயலை உடலில் செய்ய மெலடோனின் (Melatonine) என்ற மூளையில் சுரக்கும் வேதிப் பொருள் உதவுகிறது. நாள் முழுக்க இதனுடைய அளவு சீராக இருக்கும். இரவு ஆனவுடன் இதன் அளவு அதிகரிக்கும். பின் இது தூக்கத்தைத் தூண்டும். அதனால் சரியான நேரத்தில் தூங்கச் செல்வர். இதேபோன்றுதான் விழிப்பு நிலையும்.

இரவுப் பணிக்கு செல்பவர்கள் பகலில் தூங்குவார்கள். பகலில் தூங்குவதால் இவர்களின் உடல்நிலை இயற்கைக்கு மாறான நிலையை அடையும்.

“பகலில் தூங்குபவன் பாடையில் போவான்” என்பது சித்தர் வாக்கு.

பகலில் தூங்கும்போது உடலை இயக்கும் வாத, பித்த, கபத்தில் பித்தமானது அதிகரித்து ரத்தத்தில் கலந்து ரத்தத்தை சீர்கேடடையச் செய்கிறது. இதனால் உடல் பல்வேறு பாதிப்புக்கு ஆளாகிறது. இயன்றவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

தூக்கம் கெடுவதால் ஏற்படும் தீமைகள்

தூக்கமின்மையால் மன உளைச்சல், ஞாபக மறதி உண்டாகும். உடல் பலவீனம் அடையும்.

தூக்கத்தின் பயன்கள்

ஆழ்ந்த தூக்கம் மற்றும் விட்டு விட்டு விழிப்பு நிலை இல்லாத தூக்கம் தான் சரியான தூக்கம்.

நல்ல தூக்கம் ஒருவரின் செயல்திறமையை அதிகப்படுத்துகிறது. ஆராய்சியாளர்களின் கருத்துப்படி மூளையை உபயோகித்து செய்யக் கூடிய கடினமான வேலைகள் அனைத்தும் நல்ல இரவுத் தூக்கத்திற்குப்பின் நன்றாக செய்ய முடிகிறது. புதியதாக உருவாக்கப்படுகிற எண்ணங்கள் (Creative thinking) நல்ல தூக்கத்திற்குப் பிறகே உதயமாகின்றன.

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம். நாள்பட்ட சரியான தூக்கமில்லாதவர் களுக்கு ரத்தக்கொதிப்பு மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. தூக்கத்தில்தான் நம்முடைய உடல் வளர்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள்தான் குழந்தைகளின் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டு மல்லாமல் நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகப் படுத்துகிறது. ஆக.. நல்ல ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த அமைதியான தூக்கம் அவசியம்.

ஆழ்ந்த உறக்கத்திற்கு

உணவு முறைகளில் மாறுபாடு அவசியம் தேவை. சீரான, சமச்சீரான உணவுப் பழக்கம் வேண்டும். எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். ஆவியில் வேகவைத்த பொருட்கள் நன்கு சமைக்கப்பட்ட உணவை உண்டு, அதிக காரம், புளி, உப்பு உள்ள பொருட்களை தவிர்த்து, நேரம் தவறாமல் சாப்பிட்டு வந்தால் அதுவே ஆழ்ந்த உறக்கத்திற்கு நம்மை ஆட்படுத்தும்.

இரவில் கீரை, மோர், தயிர், அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் வயிறு புடைக்க சாப்பிட்டு விட்டு தூங்கச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அரை வயிறு உணவே சிறந்தது. மன உளைச்சல், கோபம், எரிச்சல் உண்டாக்கும் செயல்களை தவிர்ப்பது நல்லது.

தூக்கம் வரும் முன் தூங்கச் செல்லக் கூடாது. தினமும் சரியான நேரத்திற்கு தூங்குவதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இரவு உணவுக்கு முன் கோடைக் காலமாக இருந்தால் குளிர்ந்த நீரிலும், குளிர் காலத்தில் சுடு நீரிலும் குளிப்பது நல்லது.

இரவில் வெகுநேரம் கழித்து அதாவது பின்னிரவு நேரங்களில் சாப்பிட்டால் தூக்கம் வராது. 7-8 மணிக்குள் சாப்பிடுவது நல்லது.

இரவு தூங்கச் செல்லும்போது மென்மையான இதமான இசை கேட்பது நல்லது. அதற்காக இரவு முழுவதும் வானொலியை பாடவிடுவதும் தவறு.

மதுபானங்கள் சாப்பிட்டவுடன் தூக்கம் வருவதுபோல் இருக்கும். ஆனால் இது ஆழ்ந்த நித்திரையைத் தருவதில்லை. அதற்கு பதில் நடுநிசியில் எழுப்பிவிடும். இதனால் தூக்கமின்மையே மிஞ்சும். எனவே இந்த பழக்கம் உள்ளவர்கள் மதுவைத் தவிர்த்தால் மட்டுமே நல்ல தூக்கத்தைப் பெற முடியும்.

