Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

பயன்படுத்த மட்டும் கட்டணம் : அடோப்

போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் தொகுப்பிற்குப் பெயர் பெற்ற அடோப் நிறுவனம், தன் சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை வழங்குகிறது. இதன் படி, மாதக் கட்டணம் செலுத்துவதன் மூலமும், பயன்படுத்தப்படும் எண்ணிக்கைக் கேற்ப பணம் செலுத்துவதன் மூலமும் ஒருவர் இந்நிறுவனத்தின் சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்தலாம். அண்மையில் கொல்கத்தாவில் அடோப் சி.எஸ். 5 தொகுப்பினை வர்த்தக ரீதியாக வெளியிட்டுப் பேசிய அடோப் மார்க்கட்டிங் பிரிவு தலைவர் இதனைத் தெரிவித்தார்.

பயன்படுத்தும் அளவிற்கு கட்டணம் என்பது, இணைய அடிப்படையில் மேற்கொள்ளப்படும். ஒருவர் இணையம் மூலமாக இந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தலாம். எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறாரோ அதற்கேற்ற அளவில் பணம் செலுத்த வேண்டும். மணிக்கணக்கு அல்லது வேறு அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். சந்தா அடிப்படையில் பணம் செலுத்துபவர்கள் குறிப்பிட்ட காலம் வரை, சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்தலாம். அதன்பின், உரிமத்தினை நீட்டிக்கவில்லை என்றால் பயன்படுத்த இயலாது.

அண்மையில் அடோப் வெளியிட்ட அடோப் கிரியேட்டிவ் சூட் 5ல், வடிவமைப்பிற்குத் தேவையான பல வழக்கமான பல அப்ளிகேஷன் களுடன், புதிய அப்ளிகேஷன் களும் தரப்பட்டுள்ளன. அடோப் பிளாஷ் கேடலிஸ்ட், போட்டோ ஷாப், இன் டிசைன் ஆகியவை புதிய சில தொகுப்புகளாகும். இவற்றில் 250க்கும் மேற்பட்ட வசதிகள் கிடைக்கின்றன.

மனநோய் ஒரு சமூக வியாதி. ஆடையை கிழித்துக் கொண்டு அலைபவர்கள் மட்டும் மனநோயாளிகள் அல்ல. ஆசைகள் நிறைவேறாதவர்கள், விருப்பங்களை அடக்கிக் கொண்டவர்கள், அடக்கபடுபவர்கள் என எல்லோரும் எப்போதாவது மனநோய் அறிகுறிகளை வெளிபடுத்துவார்கள்.

சமுதாயத்தில் ஏற்ற இறக்கங்கள் பின்பற்றப்படும்வரை மனவியாதிகள் இருக்கும் என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். உளவியலின் தந்தையாக போற்றபடும் சிக்மட் பிராய்டு, `பண்பாட்டு உணர்ச்சியால் (பாலின) உணர்வை கட்டுபடுத்துவதும் மனநோய் பாதிப்புக்கு காரணம்' என்று கூறினார். மனிதன் ஒரு இன்பம் விரும்பி. அவனுக்கு துன்பம் பிடிக்காது. ஆனால் இன்பமும் துன்பமும் மனதால் வருகிறது என்பதை உணராதபோது அவன் சுயநிலை இழக்கிறான். உளவியல் பாதிப்பு வெளிபடத் தொடங்குகிறது. மற்றவர்களால் மனநோயாளி என ஒதுக்கபடுகிறான். உடல் திடகாத்திரமாக இருந்தும் மனம் திடமாக இல்லாவிட்டால் அவனை சமுகம் மனிதனாகக் கருதாது.

