Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

மருந்து... மாத்திரை... உணவு!

சில நோய்களுக்கான மருந்துகளை சாப்பிடும் காலகட்டத்தில் மிகுந்த ஆரோக்கியம் தருவதாக நம்பும் உணவு வகைகளைக்கூட சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் எதிர்விளைவுகள் ஏற்பட்டு விடும்.

* தொற்றுநோயின் பாதிப்பிற்காக `ஆன்டிபயாடிக்' மருந்துகள் சாப்பிடுவோர், பாலையும், `யோகர்ட்' உள்ளிட்ட பால் சார்ந்த உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். இறைச்சியையும் ஒதுக்கி விடலாம்.

* வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான மருந்துகளை வேறு எந்த மருந்துகளுடனும், குறிப்பாக `ஆன்டிபயாட்டிக்கு'களுடன் எடுத்துக் கொள்ளாதீர்கள். இதனால் வயிற்றுப் போக்கு இன்னும் மோசமாகி விடும்!

* ஒவ்வாமைக்காக மருந்து சாப்பிடும்போது, நெருப்பில் சுட்ட இறைச்சி, பசலைக் கீரை, முட்டை, வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

* தைராய்டு பிரச்சினைக்கு மருந்து எடுத்துக்கொள்ளும்போது, கால்சியம் செறிந்த உணவுகள், முட்டைக்கோஸ், சோயாபீன்ஸ் போன்ற உணவுகளை தவிர்த்திடுங்கள். வேறு வழியின்றி சாப்பிடுவதாக இருந்தாலும், தைராய்டு மருந்து சாப்பிட்டு பல மணி நேரம் கழித்து மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

* நீங்கள் வலிநிவாரணி மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிகமாக இலைக் காய்கறிகளை சாப்பிடாதீர்கள். அவை மருந்தின் வேகத்தை மட்டுப்படுத்தும்.

* மாத்திரைகளை வெந்நீர் அல்லது சூடான பானத்துடன் சாப்பிடும் வழக்கமுள்ளவரா? அதைத் தவிர்த்திடுங்கள். சூடானது, மாத்திரைகளின் திறனைப் பாதிக்கலாம்.

* மருந்தை சாப்பிடும் கஷ்டம் தெரியாமலிருக்க அதை உணவுடன் கலந்து சாப்பிட நினைக்கிறீர்களா? வேண்டாம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட வேண்டாம்.

பயர்பாக்ஸ் டேப் நகர்த்த ஷார்ட்கட் கீகள்

பயர்பாக்ஸ் பிரவுசரில் அதிகமான தளங்களைத் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கையில், சில குறிப்பிட்ட டேப்கள் அடுத்தடுத்து இருந்தால், நமக்கு வசதியாக இருக்கும் என எண்ணுவோம். எடுத்துக் காட்டாக, கூகுள் ரீடர் தளத்தில் ஒரு கட்டுரையைத் தேர்ந்தெடுத்துப் படித்துக் கொண்டிருக்கலாம். இதற்கான தளம் இடது மூலையில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதே நேரத்தில் நீங்கள் உங்களின் வலைமனை (பிளாக்) ஒன்றைத் திறந்து எழுதிக் கொண்டிருக்கலாம். இதற்கான டேப் வலது மூலையில் இருக்கலாம். ஆனால் நீங்கள் இந்த இரண்டு தளங்களும் அடுத்தடுத்து இருந்தால், பயன்படுத்த எளிது என்று எண்ணுகிறீர்கள். கூகுள் ரீடரில் விஷயத்தைப் படித்து, அதனை உங்கள் கருத்துக்களுடன், உங்கள் வலைமனையில் உடனுக்குடன் அமைக்க விரும்பலாம். இதற்கென டேப்களை மாற்றி அமைத்திட சில வழிகளை நாம் தெரிந்து வைத்திருக்கிறோம்.
பொதுவாக, எந்த டேப்பினை நகர்த்த விரும்புகிறோமோ, அதில் கிளிக் செய்து, இழுத்து நகர்த்தி வைக்கலாம். இன்னொரு வழியும் உள்ளது. எந்த டேப்பினை மாற்ற விரும்புகிறோமோ, அதன் இடத்தினை எண் அறிந்து, கண்ட்ரோல் + அந்த எண் அழுத்த, அது தேர்ந்தெடுக்கப்படும். ஆனால் ஒன்பதுக்கும் மேற்பட்ட டேப்கள் திறந்திருக்கையில், இது சற்று வேலை வாங்கும் விஷயமாக இருக்கும். மானிட்டரில், ஒரு பேனா அல்லது பென்சில் முனையைக் கொண்டு ஒன்று, இரண்டு என எண்ண வேண்டும். இது ஒரு பழைய முறை ஆகும்.
இதற்கான ஒரு எளிய வழியை புதியதாக வந்துள்ள ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. இதன் மூலம் பயர்பாக்ஸ் பிரவுசரில் உள்ள டேப்களை எளிதாக நகர்த்தலாம். இதன் பெயர் Move Tabs . இதனைப் பெற https://addons.mozilla.org/en-US/firefox/addon/220875/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். இந்த எக்ஸ்டென்ஷன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்த பின்னர், டேப்களின் இடத்தை எளிதாக மாற்றலாம். அதற்குக் கீழ்க்கண்ட ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தலாம். டேப்களை முதலில் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இந்த கீகளைப் பயன்படுத்தவும். பயன்படுத்துகையில் அந்த டேப் எந்த இடத்திற்குச் செல்கிறது என்று கவனத்தில் கொள்ளவும்.
Control + Shift + Home: தேர்ந்தெடுக்கப்பட்ட டேப்பினை இடது ஓரத்திற்குக் கொண்டு செல்கிறது.
Control + Shift+ End: தேர்ந்தெடுக்கப்பட்ட டேப்பினை வலது ஓரத்திற்குக் கொண்டு செல்கிறது.
Control + Shift+ Page Up:தேர்ந்தெடுக்கப் பட்ட டேப்பினை இடது பக்கம் ஒரு இடம் நகர்த்துகிறது.
Control + Shift + Page Down:தேர்ந்தெடுக்கப் பட்ட டேப்பினை வலது பக்கம் ஒரு இடம் நகர்த்துகிறது. இந்த ஷார்ட்கட் கீகள், டேப்களை நகர்த்த எளிய வழியைத் தருவதனை, இதனைப் பயன்படுத்து கையில் உணர்வீர்கள். இதில் ஒரு ட்ரிக் பார்ப்போமா! நீங்கள் 15 டேப்களைத் திறந்திருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் 3 ஆவது டேப்பில் இருக்கிறீர்கள். அதிலிருந்து 14 ஆவது டேப்பில் உள்ள தளத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள். இது ஏறத்தாழ வலது மூலை அருகே இருக்கலாம். டேப் பாரில் உள்ள அம்புக்குறி கீகளை அழுத்தி, ஒவ்வொரு தளமாகச் செல்லாமல், முதலில் Control + Shift + End அழுத்தவும். பின்னர், Control + Shift + Tab அழுத்தவும். இப்போது நீங்கள் விரும்பிய இடத்தில் இருப்பீர்கள்.
போனஸ் டிப்ஸ்:
சில கூடுதல் ஷார்ட்கட் கீகளை நினைவு படுத்திக் கொள்ளலாமா!
1. அனைத்து பிரவுசரிலும் செயல்படும் ஷார்ட்கட் கீகள்:
பின்னணியில் புதிய டேப்பில் தளங்களைத் திறக்க –– கண்ட்ரோல் + கிளிக் ctrl+click
2. முன்னணியில் புதிய டேப்பில் தளங்களைத் திறக்க –கண்ட்ரோல் + ஷிப்ட்+கிளிக் ctrl+shift+click
3. முன்னணியில் புதிய டேப் ஒன்றைத் திறக்க – கண்ட்ரோல் + mi ctrl+t
4. டேப்களுக்கிடையே செல்ல: ctrl+tab/ctrl+shift+tab
5. அனைத்து டேப்களையும் மூட : ctrl+tab/ctrl+shift+tab
6.மற்ற டேப்களை மட்டும் மூட: ctrl+alt+f4
பயர்பாக்ஸ் பிரவுசரில் மட்டும்:
1. குறிப்பிட்ட பிரவுசருக்குச் செல்ல: கண்ட்ரோல் + அந்த தளத்தின் டேப் உள்ள நிலை. கண்ட்ரோல் + அந்த எண். எடுத்துக்காட்டாக, நான்காவதாக உள்ள டேப்பிற்குச் செல்ல வேண்டும் எனில், ctrl+4.
இதில் ஒன்பது டேப்கள் இருந்தால் மட்டுமே இந்த ஷார்ட்கட் கீ செயல்படும்.
2. அப்போதைய டேப்பினை மட்டும் மூடிட ctrl+w
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7க்கானவை:
1. அட்ரஸ் பாரிலிருந்து புதிய டேப் ஒன்றைத் திறக்க: ஆல்ட் + என்டர்
2.டூல் பார் சர்ச் பாக்ஸிலிருந்து புதிய டேப் ஒன்றைத் திறக்க: ஆல்ட் + என்டர்
3. டேப்களுக்கான தளங்களின் சிறிய படத் தோற்றம் பெற: கண்ட்ரோல் + க்யூ
4. இதிலும் கண்ட்ரோல் + டேப் எண் கொடுத்துத் திறக்கலாம். ஆனால் இதில் 8 தளங்களுக்கு மட்டுமே செயல்படும்.
மவுஸ் ஷார்ட்கட் கீகள்
லிங்க் ஒன்றில் நடுவே உள்ள மவுஸ் பட்டன் அல்லது ஸ்குரோல் வீல் கிளிக் செய்தால், பின்புலத்தில் திறக்கப்படும். காலியாக உள்ள டேப் வரிசை காலி இடத்தில் கிளிக் செய்திட புதிய டேப் ஒன்று திறக்கப்படும்.
டேப்பில் நடுவே உள்ள பட்டனைக் கிளிக் செய்தால், டேப் மூடப்படும்.

தொடர் அழுகை

குழந்தைகள் பிறந்தவுடன் நன்றாக வேகமாக அழ வேண்டும். அப்போதுதான், முதன்முறையாக தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்து வெளிக்காற்றை சுவாசிக்க முடியும். உடலும் சிவப்பு நிறமாக மாறும்.
குழந்தையின் முதல் அழுகை என்பது தன்னுடைய சுவாச முறையைத் தொடங்குவதற்காகவே இயற்கை ஏற்படுத்தியது. ஆனால், இந்த இயற்கையான நடவடிக்கைக்கு மாறாக வேறு பல காரணங்களால் குழந்தை அழலாம். அந்தக் காரணங்களைத் தெரிந்து கொண்டு சிகிச்சை அளித்தால், ஒருவேளை குழந்தைக்கு வேறு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம்.
சில காரணங்களை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். பசிக்கும்போது அழலாம். வயிற்றில் இருந்து காற்று வெளியேறும் போது அழலாம். துணியால் உடல் மூடப்படாமல் கதகதப்பு இல்லாமல் இருந்தால் அழலாம்.
சில குழந்தைகள், விளக்கை அணைத்தால் அழத் தொடங்கும். சில குழந்தைகள், விளக்கைப் போட்டால் அழும். எல்லாக் குழந்தைகளும், கை கால்கள் மற்றும் கழுத்துப் பகுதியை கெட்டியாக அழுத்திப் பிடித்தால் அழும்.
வேறு காரணங்கள்
கைக்குழந்தைகள்
பசி
தாகம்
வயிற்றில் காற்று
அரிப்பு
வயிற்று வலி
ஈரமான துணி
அதிக சத்தம்
மாட்டுப்பால் அலர்ஜி
பல் முளைக்கும் போது
சிறுநீர் கழிக்கும்போது
தனிமை
இவை தவிர,
1. நோய்த் தொற்று
2. தலைவலி
3. காது வலி
4. குடல் இறக்கம்
5. விறை முறுக்குதல்
6. குடல் அடைப்பு
போன்ற காரணங்களாலும் குழந்தை அழலாம்.
சிறுவர்கள்
1. ஆளுமை
2. பாதுகாப்பு இல்லாமை
3., பழக்கம்
4. பசி
5. களைப்பு
6. நோய்
7. மருந்துகள் ஏதாவது
8. அலர்ஜி
சிகிச்சை
குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தால் அதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும். பாலுக்காகத்தான் அழுகிறது என்றால், பால் கொடுத்தால் அழுகை நின்று விடும். குழந்தையைப் படுக்க வைத்திருக்கும் துணி நனைந்திருப்பதால் குழந்தை அழுகிறது என்றால், அந்தத் துணியை மாற்றிவிட்டால் அழுகை நின்றுவிடும்.
காது வலி போன்றவை இருந்தால், மருத்துவரிடம் காட்டி மருந்துபோட்டால் அழுகை நின்றுவிடும்.

காணாமல் போகும் கிரெடிட் கார்டு மோகம்!

2003-ம் ஆண்டில் அந்த அலை எழுந்தது. ஒட்டுமொத்த நாட்டையும் அந்த அலை பெருவேகமாக அடித்துச் சென்றது. இந்திய நடுத்தர வர்க்கம், தங்கள் கனவுகளை உடனடியாக நனவாக்க வந்த வரமாக நினைத்த `கிரெடிட் கார்டு' அலை பற்றித்தான் நாம் கூறுகிறோம்.

அது இப்போது பழைய கதை. `பிளாஸ்டிக் மணி' மீதான மக்களின் கவர்ச்சி வெகுவாக மறைந்துவிட்டது. அப்படித்தான் இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ரிசர்வ் வங்கி இதழில் வெளியிடப்பட்டிருக்கும் தகவலில், இந்திய வாடிக்கையாளர்களிடையே `கிரெடிட் கார்டு' பயன்பாடு வெகுவாகக் குறைந்து வருவது தெரிகிறது.

கடந்த 2005- 2006-ல் இந்தியாவில் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 1 கோடியே 73 லட்சமாக இருந்தது. அது 2007- 2008-ம் ஆண்டில் 2 கோடியே 75 லட்சமாக எகிறியது. அது 2008- 2009-ம் ஆண்டில் 2 கோடியே 46 லட்சமாகக் குறைந்தது. தொடர்ந்து வந்த 2009- 2010 ஆண்டுகளில் நிலைமை மேலும் மோசமாகியிருக்கிறது. தற்போது கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை, 1 கோடியே 83 லட்சம்தான்.

ஆனால் `டெபிட் கார்டுகள்' விஷயத்தில் இந்த நிலைமை இல்லை. 2005- 2006-ல் இநதியச் சந்தையில் புழக்கத்தில் இருந்த `டெபிட் கார்டுகளின்' எண்ணிக்கை 4 கோடியே 98 லட்சம்தான். 2007- 2008-ல் இரு மடங்குக்கும் மேலாக உயர்ந்து 10 கோடியே 24 லட்சம் ஆனது. 2009- 2010 ஆண்டிலோ 18 கோடியே 14 லட்சம் ஆகியிருக்கிறது.

ஆக, வாடிக்கையாளர்கள் இடையே ஆரம்பகட்ட `கிரெடிட் கார்டு' மோகம் மறைந்து, அவர்கள் `டெபிட் கார்டு'க்கு மாறி வருவது தெளிவாகத் தெரிகிறது.

2005- 2008 காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியால் வங்கிகள் கிரெடிட் கார்டுகளை அள்ளி வழங்கின. தொடர்ந்து வந்த பொருளாதார மந்தநிலையும், கிரெடிட் கார்டு விஷயத்தில் தவறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பும், வங்கிகளை எச்சரிக்கையாகச் செயல்படச் செய்திருக்கின்றன.