தூக்கத்தைக் கெடுக்கும் மருந்து மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது. டிவி, கணினி போன்றவற்றை படுக்கையறையில் வைத்தால் நம் கவனம் முழுவதும் அதிலேயே இருப்பதால் தூக்கம் கெடும்.

இரவு உணவுக்குப் பின் குறுநடை அதாவது சிறிது தூரம் நடக்க வேண்டும். இது நல்ல தூக்கத்திற்கு மருந்து.

காபின் (caffein) என்னும் நச்சுப் பொருள் காபி, டீ, சாக்லேட், கோலா போன்றவற்றில் உள்ளது. இது சாப்பிட்ட 8 மணி நேரம் வரை உடலில் தங்கியிருக்கும். இதனால் இவைகள் தூக்கத்தை கெடுக்கும் தன்மை கொண்டது. தூங்கும் நேரத்தில் இவைகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதுபோல் சிகரெட்டில் நிகோடின் என்ற நச்சுப்பொருள் உள்ளது. இதுவும் தூக்கத்தைக் கெடுக்கக்கூடியது.

படுக்கையறை நன்கு காற்றோட்டமானதாக இருக்க வேண்டும். தலையணை அதிக உயரமில்லாமலும், நன்கு சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

தூங்கும் முறைகள்

மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக்கொண்டு படுக்கக்கூடாது. இதனால் இவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் உடலுக்கு கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.

குப்புற படுக்கக்கூடாது. அதுபோல் கால்களை தவளைபோல் வைத்துக்கொண்டு தூங்கக்கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.

இதனால் வலப்பக்கம் உள்ள சூரிய நாடியில் எட்டு அங்குலம் வரை சுவாசம் செல்வதால் நீண்ட ஆயுள் உண்டாகும். மேலும் சூரிய நாடியில் வரும் வெப்பக்காற்று பித்த நீரை அதிகம் சுரக்கச்செய்து உண்ட உணவுகளை எளிதில் சீரணமாக்கும் .

இடது பக்கம் ஒருக்களித்துப் படுப்பவர்களின் இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைப்பதால் இரத்த ஓட்டமும் அதிகம் செல்லும். இதனால் இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்துப் படுப்பதால் சந்திர நாடியாகிய இடப்பக்க மூக்கின் வழியே சுவாசம் 15 அங்குலம் வரை செல்லும். இதனால் உடல் வெப்பத்திற்குப் பதில் குளிர்ச்சியே ஏற்படும். சீதளம் உண்டாகும். இரவு உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப்போய் விஷமாக மாற நேரிடும்.

எந்த திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு

ஓங்குயிர் தெற்கு

மத்திமம் மேற்கு

மரணம் வடக்கு

கிழக்குத் திசையில் தலை வைத்துப் படுப்பதே நல்லது என்கின்றனர் சித்தர்கள். ஆனால் நீண்ட ஆயுளைப் பெற தெற்குத் திசையில் தலை வைத்துப் படுப்பது நல்லது. மேற்கு திசையில் தலை வைத்துப் படுப்பதால் கனவுகள், அதிர்ச்சி போன்றவை உண்டாகும்.

வடக்கு திசையில் ஒருபோதும் தலைவைத்துப் படுக்கக்கூடாது. இதனை விஞ்ஞான ரீதியாக ஒப்புக்கொண்டுள்ளனர். வடதிசையிலிருந்து வரும் காந்த சக்தி நம் தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும் இதனால் மூளை, பாதிக்கப்படுவதுடன் இதயக் கோளாறுகள், நரம்புக் கோளாறுகள் ஏற்படும்.

வெறும் தரையில் படுக்கக்கூடாது அது உடலில் இரத்த ஓட்டத்தைக் குறைக்கச் செய்யும்.

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் கசகசாவை கலந்து கொதிக்க வைத்து அருந்தினால் நல்ல உறக்கம் ஏற்படும்.

நல்ல தூக்கமே நோயற்ற வாழ்வுக்கு அடிப்படை என்பதை உணர்ந்து நல்ல தூக்கத்தை அடைந்து நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.

எக்ஸெல் பங்சன்கள்

பங்சன் என்பது எக்ஸெல் தொகுப்பு ஏற்கனவே உருவாக்கிய பார்முலாவினைக் குறிக்கிறது. எக்ஸெல் தொகுப்பில் இது போல பல பார்முலாக்கள் உள்ளன. அவற்றை நேரடியாக நாம் பயன்படுத்தலாம். அத்தகைய பொதுவான பங்சன்களில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. Sum: இந்த பங்சன் என்ன செய்கிறது? வரிசையாகத் தரப்படும் டேட்டாக்களைக் கூட்டுகிறது. இதனைப் பயன்படுத்தும் விதம்: =SUM(A1:A4) ) இந்த பார்முலாவில் A1 முதல் A4 வரையிலான செல்களில் உள்ள டேட்டாக்கள் கூட்டப்படுகின்றன. இந்த பங்சனில் உள்ள பார்முலாவை எந்த செல்லில் அமைக்கிறீர்களோ அந்த செல்லில் இந்த கூட்டுத்தொகையின் மதிப்பு பதியப்படும்.