மனவியாதியும் மற்ற வியாதிகள்போல குணபடுத்தக் கூடியதே. ஆனால் சமுகம், பாதிக்கபட்டவருடன் அவரது குடும்பத்தையே ஒதுக் குவதால் யாரும் துணிந்து மனநல சிகிச்சையை முதலிலேயே நாடுவதில்லை. சிந்தனை, உணர்ச்சி, பண்பியல் இவற்றின் குறைபாடுகளே மன நோயின் அறிகுறிகளாகும். வழக்கத்துக்கு மாறாக பேசுவது, சொன்னதையே சொல்வது சிந்தனை குழப்ப அறிகுறிகளாகும். கல்வி அறிவிற்கும், கலாச்சாரத்திற்கும் பொருந்தாத முடநம்பிக்கை, அச்சம் காரணமாக எழும் தேவையற்ற பயம், நம்பிக்கை, இயல்பான உணர்வுகள் அடங்காமல் வெளி படுவது மனநோய் வெளிபாடுகளாகும்.கடவுள் தோன்றுவதாகவும், ஏதோ ஒலி கேட்பதாகவும், வாசனை வருவதாகவும், யாரோ தங்களை தொட்டுத் துன்புறுத்துவதாகவும் கூறுவதும் சில அறிகுறிகள் தாம். ஞாபகசக்தி குறைவதும், தூக்கம் குறைவதும் மன பாதிப்புகளின் வெளிபாடுகளே. அறிகுறிகளை சரியாக கவனிக்காவிட்டால் மனநோய் முதிர்கிறது. இதில் எண்ணம் தொடர்பான முதிர்ந்த மனநோய்கள் இருவகைபடும். அவை: முளை பாதிப்பது, முளை பாதிக்காத மனம் சார்ந்த பாதிப்பு.

இதன் முதல்கட்டமாக மனச் சிதைவு ஏற்படுகிறது. குழந்தைகளிடம் அதிக எதிர்பார்பை காட்டுவதால் குமர பருவ மனச்சிதைவு உண்டாகிறது. இளமையில் விரைப்பு சார்ந்த மனச்சிதைவு நோய் ஏற்படுகிறது. பகை, வெறுப்பு, அலட்சியம், அகம்பாவ எண்ணம் கொண்டவர்களுக்கு பின்னாளில் சந்தேகம் சார்ந்த மனச் சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மனநலக் குறைவு உடல் நோய்களையும் தோற்றுவிக்கும். ஏனெனில் மனமும், உடலும் இணைபுள்ளவை. உடலில் நோய் ஏற்பட்டால் கோபம், எரிச்சல், சோர்வு போன்ற மன பாதிப்புகள் வெளிபடும். அதுபோல மனஅதிர்ச்சி ஏற்படும்போது வியர்வை, நடுக்கம் போன்ற உடல்பாதிப்புகள் ஏற்படும்.

எனவே உளவியல் மாற்றங்களால் சில வியாதிகளும் தோன்றும். உணர்வு கொந்தளிப்பால் ஆஸ்துமா, குடற்புண் உள்ளிட்ட ஜீரண மண்டல வியாதிகள் ஏற்படும். பயம், நாணம், கோபம் போன்ற உணர்வு அடக்கத்தால் தோல் வியாதி, ரத்த அழுத்தமும், சுரப்பிகளில் பாதிப்பும் ஏற்படுகிறது. பயம், அதிர்ச்சி போன்றவற்றால் முளை நாளங்கள் பாதிப்பு, மாதவிடாய் கோளாறுகள் தோன்றலாம். முளையில் ஏற்படும் பலவித நோய்களாலும் மனநோய் உருவாகும். ஜன்னி நோய் ஒரு வித பிதற்ற நிலை மனவியாதியே. மதுபழக்கம், நாளமில்லாச் சுரப்பிகளின் பாதிப்பு இதற்கு காரணமாகும். சிலருக்கு நினைவுகள் அடிக்கடி மாறுவதால் மனக்குழப்பம் ஏற்படலாம். ரத்த ஓட்டம் குறைவு, முளையில் உருவாகும் கட்டியால் நாள்பட்ட முளைபாதிப்பு நோய் ஏற்படலாம். இதனால் மனம் ஆற்றல் இழந்துபோகும். உணர்ச்சி வசப்படுவதால் பலவித வலிப்பு நோய்கள் ஏற்படுகின்றன. இதை மருந்துகளால் குணபடுத்தலாம்.