`பிளாஸ்டிக் பண' பயன்பாடு குறித்த வாடிக்கையாளரின் மனோபாவமும் மாறியிருக்கிறது. இது ஒரு `பேன்சி ஐட்டம்' அல்ல, புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தவேண்டிய சீரியசான பணம் செலுத்தும் முறை என்று எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள் என இத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கம் கொட்டும் ஏடிஎம்

இருபத்துநான்கு மணி நேரமும் பணம் எடுக்க, இப்போது, தெருவுக்கு தெரு ஏ.டி.எம்.,கள் வந்து விட்டன. தானியங்கி பணம் வழங்கும் இந்த இயந்திரங்கள் மக்களுக்கு மிகவும் வசதியாக உள்ளன. "ஏ.டி.எம்.,மில் பணம் மட்டுமே வழங்க வேண்டுமா? தங்கத்தை வழங்கினால் என்ன?' என யோசித்தது ஒரு நிறுவனம். உடனே, தங்கம் வழங்கும் ஏ.டி.எம்., இயந்திரத்தையும் நிறுவி விட்டது. ஆனால், இது இந்தியாவில் அல்ல. ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகர ஓட்டல் ஒன்றில் இந்த ஏ.டி.எம்., நிறுவப்பட்டுள்ளது. இந்த ஏ.டி.எம்.,மில் நீங்கள் தங்கம் வாங்க கார்டை செருக வேண்டாம். அதற்கு பதில், பணத்தை போட வேண்டும். பணத்தின் மதிப்பிற்கு ஏற்ப ஒன்று, ஐந்து அல்லது பத்து கிராம் எடையுள்ள தங்க பார்கள் வந்து விழும். தங்கத்தின் விலை அவ்வப்போது ஏறி வரும். எனவே, இந்த இயந்திரமும் தங்கத்தின் விலையை பத்து நிமிடங்களுக்கு, ஒரு முறை சரி செய்து கொள்ளும். "எக்ஸ் ஓரியன்ட் லக்ஸ் ஏ.ஜி.,' என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தாமஸ் ஜிஸ்லர் என்பவர், இந்த இயந்திரத்தை மாட்ரிட் நகரில் வெஸ்டின் பேலஸ் என்ற ஓட்டலில் நிறுவியுள்ளார். "விழாக்களின் போது பரிசாக கொடுக்க தங்க நாணயங்களை வாங்க கடைகளுக்கு செல்வதை தவிர்க்க, இந்த இயந்திரத்தை நிறுவி உள்ளோம். மிக குறைந்த பணத்திற்கு கூட சிறிய நாணயத்தை இந்த இயந்திரம் மூலம் வாங்கலாம்!' என தாமஸ் கூறியுள்ளார். இந்தியாவிலும் இந்த இயந்திரத்தை பொருத்தி விட்டால், நகைக்கடைகளில் கூட்டத்தை குறைக்கலாம்.

நகங்களும் நலம் சொல்லும்

நகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கிறது. நகங்களை நலமாக வைத்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...

* நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழிபறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங் களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவ தோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது.

* இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.

* சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணையை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.

* சமையல் அறை, கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா போன்ற ரசாயனங் களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.

* தோட்டங்களில் உரங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தும் போதும் கையுறை அவசியம். இது சருமத்திற்கும் நல்லது.

* பசை, தண்ணீரில் கலந்து உபயோ கிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.

* ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சு களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.

* நகங்களைப் பற்றிய இன்னும் சில பொய் நம்பிக்கைகளும், உண்மைகளும் இருக்கின்றன. பொதுவாக நகங்கள் தேவையற்று வளரும் ஒரு பொருளாக கருதப்படுகிறது. ஆனால் அது அப்படியல்ல. நகமே ஒரு கழிவுப் பொருள்தான். கெரட்டின் என்னும் உடற்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம்தானே. நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக இருக்கிறது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.

* நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்ப மாட்டீர்கள் தானே. ஆனால் இவை உண்மை தான்.

வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஆக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஆக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக ரத்தஓட்டம் கிடைக்க உதவுகிறது.

* நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும்.

நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் `மானிட்டர்' போலவும் செயல்படும். உடல் நலம் பாதிக்கப்பட்டால் நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு இவற்றைக் கண்டுபிடிக்கலாம். நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும் வருமாறு...

* நகங்கள் உடைசலாக வளர்கிறதா? மேட்ரிக்ஸ் பகுதி பாதிக்கப்பட்டிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். சிறுநீரக பிரச்சினை, தைராய்டு நோய் போன்றவற்றின் அறிகுறி யாகவும் இது கருதப்படுகிறது.

* நகங்கள் கடினமாகவும், அகன்றும் வளர்ந்தால் உடம்பில் பிராணவாயு பற்றாக்குறை என்று அர்த்தம். இதைக் கவனிக்காவிட்டால் ரையீரல் நோய்கள் வரலாம்.

* மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி ஏற்படும்.

* நகங்கள் வெளிறி இருந்தால் ரத்தசோகை, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருக்கலாம்.

* நகங்கள் சிவந்து காணப்பட்டால் மாரடைப்பின் அடையாளம்.

* கீறல்- குழிகள் விழுந்தால் சரும பிரச்சினைகளின் அறிகுறி.

* நீலநிறமாக மாறிவிட்டால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறி ஆஸ்துமா, இதயநோய்களைக் கொண்டு வரலாம்.

* நகங்கள் உள்நோக்கி குழிந்திருந்தால் அல்லது கருமை நிறமாக காணப்பட்டால் இரும்புச்சத்து, வைட்டமின் பி 12 பற்றாக்குறை என்று பொருள்.

* மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.

விரலுக்கு கிரீடமான நகங்களை, வீண் என்று நினைக்காமல் கவனித்துக் கொள்வது நலம்.

கவனக் குறைவாக டாகுமெண்ட் அழிக்கப்பட்டால்
வேர்ட் தொகுப்பில் நாம் ஆவணங்களை உருவாக்கிய பின்னர், பலர் அவற்றைக் கவனக் குறைவாக அழித்துவிடுவார்கள். சிலர் அவசரத்தில் ரீசைக்கிள் பின்னுக்கும் போகாத வகையில் முற்றிலுமாக நிக்கிவிடுவார்கள். பின்னர் வருத்தப்படும் இவர்களுக்கு உதவுவதற்காகவே, வேர்ட் புரோகிராம் பேக்அப் பைல் உருவாக்கும் வசதியைக் கொண்டுள்ளது. இதனை எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம். முதலில் File மெனு சென்று Save As பிரிவைத் தேர்ந்தெடுங்கள். வரும் டயலாக் பாக்ஸில் Tools பட்டன் தட்டவும். பின் உங்கள் தொகுப்பிற்கேற்ப General அல்லது Save தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Always create Backup copy என்பதில் டிக் செய்து ஓகே கிளிக் செய்திடவும். இனி பேக்கப் காப்பி உருவாகும். இறுதியாக சேவ் செய்யப்பட்ட டாகுமெண்ட் பைலைப் பெற்று மீண்டும் சேவ் செய்திடலாம்.
நாளும் நேரமும் நீங்களே அமைக்கலாம்
வேர்ட் அல்லது பிரசன்டேசன் பைல்களில் அடிக்கடி தேதி மற்றும் நேரத்தினை பதிபவரா நீங்கள்! என்ன செய்கிறீர்கள்? ஒவ்வொரு முறையும் டைப் செய்கிறீர்களா? வேண்டாமே! வேர்டில் Alt + Shift + D என அழுத்துங்கள். தேதி சிஸ்டத்திலிருந்து எடுத்து டைப் செய்யப்படும். நேரத்தை இடைச் செருக Alt + Shift + T அழுத்தலாம்.
பவர் பாயிண்ட்டில் இந்த கீகளை அழுத்தினால் ஒரு கட்டம் கிடைக்கும். இதில் எந்த மாதிரி வகையில் டேட் மற்றும் டைம் அமைக்க வேண்டும் மற்றும் எந்த ஸ்லைடில் அமைக்க வேண்டும் என்பதனை முடிவெடுத்து செட் செய்து ஓகே அழுத்தினால் அதே போல தேதியும் நேரமும் அமைக்கப்படும். பார்த்தீர்களா! தேதியும் நேரமும் உங்கள் பிங்கர் டிப்ஸில் உள்ளதே!

வேர்டில் சப்ஜெக்ட் இண்டெக்ஸ்
வேர்டில் ஆவணம் ஒன்றை உருவாக்கிய பின்னர், அதன் பொருள் குறித்து ஒரு அட்டவணைக் குறியீடு ஒன்றினை உருவாக்க விருப்பப்பட்டால், அதனை நிறைவேற்றிக் கொள்ளும் வசதியினை, வேர்ட் தருகிறது. இதனை மிக எளிதாக உருவாக்கலாம். தேவையைக் குறிப்பிட்டுவிட்டால் வேர்ட் தொகுப்பு தானாகவே இந்த பொருளடக்கத்தினைத் தயாரித்து வழங்கும். முதலில் எந்த வரிகளில் உள்ள சொற்கள் உங்கள் பொருளடக்கத்தில் வரவேண்டும் என்பதனை முடிவு செய்து அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் பாண்ட்ஸ் புல் டவுணை அடுத்து இருக்கும் இடத்தில் கர்சரை வைத்து மெனுவைப் பெறவும்.பின் பொருளடக்கத்தில் மெயினாக வரவேண்டிய சொற்களை Header 1 என்பதற்கு மாற்றவும். துணைத் தலைப்புகளை Header 2 என்பதற்கு மாற்றவும். இப்போது எங்கு உங்களுக்கு பொருளடக்க அட்டவணை வேண்டுமோ அங்கு கர்சரை வைத்துக் கொண்டு பின் “Insert” மற்றும் “Index and Tables” என்பவற்றைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பல ஆப்ஷன்களுடன் வரும் டயலாக் பாக்ஸில் “Table of Contents” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் அதிலேயே கொடுத்துள்ள வசதிகளைப் பயன்படுத்தி பக்க எண்கள் வேண்டுமா என்பதனையும் முடிவு செய்து பின் ஓகே கிளிக் செய்திடவும். பின் பொருளடக்க அட்டவணை கிடைக்கும். அதன்பின் ஆவணத்தில் மாற்றங்கள் செய்தால் எந்த பீல்டை அப்டேட் செய்திட வேண்டுமோ அதில் கர்சரை வைத்துக் கொண்டு ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Update Field” என்பதனைக் கிளிக் செய்துவிடவும்.

ஆட்டோ டெக்ஸ்ட் அமைக்கும் வழி
ஆவணங்களை வேர்டில் தயாரிக்கையில், மிகப் பெரிய முகவரிகள் அல்லது தலைப்புகளை அடிக்கடி பயன்படுத்த வேண்டியதிருக்கும். இவற்றை ஒவ்வொரு முறையும் தவறின்றி டைப் செய்வது சற்று சிரமமான வேலையாகப் பலரும் கருதுகின்றனர். உண்மையும் அதுவே. ஆனால் இதனை ஒரு ஆட்டோ டெக்ஸ்ட் உருவாக்குவதன் மூலம் மிக எளிதாக மேற்கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக,“Shri Meenakshi Videos and Accessories, Pudhu Mandapam, Madurai” என்று உங்களின் கடைப் பெயரை தொடர்ந்து அடிக்கடி அமைக்க விரும்புகிறீர்கள். இதனை ஒரு ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரியாக அமைத்துவிட்டால், ஒரு கீ அழுத்தலில் இது கிடைக்கும். எப்படி இதனை ஏற்படுத்தலாம் என்று பார்ப்போம்.
Insert மெனு சென்று அதில் AutoText என்ற துணை மெனுவைத் தேர்ந்தெடுத்து பின் அதில் ஆட்டோ டெக்ஸ்ட் விண்டோவில் நீங்கள் தர வேண்டிய நீளப் பெயரைத் தருகிறீர்கள். நீங்கள் ஆட்டோ டெக்ஸ்ட் விண்டோ வில் இருக்கையில் “Show AutoComplete suggestions” என்பதற்கு எதிரே உள்ள கட்டத் தில் டிக் அடையாளம் உள்ளதா என்பதனை ஒரு முறைக்கு இரு முறை உறுதிப்படுத்தவும்.
இந்த வழிமுறை உங்களுக்கு ஆட்டோ கம்ப்ளீட் வசதியைத் தரும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த டெக்ஸ்ட்டை என்டர் செய்து ஆட்டோ டெக்ஸ்ட் அமைப்பது சிறிது சுற்றுவேலை இல்லையா? இந்த மெனு மற்றும் சப்மெனு இல்லாமல் ஆட்டோ டெக்ஸ்ட் அமைத்திட முடியாதா? என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். அதற்கான வழி:– முதலில் எந்த டெக்ஸ்ட்டை ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரிக்குக் கொண்டு வர வேண்டும் என எண்ணுகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுத்து ஹை லைட் செய்திடவும். டெக்ஸ்ட் ஹைலைட் செய்யப்பட்டிருக்கும் போதே ALT + F3 கீகளை அழுத்தவும். இப்போது Create AutoText window என்ற விண்டோ திறக்கப்படும்.
இந்த விண்டோ வில் ஹைலைட் செய்யப்பட்ட டெக்ஸ்ட் இருக்கும். நீங்கள் மிகப் பெரிய சொல் தொகுதியை எடுத்திருந்தால் அதில் ஓரிரு சொற்களும், சிறியதாக இருந்தா லும் முழுவதுமாக இந்த விண்டோவில் தெரியும். உங்களுக்குக் காட்டப்படும் சொற்கள் சரியானதாகத் தென்பட்டால் ஓகே டிக் செய்து வெளியேறவும். அடுத்து இந்த டெக்ஸ்ட்டின் ஓரிரு எழுத்துக்களை டைப் செய்திடுகையிலேயே டெக்ஸ்ட் முழுவதும் காட்டப் பட்டு இந்த டெக்ஸ்ட் வேண்டு மென்றால் என்டர் தட்டுக என்ற செய்தி காட்டப்படும். நீங்கள் முழுவதுமாக டைப் செய்தி டாமல் என்டர் தட்டிவிட்டுப் பின் தொடர்ந்து மற்ற சொல் தொகுதிகளை டைப் செய்து கொண்டு போய்க் கொண்டே இருக்கலாம். மெனு, சப் மெனு என்றில்லாமல் ஆட்டோ டெக்ஸ்ட் ரெடி.

மாரடைப்புக்கு செயல்முறை மூலம் சிகிச்சை

மாரடைப்புக்கு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதையடுத்து, செயல்முறை மூலமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது இரண்டு வகைப்படும். 1) ஆன்ஜியோ பிளாஸ்டி 2) பைபாஸ் அறுவை சிகிச்சை.

ஆஞ்சியோ பிளாஸ்டி என்பது என்ன?
ஆன்ஜியோகிராம் செய்வது போலவே இருதய ரத்தக்குழாயினுள் பிளாஸ்டிக் டியூபைச் செலுத்தி, அதன் வழியாக எளிதாக அடைப்பை சரிசெய்யும் முறையே ஆன்ஜியோ பிளாஸ்டி. இது அறுவை சிகிச்சை அல்ல. மயக்க மருந்தும் தேவையில்லை.

ஆன்ஜியோ பிளாஸ்டி எவ்வாறு செய்யப்படுகிறது?
ஆன்ஜியோகிராம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குழாயைவிட சற்று தடித்த, அகலமான, எளிதில் வளையும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் டியூப் (Guide Catheter) தேர்ந்தெடுக்கப்படுகிறது.
வலது கையின் மணிக்கட்டிலோ, தொடைகளின் மேல்பகுதியில் உள்ள ரத்தக்குழாய் வழியாகவோ இந்த டியூப் செலுத்தப்பட்டு, அதன் நுனிப்பகுதி பாதிக்கப்பட்ட அல்லது அடைப்பு உள்ள இதய ரத்தக் குழாயின் ஆரம்ப பகுதியில் நிறுத்தப்படுகிறது. அடுத்து மிக எளிதில் வளைந்து செல்லும் தன்மையை நுனிப்பகுதியாக கொண்ட நீண்ட மெல்லிய இழை (Guide Wire) கைடு டியூபின் வழியாக அடைப்பு உள்ள ரத்தக் குழாய்க்குள் செலுத்தப்படுகிறது. இதற்கு "வழிகாட்டி இழை' என்று பெயர். இந்த வழிகாட்டி இழையின் மூலம் ரத்தக்குழாயில் உள்ள அடைப்பின் தன்மைக்கு ஏதுவான சுருக்கப்பட்ட பலூன் எடுத்துச் செல்லப்பட்டு, அடைப்பு உள்ள பகுதியில் நிறுத்தப்படுகிறது. இப்போது அந்த பலூனை விரிவடையச் செய்வதன் மூலம், அடைப்பின் பெரும்பகுதி ரத்தக்குழாயின் தசை சுவர்களுக்குள் அழுத்தப்படுகிறது. ரத்தக்குழாயின் வழி அகலப்படுத்தப்படுகிறது. அதன் பின் பலூன் மீண்டும் சுருக்கப்பட்டு ரத்தக்குழாயில் இருந்து வெளியே எடுத்து வரப்படுகிறது. இச்செய்முறையால் அடைப்பால் பாதிக்கப்பட்ட இருதய தசைக்கு ரத்த ஓட்டம் மீண்டும் சீராக்கப்படுகிறது. அகலப்படுத்தப்பட்ட ரத்தக்குழாய் மீண்டும் சுருங்கி அடைபடாமல் தடுக்க, மெல்லிய, விரியும் தன்மை கொண்ட, பால்பாயின்ட் பேனாவில் உள்ள ஸ்பிரிங் போன்ற "உலோக வலை' (Stent) அவ்விடத்தில் பொருத்தப்படுகிறது.


இந்த உலோக வலை இரு வகைப்படும். 1. சாதாரண உலோக வலை (Bare Metal Stent), 2. மருந்து தடவப்பட்ட உலோக வலை (Drug Eluting Stent).