2.Average: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களின் சராசரியைக் கணக்கிட்டு தருகிறது. இதனைப் பயன்படுத்தும் விதம்: =AVERAGE(A1:A4) இந்த பார்முலாவில் A1 முதல் அ4 வரையிலான செல்களில் உள்ள எண்களின் சராசரி கணக்கிடப்பட்டு, அதாவது A1 முதல் A4 வரையிலான எண்கள் கூட்டப்பட்டு கூட்டுத் தொகை 4 ஆல் வகுக்கப்பட்டு தரப்படும். இந்த பார்முலா எந்த செல்லுக்கென எழுதப்பட்டுள்ளதோ அந்த செல்லில் பதியப்படும்.

3. Max: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களில் எது அதிக மதிப்புடையது என்று கண்டறிந்து சொல்லும். இதனைப் பயன்படுத்தும் விதம்: =MAX(A1:A4) இந்த பார்முலாவில் அ1 முதல் அ4 வரையிலான செல்களில் உள்ள எண்களில் எது பெரிய எண் எனக் கண்டறிந்து அந்த மதிப்பு இந்த பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும்.

4. Count: கொடுக்கப்பட்டுள்ள செல்களில் எத்தனை செல்களில் மதிப்பு தரப்பட்டுள்ளது எனக் கணக்கிடப்பட்டு அந்த மதிப்பு பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும். இதனை அமைக்கும் விதம் =COUNT(A1:A4)

5. Min: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களில் எது குறைந்த மதிப்புடையது என்று கண்டறிந்து சொல்லும். இதனைப் பயன்படுத்தும் விதம்: =Min (A1:A4) இந்த பார்முலாவில் அ1 முதல் அ4 வரையிலான செல்களில் உள்ள எண்களில் எது குறைந்த மதிப்பு கொண்ட எண் எனக் கண்டறிந்து அந்த மதிப்பு இந்த பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும்.

6. Round: செல்லில் உள்ள மதிப்பு ஒன்றினை நாம் அமைத்திடும் தசம ஸ்தான அளவில் வரையறை செய்து அளிக்கும். இதனை அமைத்திடும் விதம் =ROUND(A1,2) இந்த பார்முலாவில் செல்லில் உள்ள மதிப்பை எடுத்து அதனை இரண்டு தசம ஸ்தானத்திற்கு மாற்றித்தரும். மேலே தரப்பட்டிருக்கும் எடுத்துக் காட்டுக்களில் செல்களின் எண்களாக நமக்குத் தேவைப்படும் செல்களின் எண்களைத் தரலாம்.

எக்ஸெல் பங்சன்கள்

பங்சன் என்பது எக்ஸெல் தொகுப்பு ஏற்கனவே உருவாக்கிய பார்முலாவினைக் குறிக்கிறது. எக்ஸெல் தொகுப்பில் இது போல பல பார்முலாக்கள் உள்ளன. அவற்றை நேரடியாக நாம் பயன்படுத்தலாம். அத்தகைய பொதுவான பங்சன்களில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. Sum: இந்த பங்சன் என்ன செய்கிறது? வரிசையாகத் தரப்படும் டேட்டாக்களைக் கூட்டுகிறது. இதனைப் பயன்படுத்தும் விதம்: =SUM(A1:A4) ) இந்த பார்முலாவில் A1 முதல் A4 வரையிலான செல்களில் உள்ள டேட்டாக்கள் கூட்டப்படுகின்றன. இந்த பங்சனில் உள்ள பார்முலாவை எந்த செல்லில் அமைக்கிறீர்களோ அந்த செல்லில் இந்த கூட்டுத்தொகையின் மதிப்பு பதியப்படும்.

2.Average: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களின் சராசரியைக் கணக்கிட்டு தருகிறது. இதனைப் பயன்படுத்தும் விதம்: =AVERAGE(A1:A4) இந்த பார்முலாவில் A1 முதல் அ4 வரையிலான செல்களில் உள்ள எண்களின் சராசரி கணக்கிடப்பட்டு, அதாவது A1 முதல் A4 வரையிலான எண்கள் கூட்டப்பட்டு கூட்டுத் தொகை 4 ஆல் வகுக்கப்பட்டு தரப்படும். இந்த பார்முலா எந்த செல்லுக்கென எழுதப்பட்டுள்ளதோ அந்த செல்லில் பதியப்படும்.

3. Max: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களில் எது அதிக மதிப்புடையது என்று கண்டறிந்து சொல்லும். இதனைப் பயன்படுத்தும் விதம்: =MAX(A1:A4) இந்த பார்முலாவில் அ1 முதல் அ4 வரையிலான செல்களில் உள்ள எண்களில் எது பெரிய எண் எனக் கண்டறிந்து அந்த மதிப்பு இந்த பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும்.