ஜன்னி, மனக்குழப்பம், வலிப்பு இவற்றுக்கு மதுபழக்கம் மற்றும் பழக்கவழக்கங்களே முக்கிய காரணம். ஒருவர் நலமாக இருக்க வேண்டுமென்றால் அவரது குழந்தை பருவம் சரியாக அமைந்திருக்க வேண்டும். குழந்தைகள் நோயற்ற நிலையில் சாப்பிட மறுத்தால் மனபாதிப்பாக இருக்கும். கவன ஈர்ப்புக்காக அல்லது, எதிர்ப்புக்காக, பயத்தால் உண்ண மறுத்து அடம் பிடிக்கலாம்.

மிரட்டும் கனவுகளால் தூக்கம் இழப்பது, தூக்கத்தில் சிறுர் கழிப்பது போன்றவற்றுக்கு மன பாதிப்புகளே காரணம். திக்கிபேசுவது மனநோய் இல்லை. ஆனால் அதனால் மனஇறுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. மனவளர்ச்சி மற்றும் சூழ்நிலைக் குறைபாடுகள் குழந்தைகளின் கற்றல் திறனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பின்னாளில் வேறு மனநோய்களை தோற்றுவிக்கலாம். பொய், களவு, சண்டைக்குச் செல்லுதல், தீ வைத்தல் போன்றவற்றில் ஈடுபடும் குழந்தைகள் சமுக விரோதிகளாக வளரும் ஆபத்து உண்டு. இதற்கு காரணம் மனபாதிப்புகளே. இவர்கள் புத்திசாலிகளாகக் காணப்படுவார்கள். ஆனாலும் தாங்கள் விரும்பியதை அடைவதிலேயே குறியாக இருப்பார்கள். பாரம்பரியம், சுற்றுச்சூழல், முளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் அவர்கள் பாதிக்கபட காரணமாக அமைகின்றன.

குழந்தை பருவ ஏக்கங்கள், கோபங்கள், பெற்றோரின் கண்டிப்பு ஒருவரை மதுபழக்கத்திற்கு அடிமையாக்கலாம். மது மன நிலையை மாற்றுவதால் மனநோய் தோன்றும். ஒவ்வொரு மனநோயாளிக்கும் மிகவும் தேவையானது ஒரு நண்பனே என்கிறார் உளவியல் நிபுணர் கிளிபோர்டு பியர்ஸ். இக்காலத்தில் மனநோய்களுக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் இருக்கின்றன. வீரிய மருந்து மாத்திரைகள் மதம் பிடித்தவர்போல் இருக்கும் நோயாளியை கட்டுபடுத்த உதவுகிறது. மின்அதிர்ச்சி முறை மற்றொரு முக்கியமான சிகிச்சையாகும். மருத்துவர்கள் செர்லெட்டி, பினி இருவரும் 1938-ல் இம்முறையை அறி முகபடுத்தினர். அதிக பாதிப்புள்ளவர்களுக்கு முளை அறுவைச் சிகிச்சையும் செய்யப்படுகிறது. இதுதவிர பேச்சு வழியில் மனபகுப்பு மருத்துவம், மனோவசிய சிகிச்சை, நடத்தை மாற்று மருத்துவம் போன்றவையும் உள்ளன.

திடீர் மரணம் ஏற்படுவது ஏன்..?