மருந்து தடவப்பட்ட உலோகவலை சில காரணங்களால் சாதாரண உலோக வலையைவிட சிறப்பானது. ஆனால் விலை அதிகமானது. எல்லாருக்கும் மருந்து தடவப்பட்ட உலோக வலை தான் பொருத்தப்பட வேண்டும் என்பதில்லை. இதய ரத்தக்குழாயின் அடைபட்ட பகுதியின் அளவு, சர்க்கரை நோய் பாதிப்பு போன்ற சில காரணங்களைக் கருத்தில் கொண்டு எத்தகைய உலோக வலை பொருத்த வேண்டும் என மருத்துவரே தீர்மானிப்பார். மாரடைப்பு வந்து மூன்றில் இருந்து எட்டு மணி நேரத்திற்குள், மருத்துவமனை வருவோருக்கு ரத்தக்கட்டியைக் கரைக்கும் மருந்து தராமலேயே இத்தகைய சிகிச்சை முறை மேற்கொள்வதே மிகச்சிறந்ததாகும். மேலும் சிலவகை மாரடைப்புக்கு ரத்தக்கட்டியை கரைக்கும் மருந்து தரமுடியாது. அத்தகைய சூழலில் ஆன்ஜியோ பிளாஸ்டி போன்ற இத்தகைய சிகிச்சை முறை தான் உகந்ததாக இருக்கும்.
இந்த சிகிச்சைக்கு பின் இரண்டாவது நாளில் எழுந்து நடமாடலாம். நான்கு அல்லது ஐந்து நாட்களில் வீடு திரும்பலாம்.


- டாக்டர் எஸ்.கே.பி.கருப்பையா, மதுரை

இதய நோய்க்கான முக்கிய மருந்துகள்

இதய நோயளிகளுக்கு, அவர்களுக்கு ஏற்படடுள்ள நோயைக் குணப்படுத்துவதற்கான பல்வேறு சிகிச்சைகளும், மருந்துகளும் உள்ளன. இதய நோய்களைக் குணப்படுத்த எத்தனைவிதமான கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கின்றன. ஒரு சில மருந்துகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட சில மருந்துகளை இங்கே பார்ப்போம்.
இந்த மருத்தின் பெயர், அதில் உள்ள மருந்துப் பொருள்கள் , எந்தெந்த இதய நோய்களுக்கு இம்மருந்து பயன்படுகிறது என்பது உள்ளிட்ட பல தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

டில்டியாஸெம்:
இது மாத்திரைகளாகவும், ஊசி மருந்தாகவும் தயாரிக்கப்படுகிறது.இந்த மருந்து, செல்களுக்குள் கால்சியம் அயனிகள் கடத்தலைத் தடுக்கிறது. இதயத்திலும் ரத்த நாளங்களிலும் இந்த மருந்து செயல்படும். இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துவது, ரத்த அழுத்தத்தைக் குறைப்பது, ரத்த நாளங்களை விரிவடையச் செய்வது, போன்ற பல பணிகளைச் செய்கிறது இந்த மருந்து.மேற்கூறிய பண்புகளால், ரத்த அழுத்தத்தைக் குறைக்கப்ப பயன்டுத்துவடன், மாரடைப்புக்கான முக்கியமான மருந்தாகவும் இது பயன்படுகிறது.

அட்டார்வஸ்டேட்டின்:
இது, ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் ஒரு முக்கிய மருந்து. இந்த மருந்து, உடலில் ஒரு நொதியின் செயல்பாடு மூலம் ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது.இந்த மருந்து ஆஸ்பிரின் மருந்தோடு சேர்ந்தும், பிற ரத்த கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகளோடு சேர்ந்தும் தயாரிக்கப்படுகிறது.இது, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பிற காரணங்களால் ஏற்படும் மிகை ரத்த கொலஸ்ட்ராரைக் குறைக்கவும் பயன்படுகிறது.

டிசாக்ஸின்:
இது, இதய செயலிழப்பைத் தடுக்கப் பயன்படும் ஒரு முக்கியமான மருந்தாகும்.இதய 'டானிக்' என்று இந்த மருந்து அழைக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் ஏற்படும் இதய செயலிழப்பைத் தடுக்க உதவுகிறது. குறிப்பாக, இதய வால்வு நோய்கள், மாரடைப்பு, இதயத் தசை நோய்கள் ஆகியவற்றால் ஏற்படும் இதய பாதிப்பையும் அதனால் உண்டாகக்கூடிய இதய செயலிழப்பையும் தடுக்கிறது. மேலும், இதயம் சீரில்லாமல் துடிப்பதையும் இம் மருந்து கட்டுப்படுத்துகிறது.

ஸிம்வாஸ்டேட்டின்:
இந்த மருந்து, உடலில் செயல்படும் ஒரு முக்கிய நொதியின் செயல்பாட்டைத் தடுக்கிறது. இதன் மூலம் விணிக்ஷிகிலிளிழிமிசி என்ற அமிலம் சுரக்காது. இதன் காரணமாக, ரத்தத்தில் 'கொலஸ்ட்ரால்' அதிகமாக ஏற்படுவது தடுக்கப்படும். மேலும், ரத்தத்தில் டிரைகிளிசரைடு மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளையும் குறைக்கிறது.மேற்கூறிய பண்புகளால், ரத்ததில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்களுக்கு, கொலஸ்ட்ராரைக் குறைக்கத் தரப்படுகிறது. இது தனியாகவோ, பிற மருந்துகளோடு சேர்த்தோ கொடுக்கப்படுகிறது.

அமைலோடீப்பின்:
இந்த மருந்து, கால்சியம் அயனிகளைத் தடை செய்யக்கூடிய ஒரு முக்கியமான மருந்தாகும். இந்த மருந்தால், இதய நாளங்கள் விரிவடையும். இதயத்தின் பளு குறையும். ரத்த அழுத்தமும் குறையும்.இந்த மருந்தின் செயல்பாட்டல், மிகை ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான மருந்தாகப் பயன்படுகிறது. இதய ரத்தநாளம் திடீரென சுருங்கி ஏற்படும் இதய பாதிப்புக்கும், நெஞ்சு வலிக்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது.

அட்டினாலால்:
இந்த மருந்து, உடலில் உள்ள பீட்டர் ஏற்பிகளில் தடையை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய மருந்தாகும்.
இந்த மருந்து, அட்ரீனல் சுரப்பி ஹார்மோன் செயல்பாட்டைத் தடுக்கும். இந்த மருந்தின் செயல்பாட்டால் இதயத் துடிப்பு குறையும். இதயத்துக்கு தேவையான ஆக்ஸிஜன் அளவு குறையும். இதன் காரணமாக, இதயத் சுமையும் (வேலைப்பளுவும்) குறையும். ரத்த அழுத்தமும் குறையும்.இதய நோயாளிகளுக்கு, குறிப்பாக மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு, மிகை இதயத் துடிப்பு உள்ளவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது. மேலும், இதயத்தசை நோய்கள், அட்ரீனல் சுரப்பி நோய்கள், கை, கால் நடுக்கத்துக்கும் சிறந்த மருந்து இது.

ஃபலோடீபைன்:
இது, கால்சியம் அயனிகளை செல்களுக்குள் நுழைய விடாமல் தடுக்கக்கூடிய ஒரு முக்கியமான மருந்தாகும். இந்த மருந்து, இதயத்திலும், ரத்த நாளங்களிலும் செயல்படுகிறது. இதனால், இதயம் சீராகச் செயல்பட முடியும். ரத்த அழுத்தமும் குறையும்.
இதய நோய்களால் ஏற்படும் இதய செயலிழப்புக்கு மருந்தாக பயன்படும் இது, இதய பாதிப்பால் ஏற்படும் நெஞ்சு வலியைக் குறைக்கப் பயன்படுகிறது.

லேபீட்டலால்:
இந்த மருந்து, ஆல்பா மற்றும் பீட்டா ஏற்பிகளில் தடையை ஏற்படுத்தும் மருந்தாகும். இவ்வாறு, இதயத்தில் உள்ள நரம்பிழை ஏற்பிகளில் இந்த மருந்து செயல்படுவதால், இதயத் துடிப்பு குறைகிறது. இது, ரத்த அழுத்தையும் குறைக்கிறது.ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்தாகவும் பயன்படும். இது, குறிப்பாக கர்ப்பிணிகளுக்குப் பயன்படுகிறது.

அம்யோடரோன்:
இந்த மருந்து, இதயத் துடிப்பு தொடர்பான நோய்களுக்குப் பயன்படக்கூடிய ஒரு முக்கிய மருந்தாகும். இது, இதய மின்னோட்டத்தை ஏற்படுத்தும் நரம்பிழைகளில் செயல்பட்டு, அங்கு மின்னோட்டக் கடத்தலைக் குறைக்கிறது. இதனால், இதய மின்னோட்டத்தில் தாமதம் ஏற்படும். இதன் காரணாக, இதய மின்னோட்டத்தில் தாமதம் ஏற்படும். இதன் காரணமாக, இதயத் துடிப்பு குறைந்து, இதயம் சீரில்லாமல் துடிப்பது கட்டுப்படுத்தப்படும்.
இதய மேல் அறை சீரில்லாமல் துடிக்கும் இதய பாதிப்புக்கும், கீழ் அறை சீரில்லாமல் துடிக்கும் இதய பாதிப்புக்கும் சிறந்த மருந்து இது.

கிளிசரைல் டிரைநைட்ரேட்:
இது, 'நைட்ரேட்' வகையைச் சேர்ந்த மருந்தாகும். இது, இதய ரத்த நாளங்களில் செயல்படும். ரத்த நாளங்களின் மெல்லிய தசையை விரிவடையச் செய்யும். இதன் மூலம், ரத்த நாளத்தில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கி, மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும், இது ஆவி மருந்தாகவும், தோலில் பூசும் களிம்பு மருந்தாகவும் தயாரிக்கப்படுகிறது. இதய ரத்த நாள அடைப்பால் மாரடைப்பு ஏற்படுகிறவர்களுக்கு, உடனடியாகக் கொடுத்து ரத்த அடைப்பை நீக்குவதற்கு இந்த மருந்து பயன்படுகிறது. மேலும், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது.

குயூனீடின்:
இது, நீண்ட காலமாகவே இதய நோயாளிகளுக்குப் பயன்படக்கூடிய ஒரு முக்கிய மருந்தாகும். இந்த மருந்து, இதய மின்னோட்டத்தைத் தடை செய்கிறது. இதன் மூலம், இதயம் சீரில்லாமல் துடிப்பது தடுக்கப்படுகிறது.இதய மேல் அறை சீரல்லாமல் துடிப்பது, கீழ் அறை சீரில்லாமல் துடிப்பது, தன்னிச்சை இதயத் துடிப்புகள் போன்றவற்றுக்கு இது சிறந்த மருந்து.

டிஸ்ஸோபைரமைட்:
இதுவும் இதய நோயாளிகளுக்கான ஒரு முக்கியமான மருந்து. இது, இதயத்தைப் பாதித்துஅங்கு மின்னோட்டத்தை நீட்டிகிறது. இதன் மூலம், இதயத்தின் மேற்பகுதியில் தொடங்கும் மின்னோட்டம் இதய கீழ்ப்பகுதிக்கு வருவதற்குத் தாமதமாகும். இதனால், இதயம் சீரில்லாமல் துடிப்பது தடுக்கப்படும். இதயம் சீரில்லாமல் துடிக்கும் பாதிப்புக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

ஸ்டிரப்டோகைனேஸ்::
ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரல் படிந்து அதனால் ஏற்படும் அடைப்பைக் கரைக்க உதவும் முக்கியமான மருந்து இது.ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளில் உள்ள 'பிளாஸ்மினோஜின்' என்ற பொருளை 'பிளாஸ்மின்' என்ற பொருளாக மாற்றுகிறது. இந்த பிளாஸ்மின் தனித்தனியாகப் பிரிந்து பல்வேறு புரதப் பொருளாக மாறிவிடுவதால், அடைப்பு முழுமையாக நீங்கிவிடுகிறது. இதனால் இதயத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு சரி செய்யப்படுகிறது.இந்த, மருந்து, ரத்த நாளங்களில் உறைந்த ரத்தத்தைக் கரைத்த உதவுகிறது. குறிப்பாக, மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு, உடனடியாக இதய றாள அடைக்பைக் கரைக்க இது ஊசி மருந்தாகப் போடப்பபடுகிறது. இதய அவசர சிகிச்சைப் பிரிவில் (மி.சி.சிஹி.) சேர்க்கப்படும் நோயாளிக்குப் போடப்பட்டு உயிர்காக்க உதவும் முதல் ஊசி இதுதான். மேலும், நுரையீரல் ரத்த நாள அடைப்பு, கால் பகுதி ரத்த நாள அடைப்பு ஆகியவற்றைக் கரைக்கும் மருந்தாகவும் இது பயன்படுகிறது.

விரப்பமில:
இந்த மருந்து, கால்சியம் அயனிகளை செல்லுக்குள் செல்லவிடாமல் தடுக்கக்கூடியது. இது, இதய மின்னோட்ட செல்களிலும் தடையை ஏற்படுத்தும். இதன் மூலம், ரத்த நாளங்களில் ஏற்படும் சுருக்கம் தடுக்கப்படுகிறது. இந்த மருந்து இதயத் துடிப்பைக் குறைப்பதுடன், இதயத்துக்கு ரத்த ஓட்டத்தையும் அதிகப்படுத்தும்.மாரடைப்பு, இதயம் சீரில்லாமல் துடிப்பது உள்ளிட்ட பல இதயப் பாதிப்புகளுக்கும் மருந்தாகப் பயன்டுகிறது.

நிப்பீடிபைன்:
இது, இதய நோயாளிகளுக்குப் பயன்படக்கூடிய ஒரு முக்கிய மருந்தாகும். இந்த மருந்து, கால்சியம் அயனிகளின் வினைகளைத் தடுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இதனால், தசைப் பகுதியில் உள்ள செல்களுக்குள் கால்சியம் சத்து நுழைவது தடுத்து நிறுத்தப்படும்.இந்த செயல்பாட்டல், இதயத்தின் ஆக்ஸிஜன் தேவையும் குறைகிறது. மேலும், இதயத்துக்குத் தேவையான ரத்த ஓட்டத்தையும் ஏற்படுத்தும். தகட்டணுக்களின் சேர்க்கையையும் கட்டுப்படுத்தும்.

மெட்டோபுரலால்:
இந்த மருந்து, பீட்டர்&1 நரம்பிழை ஏற்பிகளில் மின்னோட்டத்தைத் தடை செய்யும் உதவும் மருந்தாகும். இந்த மருந்து ரத்தத்தில் 'ரெனினின்' அளவையும் குறைக்கிறது. மேலும், இதயத் துடிப்பையும், இதயத்துக்குத் தேவையான ஆக்ஸிஜன் அளவையும் குறைக்கிறது. மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிற மருந்துகளோடு சேர்த்து இதயப் பாதிப்பைக் குறைக்கப் பயன்படுகிறது.

புரோபுரானாலல்:
இந்த மருந்து, பீட்டா நரம்பிழை ஏற்பிகளில் மின்னோட்டத்தைத் தடை செய்கிறது. இத்துடன், ரத்தத்தில் 'ரெனினின்' என்ற பொருளின் அளவையும் குறைக்கிறது. இது தவிர, ரத்த அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுகிறது. மேலும், கை, கால், நடுக்கத்தையும் தடுக்க உதவுகிறது.

நிகோரான்டீல்:
இது, இதய நோயளிகளுக்குப் பயன்படக்கூடிய ஒரு முக்கிய மருந்து. ரத்தக் குழாய்களின் மெல்லிய தசைகளை விரிவடையச் செய்யும் இந்த மருந்து, இதயத்துக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜனின் அளவைக் குறைக்கிறது. இதய பாதிப்பு, மாரடைப்பு போன்றவற்றுக்குச் சிறந்த மருந்து. இதய ரத்த நாளப் பாதிப்பால் ஏற்படும் நெஞ்சு வலிக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

புரவாஸ்டாட்டின்:
இந்த மருந்து, ரத்தத்தில் கொழுப்புச் சத்தை குறைக்கப் பயன்படும் ஒரு முக்கிய மருந்தாகும். இந்த மருந்து, ஒரு நொதியின் செயல்பாட்டைக் குறைப்பதன் மூலம், ரத்தத்தில் 'கொலஸ்ட்ரால்' அதிகமாவதைத் தடுத்துவிடும்.