4. Count: கொடுக்கப்பட்டுள்ள செல்களில் எத்தனை செல்களில் மதிப்பு தரப்பட்டுள்ளது எனக் கணக்கிடப்பட்டு அந்த மதிப்பு பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும். இதனை அமைக்கும் விதம் =COUNT(A1:A4)

5. Min: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களில் எது குறைந்த மதிப்புடையது என்று கண்டறிந்து சொல்லும். இதனைப் பயன்படுத்தும் விதம்: =Min (A1:A4) இந்த பார்முலாவில் அ1 முதல் அ4 வரையிலான செல்களில் உள்ள எண்களில் எது குறைந்த மதிப்பு கொண்ட எண் எனக் கண்டறிந்து அந்த மதிப்பு இந்த பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும்.

6. Round: செல்லில் உள்ள மதிப்பு ஒன்றினை நாம் அமைத்திடும் தசம ஸ்தான அளவில் வரையறை செய்து அளிக்கும். இதனை அமைத்திடும் விதம் =ROUND(A1,2) இந்த பார்முலாவில் செல்லில் உள்ள மதிப்பை எடுத்து அதனை இரண்டு தசம ஸ்தானத்திற்கு மாற்றித்தரும். மேலே தரப்பட்டிருக்கும் எடுத்துக் காட்டுக்களில் செல்களின் எண்களாக நமக்குத் தேவைப்படும் செல்களின் எண்களைத் தரலாம்.

இல்லை...! இல்லை...! இல்லை...!

பறவைகள் நீண்ட தூரம் பறக்கும் ரகசியம்


உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பறவைகள் இனப்பெருக்கத்திற்காகவும், சீதோஷ்ண நிலை காரணமாகவும், ஒவ்வொரு ஆண்டும் இடம் பெயர்கின்றன. இந்த இடப் பெயர்ச்சியின் போது, அவை பல ஆயிரம் கி.மீ., தூரத்தை கடக்கின்றன. சில பறவைகள் தொடர்ந்து பல மணி நேரம் பறந்து, இலக்கை அடைகின்றன. "பல ஆயிரம் கி.மீ., தூரம் தொடர்ந்து பறப்பதற்கான உடல் திறன், இப்பறவைகளுக்கு எப்படி கிடைக்கிறது...' என்பது, பறவைகள் குறித்த ஆய்வாளர்களின் நீண்ட நாள் கேள்வியாக இருந்தது. இந்நிலையில், நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் பறவைகள், சக்தி பெற, "பெர்ரி' பழங்களை அதிகமாக உண்ணுகின்றன என்ற புதிய தகவல், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அமெரிக்க ரசாயன கழகம் நடத்திய தேசிய கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. "மனிதர்களின் உடல் நலத்திற்கு சத்துக்கள் தரும் பழங்கள், காய்கறிகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளோம். இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகளும், அதிக சத்துக்கள் நிறைந்த உணவையே விரும்புகின்றன...' என்று, ரோட்தீவு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு தலைவர் நவீன்டிராசீரம் கூறியுள்ளார். பெர்ரி பழங்களை உண்ணும் 12 பறவைகளை ரோட் தீவு, டின்னி பிளாக் தீவுகளில் நவீன்டிராசீரம் மற்றும் அவருடன் பணியாற்றுபவர்கள் சேகரித்தனர். இப்பறவைகள் அட்லாண்டிக் கடல் வழியாக பறக்கும் போது, இடையே உள்ள தீவுகளில் இறங்கின. அப்போது, பறவைகளின் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு மற்றும் நன்கு பழுத்த நிலையில் உள்ள ஆரோவுட், வின்டர் பெர்ரி, பேபெர்ரி, சோக் பெர்ரி, எல்டர்பெர்ரி ஆகிய பழங்களின் பிக் மென்ட்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். பறவைகள் நீண்ட தூரம் பறக்கும் திறன் குறித்து நவீன்டிராசீரம் கூறிய தாவது: மற்ற பெர்ரி பழங்களின் சராசரியை விட, ஆரோவுட் பழத்தில் 650 சதவீதத்திற்கும் அதிகமான பிக்மென்ட்டும், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் 150 சதவீதத்திற்கும் அதிகமாகவும் உள்ளன. இதனால் தான், பறவைகள் ஆரோவுட் பழங்களை அதிகமாக உண்கின்றன. இலையுதிர் காலத்தில் இடப்பெயர்ச்சி செய்யும் சில பறவைகள், தங்கள் எடையைப் போல மூன்று மடங்கு பெர்ரி பழங்களை உண்ணுகின்றன. ஒரு மனிதன் தினசரி 136 கிலோ சாப்பிட்டால், எந்த அளவு சக்தி கிடைக்குமோ, அதைவிட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இடப்பெயர்ச்சி செய்யும் சில பறவைகள் கறுப்பு நிறத்திலும், ஆழ்ந்த பிக்மென்ட் மற்றும் உயர்வான ஆன்டி ஆக்சிடன்ட் கொண்ட பழங்களை விரும்புவதை, முன்னதாக விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர். ஆன்டி ஆக்சிடன்ட், நோய் எதிர்ப்பு சக்தியை தருவதுடன், பறவைகள் நீண்ட தூரம் பறப்பதற்கான சக்தியையும், உடல் வெப்பம் அதிகரிக்கும் சக்தியையும் தருகின்றன. இவ்வாறு நவீன்டிராசீரம் கூறி யுள்ளார். பழங்களை தின்று கொட்டைகளை எச்சங்களாக வெளியேற்றுவதன் மூலம் பழம் தரும் தாவரங்கள் பல இடங்களில் பரவுகின்றன. இதன் மூலம் சக்தியளிக்கும் பழங்களை தரும் பெர்ரி இன மர வகைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், உலகின் பல இடங்களில் அவை பரவ, இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகள் உதவுகின்றன.