எல்லாருக்கும் ஒரு கட்டத்தில் மரணம் ஏற்படும். வயது மூப்பு, விபத்து, தொடர் நோய் ஆகிய காரணங்களால் மரணம் ஏற்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், எந்த நோயும் இல்லாமல், நோய்க்கான அறிகுறிகளும் இல்லாமல், திடீரென சிலர் மரணம் அடைகின்றனர். இதற்கு "திடீர் இளவயது மரணம்' (சடன் அடல்ட் டெத்) என மருத்துவர்கள் பெயரிட்டுள்ளனர்.
தென் கிழக்கு ஆசியாவில் வசிக்கும் மக்களிடையே இது போன்ற மரணங்கள் சகஜமாக உள்ளன. நாட்டு பாடல்களில் கூட இது கூறப்பட்டுள்ளது. "பங்குன்குட்' என்று பிலிப்பைனிலும், "போக்குரி' என ஜப்பானிலும், "லாய் தாய்' என தாய்லாந்திலும் இந்த மரணத்தை அழைக்கின்றனர். சிலர் "தோஷம்' என அழைக்கின்றனர். இது போன்ற மரணம் சம்பவிக்கும் வீடுகளில், பெண் எடுக்கவும் தயங்கும் பழக்கமும் உண்டு.
திடீரென மரணம் ஏற்படுவது, பெண்களை விட, ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது. 32 வயதில் மரணமடைபவர்கள் அதிகம் பேர். இரவு தூங்கச் சென்று, விடிவதற்குள் மரணம் அடைவது தான், இது போன்ற மரணங்களுக்கான அறிகுறி.
மரணம் அடைந்தவருக்கு அருகில் படுத்திருப்பவர், திடீரென ஒரு அழுகுரலையோ, கத்துவது போன்ற சத்தத்தையோ கேட்டதாகக் கூறுவர். இது சூனியம், மாந்திரிகம், சாபம் என அவரவர் நம்பிக்கைகளை பொறுத்து கூறப்படுகிறது. இது போன்ற மரணங்களில், ஐந்து சதவீதத்தினரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யும் போது, இதயத்துடிப்பில் லேசான மாறுதல் இருந்ததற்கான அடையா ளம் மட்டும் தெரியும். இளவயது மரணம் என்பதாலும், ஆரோக்கியமான உடல் என்பதாலும் டாக்டர்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். இதயத் துடிப்புக்கு தேவையான மின்சக்தியில் மாற்றம் ஏற்படுவதற்கு, பாதிப்படைந்த மரபணு தான் காரணம். இதனால் தான் சில குடும்பங்களில், இத்தகைய மரணங்கள் பரம்பரையாக ஏற்படுகின்றன. தூங்கும் போது, நம் இதயம் துடிப்பது சற்று குறைகிறது. இது அளவுக்கு அதிகமாக குறைவதற்கான காரணம், மின்சக்தி மாறுபாடு தான். குறையும் இதயத்துடிப்பு, இறுதியில் நின்று விடுகிறது. இதனால் தான் இத்தகைய மரணங்கள், பெரும்பாலும் இரவு நேரத்தில் ஏற்படுகின்றன.