குளோபிடோக்ரீல்:
ஆஸ்பிரின் மருந்தைப் போல் செயல்படக்கூடிய மருந்து இது. ரத்தத்தில் உள்ள தகட்டணுக்களின் சேர்க்கையைத் தடுத்து, ரத்த உறைதலைத் தடுத்து நிறுத்துகிறது.இந்த மருந்து தனியாகவோ அல்லது ஆஸ்பிரின் மருந்துடனோ சேர்த்து தயாரிக்கப்படுகிறது. மாரடைப்பு வராமல் தடுக்கப்பயன்படும் இது, இதய நோயாளிகளுக்கான சிறந்த மருந்து. இந்த மருந்து ரத்த உறைதலைத் தடுப்பதால், மூளை பாதிப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்டாமல் தடுக்கிறது. இந்த மருந்தையும், ஆஸ்பிரின் மருந்தையும் பயன்படுத்தும் போது, வயிற்றில எரிச்சல் ஏற்படும். ஆகவே, குடற்புண் .... பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மருந்தை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

ஜெம்ஃபைட்ரோஸில்:
இந்த மருந்து, இதயத்தில் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு முக்கிய மருந்தாகும். இது, ரத்தத்தில் எல்.டி.எல் டிரைகிளிசரைடு போன்ற கெட்ட கொழுப்புகளைக் குறைக்கிறது. அதே நேரம் இதயத்துக்கு தன்மை விளைவிக்கும் ஹெச்.டி.எல். கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கிறது.இதன் மூலம், ரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் படிவது தடுக்கப்பட்டு, மாரடைப்பு, இதய நோய்கள், ரத்தக் குழாய் நோய்கள் போன்றவை வராமல் தடுக்கப்படுகின்றன.இந்த மருந்தை, தனியாகவோ அல்லது பிற கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகளுடனோ சேர்த்துக் கொடுக்கலாம். அத்துடன் உணவுக் கட்டுப்பாடும் அவசியம்.

ஆஸ்பிரியன்:
நீண்ட காலமாவே, பல்வேறு நோய்களுக்கும் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தலைவலிக்கு அதிகமாகப் பயன்படுத்துவார்கள். சிலர் உடல் வலிக்குப் பயன்படுத்துவார்கள். இது, ரத்தத்தில் உள் தகட்டணுக்களின் சேர்க்கையைத் தடுத்து நிறுத்துகிறது.கெட்ட அணுக்களின் சேர்க்கையைக் குறைப்பதில் சிறந்து விளங்கும் இது. இதய நோய்க்கான மருந்துகளில் மிக முக்கியமானது. மேலும், வாதக் காய்ச்சலால் ஏற்படும் வலியைக் குறைக்கவும் இந்த மருந்து பயன்படுகிறது.

அஸிநோகாவ்மாரோல்:
இதுவும், இதய நோய்க்கான ஒரு முக்கியமான மருந்து. இந்த மருந்து, ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கிறது. மேலும், இதய வால்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள், செயற்கை வால்வு பொருத்தியவர்களுக்கு ரத்தம் உறைய வாய்ப்பு இருப்பதால், அவர்களுக்கு முக்கிய மருந்தாக இது கொடுக்கப்படுகிறது. மேலும், நுரையீரல் ரத்த நாள அடைப்பு நோய் ஏற்பட்டவர்களுக்கு அது மீண்டும் ஏற்படாமல் தடுக்கவும் இது பயன்படுகிறது.

புதிய மருந்துகள்:
இதய நோய்க்கான பல்வேறு முக்கி மருந்துகளைப் போலவே, மிகச் சமீபமாகக் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்ககப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சில புதிய மருந்துகளும் உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.

போஸன்டான்:
இது, ரத்தத்தில் உள்ள உள்சுவர் ஏற்புகளில் செயல்பட்டு ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.நுரையீரல் ரத்த நாளத்தில் ஏற்படும் ரத்த அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி, தொடர்ந்து பல வாரங்கள் சாப்பிட வேண்டி இருக்கும்.இந்த மருந்தை, ஒவ்வாமை உள்ளவர்களுக்கும், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொடுக்கக்கூடாது.பின் விளைவுகள் இந்த மருந்தால், தலைவலி, தொண்டை அழற்சி, தோலில் அதிக ரத்த ஓட்டம், கால் வீக்கம், குறை ரத்த அழுத்தம், வயிற்றுத் தொந்தரவுகள், ரத்த சோகை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

கவனம் இந்த மருந்த படிப்படியாகத்தான் நிறுத்த வேண்டும். உடனே நிறுத்தக்கூடாது. இந்த மருந்தைப் பயன்படுத்தும் போது, மருந்துகளைத் தவிர்த்து விட வேண்டும்.

டோஃபிடிலைட்:
இது, இதய நோயாளிகளுக்குப் பயன்படக்கூடிய முக்கிய மருந்து. சீரில்லாமல், முறையில்லாமல் ஏற்படும் இதயத் துடிப்புக்கு இது சிறந்த மருந்து. ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இந்த மருந்தைக் கொடுக்கக்கூடாது. மேலும், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கம் கொடுக்கக்கூடாது.பின் விளைவுகள் இந்த மருந்தால், சிலருக்குத் தலைவலி, நெஞ்சு வலி, சுவாசக் கோளாறுகள், தலை கிறுகிறுப்பு, குமட்டல், காய்ச்சல், உடல்வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதைப் பயன்படுத்தும்போது, மருந்துகளைத் தவிர்த்துவிட வேண்டும்.

அஸிபியூட்டலால்:
பீட்டா அட்ரீனல் ஏற்புகளில் தடையை ஏற்படுத்தப் பயன்படும் மருந்து இது. இந்த மருந்தால், ரத்த அழுத்தம் குறையும். ரத்த அழுத்த நோயாளிகளுக்கும், இதயம் சீரில்லாமல் துடிக்கும் இதய நோயாளிகளுக்கும் இம்மருந்தைக் கொடுக்கலாம். இந்த மருந்து 24 மணி நேரமும் செயல்படுவதால், இதை ஒருநாளைக்கு ஒரு மாத்திரையாகச் சாப்பிட்டாலே போதும். மருத்துவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.பின் விளைவுகள் இந்த மருந்தால் சிலருக்கு, ஒவ்வாமை, அசதி, தலைவலி, தலைச்சுற்றல், தூக்கமின்மை, தோல் பாதிப்புகள், உடல் வலி, சுவாசக் கோளாறுகள் போன்றவை ஏற்படும்.
இந்த மருந்தை, ஒவ்வாமை உள்ளவர்களுக்கும், ஆஸ்துமா, இதய செயலிழப்பு, இதய மின்னோட்டத் தடை உள்ளவர்களுக்குப் பயன்படுத்தக்கூடாது. கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் இந்த மருந்தைத் தவிர்க்க வேண்டு. இந்த மருந்தை, கல்லீரல், சிறுநீரக நோய்கள் உள்ளவர்களுக்குக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

அனாகிரீலைட்:
இது, ரத்த தகட்டணுக்களுக்கு எதிராகப் பயன்படக்கூடிய ஒரு முக்கிய மருந்தாகும். இந்த மருந்து, ரத்தத்தில் புதிய தகட்டணுக்கள் அதிகரிப்பதைத் தடுக்கிறது. இதனால், ரத்தத்தில் தகட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, அவை ஒன்றோடு ஒன்று சேர்த்து ரத்தத்தை உறையச் செய்து ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் இதய பாதிப்பு, பக்கவாதம், தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதையும் தடுக்கப்படுகிறது.இந்த மருந்தை, தகட்டணுக்கள் மிகையாக உள்ளவர்களுக்கு, மருத்துவரின் ஆலோசனையை பெற்று இரண்டு நேரமும் கொடுக்க வேண்டும்.

பின் விளைவுகள் இந்த மருந்தால், சிலருக்கு படபடப்பு, வயற்றோட்டம், வயிறுவலி, குமட்டல், தலைவலி, அசதி, உடல்வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
மற்ற மருந்துகளைப் போலவே, இதையும் ஒவ்வாமை உள்ளவர்களுக்குத் தரக்கூடாது. கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும்கூட தரக்கூடாது.
இந்த மருந்தை கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்குக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

கெமிக்கல் சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம்

உணவு பொருட்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாகவும், ஆடைகளுக்கு பயன்படுத்தும் கெமிக்கல் வண்ணங்களும் பயன்படுத்துவதால், அதை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு, உடல் நிலை பாதிக்கும் அபாயம் உள்ளது.
சமீபகாலமாக தயாரிப்பாளர்கள் பலர், வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக, தாங்கள் தயாரிக்கும் உணவு பொருட்களில் பல்வேறு வண்ணங்களை கலக்கின்றனர். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேக், சுவீட், குழல் அப்பளம் முதல் ஓட்டல்களில் பெரியவர்கள் சாப்பிடும் சிக்கன்-65, பொறித்த மீன் என அனைத்திலும், வண்ண சாயங்கள் கலக்கப்படுகின்றன. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக வண்ணங்கள் சேர்ப்பதால், உணவு பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதற்கு மாறாக, பாதிப்பையே ஏற்படுத்தும்.

இயற்கை மற்றும் செயற்கை வண்ணத்தை பயன்படுத்திய வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் பலர், சமீபகாலமாக விலைமலிவு, பலன் அதிகம் என்பதற்காக, துணிகளுக்கு சாயம் ஏற்ற பயன்படுத்தும் கெமிக்கல் வண்ணங்களை உணவு பண்டங்களில் சேர்க்கின்றனர். இதுபோன்ற கெமிக்கல் வண்ணம் சேர்த்த உணவு பண்டங்களை சாப்பிடுவதால், குழந்தைகள் கடுமையாக பாதிக்கின்றனர்.

நகராட்சி உணவு ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: உணவு பொருட்களில் இயற்கை வண்ணம், செயற்கை வண்ணம் என்ற இருவகை வண்ணங்கள் கலக்கப்படுகின்றன. பீட்டா கரோட்டின், குளோரோபில், ரிபோப்ளேவின், கேராமல், சேப்ரான் உட்பட 11 வகை இயற்கை வண்ணங்களை உணவு பொருட்களில் பயன்படுத்தலாம். சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஆகிய நான்கு செயற்கை வண்ணத்தையும் பயன்படுத்தலாம். செயற்கை வண்ணத்தை பொறுத்தவரை, சிவப்பில் பான்சியோபோராக், கார்மோசிம், எரித்ரோசின், மஞ்சளில் டாட்ராசின், சன்செட் எல்லோ, நீலத்தில் இன்டிகோ கார்மென், பிர்லியண்ட் புளூ, பச்சையில் பாஸ்ட் கிரீன் ஆகிய வண்ணங்களையே உணவு பொருட்களில் சேர்க்க வேண்டும். அதிலும், ஒவ்வொரு பண்டங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் மட்டுமே வண்ணங்களை சேர்க்க வேண்டும். நிர்ணயித்த அளவுக்கு கூடுதலாக இயற்கை, செயற்கை வண்ணம், கெமிக்கல் சாயம் கலந்த உணவு பொருட்களை சாப்பிடும் பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும், கல்லீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு, கேன்சர்,
பசியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

உணவு கலப்பட தடை சட்டம் 1954ல் கீழ், நிர்ணயிக்கப்பட்ட வண்ணத்தை விட கூடுதலாக சேர்த்திருப்பது உறுதியானால், அதை தயாரித்தவர்கள், விற்பவர்களுக்கு ஆறு மாதம் முதல் ஆயுள் தண்டனை வரையும், 1,000 முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். "உணவு பாதுகாப்பு சட்டம் 2006' இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. அந்த சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டால், உணவு பொருளில் கலப்படம் செய்வோருக்கு லட்சக்கணக்கில் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு ஆய்வாளர் கூறினார்.

வேண்டாத பழக்கங்களால் விபரீதம்!

விரல் சூப்புதல், காதை குடைதல், பற்களை குத்துதல், மூக்கை துழாவுதல் என்று பலருக்கு இந்தப் பழக்கங்கள் தொட்டில் பழக்கமாய் தொடரும்.

குழந்தையாக இருக்கும் போது இந்த பழக்கம் இருந்தால், `அதெல்லாம் சரியாகி விடும்' என்று ஆரம்பத்தில் மெத்தனமாக விட்டுவிடுவோம். ஆனால், இது போன்ற பழக்கங்கள், உடலில் பல பிரச்சினைகளுக்கு வழி வகுத்து விடும்.

தொடக்கத்தில், காதை குடைந்தால் ஏதோ ஒன்று சரியாகிவிடும் என்ற மனோபாவத்தில் அதை தொடருவார்கள். இதனால் காதுக்குள் புண், செவிக்குள் இருக்கும் ஜவ்வு கிழிந்து காது கேட்காத சூழ்நிலை ஏற்படும்.

மூக்கை துழாவுதலும் இப்படித்தான். மூக்கினுள் இருக்கும் ரத்த ஓட்டங்கள் நிறைந்த பகுதி பாதிப்புக்கு உள்ளாகும். இதனால் காற்றில் இருக்கும் தூசுகளை அகற்ற உதவும் ரோமங்கள் உதிர்ந்து, அசுத்தம் கலந்த காற்று ரையீரலுக்குச் செல்ல வழி வகுக்கும். சில குழந்தைகள் மூக்கை அடிக்கடி உறிஞ்சிக் கொண்டே இருப்பார்கள். இதனால் மூளையில் உள்ள சிறு நரம்புகள் பாதிக்கப்படலாம். இதனால் குழந்தைப் பருவத்திலேயே மூக்கை சிந்தும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.

விரல் சூப்பும் பழக்கம் தொடர்ந்தால் வாயினால் சுவாசிப்பார்கள். இதனால் பற்கள் மேல் நோக்கி வளரும். குழந்தைகள் பாதுகாப்பின்மை காரணமாக, மனதளவில் ஒரு துணைக்காக விரலை சூப்புகின்றனர்.

எக்ஸெல் தொகுப்பில் டெக்ஸ்ட் டிசைன்
எக்ஸெல் ஒர்க் ஷீட் லே அவுட் மற்றும் டிசைன் செய்வதில் அனைவரும் பொதுவான பிரச்னை ஒன்றைச் சந்திப்பார்கள். செல்களில் உள்ள டேட்டா டெக்ஸ்ட் உள்ள அளவிற்கு அதிகமான இடத்தை எடுத்திருக்காது. இதனால் டேட்டா உள்ள செல்களில் அதிகமான காலி இடம் இருக்கும். இது ஒர்க் ஷீட் டிசைனில் விரும்பாத தோற்றத்தினைத்தரும். இந்த பிரச்னையைத் தீர்க்க எக்ஸெல் இரண்டு வழிகளைத் தருகிறது. டெக்ஸ்ட்டை நெட்டாக அமைக்கலாம்; அல்லது சுழற்றி ஒரு கோணத்தில் வைக்கலாம். எந்த செல்களில் உள்ள டெக்ஸ்ட்டை மாற்றி அமைத்திட வேண்டுமோ அந்த செல்களைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதில் மவுஸ் ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும்.இதில் Format Cells என்பதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள பல டேப்களில் அலைன்மெண்ட் என்பதனைத் தேர்ந்தெடுத்தால் நெட்டாக, படுக்கை வசமாக, குறிப்பிட்ட கோணத்தில் சாய்வாக டெக்ஸ்ட்டை அமைத்திட வழிகள் தரப்பட்டிருக்கும். உங்கள் டிசைன் கற்பனைக்கேற்ப டெக்ஸ்ட்டை அமைத்திட கட்டளை தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது காலி இடம் இல்லாமல் டெக்ஸ்ட் அமைக்கப்பட்டு அழகான தோற்றத்தில் இருக்கும்.

நெட்டுக்குத்தாக டெக்ஸ்ட்டை அமைக்க
எதிலும் மாறுபட்டு நாம் நிற்க வேண்டும் எனப்பலர் விரும்புவார்கள். டெக்ஸ்ட்டைப் படுக்கை வரிசையில் அமைக்காமல் நெட்டுக் குத்தாக அமைத்தால் பிறரின் கவனத்தைத் திருப்ப வசதியாக இருக்கும் எனத் திட்டமிடும் நபர்களில் நீங்களும் ஒருவரா? எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் இவ்வாறு டெக்ஸ்ட்டை எப்படி அமைக்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.
1. ஏதேனும் ஒரு செல் அல்லது நீங்கள் விரும்பும் பல செல்களை முதலில் தேர்ந்தெடுக்கவும்.
2. அதன்பின் அவற்றின் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Format Cells” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Alignment” என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதில்“Degrees” என்பதை அடுத்து எத்தனை டிகிரி கோணத்தில் செல்களில் உள்ள டெக்ஸ்ட் அமைய வேண்டும் என்பதனைத் தீர்மானித்து அமைக்கவும். அல்லது அங்கு உள்ள கிராபிக் கட்டத்தில் கோட்டினை சாய்வாக அமைத்தால் அதே சாய்வான தோற்றத்தில் டெக்ஸ்ட் கிடைக்கும். இதனை செட் செய்த பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

பேசப்பேச சார்ஜ் ஆகும்-மொபைல் போன்

மொபைல் போன்களில் அதிக சிரமம் தருவது, அதன் பேட்டரியை சார்ஜ் செய்வதுதான். எந்த போனாக இருந்தாலும், குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே, அதன் பேட்டரி பேசுவதற்கு திறன் கொடுக்கும். இப்போது மல்ட்டி மீடியா இயக்கம், இன்டர்நெட் பிரவுசிங் போன்ற வேலைகள் பேட்டரியின் திறனை அதிகம் எடுத்துக் கொள்வதால், பேட்டரி சார்ஜ் செய்திடும் சிக்கல் இன்னும் அதிகமாகின்றன. அமெரிக்க வல்லுநர்கள் இதற்கான ஒரு அதிசயமான தீர்வை நோக்கி தங்கள் ஆராய்ச்சியினைத் தொடங்கி உள்ளனர். ஒலி அலைகளை மின்சக்தியாக மாற்றும் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். காலமைன் லோஷனில் உள்ள ஸிங்க் ஆக்ஸைட் கொண்டு நானோ வயர் பீல்டை உருவாக்கி, அதனை இரண்டு எலக்ட்ரோடுகளுக்கிடையே அமைத்து, ஒலி அலைகள் மூலம் அவற்றை நெருக்கிய போது 50 மில்லி வோல்ட் மின்சக்தி உருவாகி இருந்துள்ளது. எப்படி எலக்ட்ரிக் சிக்னல்கள், ஸ்பீக்கர்களில் ஒலியாக வெளியேறுகிறதோ, அதே போல எதிர்வழியில், சரியான வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தி, ஒலி அலைகளை மின் அலைகளாகவும் மாற்றலாம். இதன் மூலம் மொபைல் போன்களில் பேசப்பேச, அந்த ஒலி அலைகளையே பயன்படுத்தி, அதில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்திடலாம் என்று இந்த விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர்.