இந்திய ரூபாய்க்கான புதிய சின்னம்:கம்ப்யூட்டரில் "டைப்' செய்ய வசதி

இந்திய ரூபாய்க்கான புதிய சின்னத்தை கம்ப்யூட்டரில் "டைப்' செய்ய வசதியாக புதிய "எழுத்துரு (Font)', "போராடியன் டெக்னாலஜிஸ்' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.இந்திய ரூபாய்க்கான புதிய சின்னம், சமீபத்தில் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டது. அமெரிக்கா உட்பட முன்னணி நாடுகளைப் போல, நமது நாட்டின் ரூபாய்க்கும்அடையாள சின்னமாக விளங்கும் வகையில் புதிய சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய சின்னத்தை, ஐ.ஐ.டி.,யில் டிசைன் பிரிவு துணைப் பேராசிரியராக சேர்ந்துள்ள உதயகுமார் வடிவமைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, இந்திய ரூபாய்க்கான சின்னத்தை, சர்வதேச அளவில் பொதுவான கீ-போர்டுகளில் பயன்படுத்தும் வகையில், "போராடியன் டெக்னாலஜிஸ்' நிறுவனம்புதிய "எழுத்துரு (Font)' வடிவமைத்துள்ளது. மங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், கம்ப்யூட்டர் கீ-போர்டில், "டாப்' கீக்கு மேல்புற கீயை இயக்கினால், இந்திய ரூபாய்க்கான புதிய சின்னத்தை, "டைப்' செய்யும் வகையில் புதிய "எழுத்துரு (Font)' வடிவமைத்துள்ளது.

இந்த புதிய சின்னத்தை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு வசதியாக http://blog.foradian.com என்ற இணையதள முகவரியிலிருந்து இலவசமாக, "டவுண்லோடு' செய்து கொள்ளவும் வழி வகை செய்துள்ளது.இதுகுறித்து, "போராடியன் டெக்னாலஜிஸ்' அதிகாரிகள் கூறுகையில், ""இந்திய ரூபாய்க்கான புதிய சின்னம் முழுமையாக புழக்கத்திற்கு வர சில வருடங்களாகும். கம்ப்யூட்டர் கீ-போர்டில், "டாப்' கீக்கு மேல்புறமுள்ள கீயை இயக்கினால் செயல்படும் வகையில் புதிய "எழுத்துரு (Font)' வடிவமைக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் கீ-போர்டில்,"டாப்' கீக்கு மேல்புறமுள்ள கீயை அதிகமானவர்கள் பயன்படுத்துவதில்லை என்பதால், அந்த கீ தேர்வு செய்யப்பட்டது. இதுவரை இந்த "எழுத்துரு (Font)' ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் "டவுண்லோடு' செய்துள்ளனர்,'' என்றனர்.நட்பு வட்டார இணையதளங்களான பேஸ்புக், ஆர்குட் பயன்பாட்டாளர்கள் பலர் இந்தபுதிய சின்னத்தை, "டவுண்லோடு' செய்து பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

"எழுத்துரு (Font)' பயன்படுத்தும் முறை:"டவுண்லோடு' செய்யப்பட்ட "எழுத்துரு (Font)'"காபி' செய்து, c:windows/fonts என்ற "போல்டரில்' பேஸ்ட் செய்யவும். பின் "வேர்ட் பைலை' திறந்து கீ-போர்ட்டில் "டாப்' கீக்கு மேல்புறமுள்ள கீயை இயக்கவும். பின், டைப் செய்யப்பட்ட எழுத்தை "செலக்ட்' செய்து, மேலே "ஸ்டேடஸ் பாரில்' உள்ள upee_foradian fontசெலக்ட் செய்யவும். இந்திய ரூபாயக்கான புதிய சின்னத்தின் எழுத்து திரையில் தெரியும்.

காய்ச்சல் என்பது நோய் அல்ல; அறிகுறி தான்!