இத்தகைய பாரம்பரிய மரணங்கள் கொண்ட குடும்ப உறுப்பினர்களிடையே, குழந்தை பருவத்திலோ, விடலை பருவத்திலோ இதற்கான அறிகுறிகள் எதுவுமே தெரிவதில்லை. உடற்பயிற்சி செய்யும் போது, தங்களுடைய இதயம் வெகு வேகமாக அடித்து கொள்கிறதென்று பெற்றோரிடம் கூறுவர்; மயங்கி விழுவர்; திடீரென தலை சுற்றும். எனினும், உடல் ஆரோக்கியமாக இருப்பதால், பெற்றோரும், மருத்துவர்களும், இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அதே போல் சாதாரண நிலையில், இவர்களிடம் எடுக்கப்படும் இ.சி.ஜி.,யும் சாதாரணமாகவே இருக்கும். உடற்பயிற்சி செய்த சில நொடிகளில் இ.சி.ஜி., எடுக்கும் போது மட்டும் வேறுபாடு தெரியும். எனினும், இது போன்று மரணம் அடைந்த 60 சதவீதத்தினரிடையே, மேலே சொன்ன அறிகுறிகள் கூட காணப்பட்டதில்லை. ஜீவாவும் இதில் அடக்கம். ஆரோக்கியமான நபர், படபடப்பான சூழ்நிலையில் அல்லது உடற்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுகிறாரா, இவரது குடும்பத்தில் திடீர் மரணமோ, நோய் வாய்ப்படாத குழந்தையின் திடீர் மரணமோ ஏற்பட்டுள்ளதா, உடற்பயிற்சிக்கு பின், இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். எனினும், இ.சி.ஜி.,யில் ஏற்படும் மாறுபாடை வைத்தே, திடீர் மரணம் சம்பவிக்குமென கூறி விட முடியாது. திடீர் மரணம் ஏற்பட்ட சிலரின் உடலை பரிசோதித்த போது, அவர்கள் அதுவரை கண்டறியாத ஒரு பாதிப்பு உடலில் இருப்பது தெரிந்தது.
இதய ரத்தக்குழாயில் கொழுப்பு அடைத்திருப்பது, படிமானம் ஏற்பட்டிருப்பது ஆகியவை, இதயத்திற்கான ரத்த ஓட்டத்தை துண்டித்திருக்கும் அல்லது தாமதப்படுத்திருக்கும். இதனால், மாரடைப்பு நோய் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டிருக்கும். சிலருக்கு ரத்தக் குழாய்களே வேறு இடங்களில் மாறி வளர்ந்திருக்கும். பிறப்பிலேயே, "அயோடிக் ஸ்டெனோசிஸ்' நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
ஓடி ஆடும் இளவயதில், இவர்களின் இதயத்திற்கு செல்லும் ரத்தத்தின் அளவில் எந்த மாறுபாடும் தெரியாது. திடீரென மரணம் ஏற்படும் போது தான், இந்த குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும்.
"கார்டியோமயோபதி' என்ற நோயாலும் இதய தசைகள் பாதிக்கபட்டிருக்கலாம். இதுவும் சிலருக்கு பரம்பரையாகவே ஏற்படும். தசைகள் செயல் குறைந்த நிலையிலோ, பெரிய அளவிலோ காணப்படும். இதனால் சீரான இதயத்துடிப்பு இன்றியோ, இதயத்தின் சிக்கலான பகுதிகளுக்கு போதுமான அளவு ரத்த சப்ளையோ இல்லாமல் போகும். சில வைரஸ் தொற்றுக்கள் கூட, இதய தசைகளை பாதிப்படைய செய்யும், "மயோகார்டிடிஸ்' என்றழைக்கப்படும் இந்த தொற்றால், இதயத்திற்கான மின் சப்ளை சீராக இல்லாமல் போய் மரணத்தை ஏற்படுத்தும். டெர்பெனாடைன் மருந்தோ அல்லது கோகைன், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களோ கூட, இதயத்துடிப்பை தாறுமாறாக ஏற்றி, உயிருக்கு உலை வைத்து விடும்.
எல்லாவித திடீர் மரணத்தையும், முன்கூட்டியே தடுக்க முடியாது. வாழ்க்கையின் தவிர்க்க முடியாத விதி என்று கூட இதைக் கருதி கொள்ளலாம். எனினும், குழந்தைகளுக்கு ஏற்படும் திடீர் மயக்கம், நாடித்துடிப்பு அதிகரித்து வியர்த்தல், மூச்சுத் திணறலை தொடர்ந்து மயக்கம் ஆகியவற்றை பெற்றோர் கவனிக்க வேண்டும். இதே போன்று குடும்பத்தில் மற்ற யாருக்காவது அறிகுறிகள் இருந்து அவர்கள் திடீர் மரணம் அடைந்துள்ளனரா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். மயோகார்டிடிஸ், இ.சி.ஜி.,யில் மாறுபாடு, கார்டியோமயோபதி போன்றவற்றுக்கு சிகிச்சை முறைகள் உள்ளன. பிறப்பிலேயே உள்ள சில வகையான இதயக்கோளாறுகளுக்கு, அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன. நொறுக்குத் தீனி சாப்பிட்டு கொண்டே, நீண்ட நேரம் அமர்ந்து "டிவி' பார்ப்பதால் ஏற்படும் கொழுப்பு படிமானங்களை, தினமும் ஒருமணி நேர உடற்பயிற்சி செய்வதன் மூலம் தவிர்க்கலாம். பெற்றோர் தான் இதற்கு உதாரணமாக அமைய வேண்டும். பெற்றோர் உடற்பயிற்சியில் ஈடுபடாமல், "டிவி' பார்த்து கொண்டே குழந்தைகளிடம் "உடற்பயிற்சி செய்...' என்று சொன்னால், குழந்தைகள் அவர்கள் அறிவுரையை பின்பற்ற மாட்டார்கள்