மாற்று மருத்துவ முறைகள்: "ஜப்பானிய நீர் சிகிச்சை"

தினமும் அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பல் துலக்குமுன் ஆறு குவளை (1.26 லிட்டர்) நீர் பருகுவதால், உடலின் உட்புற உறுப்புக்கள் தூய்மையாக்கப்பட்டு, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் மறைகின்றது. (இதை நம் முன்னோர்கள் 'உஷை பானம்' என்றழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.)

தண்ணீரைக் குடித்தபிறகு, ஒரு மணி நேரத்திற்கு காபி, டீ போன்ற பானங்களையோ, பிஸ்கட், பழம் போன்ற தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக மிக அவசியமானது, முக்கியமானது. இதைக் கவனத்தில் கொண்டு நடைமுறைப் படுத்த வேண்டும்.

காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில், முதல் நாள் இரவுச் சாப்பாட்டை முடித்த பிறகு, படுக்கைக்குச் செல்லுமுன்பு, நரம்பு மண்டலத்தைத் தூண்டக்கூடிய பானங்களையோ, பொருட்களையோ சாப்பிடக்கூடாது. இந்த நிபந்தனையும் முக்கியமானது. இரவே பல் துலக்கிக் கொள்வது நல்லது.

தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்குமானால், அதை முதல் நாள் இரவே கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி, பத்திரப் படுத்திக் கொள்ளலாம்.

இம்முறை ஆரம்பத்தில் ஒரு சில நாட்களுக்கு சற்று சிரமமாகத் தோன்றலாம். பின்னர் பழக்கமாகிவிடும்.

மருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர், பணச் செலவு ஆகிய எதுவுமே இல்லாமல், இம்முறைப்படி நீரைப் பருகுவதால், கீழ்க்கண்ட நோய்கள் குணமாகின்றன:-

தலைவலி, இரத்த அழுத்தம், சோகை, கீல்வாதம், பொதுவான பக்கவாதம், ஊளைச்சதை, மூட்டுவலி, காதில் இரைச்சல்
இருதயப் படபடப்பு, மயக்கம், இருமல், ஆஸ்த்மா, சளி, க்ஷய ரோகம், மூளைக் காய்ச்சல், கல்லீரல் நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள், பித்தக் கோளாறுகள், வாயுக் கோளாறுகள், வயிற்றுப் பொருமல், இரத்தக் கடுப்பு, மூலம், மலச்சிக்கல், உதிரப்போக்கு, நீரழிவு, கண் நோய்கள், கண் சிவப்பு, ஒழுங்கில்லாத மாதவிடாய், வெள்ளை படுதல், கர்ப்பப்பை புற்றுநோய், மார்புப் புற்றுநோய், தொண்டை சம்பந்தமான நோய்கள்

நம்பவே முடியவில்லையா... சந்தேகம் கலந்த ஆச்சரியம் மேலிடுகிறது அல்லவா? இந்த முறை ஜப்பானில் பரவலாகக் கடைப் பிடிக்கப்படுகிறது.

சோதனைகள் மூலமாகவும், அனுபவபூர்வமாகவும் கீழ்க்கண்ட நோய்கள் குணமாக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது:-

மலச்சிக்கல் - ஒரே நாளில்

வயிற்றில் பித்தம் மற்றும் வாயுப் பொருமல் - இரண்டு நாட்கள்

சர்க்கரை வியாதி - ஏழு நாட்கள்

இரத்த அழுத்தம் - நான்கு வாரங்கள்

புற்று நோய் - நான்கு வாரங்கள்

காய்கறிகள் தருமே முக வசீகரம்...

அழகை அழகாய் எடுத்து கூறும் வார்த்தை... வசீகரம். பார்த்ததுமே, பளிச்சென மனதை கவர்வது முகம் தான். முகத்தை அழகாய் வைத்துக் கொள்ள, அழகு நிலையத்தை தேடி ஓடுவது மட்டுமே முடிவல்ல. காய்கறிகள், பழங்களைக் கொண்டு அழகாய் பேஸியல் செய்து, முகப்பொலிவை பாதுகாக்கலாம் என்கிறார், மதுரை ஆரப்பாளையம் அழகுக்கலை நிபுணர் வித்யாஸ்ரீ. பால்... முகத்தின் அழுக்குகளை நீக்கும் உன்னதமான பொருள். பஞ்சில் பாலை நனைத்து முகத்தை கீழிருந்து மேலாக துடைக்க வேண்டும். துடைத்த பின், ஒரு நிமிடம் வரை நீராவியில் முகத்தை காண்பிக்க வேண்டும். இப்படி செய்தால், முகத்தில் உள்ள துளைகள் திறக்கும். பேஸியல் செய்யும் போது முகத்தில் நல்ல பளபளப்பைக் கொடுக்கும்.
காய்கறிகளைப் பொறுத்தவரை, உருளைக்கிழங்கு, வெள்ளரி, தக்காளி, கேரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ் வைத்து பேஸியல் செய்யலாம். உருளைக்கிழங்கை தோல் நீக்கி அரைத்து, அரை ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் முல்தானிமெட்டியை சேர்த்து கலக்க வேண்டும். முகத்தில் கீழிருந்து மேல் நோக்கி கலவையை பூசி, 20 நிமிடங்கள் காயவிட வேண்டும். நன்றாக காய்ந்துவிடக் கூடாது. இதேபோல மற்ற காய்கறிகளையும் பயன்படுத்தலாம்.
பழங்களில் ஆஸ்திரேலிய ஆரஞ்ச், பட்டர் ப்ரூட், வாழைப்பழம், ஆப்பிள், கறுப்பு திராட்சை, பப்பாளிப் பழம், தர்பூசணி பழங்களை பயன்படுத்தலாம். செவ்வந்தி, பன்னீர் ரோஜா பூக்களையும், பாதாம் பருப்பு, வெள்ளை கொண்டைக் கடலையை அரைத்து, தேன், முல்தானிமெட்டி கலந்து பேஸியலாக பயன்படுத்தலாம். பூக்களுடன் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டாம்.
எந்த வயதினரும் இதை பயன்படுத்தலாம். மாலை நேரத்தில் செய்வதே நல்லது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை செய்து பார்க்கலாம்

புதிய வைரஸ் எச்சரிக்கை

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள சிறிய குறை காரணமாக, புதிய வைரஸ் தாக்குதல் இருக்கும் என்று அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி, ஒருவர் தொலைவில் இருந்தே, இன்னொருவரின் கம்ப்யூட்டரைத் தன் வயப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இது ஒரு ஸீரோ டே அட்டாக் (Zero Day Attack) ஆக இருக்கும். ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு களைத் தயாரித்து வழங்கும் சைமாண்டெக் நிறுவன வல்லுநர் விக்ரம் தாக்கூர் இது பற்றிக் கூறுகையில், இமெயில் மூலம் கவனத்தைத் திருப்பி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பலவீனத்தைப் பயன்படுத்தி, வைரஸ் அல்லது வேறு மால்வேர் உள்ளே புகலாம் என்று கூறியுள்ளார். தாக்குதலுக்குக் குறி வைத்துள்ள நிறுவனம் அல்லது குழு உறுப்பினர் ஒருவருக்கு, இமெயில் ஒன்றை அனுப்பலாம். அதில் அந்நிறுவனம் அல்லது குழுவின் இணையதளம் போலவே தோற்றம் அளிக்கும், தளம் ஒன்றிற்கான லிங்க் தரப்பட்டிருக்கும். இந்த லிங்க்கில் கிளிக் செய்திடுகையில், அந்த தளம் காட்டப்படும். பின்னணியில், மால்வேர் அல்லது வைரஸ், மேலே தரப்பட்டுள்ள பிழையான இடத்தைப் பயன்படுத்தி உள்ளே நுழைய முடியும். பின்னர், அந்த இணைய தளத்தில் எந்த பைலையும் அப்லோட் செய்திட முடியும். இந்த சிக்கல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6, 7 மட்டுமின்றி பதிப்பு 8லும் உள்ளது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சோதனைப் பதிப்பு 9 ஐப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்னை இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இமெயில்களை எச்.டி.எம்.எல். பார்மட்டில் படிக்காமல், வெறும் டெக்ஸ்ட் வடிவில் படித்தால், இதனைத் தவிர்க்கலாம்.

ஸீரோ டே / ஸீரோ அவர் அட்டாக் என்பது, ஒரு அப்ளிகேஷனை உருவாக்கியவர் களுக்கே, அந்த அட்டாக் எங்கு ஏற்படுகிறது என்ற விபரம் தெரியாமல் இருக்கும் நிலையாகும். பாதிப்பு ஏற்பட்ட பின்னரே, அவரால் எங்கு பிழை உள்ளது என அறிந்து, அதனைத் தீர்க்க இயலும். எனவே தாக்குதல் நடைபெறும் காலத்தில், அதனைத் தடுக்க இயலாநிலை இருக்கு2ம். இதனையே ஸீரோ டே அல்லது ஸீரோ அவர் அட்டாக் என்று கூறுகின்றனர்.

கடல் என்றாலே அலை

கடல் என்றாலே மனதுக்குள் இனம் புரியாத ஒரு ஆச்சரியம் அல்லது பய உணர்வு ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும் ஏற்படும். 1070 கி.மீ. நீளமுள்ள தமிழக கடற்கரையில் ஒவ்வொரு தமிழரும் ஏதாவதொரு காரணத்திற்காக சில முறையாவது செல்கிறோம். கால் நனைக்கவோ, பீச்சில் குடும்பத்துடன் அமர்ந்து குதூகலமாக பேசி மகிழவோ, குளிக்கவோ என எதற்கு சென்றாலும் சிறிது கவனக்குறைவாக இருந்தாலும் உங்களுள் ஒருவரை கடலின் அலைகளுக்கு எளிதாக பலியாக்கிவிட்டு வீடு திரும்ப வேண்டியிருக்கும்.

ஒரு சாதாரண நிகழ்வாக ஒவ்வொரு பண்டிகை தினத்திலும் எங்காவது ஒரு கடற் கரையில் ஒரு உயிர் பறிபோய்க் கொண்டே இருக்கிறது. இந்தச் செய்தி தொகுப்புகளை ஆராய்ந்து பார்த்தால் அப்படி இறந்துபோகும் சராசரி வயதினர் பெரும்பாலும் குழந்தை களோ பெரியவர்களோ பெண்களோ அல்ல. அடுத்த கட்ட கனவை மனதில் சுமந்து தன் குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையாய் விளங்கும் இளைஞர்களே அந்த சில நிமிட அமிழ்தலில் ஒட்டுமொத்த வாழ்க்கையையும், தன் பெற்றோரின் கனவையும், அலைகளில் கரைத்து விடுகிறார்கள்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை எந்த கடற்கரையில் வேண்டுமானாலும் சென்று பாருங்கள். ஏதாவது ஒரு இளைஞர்கள் கூட்டம் கடலில் உற்சாகத்துடன் குளித்து கொண்டு இருக்கும். காணும் பொங்கல், புத்தாண்டு, தீபாவளி, ஆடிப்பெருக்கு என எந்த பண்டிகை தினமானாலும் சரி, புகழ்பெற்ற புனித தலங்களான ராமேஸ்வரம், வேளாங் கண்ணி மற்றும் திருச்செந்தூர் போன்ற இடங்களில் நடைபெறும் திருவிழாக்களாக இருந்தாலும் சரி தமிழரின் ஒவ்வொரு முக்கிய விசேஷங்களிலும் கடற்கரைகளில்தான் பெரும் கூட்டம் கூடுகிறது.

சுற்றுலாவில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் கடலில் குளிக்கும்போது இன்னும் சற்று ஆழமாய் சென்றால் ஏற்படும் சாகச உணர்வுக்காக அலையில் விழுந்து சிலர் உயிரை தொலைக்கிறார்கள். சில மணி நேரங் களுக்குப் பிறகு அதே இடத்திற்கு வருபவர்கள் முந்தைய பலியைப் பற்றி அறியாமல் மீண்டும் இந்த பாதுகாப்பற்ற ஆபத்தான விடுமுறை கொண்டாட்டத்தை தொடர் கிறார்கள். கடல் அலைகளில் சென்று விளையாடும் ஆர்வம் உள்ள அளவுக்கு அதில் உள்ள ஆபத்துகளை தெரிந்து கொண்டு பாதுகாப்பாக இருக்கவும் தெரிந்து கொள்வது அவசியமாகும். எனவே தமிழக கடல் அலைகளின் தன்மையை பற்றியும் உயிர்காக்கும் சில பாதுகாப்பு முறைகளை பற்றியும் பார்ப்போம்.

பொதுவாக கடலில் தொடர்ந்து அடித்துக் கொண்டு இருக்கும் அலைகளின் காரணமாக கடல் நீர் கரைக்கு தள்ளப்பட்டு மீண்டும் இழுக்கப்படுகிறது. இந்த தொடர்ச்சியான நிகழ்வால் மேற்பரப்பில் உள்ள கடல் நீர் கரை நோக்கியும், அடிப்பரப்பில் உள்ள கடல்நீர் கடல் நோக்கியும் ஓடிக்கொண்டு இருக்கும். கடற்கரையில் உங்களை நோக்கி வரும் அலைகளை ரசித்து கொண்டு இருக்கும்போது காலடியில் உள்ள மணல் வேகமாக அரித்து செல்லப்பட்டு கால் மண்ணுக்குள் புதைவதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். அதற்கு காரணம் இந்த அடிப்பரப்பு நீரோட்டமே ஆகும். இதற்கு ஆங்கிலத்தில் அண்டர்டோ கரண்ட்ன்ட்ஸ் (ஞிஙூக்ஷக்சுஞ்ச்ஞு ஷஞிசுசுக்ஙூஞ்சூ) என்று பெயர்.

மேற்பரப்பில் வரும் அலைகளின் சக்தியோடு ஒப்பிடும்போது இந்த அடிப்பரப்பு நீரோட்டம் சக்தி குறைந்தது. எனவே கடற்கரையில் நின்று கொண்டு இருக்கும் ஒருவரை நீண்ட தூரம் ஆழத்திற்கு இழுத்து செல்லும் அளவுக்கு இதற்கு பொதுவாக பலம் இருப்பதில்லை. ஆழம் குறைவான இடத்தில் நிற்கும் நீச்சல் தெரியாத ஒருவரை பெரிய அலை கீழே தள்ளுகிறது என வைத்துக் கொள்வோம். மேற்பரப்பில் தொடர்ந்து வரும் அலைகள் அவரை மீண்டும் எழவிடாமல் தள்ளிவிட்டுக் கொண்டே இருக்கும். அப்போது ஏற்படும் பய உணர்வில் வாய் மற்றும் மூக்கு வழியாக கடல்நீர் விழுங்கப்படுவதால் மயக்கம் ஏற்பட்டு இறக்க நேரிடுகிறது.

பெரும்பாலும் கடலில் மூழ்கி இறப்பவர்கள் நல்ல ஆரோக்கியமான இளைஞர்கள்தானே என்று நீங்கள் கேட்கலாம். கடல் அலைகளின் இயல்பை புரிந்து கொள்ளாமல் அதில் சிக்கி கொள்வதாலேயே நன்றாக நீச்சல் தெரிந்த இளைஞர்கள் கூட உயிரை விடுகின்ற னர் என்பதுதான் உண்மை. எனவே அலைகளின் சில அடிப்படை இயல்புகளை பற்றி பார்ப்போம்.