"எனக்கு காய்ச்சல் இருக்கிறது; தலை சுடுகிறது; தொட்டுப் பார்...' என, காய்ச்சல் வந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். தொடு உணர்ச்சி மூலம், காய்ச்சலின் அளவைக் கண்டறிவது கடினம். நம் கை, "தெர்மாமீட்டர்' அல்ல; காய்ச்சலும், தொட்டால் தெரியும் வகையிலான பொருள் அல்ல. பாதரச டியூப் அல்லது டிஜிட்டல் வகையிலான தெர்மா மீட்டரைக் கொண்டு மட்டுமே, நம் உடல் வெப்ப நிலை 98.6 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளதா என்பதை கண்டறிய முடியும். இப்போது நெற்றியில் வைத்து, வெப்பநிலை கண்டறியும், மருத்துவ பட்டையும் பயன்பாட்டில் உள்ளது. காய்ச்சல் ஏற்பட்டாலும், அது குறித்து பயப்படத் தேவையில்லை. அதாவது, நோயை எதிர்த்துப் போராடும் திறன், நம் உடலக்கு உண்டு. இயற்கையாகவே அமைந்துள்ள பாதுகாப்பு முறை அது. பிரிட்ஜ் அல்லது ஏர் கண்டிஷனரில் அமைந்துள்ளது போல், நம் உடலிலும், அதற்குத் தேவையான வெப்பத்தைக் கண்காணித்து சமப்படுத்தும் பணியை மூளையில் உள்ள ஒரு பகுதி செய்கிறது. இது, நரம்புகளிலிருந்து சிக்னலைப் பெற்று, உடல் வெப்பத்தைச் சீராக வைக்கும் வகையில் செயல்படுகிறது. உடல் வெப்ப நிலையும், அதிகாலை 2 முதல் 6 மணிவரை, குறைவாகவும், மாலை 4 முதல் 8 மணி வரை அதிகமாகவும் இருப்பது வழக்கம்.

வெப்பநிலை அதிகரிக்கும்போது, வியர்வை வெளியேறும். வியர்வை காயும்போது, வெப்பநிலை சீராகும். சுற்றுச்சூழல் வெப்பநிலை குறையும்போது, நம் மூளையில் உள்ள வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி, உடல் நடுக்கத்தைத் தூண்டி விடும். இதனால், தசைகளுக்கு வேலை அதிகரித்து, உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தரும். உடல் மேல் பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் சுருங்கி, வெப்பம் வெளியேறாமல் தடுக்கும். உடலைத் தாக்கும் பாக்டீரியா அல்லது வைரஸ்கள், பைரோஜென் என்ற, வெப்பத்தை அதிகரிக்கும் பொருளை உருவாக்குகின்றன. இதனால் தான், உடலில் காய்ச்சல் ஏற்படுகிறது. எனினும், இது போன்ற தொற்றுக்களால் மட்டுமே, காய்ச்சல் ஏற்படும் எனக் கூற முடியாது. கடும் உடற்பயிற்சி, கட்டிகளை உருவாக்கும் செல்கள் சுரக்கும் ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் நோய்களாலும், காய்ச்சல் ஏற்படும். பள்ளி செல்லும் குழந்தைகள், ஆண்டுக்கு ஐந்தாறு முறை காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். 80 சதவீதக் குழந்தைகளுக்கு, வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த காய்ச்சல், "ஆன்ட்டிபயாடிக்ஸ்' போடாமலேயே, 3 அல்லது 4 நாட்களில் குணமாகி விடும். 20 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே, தொற்று தீவிரமடைந்து, பாதிப்பை ஏற்படுத்தும்.

குழந்தைகளை எப்போது டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்?

* பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத குழந்தைகள்.
* போதிய அளவு நீராகாரம் குடிக்க முடியாத நிலையில் இருந்தால்
* உடலில் நீர்ச்சத்து குறைந்து போனால்
* வலிப்பு ஏற்பட்டால்
* 72 மணி நேரத்திற்கு மேல், காய்ச்சல் தொடர்ந்தால்
* அழுகையும், கோபமும் தொடர்ந்தால்
* குழப்பமாக, ஏதேதோ பேசினால்
* உடலில் ஒவ்வாமை ஏற்பட்டால்
* மூச்சு விடத் திணறினால்