சாதாரணமாக பார்த்தால் அலைகள் தொடர்ந்து கரையில் அடித்துக்கொண்டு இருப்பது போல்தான் தோன்றும். ஆனால் அலைகள் ஒரு குழுவாகவே எப்போதும் கரைக்கு வரு கின்றன. ஒவ்வொரு குழுவிலும் ஆறு முதல் எட்டு அலைகள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக கரையில் வந்து அடிக்கின்றன. பிறகு ஏறத்தாழ ஒரு நிமிடத்திற்கு அலைகளின்றி இருக்கும் அமைதியைத் தொடர்ந்து அடுத்த அலை கரையில் வந்து மோதும். அடுத்த முறை நீங்கள் கடற்கரைக்கு செல்லும்போது இதை கூர்ந்து கவனித்து பார்த்தால் அலை களின் இந்த குழு அமைப்பு உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். கடலில் குளிக்கும் போது இந்த அலைக்குழுவின் சிறு அலைகளை பார்த்து சற்று ஆழத்திற்கு செல்லும்போது இந்த பெரிய அலைதான் பலமாக அறைகிறது.

இரு அலைக்குழுக்களுக்கு இடைப்பட்ட குறுகிய அமைதியான நிலையை நம் மீனவர்கள் அற்புதமாக கண்டுபிடிப்பார்கள். இந்த துல்லிய கணக்கீட்டு திறனால் அடுத்த அலைக்குழு கரையில் மோதுவதற்குள் வேகமாக படகை தள்ளிக்கொண்டு கடலுக்குள் சென்றுவிடு வார்கள். அதே முறையை பயன்படுத்திதான் கரைக்கும் திரும்புவார்கள். அதனால்தான் ரொம்ப தூரம் கடலில் இருந்து திரும்பி வரும் மீனவர்கள் அலைகள் மோதும் கரைப் பகுதிக்கு வந்தவுடன் சிறிது நேரம் காத்திருந்து லாவகமாக கரையேறுவார்கள். இது இயற்கை அன்னையிடம் அவர்கள் கற்ற ணுக்கமான பாடங்களில் ஒன்றாகும். அந்த சில சாகச நொடிகளில் சிறிய பிழை நேர்ந்தால்கூட படகும், மீன்பிடி வலையும் அலை களால் தூக்கிவீசப் பட்டுவிடும்.

இந்த அலைக்குழு இடைவெளியை கடக்க முயலும்போது நான் உயிர் தப்பிய சம்பவத்தை பற்றி இங்கு சொல்ல விரும்புகிறேன். கடலின் மீது இருந்த ஈடுபாட்டால் 2007-ம் ஆண்டு ராமேசுவரத்தில் இருந்து சென்னை வரை ஒரு சிறு பிளாஸ்டிக் துடுப்பு படகில் தனியாக பயணம் மேற்கொண்டேன். தமிழக கடல் முழுவதையும் நேரில் உணர வேண்டும் என்ற உள்ளுணர்வால் துவங்கிய இந்த பயணம். எனக்கு தெரிந்த சில கடற்சூழல் விஷயங்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டு கடற் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வு பயணமாக அமைந்தது. ஒரு நாளைக்கு பதினைந்து முதல் இருபது கிலோமீட்டர் பயணம் செய்து கடலோர கிராமங்களில் இரவு தங்கி மக்களிடம் பேசி அடுத்த நாள் பயணத்தை தொடர்ந்தவாறு பயணம் செய்து கொண்டு இருந்தேன்.

கோடியக்கரை வரை அமைதியாக இருந்த இந்த பயணம். அதற்கு பிறகு மிக கடினமாக மாறத் தொடங்கியது. அன்றைய பயணத்தின் முடிவில் நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த கிராம கடற்பகுதியில் சுமார் 500 மீட்டர் தூரத்தில் கரைக்கு வருவதற்காக படகை செலுத்திக் கொண்டிருந்தேன். அன்று கடலும் இயல்பைவிட மிக சீற்றமாகவே இருந்தது. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதுபோல நான் புத்தகங்களில் படித்து இருந்ததைவிட அலைகள் மிக பிரமாண்டமாக வந்துகொண்டு இருந்தன. சரியான அலைக்குழு இடைவெளியை கணித்து கரையோரத்தில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் வரச்சொல்லி சமிக்கை செய்தனர். துடுப்பை வேகமாக தள்ளி கரையை நோக்கி வந்துகொண்டு இருந்தபோது திடீரென ஒரு உயரமான அலை எனக்குப் பின்னால் துரத்த தொடங்கியது. அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் அந்த அலை படகை தலைகீழாக தூக்கத் தொடங்கியது. படகு என் கட்டுப்பாட்டை இழந்தபோது அந்த பெரிய அலை தலைகீழாக என்னை படகுடன் கடலுக்குள் அழுத்தியது. படகையும் என்னையும் பிணைத்து வைத்திருந்த கயிறு என் இடுப்பை நன்றாக சுற்றிக் கொண்டது. வாயிலும் மூக்கிலும் வேகமாக மணல் கலந்த தண்ணீர் ஏறிக்கொண்டு இருக்க கவிழ்ந்த படகின் அடியில் தலைகீழாக தொங்கி கொண்டு இருந்தேன்.

நல்ல வேளையாக அடுத்த அலை தாக்கியவுடன் கயிறை அறுத்துக் கொண்டு படகு என்னை விட்டு விலகி சென்றது. சில நிமிடங்களுக்குப் பிறகு கரையை நோக்கி நீந்தி வந்து சேர்ந்தேன். உயிரை காக்கும் லைப் ஜக்கேட் (மிதவை உடை) அணிந்து இருந்ததால் என்னால் சுலபமாக பிழைக்க முடிந்தது. இதுபோன்று முன்னறிவிப்பு இன்றி திடீரென வரும் பெரிய அலைகள் எந்த ஒரு அலைக்குழுவிலும் சேர்வதில்லை. இவற்றை ஆங்கிலத் தில் ஸ்லீப்பர் வேவ்ஸ் என்று சொல்வார்கள். இந்த பெரிய முரட்டு அலை சாதாரண அலைக்குழுக்களைவிட வேகமாக கரையைத்தாக்கும். அந்த சமயத்தில் குளிக்கும் அப்பாவிகளின் பாதுகாப்பிற்கு இந்த முரட்டு அலை எந்த உத்திரவாதமும் தருவதில்லை. மெரினா கடற்கரை, மகாபலிபுரம், புதுச்சேரி மற்றும் கன்னியாகுமரி கடற்கரைகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் இந்த வகை அலையில் சிக்கி இறந்துள்ள சம்பவங் களும் நடந்துள்ளன.

தமிழகத்தின் கடலோரங்களில் உள்ள முக்கியமான சுற்றுலா மையங்களில் அலைகளின் அமைப்பு எல்லா இடங்களிலும் எல்லா மாதங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கரையின் அமைப்பை பொருத்தும் கால நிலைகளை பொருத்தும் இது மாறக்கூடியது. மிகவும் சரிவாக கரைகள் இருந்தால் பெரிய அலைகள் நேரடியாக கடற்கரை வரை வரும். எனவே இவை ஒற்றை அலை கடற்கரைகள் ஆகும். மீனவர்கள் இதை புனுவுக்கடல் என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு மெரினா மற்றும் பாண்டிச்சேரி கடற்கரைகளை சொல்லலாம்.

ஆனால் தமிழகத்தின் வேறு சில இடங்களில் கடற்கரை மிதமான சரிவுடன் காணப்படும். இந்த பகுதிகளில் பெரிய அலைகள் தூரத்திலேயே நின்றுவிடுவதால் கரையை நோக்கி சிறிய மற்றும் நடுத்தர அலைகள் மட்டுமே வரும். மீனவர்களை இதை தரைக்கடல் என அழைப்பார்கள். உதாரணத்திற்கு வேளாங்கண்ணி மற்றும் வேதாரண்யம் கடற்கரையை சொல்லலாம்.

டாக்டர் வே.பாலாஜி, கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர், தஞ்சாவூர்.

விண்டோஸ் 7 ஷட் டவுண் ஷார்ட் கட்


விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறியவர்கள், உடனே எதிர்பார்க்கும் ஒரு வசதி, சிஸ்டம் ஷட் டவுண், பவர் டவுண் மற்றும் சிஸ்டம் ரீ ஸ்டார்ட் போன்றவற்றிற்கான ஷார்ட் கட்களை அமைப்பதுதான். இதற்கான வழிமுறைகள், விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவிற்கான வழிமுறைகளைப் போன்றே தான் உள்ளன. ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இதனை டாஸ்க் பார் அல்லது சிஸ்டம் ட்ரே அல்லது இரண்டிலும் பதித்து வைக்க முடியும் என்பது ஒரு கூடுதல் வசதியாகும். இந்த ஷார்ட்கட் வழியை எப்படி அமைக்கலாம் என்று பார்க்கலாம்.

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் எல்லாரும் ஷார்ட்கட் உருவாக்குவதற்கான வழிமுறைகளைத் தெரிந்து வைத்துள்ளனர். இருப்பினும் அவற்றை எளிமையாக இங்கு உறுதிப்படுத்திக் கொள்வோம்.
முதலில், டெஸ்க்டாப்பில் எதுவும் இல்லாத ஓர் இடத்தில், ரைட்கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் New | Shortcut என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்தவுடன், சில தகவல்களை உங்களிடம் கேட்டுப் பெறுகின்ற உள்ளீடு செய்திடும் திரை உங்களுக்குக் கிடைக்கும். இங்கு தான் நீங்கள் உருவாக்க விரும்பும் ஷார்ட்கட் வழிக்கான அமைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
எடுத்துக் காட்டாக, விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றினை ஷட் டவுண் செய்திடுவதற்கான ஷார்ட்கட் உருவாக்குவது குறித்து இங்கு காணலாம். எடுத்துக் காட்டாக, இங்கு ஷட் டவுண் செய்திட கீழ்க்காணும் கட்டளை வரியினை, கட்டத்திற்குள் அமைக்கவும்.
Shutdown.exe -s -t 00
இதன் பின் Next என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்த விண்டோ இந்த ஷார்ட்கட்டிற்கு பெயர் ஒன்றினைத் தருமாறு கேட்கும். எந்த கட்டளைக்கான ஷார்ட்கட் அமைக்கப்படுகிறதோ, அதனை நினைவு படுத்தும் வகையிலான பெயர் ஒன்றை அமைக்கவும். இங்கு, எடுத்துக்காட்டாக Shutdown என அமைக்கலாம். இதோடு இங்கு நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் இதற்கென ஐகான் ஒன்று அமைத்தால் நன்றாக இருக்கும். இங்கும் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவில் ஐகான்களை மாற்றுவது போல மாற்றலாம். இங்கு சம்பந்தப்பட்ட ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, காண்டெக்ஸ்ட் மெனு பெறவும். பின்னர் அதில் ப்ராப்பர்ட்டீஸ் மெனு செல்லவும். ப்ராப்பர்ட்டீஸ் கண்ட்ரோல் பேனலில், Change Icon பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து வரும் திரையில், ஐகான்கள் நிறைய காட்டப்படும். இதில் எதனை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்து, இரண்டு முறை ஓகே பட்டனை இருமுறை கிளிக் செய்து முடிக்கவும். இப்போது உங்கள் டெஸ்க் டாப்பில் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்வதற்கான ஐகானைக் காணலாம். இதில் கிளிக் செய்தால், சிஸ்டம் ஷட் டவுண் ஆகும்.
இனி இதனை எப்படி ஸ்டார்ட் மெனு அல்லது சிஸ்டம் ட்ரே அல்லது இரண்டிலும் பின் செய்து வைப்பது என்று பார்க்கலாம். ஷார்ட்கட் மீது ரைட் கிளிக் செய்திடவும். காண்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும். பின்னர் டாஸ்க்பாரில் அமைக்க வேண்டும் எனில் Pin to Taskbar என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். இதில் பின் செய்தவுடன், சிஸ்டம் ஷட் டவுண் செய்வதற்கான அவசர திறவுகோலான ஷார்ட்கட் கைகள் அருகில் கிடைக்கும்.
இதே முறையில் இன்னும் சில ஷார்ட்கட் கீகளுக்கான கட்டளையைப் பார்ப்போமா!
கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திட
Shutdown.exe -r -t 00
கம்ப்யூட்டரை ஹைபர்னேட் என்னும் நிலையில் வைத்திட
rundll32.exe PowrProf.dll,SetSuspendState
கம்ப்யூட்டரை ஸ்லீப் மோடில் வைத்திட
rundll32.exePowrProf.dll,SetSuspendState 0,1,0

அழகோ! அழகு..

ழகு என்ற சொல் தமிழுக்கு அழகு சேர்க்கும் சொல்லாகும். இயற்கை அழகு, மலை அழகு, உடல் அழகு என அழகை வர்ணித்துக்கொண்டே போகலாம். அதுபோல் மனிதர்களில் அழகு என்பது புற அழகை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. காரணம் உடலின் அகத்துள்ளே பூரிப்பு உண்டானால் அது புற அழகில் மெருகேறிவிடும்.

அதுபோல் அகத்துள் பாதிப்பு உண்டானால் அது முகத்தில் தெரிய வரும். இதைத்தான் நம் முன்னோர்கள் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.

முக அழகையும், உடலையும் பேணி பாதுகாப்பது அவசியம். உடல்தான் மனித உயிரின் அஸ்திவாரம் ஆகும். ஒவ்வொருவரும் செயற்கை அழகை விட இயற்கை அழகை மேம்படுத்துவதே சாலச் சிறந்தது.

செயற்கை அழகு சாதனப் பொருட்கள் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியவை, ஆனால் மூலிகை பொருட்களால் ஆன அழுகு சாதன பொருட்களே மேனியை மெருகூட்டும்.

வறண்ட சருமம்

சிலருக்கு உடலில் ஒவ்வாமை காரணமாக சருமத்தில் பாதிப்பு உண்டாகி வறட்சி ஏற்படும். இதனால் புற அழகு குன்றி காணப்படுவார்கள். இந்த சரும வறட்சியை நீக்க

பயிற்ற மாவு - 50 கிராம்

மஞ்சள் தூள் - 5 கிராம்

எலுமிச்சம் பழச்சாறு - 50 மிலி

இவற்றை சேர்த்து நன்றாக கலக்கி சருமம் எங்கும் பூசி 10 நிமிடம் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் குளித்து வரவேண்டும். இக்காலங்களில் குளியல் சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. மேற்கண்ட முறை வாரம் இருமுறையாவது செய்து வந்தால் வறட்சி நீங்கி சருமம் பளபளக்கும்.

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு வயிற்றில் விழும் கோடுகள் மறைய

கருவுற்றிருக்கும்போது வயிறு பருக்கும். குழந்தை பிறந்த பின் வயிற்றில் சிலருக்கு வெள்ளையாக கோடுகள் விழும். இக்கோடுகள் மறைய

கற்றாழை - 1 துண்டு
பப்பாளி - 1 துண்டு
சந்தன பவுடர் - 1 ஸ்பூன்
பன்னீர் - 1 ஸ்பூன்
பாதாம் எண்ணெய் - 1 ஸ்பூன்
அல்லது தேங்காய் எண்ணெய் ,
பாலாடை - 1 ஸ்பூன்

சேர்த்து நன்றாக கலக்கி இரவு படுக்கைக்கு செல்லும் முன் வயிற்றில் பூசி வரவேண்டும். காலை எழுந்தவுடன் இளம் சூடான நீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் வயிற்றில் உண்டான கோடுகள் மறையும்.

வெயிலில் செல்லும்போது ஏற்படும் கருமை மாற

வெயிலில் அலைந்து வேலை செய்யும் ஆண், பெண் இருபாலருக்கும் உடம்பில் வெயில் படும் இடங்களில் கருமை உண்டாகும். உடல் எண்ணெய் பசை போல் காணப்படும். இவர்கள்

உருளைக்கிழங்கு சாறு - 1 ஸ்பூன்
சர்க்கரை - 1 ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 ஸ்பூன்

இவற்றை ஒன்றாக சேர்த்து குழைத்து கருமை உள்ள இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளித்து வந்தால் கருமை நீங்கும்.

இளநீரை முகத்தில் தடவி வந்தால் சின்னம்மையினால் உண்டான வடுக்கள் விரைவில் மறையும்.

முடி உதிர்தல், செம்பட்டை முடி மாற


தேங்காய் எண்ணெய் - 1 லி
நெல்லிக்காய் பொடி - 10 கிராம்
தான்றிக்காய் பொடி - 10 கிராம்
வெட்டிவேர் - 10 கிராம்
ரோஜா இதழ் காய்ந்தது - 10 கிராம்
மருதாணி பொடி - 10 கிராம்
கறிவேப்பிலை பொடி - 10 கிராம்
கரிசலாங்கண்ணி பொடி - 10 கிராம்
செம்பருத்தி பொடி - 10 கிராம்
புதினா பொடி - 10 கிராம்
சந்தனப் பொடி - 10 கிராம்

இவற்றை கலந்து கொதிக்க வைத்து15 நாட்கள் வெயிலில் காயவைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் மாறி, பொடுகு நீங்கும். கேசம் கருமையடையும்.

டெங்கு காய்ச்சல்

கொசுக்களால் பரப்பப்படும் ஒருவித வைரஸ் நுண்கிருமிகளால் ஏற்படக்கூடியது இந்த டெங்கு காய்ச்சல். நான்கு வகையான வைரஸ் கிருமிகளால் இந்த நோய் பரவுகிறது.

நோய் பரவும் வழிகள்:

ஈடீஸ் எனப்படும் கொசுக்களால்தான் வைரஸ் கிருமிகள் பரவி டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. ஈடீஸ் வகைக் கொசுக்கள், பகல் நேரத்தில்தான் மனிதர்களைக் கடிக்கும். தேங்கிய நீர்நிலைகளில் முட்டையிட்டுப் பெருகக்கூடியவை.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரைக் கொசு கடிக்கும்போது பாதிக்கப்ட்டவரின் உடலில்இருந்து வைரஸ் கிருமிகள் கொசுக்குப் பரவும்.

பிறகு, இந்தக் கொசு இன்னொருவரைக் கடிக்கும்போத அதன் உடலில் இருந்து வைரஸ் கிருமிகள் அவருக்கும் இந்தக் கிருமிகள் பரவி டெங்கு காய்ச்சலை ஏற்படுத்திவிடும்.

மழைக்காலங்களில்தான் கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகி நோயைப் பரப்புகின்றன.முதன்முறையாக கொசு கடித்து வைரஸ் கிருமிகள் உடலுக்குள் நுழைந்த மூன்று முதல் பதினான்கு நாள்களுக்கும் காய்ச்சல் ஏற்படும்.

ஏழு முதல் பத்து நாள்கள் வரை காய்ச்சல் இருக்கும்.

டெங்கு ரத்தக் கசிவு நோய்:

இரண்டாவது முறை வைரஸ் தாக்கினால் டெங்கு ரத்தக் கசிவு நோய் ஏற்படும்.

ஒருவருக்கு ஏற்கெனவே டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு அதற்கான நோய் எதிர்ப்புச் சக்தி உடலுக்குள் உருவாகி இருக்கும் நிலையில், இன்னொர வகையான வைரஸ் கிருமி தாக்கினால் இந்த நோய் ஏற்படும்.

மூன்று முதல் ஏழு நாள்கள் கழித்து காய்ச்சல் குறையும்போது பல மாற்றங்கள் நிகழும். ரத்தக் குழாய்கள் விரிவடைவதாலும், ரத்தத்தில் உள்ள புரதச் சத்துக்கள் வெளியேறுவதாலும், ரத்தம் கசிவதாலும் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்.

ரத்தத்தில் ஏற்படும் அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். (நீர் குறைவதால்) நுரையீரலைச் சுற்றி நீர் கோத்துக் கொள்ளும். வயிற்றுப் பகுதிகளிலும் நீர் சேரும். முகத்தில் கண்களைச் சுற்றி வீக்கம் தெரியும்.

பல்வேறு இடங்களில் ரத்தக் கசிவு ஏற்படலாம். தோலில் கொசுக்கடி போன்ற சிவப்புப் புள்ளிகளும், வயிற்றுக்குள் ரத்தக்கசிவும் ஏற்படலாம்.

ரத்தம் உறைவதற்குத் தேவையான அணுக்கள் குறைவதால் இத்தகை பாதிப்புகள் ஏற்படும். நோயின் தீவிரம் அதிகரித்தால், இந்தப் பாதிப்புகளுடன் ரத்த அழுத்தமும் குறையும்.

நோயின் அறிகுறிகள்:

காய்ச்சல் மிக அதிகமாக இருக்கும் (103 முதல் 108 டிகிரி ஃபாரன்ஹீட்), தலைவலி (குறிப்பாக நெற்றி மற்றும் கண்களுக்குப் பின்னால்), உடல் வலி, முக்கியமாக முதுகு வலி அதிகமாக இருக்கும்.

தோலில் தடிப்புகள் அதிகமாக இருக்கும். இவை 24 முதல் 48 மணி நேரத்துக்கு இருக்கும். வாந்தி மற்றும் வயிற்றுவலி இருக்கும். காய்ச்சல் இருக்கும் அளவுக்கு நாடித்துடிப்பு அதிகமாக இருக்காது.

பசியின்மை, உடல்சோர்வு, நெறிகட்டிகளால் வீக்கம், கை, கால்களில் வீக்கம் ஏற்படலாம். சில நாள்களில் காய்ச்சல் குறைந்து, பிறகு மீண்டும் காய்ச்சல் அதிகரிக்கலாம். பல்வேறு இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ரத்த அழுத்தம் குறையலாம்.

பரிசோதனைகள்:

ரத்தப் பரிசோதனைகள் மிகவும் இன்றியமையாதவை. சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை அறிவதற்காக, ரத்தத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களின் அளவு, ரத்தம் உறைவதற்கான நேரம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளைச் செய்யவேண்டும்.

டெங்கு காய்ச்சல்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேறு சில பரிசோதனைகளைச் செய் வேண்டும். எக்ஸ்-ரே, ஸ்கேன் (வயிற்றுப் பகுதி) ஆகியவற்றை எடுக்கவேண்டும். அடிக்கடி ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும்.மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால், அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

சோர்வாக இருத்தல் அல்லது ஆசுவாசப்படுத்த முடியாமல் அழுதல்.

ரத்தக் கசிவு (எவ்வளவு குறைவான அளவாக இருந்தாலும்)கை கால்கள் நீலம் பூத்திருத்தல்.

உடல் சில்லிட்டுப்போதல்.வயிற்று வலி மிக அதிகமாக இருத்தல்.ரத்த அணுக்கள் குறைவாக இருத்தல்.

நுரையீரலைச் சுற்றியோ, வயிற்றிலோ நீர் கோத்துக் கொள்ளுதல்.ரத்த அழுத்தம் குறைவது; நாடித் துடிப்பு சீராக இல்லாத நிலை.உணவு சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ முடியாத நிலை.

சிகிச்சை:

டெங்கு காயச்சலுக்கென பிரத்யேக மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காய்ச்சல் குறைவதற்கு பாரசிடமால் கொடுக்க வேண்டும்.

உணவு சாப்பிட முடியாத குழந்தைகளுக்கு தேவையான அளவு நீர்ச்சத்து கொடுக்க வேண்டும்.தேவைப்பட்டால், குழந்தைகளை மருத்துவமனைல் சேர்த்து சிவப்பு அணுக்களோ அல்லது வேறு ரத் அணுக்களோ ஏற்ற வேண்டும்.

தடுக்கும் முறைகள்:

* கொசுக்களை ஒழிக்க வேண்டும்.
* வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* கொசு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
* டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களை கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

செல்போன்கள்... ஜாக்கிரதை

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த கல்லூரி மாணவியான தனது மகளை கண்டித்தார் அப்பா. மகளிடமிருந்து செல்போனை பிடுங்கிக் கொண்டார். அவ்வளவுதான், செல்போன் போனதால் சகலமும் போனதாக நினைத்த அந்தப் பெண் தற்கொலை செய்துக் கொண்டார். சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த துயரச் சம்பவம் இது. செல்போனின் தாக்கம் சமூகத்தில் அதிர்ச்சியான சம்பவங்களை ஏற்படுத்தி வருகிறது.

வறுமையோ, வளமையோ நிலைமை எப்படி இருந்தாலும் இந்த காலத்தில் தவிர்க்க முடியாத உபகரணமாக மாறியிருக்கிறது செல்போன். எந்த தகவலையும் இருந்த இடத்தில் இருந்து உடனுக்குடன் பெறவும், தரவும் உள்ள வசதி அசாதாரமானது. பல தேவைகள் உடனுக்குடன் நிறைவேறுவதுடன், சில பிரச்னைகளை தீர்க்கவும் உதவுகிறது.
அதனால் உலகில் 500 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 67 கோடியை தாண்டி விட்டது. ஒவ்வொரு மாதமும் சுமார் 1.8 கோடி இணைப்புகள் விற்பனையாகின்றன. நாட்டில் 100க்கு 59 பேரிடம் செல்போன் உள்ளன. செல்போன் சேவை நாட்டில் தொடங்கிய காலத்தில் ஒரு அழைப்புக்கு நிமிடத்திற்கு 24 ரூபாய் கட்டணம். இப்போது 10 காசுகளுக்கு பேசிக் கொள்ளலாம்.

நாளெல்லாம் இலவசமாக பேசிக் கொள்ளும் சேவைகள் பலவும் அறிமுகமாகியுள்ளன. பலன் தரும் செல்போன்களின் பயன்பாடு, இப்போது பாதகமாகவும் மாறியுள்ளது.
செல்போனை கையில் வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் எப்போதும் யாருடனாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஏங்குகின்றனர். வருகின்ற அழைப்புகளில் எதிர்முனையில் எதிர் பாலினமாக இருந்தால் மணிக் கணக்கில் பேச ஆரம்பித்து விடுகின்றனர். அது முகம் தெரியாதவர்களாக இருந்தாலும், அவர்கள் பின்னணி என்னவாக இருந்தாலும் யாரும் கவலைப்படுவதில்லை. இப்படி பேசியே காதல் கோட்டை கட்டியவர்களும் இருக்கிறார்கள். கம்பி எண்ணியவர்களும் இருக்கிறார்கள். செல் போதையில் சிக்கி பல குடும்ப உறவுகள் சீரழிந்து இருக்கின்றன. இன்னொரு பக்கம் உடலும் கெடுகிறது. செல்போனில் இருந்து வெளியேறும் மின்காந்த கதிர்களால் உடல் நலம் பாதிப்பதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

புற்றுநோய், கண்புரை, காது கேளாமை, கருச்சிதைவு, மனநோய், மலட்டுத்தன்மை என பாதிப்புகளின் பட்டியல் நீளுகின்றன. செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. விஞ்ஞானத்தின் அரிய வளர்ச்சி செல்போன். அதை உடல், உள்ளம், உறவுகளை பாதிக்காமல் பயன்படுத்தும் பக்குவம் அவசியம்.

கோபுரங்களால் கோடி தொல்லை

செல்போன் டவரால் மனிதர் மட்டுமின்றி உயிரினங்களும், தாவரங்கள் கூட பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. செல்போன் கோபுரங்களுக்கு முதலில் பலியானது சிட்டுக்குருவிகள்தான். கோபுரங்களில் வெளியாகும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். ஓரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் செல்போன்களின் கோபுரங்கள் அமைப்பதால் ஏற்படும் பாதிப்பின் வீச்சு அதிகம் என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களும் சொல்கிறார்கள். வெளிநாடுகளில் பள்ளிகள், குழந்தை காப்பகங்கள், மருத்துவமனைகள் உள்ள இடங்களில் செல்போன் கோபுரங்கள் அமைக்க தடை உள்ளது. அதேபோல் குடியிருப்பு பகுதிகளிலும் கோபுரங்கள் அமைக்க கூடாது. குறைந்தது 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. நம் நாட்டில் எந்த விதிமுறைகளும் கிடையாது.

செல்போனில் பேச்சு; ரகசியம் போச்சு

செல்போனில் பேசினால் யாருக்கும் தெரியாது என்று சகலத்தையும் செல்போனில் கொட்டுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். நாம் பேசும் அனைத்தும் டேப் செய்யப்படும். ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் ஒவ்வொரு மாதமும் இணைப்பு பெறும் வாடிக்கையாளர் விவரங்களையும், எண்ணையும் மத்திய, மாநில உளவு துறைகள் உட்பட 7 நிறுவனங்களுக்கு தனித்தனி குறுந்தகடில் தருவார்கள். அவர்கள் சந்தேகப்படும எண்களை கவனிப்பார்கள்.

கழிவறைகளில்...

யார் கேட்டாலும் சிலர் தங்கள் மொபைல் எண்களை தந்து விடுகின்றனர். இந்த விஷயத்தில் பெண்கள் கொஞ்சம் அசட்டையாக இருக்கின்றனர். ரயில் சினேகிதர்கள் கூட செல்போன் எண்களை பெற்று விடுகின்றனர். பேச்சு வளர்ந்து பெரும்பாலும் திசை மாறி போய் விடுகிறது. தவிர்க்க முயலும்போது கோபமடைபவர்கள், அதே ரயிலின் கழிவறைகளில் அந்த செல்போன் எண்களை எழுதி வைத்து விடுகின்றனர். இதேபோல் காதலிக்க மறுத்த பெண்களின் எண்களை, பகையுள்ள குடும்பத்தின் பெண்களின் எண்களையும் எழுதி விடுகின்றனர். ரயில் கழிவறைகள்
என்றில்லை, பேருந்து நிலையம்,
மருத்துவமனை என பல இடங்களில் பொது கழிவறைகளிலும் பெண்ணின் பெயருடன் எண்ணை எழுதி வைத்து விடுகின்றனர். பாலியல் தொழில் செய்யும் பெண்களாக சித்தரித்து விடுகின்றனர். இப்படி கண்ட எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை பார்த்து பெண்கள் மனநோயாளிகள் ஆவதுதான் மிச்சம்.

காவல்துறை சொல்வதென்ன?

செல்போனில் வீடியோ கேமரா, இன்டெர்நெட் வசதி வந்த பிறகு புகார்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. Ôமுழு சுகம் வேண்டுமா? தொடர்பு கொள்ளவும்Õ என்று பெண்களின் செல்போன் எண்ணை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பி விடுவார்கள். இதேபோல் ரியல் எஸ்டேட் தரகர் ஒருவர், உரிமையாளர் எண்ணை குறிப்பிட்டு, தொடர்பு கொள்ளவும் நிலம் விற்பனைக்கு உள்ளது என்று பலருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி விட்டார். உரிமையாளர் Ôவிற்பதற்கில்லைÕ என்று பதில் சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டார். அப்புறமென்ன இந்த சம்பவங்கள் குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுத்தோம். தொடர்ந்து மிஸ்டு கால் கொடுப்பதும் குற்றம்தான் என்கிறார் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் டி.தங்கராஜ்.

வெறும் 2 நிமிடங்கள்தான்

சென்னை மருத்துவக் கல்லூரியின் காது மூக்கு தொண்டை மருத்துவப் பிரிவு முன்னாள் தலைவர் கே.பாலகுமார், Ô‘செல்போனில் நீண்ட நேரம் பேசுவதால் செவித்திறன் குறையும். கவனிக்காமல் விட்டால் காது கேட்காது. அதுமட்டுமின்றி காதில், மூளையில் கட்டிகள் ஏற்படும். இது கேன்சர் கட்டியாகவும் இருக்கலாம். சிந்தனைத் திறன் குறையும். நினைவாற்றல் குறையும். நரம்பு மண்டலம் பாதிக்கும். காதில் முதலில் வலி தோன்றுவதுதான் முதல் எச்சரிக்கை. அடுத்து கேட்கிற தன்மை குறையும். பின்னர் காதில் இரைச்சல் கேட்கும். இது இறுதியான எச்சரிக்கை. அதற்கு பிறகும் செல்போனில் பேசுவதை குறைத்து டாக்டரை அணுகாவிட்டால் பிரச்னைதான். யாராக இருந்தாலும் 2 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அவசியம் என்றால் வீட்டுக்குப் போய் நிதானமாக சாதாரண தொலைபேசியில் பேசிக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு பல மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தால் காது கேளாதவர்கள் பட்டியலில் சேர வேண்டியதுதான். செல்போனை அப்படியே காதில் வைத்தோ அல்லது புளூடூத் பயன்படுத்தி பேசுவதை விட ஹெட்போன்(ஹாண்ட்ஸ் ஃப்ரீ) பயன்படுத்தி பேசுவது ஓரளவுக்கு பாதுகாப்பானது. அதேபோல் சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும போது பேசுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்Õ’ என்றார்.

எச்சரிக்கை அவசியம்

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் டாக்டர் சுதாகர் கூறுகையில், ‘‘செல்போன் வாங்கும்போது உத்திரவாத அட்டை, ரசீதுடன் வாங்க வேண்டும். Ôஐஈஎம்ஐÕ எண்ணை குறித்து வைத்துக் கொள்வது நல்லது. காணாமல் போனால், எண்ணை செயலிழக்கச் செய்வது நல்லது. இல்லாவிட்டால் போனை எடுத்தவர்கள் தவறாக பயன்படுத்தினால், சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். தெரியாத நபர்களிடம் செல்போனை கொடுக்கவே கூடாது. செல்போனை பழுது பார்க்க தரும் போது சிம்கார்டு, மெமரி கார்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். செல்போன் குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 506(1), 507 ஆகிய பிரிவுகளின் கீழ் 2 ஆண்டுகள் வரை தண்டனை உண்டு. அபராதமும் வசூலிக்கப்படும். பாதிக்கப்படுவது பெண்ணாக இருந்தால் 509 பிரிவு கூடுதலாக சேர்க்கப்படும்Õ’ என்றார்.