இத்தகைய அறிகுறிகள் இருந்தால், மருத்துவரிடம் காண்பிக்கவும்.
சரியான இடைவெளி விட்டு, போதுமான அளவு மருந்து கொடுத்தால், வீட்டில் இருந்தபடியே காய்ச்சலை குணப்படுத்தலாம். குழந்தையின் உடல் எடையைப் பொறுத்து, பாரசிட்டமால் மருந்தின் அளவு மாறுபடும். ஒரு கிலோ எடைக்கு 10 முதல் 15 மிலி கிராம் பாரசிட்டமால், 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கென பாரசிட்டமால் மாத்திரை (125 மி.லி., கிராம்), பாரசிட்டமால் சிரப் (5 எம்.எல்., = 125 மி.லி., கிராம்) ஆகியவை உள்ளன.
பாரசிட்டமாலுக்கு பதிலாக, "ஐபுபுரூபென்' மாத்திரை கொடுக்கலாம். இதற்கு டாக்டர்களின் பரிந்துரை அவசியம். எந்த மருந்தும் அளவுக்கு அதிகமாகக் கொடுப்பது ஆபத்து. 10 வயதுக்குள்ள குழந்தைகளுக்கு, ஆஸ்பிரின் மருந்து கொடுக்கக் கூடாது. குறிப்பிட்ட சில வகை காய்ச்சலுக்கு மட்டுமே, டாக்டர்கள் இந்த மருந்தைப் பரிந்துரைப்பர். எனவே, டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து சாப்பிடக் கூடாது.
காய்ச்சல் கண்ட குழந்தையை ஈரத் துணியால் துடைத்து, மின் விசிறி மூலம் காய வைக்க வேண்டும். சுடுநீர் பயன்படுத்தக் கூடாது; ஐஸ்வாட்டரிலும் குழந்தையை நிற்க வைக்கக் கூடாது. பருத்தியால் ஆன,தொளதொள உடையை அணிவிக்க வேண்டும். தடிமனான உடை, போர்வையால் சுற்றுதல் ஆகியவை, உடல் சூட்டை அதிகரித்து விடும். குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் செல்லும்போது, நோய்தடுப்பு மருந்துகள் போட்டதற்கான சான்று அட்டையை, எடுத்துச் செல்ல வேண்டும். அந்த அட்டையைப் பார்த்தாலே, குழந்தைக்கு என்னென்ன நோய்கள் தாக்காதிருக்கும் என்பதைக் கண்டறிந்து விட முடியும். சில குழந்தைகளுக்கு, உடல் வெப்பநிலை அளவுக்கு அதிகமாக அதிகரிக்கும்போது, வலிப்பு ஏற்படும்.
பெரும்பாலும், இந்த வலிப்பு, தானாகவே நின்று விடும். எனினும், டாக்டரிடம் காண்பிப்பதற்கு முன், குழந்தைக்கு அடுத்த முறை வலிப்பு ஏற்படாத வகையில், காய்ச்சலைக் கட்டுப்படுத்த, பாரசிட்டமால் மருந்து கொடுக்க வேண்டும்.
டாக்டரிடம் அழைத்துச் செல்வதற்கு முன், முதலுதவி போல பாரசிட்டமால் கொடுப்பது அவசியம்.
குழந்தைக்கு நோய் தடுப்பு மருந்துகள் போடுவதற்கான அட்டவணையை டாக்டரிடம் கேட்டுப் பெற்று, தனி "பைலாக' பாதுகாக்க வேண்டியது அவசியம். எத்தனை முறை, "பிரிஸ்கிரிப்ஷன்' வாங்கினாலும், அதை, அந்த "பைலில்' போட்டு வைத்து விடுங்கள். குழந்தைகள் மட்டுமல்லாமல், அனைவருக்குமே, காய்ச்சல் குறித்த அளவை, "பைலில்' எழுதி வைக்க வேண்டியது அவசியம். 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை சென்றால், 4 முதல் 6 மணி நேர இடைவெளியில், 500 எம்.ஜி., பாரசிட்டமால் உட்கொள்ளலாம். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால், டாக்டரிடம் செல்ல வேண்டும்.
உடல் நடுக்கம், குளிர், வலிப்பு, அடிவயிறு வலி, வேறு உபாதைகள், நீரிழிவு நோய், சிறுநீரக பிரச்னை ஆகியவை ஏற்படும்போது, நோய் எதிர்ப்புத் திறனைக் குறைக்கும் மருந்துகள் உட்கொள்ளும்போது, டாக்டரிடம் செல்ல வேண்டியது அவசியம். "ஆன்ட்டிபயாடிக்'குகள், பாக்டீரியாவுக்கு மட்டுமே எதிராகச் செயல்படக் கூடியவை; வைரஸ்களுக்கு எதிராக அல்ல. "ஆன்ட்டிபைரடிக்' மற்றும் "ஆன்ட்டிபயாடிக்' ஆகியவற்றைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. டாக்டரின் ஆலோசனை இல்லாமல், இத்தகைய மருந்துகளை உட்கொள்வது, நோயை குணப்படுத்தாது; ஆபத்தை விளைவித்து விடும்.

ஜிமெயிலில் சில இமெயில்களுக்குத் தடை செய்வது எப்படி!