செல்போனில் ‘நீலம்’

செல்போன் வந்து விட்டபிறகு ஸ்டில் கேமரா, வீடியோ கேமரா எல்லாம் கைக்குள் வந்து விட்டன. சிலர் தங்கள் உறவு காட்சிகளை கூட படம் பிடித்துக் கொள்கிறார்கள். Ôத்ரில்Õலுக்காக எடுக்கும் தம்பதிகளை விட திருட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளும் கள்ளக் காதலர்கள் அதிகம். தெரிந்தோ, தெரியாமலோ எடுக்கப்படும் படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்துக் கொள்ளவும் செய்கின்றனர். அங்கிருந்து பல நூறு பேர்களுக்கு பரவி, இன்டர்நெட் மூலம் மாநிலம், தேசம் கடந்து விடுகிறது. ஒரு சிலர் இதனை இணையதளங்களுக்கு விற்று காசாக்கி விடுகின்றனர். இந்த விஷயம் வீட்டில் தெரியும் போது பிரச்னையாகி விடுகிறது. இப்படி குடும்பங்கள் சீர்குலைவது தொடர்கதையாகி வருகிறது. அதுமட்டுமல்ல நீலப்படம் பார்க்க ஊருக்கு ஒதுக்குபுறமான திரையரங்குகளை தேடிச் செல்வார்கள். செல்போனில் பரவும் செக்ஸ் வீடியோக்களால் இந்த பிட் திரையரங்குகள் நலிந்து விட்டன.

ஆண்மைக்கும் ஆபத்தா...

பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.டி.காமராஜ், Ô‘செல்போனை இடுப்பு பெல்ட்டில் சொருகி வைத்திருப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து குழந்தை பேறு இல்லாமல் போவது குறித்து பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதேபோல் மடிக் கணினிகளை மடியில் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பயன்படுத்துவதும் இதே பிரச்னையை ஏற்படுத்துகிறது. செல்போனை வெறுமனே (பேசாத போதும்) சொருகி வைத்திருந்தாலும் இந்த பிரச்னை ஏற்படும். தொடர்ந்து 4 மணி நேரம் செல்போனில் பேசினாலும் பாதிப்புதான். செக்சில் ஆர்வத்தைஏற்படுத்தும் டெஸ்டோடிரான் என்ற ஹார்மோன்களின் எண்ணிக்கை குறைகிறது. இதனால் ஆண்மை குறைகிறது. செல்போன்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த ஆய்வு முடிவுகளும் வெளியாகவில்லை’’ என்றார்.

செல்போன் போதை

வீட்டுக்கு தெரியாமல் விவகாரங்களில் ஈடுபடுபவர்கள் ஆளுக்கு ஒரு சிம் கார்டு பயன்படுத்துகிறார்கள். வீட்டை விட்டு வெளியில் வந்ததும் வரிசையாக மிஸ்டு கால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். யார் முதலில் சிக்குகிறார்களோ அவர்களிடம் கல்லூரி, அலுவலகம், தொழிற்சாலை போய் சேரும் வரை பேசிக்கொண்டே இருப்பார்கள். மிஸ்டு கால் கிடைத்த மற்றவர்களுக்கு இணைப்பு கிடைக்காது. இப்படி 24 மணி நேரமும் செல்போன் போதையில் வீழ்ந்துக் கிடப்பவர்களுக்கு மனநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் விஜயகுமார்.

நன்றி-தினகரன்

அழுவதும் நல்லதே!

ஆஸ்திரேலிய ஓபனில் கடந்த ஆண்டு தோற்ற டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர், கண்ணீர் விட்டு அழுதார். அதே மாதிரி இந்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் வென்ற ஸ்பெயின் அணியின் கோல் கீப்பர் இகர் காசிலாஸும் மகிழ்ச்சிப் பெருக்கில் கண்ணீர் சிந்தினார். இவர்கள் பலவீனமானவர்களா? ஆண்கள் அழுவது அழகில்லையா?

பொதுவாகவே ஆண்கள் அழுவது பலவீனமாகக் கருதப்படுகிறது. ஆனால் இன்றைய நவீன யுக ஆண்கள் கண்ணீர் சிந்தக் கவலைப்படுவதில்லை.

இதுபற்றி மனோவியலாளர் தீப்தி கூறுகையில், ``அழுவது உண்மையில் உங்களை வலு வான நபராக ஆக்குகிறது. அது, மூளையில் மகிழ்ச்சி ஹார்மோன்களை விடுவிக்கிறது. ஆனால் நமது சமூகத்தில் ஆண்கள் பாரம்பரியமாகவே கண்ணீர் சிந்தக் கூடாது என்று கூறித்தான் வளர்க்கப்பட்டுள்ளனர்'' என்கிறார்.

மென்பொருள் பொறியாளரான ராகேஷ், சமீபத்தில் தான் விவாகரத்துப் பெற்றார். அவர், ``பொது இடங்களில் நான் அழுவ தில்லை. காரணம், ஒரு விஷயம் குறித்து நான் வருநதுவதை மக்கள் அறிவதை நான் விரும்புவதில்லை. ஆனால் நான் தனி யாக இருக்கும்போது என்னால் அழுகை யைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. அது தான் என்னைத் தெளிவாகச் சிந்திக்க வைக்கிறது'' என்கிறார்.

அழும் ஆண்கள் பெரும்பாலும் பெண் களைக் கவருவதில்லை. ஆனால் `அழுவது மோசம் என்பதை விட, ஆக்கபூர்வமான விஷயமே' என்கிறார் தீப்தி. அழுகையை அடக்குவது, அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஆண்களுக்கு அதிகமாக மாரடைப்பு ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது தீப்தியின் கருத்து.

``அழுகையானது உங்கள் இதயத்திலிருந்து அழுத்தத்தை விடுவிக்கிறது. நீங்கள் ஒன்றில் தடாலடியாக இறங்கும்முன் உங்களைச் சிந்திக்க வைக்கிறது'' என்று கூறுகிறார் இவர்.

ஓர் அலுவலகத்தில் சார்ட்டட் அக்கவுன்டன்டாக பணிபுரிபவர், சுரேஷ். ஒருமுறை அவர் சிறப்பாக செயல்பட்டதற்காக அலுவலகத்தில் எல்லோரும் எழுந்து நின்று கைதட்ட, வாய் விட்டு அழுதுவிட்டார்.

``அந்த நேரத்தில் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. எதிர்பாராமல் கிடைத்த அந்த மரியாதை என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டது. அப்போது எனது உணர்வுகளை மறைக்காமல் வெளிப்படுத்தியது எனக்குத் தவறாகத் தெரியவில்லை'' என்று உறுதிபடப் பேசுகிறார்.

சரியான விஷயத்துக்காக பொது இடத்தில் கண்ணீர் சிந்துவது ஏற்கத்தக்கதே. ஆனால் அழுகைக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. அது, பிறரது கவனத்தை ஈர்ப்பது. பலருக்கு காரியம் சாதித்துக்கொள்வதற்கு எளிய வழியாக கண்ணீர் சிந்துவது இருக்கிறது. ஆனால் அதை நல்ல பழக்கம் என்று கூற முடியாது.

நிரஞ்சனின் விஷயத்தை எடுத்துக்கொள்ளலாம். மார்க்கெட்டிங் துறையில் பணிபுரியும் இவர் தனது நண்பர்களுடன் ஒரு வனப் பகுதிக்குச் சுற்றுலா சென்றார். அப்போது ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கூடாரம் அமைத்துத் தங்க ஏற்பாடானது. ஆனால், `என்னால் தனியாகத் தங்க முடியாது. எனக்கு பேய், தனிமையான இடம் என்றால் பயம், என அழவே ஆரம்பித்துவிட்டார். அதை இன்றும் சொல்லிக் கிண்டல் செய்கிறார்களாம்' அவரது நண்பர்கள். அழுகையில் இம்மாதிரியான `பக்க விளைவுகளும்' இருக்கின்றன!

கடை தின்பண்டங்களை தவிருங்கள்!

சுவை மிகுந்த பலகாரங்களும், சாப்பாட்டு வகைகளும், பட்டாசுகளுமாய் கொண்டாடப்பட்டது தீபாவளி. அளவுக்கு அதிகமாக சுவீட், காரம், கொழுப்பு மிகுந்த உணவு வகைகளை உண்டு மகிழ்வதே தீபாவளியாகி விட்டது. திடீரென ஒரே ஒரு நாள், இவ்வளவு வகைகளைச் சாப்பிடும்போது வயிற்றுப் போக்கு ஏற்படுவது சகஜம். ஒவ்வாத காகிதம் சுற்றப்பட்டு இனிப்பு வகைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இது உடலுக்கு ஆபத்து என்ற பிரசாரத்துடன், எச்சரிக்கை செய்திகளை தினசரிகளும், பத்திரிகைகளும் தாங்கி நின்றன. டிஷ்யூ காகிதத்தில் பால்கோவா சுற்றப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக, "டிவி'யில் எச்சரிக்கை விடப்பட்டது. சுத்தமான நெய் என்று சொல்லி விற்கப்படும் நெய்யில் தரம் குறைந்த டால்டா அல்லது பனை எண்ணெய் சேர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் பலகாரம் சுட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஒவ்வாமைகளை நம் வயிறு ஏற்றுக் கொள்ளாது. வாந்தியும், வயிற்றுப் போக்கும் ஏற்படும். இது தொற்றால் ஏற்படுவது அல்ல. உணவு நச்சு அல்லது உணவுகளில் பயன்படுத்தப்படும் நிறமி உருவாக்கும் ஒவ்வாமையால் ஏற்படுவது. இவை தானாகவே சரியாகி விடும். எனினும், 24 மணி நேரத்தில் சரியாகவில்லை எனில், கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வயிற்றுப் போக்கு தொ டர்ந்து ஏற்பட்டால், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதை உணர்த்த, நமக்கு தாகம் எடுக்கும். உடலிலிருந்து வெளியேறும் நீர் எவ்வளவு இருக்கும் என, கண் பார்வையில் கணக்கிட முடியும் எனில் நல்லது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர் வெளியாகாமல் போவதையும் கவனிக்க வேண்டும். ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் வெளியேறுவது நல்லது. அதையும் தாண்டி சிறுநீர் வெளியேறாமல் இருந்தால், நல்லதல்ல. சிறுநீர் நிறமும், அடர்த்தியும் கவனிக்கப்பட வேண்டும்.

இந்நேரத்தில் நீராகாரமாக பருக வேண்டியவை:

* பால் கலக்காமல், சற்றே சர்க்கரை கலந்த கருப்பு டீ.
* 50 சதவீத தண்ணீருடன் காற்றூட்டப்பட்ட சோடா.
* காற்றூட்டப்படாத சாதா சோடா.
* எலக்ட்ரால் போன்ற பானங்கள். இந்த பொடியை எப்படி பயன்படுத்த வேண்டும் என, அதன் பாக்கெட் மீது அச்சடிக்கப்பட்டிருக்கும். அதை மிகச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.
வீட்டிலேயே இதை தயார் செய்து கொள்ளலாம். ஆறு டீஸ்பூன் சர்க்கரையுடன், அரை டீஸ்பூன் உப்பு கலந்து, ஒரு லிட்டர் தண்ணீரில் நன்றாகக் கரைத்துக் குடிக்கலாம்.
* நன்கு வேக வைத்த அரிசி கஞ்சியில், சிறிது உப்பு போட்டு குடிக்கலாம்.

லோமோட்டில் போன்ற வயிற்றுப்போக்கைக் குறைக்கும் மருந்துகள், மலத்தைக் கட்டி விடும். உங்கள் பிரச்னையைத் தீர்க்காது. நோயை நீளச் செய்யும். சிலர், வயிற்றுப் போக்கு நிற்கவில்லை என, இரண்டு மாத்திரைகளுக்கும் மேலாக உண்பர். இது மிகப்பெரிய தவறு. இப்படிச் செய்தால், வயிறு மப்பு தட்டி விடும். மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். எந்த நச்சால் உங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதோ, அந்த நச்சு, உடலிலிருந்து முற்றிலும் வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, இது போன்ற மாத்திரைகளைப் பயன்படுத்தாதீர்கள். 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, கர்ப்பிணிகளுக்கு, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இந்த மாத்திரைகளைக் கொடுக்கவே கூடாது. அதிக காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு, மலத்தில் ரத்தம் வருதல் ஆகியவை ஏற்பட்டு விடும்.
வயிற்றுப்போக்கு (டயரியா), கழிச்சல் (டிசென்ட்ரி) ஆகியவை ஒன்றல்ல.
கழிச்சல் ஏற்படும்போது காய்ச்சலுடன், மலத்துடன் ரத்தம், சளி ஆகியவை வெளிப்படும். இதற்கு மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு, "ஆன்ட்டிபயாடிக்' உட்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் சில வகையான, "ஆன்ட்டிபயாடிக்' கொடுக்கக் கூடாது என்பதால், பொதுவாகவே, இக்கோளாறு ஏற்படும்போது, டாக்டரிடம் காண்பிப்பது நல்லது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படாது. பால் புட்டிகள், கடைகளில் கிடைக்கும் ரெடிமேடு உணவுப் பொருட்களை வாங்கி, மீண்டும் சமைத்துக் கொடுத்தல், பால் நிறைந்த பிஸ்கட்டுகள் ஆகியவற்றால் வயிற்றுப்போக்கு ஏற்படும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அரிசி கஞ்சியோ, எலக்ட்ரால் போன்ற பானமோ கொடுக்க வேண்டும். இதையும் மீறி, அதிக அடர்த்தி மற்றும் அதிக நிறத்துடன் சிறுநீர் வெளியேறினால், டாக்டரிடம் உடனடியாகக் காண்பிக்க வேண்டும். சிலநேரங்களில் கட்டியாகவோ, கூழ் போலோ, அதிக துர்நாற்றத்துடனோ வயிற்றுப்போக்கு ஏற்படும். வயிறு உப்புசமாகி, "கரபுர'வென சப்தம் ஏற்படும். வாந்தி உணர்வுடன், வாயுவும் பிரியும். கியார்டியா என்ற கிருமியால் இது போன்று ஏற்படலாம். அமீபாவால் சிலருக்கு இது போன்ற வயிற்றுக்கோளாறு ஏற்படலாம். இது உருவாக, சில காலம் பிடிக்கும். அடி வயிற்றில் கடுமையாக வலி, மலத்தில் ரத்தம், சளி கலந்து வெளியேறுதல் ஆகியவை ஏற்படும். தொடர்ந்து பல வாரங்கள் இது போன்ற நிலை நீடிக்கும்.
இந்த இரண்டு கோளாறுகளுக்குமே, ஐந்து முதல் 10 நாட்கள் வரை, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சிகிச்சையை முழுமையாக முடிக்காவிட்டால், மீண்டும் அது தலைதூக்கும். அது எந்த காலமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
தயிர், வெந்தயம் ஆகியவற்றைச் சாப்பிட்டு, வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்துபவர்கள் உண்டு. இவை தீங்கில்லாத சிகிச்சை முறைகள். நீங்களாகவே, மருந்து கடைகளில், "ஆன்ட்டிபயாடிக்' வாங்கிச் சாப்பிடக் கூடாது. நமக்கு என்ன கோளாறு என்பதைத் தெரிந்த பிறகே, "ஆன்ட்டிபயாடிக்' சாப்பிட வேண்டும். தவறான, "ஆன்ட்டிபயாடிக்' சாப்பிட்டால், கிருமியின் உரு மாறி, எந்த மருந்துக்கும் கட்டப்படாத நிலை ஏற்படும். உபாதை ஏற்படுவதற்கு முன்னரே, "ஆன்ட்டிபயாடிக்' சாப்பிடுவதும் பலன் தராது. இது வயிற்றுப் போக்கைக் குறைக்காது. மாறாக, சாப்பிட்ட ஆன்ட்டிபயாடிக்கை எதிர்க்கும் கிருமி உருவாக வழி வகுக்கும். மேலும், எதனால் வயிற்றுப் போக்கு உருவாகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, வீட்டில் சமைத்த உணவைச் சாப்பிடுவதே சிறந்தது. கடைகளில் விற்கப்படும் இனிப்பு, பலகாரங்களைச் சாப்பிடுவதை விட, அவற்றை வீட்டில் தயாரித்துச் சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகளை நன்கு கழுவிய பின், அவற்றைப் பயன்படுத்த வேண்டும். சுகாதாரமான, பாதுகாப்பான நடவடிக்கைகள் மூலமே, வயிற்றுப் போக்கைத் தவிர்க்க முடியும். அப்படியே வந்து விட்டாலும், சரியான முறையில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.