நம் மின்னஞ்சல் முகவரிக்குத் தேவையற்ற நபர்கள் பலரிடம் இருந்து தொடர்ந்து அஞ்சல் செய்திகள் வந்து கொண்டே இருக்கும். நிச்சயமாக அவை பயனற்றவை என்று தெரிந்தும், வேறு வழியின்றி அவற்றை நம் மெயில் பாக்ஸிலிருந்தும், ட்ரேஷ் பாக்ஸிலிருந்தும் நீக்கிக் கொண்டிருப்போம். இதற்குப் பதிலாகக் குறிப்பிட்ட முகவரியிலிருந்து வரும் மெயில்களை, வடிகட்டி, அவற்றை இன்பாக்ஸுக்கு அனுப்பாமல் இருக்கும் வசதியினை ஜிமெயில் தருகிறது. அதனை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.
ஜிமெயிலில் இத்தகைய இமெயில்களின் முகவரிகளுக்கென மற்ற தளங்கள் தருவது போல பிளாக் லிஸ்ட் வசதி இல்லை. இருப்பினும் அவற்றை எப்படி தடை செய்வது என இங்கு காண்போம். நீங்கள் இத்தகைய மெயில்களுக்கென ஒரு பில்டர் தயாரிக்க வேண்டும். இதற்கு உங்கள் அக்கவுண்ட் மூலம் ஜிமெயிலுக்குச் செல்லவும். நீங்கள் எந்த இமெயில் முகவரிகளிடமிருந்து, மின்னஞ்சல்களைப் பெற விரும்பவில்லையோ, அவற்றின் முன் ஒரு சிறிய டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அடுத்து திரையின் மேலாக உள்ள More Actions என்ற பகுதியில் கிளிக் செய்திடவும்.இங்கு Filter Messages like these என்ற இடத்தில் பின்னர் கிளிக் செய்திடவும். உடன் create filter என்ற விண்டோ காட்டப்படும். நீங்கள் தடை செய்திட விரும்பும் மின்னஞ்சல் முகவரிகள் அனைத்தும் From பீல்டில் இருப்பதனைப் பார்க்கலாம். அந்த மின்னஞ்சல் முகவரிகள் சரியாக உள்ளனவா என்று பார்க்கவும். நீங்கள் விரும்பினால், ஓர் இணைய தளத்திலிருந்து வரும் அனைத்து மெயில்களையும் தடை செய்திடலாம். அதற்கு @ என்ற அடையாளம் மட்டும் அமைத்து, அதன் பின்னர் தளத்தின் பெயரை அமைக்கவும். இத்துடன் மெயில் செய்தியில் சில சொற்கள் உள்ள மெயில்களையும் தடை செய்திடலாம். இதனை எல்லாம் முடித்தவுடன், அடுத்து Next Step என்ற பட்டனை அழுத்தவும். அடுத்து என்ன செயலை நீங்கள் மேற்கொள்ள விரும்புகிறீர்களோ, அந்த பாக்ஸ் முன் டிக் அடையாளத்தினை அமைக்கவும். எடுத்துக்காட்டாக, விரும்பாத இமெயில் வந்தால், உடனே அழிக்க வேண்டும் என எண்ணினால், Delete it என்பதில் டிக் அடையாளம் அமைக்கவும். இந்த முகவரிகளில் இருந்து வரும் அனைத்து மெயில்களும் உடன் ட்ரேஷ் பெட்டிக்குச் செல்லும். நீங்கள் தேர்ந்தெடுக்க Skip the Inbox, Archive it, Mark as read, Star it, Apply a label, Forward it, Send canned response, and Never send to spam என்ற பல ஆப்ஷன்கள் உள்ளன. சில வேளைகளில், சிலரிடமிருந்து வரும் இமெயில்களைப் பார்த்துவிட்ட பின்னர், அழிக்க எண்ணலாம். அத்தகைய இமெயில்கள் ட்ரேஷ் பெட்டியில் 30 நாட்கள் தங்கும். இவற்றை எல்லாம் முடித்தவுடன் Create Filter Button என்ற பட்டனை அழுத்தவும். உடனே பில்டர் செயல்படத் தொடங்கும். எவற்றை எல்லாம் தடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பது Settings – Filters என்ற இடத்தில் பட்டியலாகக் காட்டப்படும். உங்களுடைய விருப்பம் மாறும் போது, இந்த இமெயில் முகவரிகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

ஆம்புலன்ஸ்


1809-ம் ஆண்டு நடைபெற்ற போரில், காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர் பிரெஞ்சுக்காரர்கள். நடக்க முடிந்தவர்கள், ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்ல முடிந்தவர்களை போர்க்களத்திற்கு அருகிலேயே ஒரு கூடாரம் அமைத்து முதலுதவி அளித்தனர். பிரெஞ்சு மொழியில் `நடத்தல்' என்பதற்கான சொல் ஆம்புலேர் ((Ambulare). அதற்கு இணை யான ஆங்கிலச்சொல் (Amble) என்பதாகும்.

1942-ம் ஆண்டுகளில் `உதவி வேண்டுவோருக்கான புகலிடம்' என்ற பொருளில் ஹாஸ்பிடல் என்ற சொல் வழங்கி வந்தது. `உதவி வேண்டுவோர் நடந்தோ அல்லது சுமக்கபட்டோ சென்றடையும் இடம்' என்பதே ஆம்புலன்ஸ் என்பதன் நேரடியான மொழிபெயரப்பாகும்.

19-ம் நுற்றாண்டின் இடைக்காலத்தில் கிரிமியாவில் நடைபெற்ற போரில், காயமடைந்த வீரர்கள் குதிரைகளால் இழுக்கபட்ட வாகனங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். அந்த வாகனங்கள் `ஆம்புலன்ஸ்' என்று அழைக்கபட்டன. தமிழில் இதை `அவசர ஊர்தி' என்று குறிப்பிடுகிறார்கள்.

இதன் முலம் பாதிக்கபட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால், ஏராளமான உயிர்கள் காப்பாற்றபடுகின்றன.