Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com
லேப்டாப்பை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு

லேப்டாப்பை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்து குழந்தையின்மை ஏற்படும் அபாயம் உள்ளதாக குழந்தைப் பெரும் சிறப்பு நிபுணரும் பெங்களூரு உதவி கருத்தரிப்பு மையத்தின் இயக்குனருமான டாக்டர்.காமினி ராவ் தெரிவித்துள்ளார்.

18 முதல் 25 வயதுடைய ஆண்களில் 5 பேரில் ஒருவர் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லேப்டாப் உபயோகிப்பதால் அதில் இருந்து வரும் வெப்பக் கதிர் ஆண்களை தாக்கி அவர்களின் உயிரணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி குழந்தையின்மையை ஏற்படுத்துவதாகவும், லேப்டாப்பின் மேல் பாகம் தயாரிக்க பயன்படும் மூலப் பொருளில் உயிரணுக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேதிப் பொருட்கள் கலந்து உள்ளதாகவும் ராவ் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிகமாக காப்பி அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் அதில் உள்ள நச்சுப் பொருளால் உயிரணுக்கள் குறையும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நகர்ப் புறத்தில் இருக்கும் ஆண்களை விட கிராமப் புறத்தில் இருக்கும் ஆண்கள் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவால் பாதிக்கப் படாமல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்த ராவ் மாறி வரும் வாழ்க்கை முறைகளுக்கேற்ப நாமும் சில மாற்றங்களை கையாண்டால் இது போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார் அவர்.

இதன்படி முறையான உடற்பயிற்சி. சூடான நீரை பயன்படுத்தாமை, புகை மற்றும் காபி அருந்தும் பழக்கத்தை கை விடுதல், இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்தல் போன்ற பழக்கங்களை கடைப் பிடித்து வருவதன் மூலம் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
தூ‌க்க‌ம்...!

தூ‌க்க‌ம் எ‌ன்பது இரவானது‌ம் நமது உட‌ல் இளை‌ப்பாற‌க் ‌கிடை‌‌த்த ‌விஷய‌ம் எ‌ன்றுதா‌ன் பலரு‌ம் எ‌‌ண்‌ணி‌‌க் கொ‌ண்டி‌ரு‌க்‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல், தூ‌க்க‌த்‌தி‌ற்கு எ‌த்தனையோ ‌விஷய‌ங்க‌ள் உ‌ள்ளன.

தூ‌க்க‌ம் எ‌ன்பது ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு வகை‌யி‌ல் அமையு‌ம். ஒரு ‌சில‌ர் படு‌த்தது‌ம் தூ‌ங்‌கி ‌விடுவ‌ர். ‌சில‌ர் ம‌ணி 12ஐ தா‌ண்டினா‌ல் தா‌ன் தூ‌ங்கவே செ‌ல்வ‌ர். ‌சில‌ர் புர‌ண்டு புர‌ண்டு படு‌த்து தூ‌க்க‌த்துட‌ன் போராடி கடை‌சியாக தூ‌ங்குவ‌ர். தூ‌ங்குவ‌திலு‌ம் பல வகைக‌ள் உ‌ண்டு. ஆ‌ழ்‌ந்த உற‌க்க‌ம், லேசான உ‌ற‌க்க‌ம் போல பல உ‌ண்டு.

பொதுவாக கனவுக‌ள் இ‌ல்லாத தூ‌க்க‌மே ‌சிற‌ந்த தூ‌க்கமாகு‌ம். கனவுக‌ள் இ‌ல்லாம‌ல் தூ‌ங்‌கி எழு‌ந்தா‌ல்தா‌ன் உ‌ண்மை‌யி‌ல் ஆ‌ழ்‌ந்த தூ‌க்க‌த்தை தூ‌ங்‌கி‌னீ‌ர்க‌ள் எ‌ன்று அ‌ர்‌த்த‌ப்படு‌ம். கனவுக‌ள் இ‌ல்லாத தூ‌க்க‌த்தை‌க் கான சுவாச‌ம் ‌சீராக இரு‌க்க வே‌ண்டு‌ம். ‌சீரான சுவாச‌ம் இரு‌ப்‌பி‌ன் ந‌ல்ல தூ‌க்க‌ம் ஏ‌ற்படு‌ம். சுவாச‌த்‌தி‌ல் ‌சிதைவு ஏ‌ற்ப‌ட்டா‌ல் தூ‌க்க‌‌த்‌திலேயே மன‌ம் அ‌திக‌ம் வேலை செ‌ய்ய ஆர‌ம்‌பி‌த்து ‌விடு‌ம். மன‌ம் வேலை செ‌ய்வதுதா‌ன் கனவுக‌ளி‌ன் அடி‌ப்படையே.

ச‌ரி தூ‌க்க‌த்‌தி‌ல் சுவாச‌த் தடை ஏ‌ற்பட‌ எ‌ன்‌ன‌க் காரண‌ம் இரு‌க்கு‌ம். நமது உணவு முறைதா‌ன். தூக்க‌த்தை‌க் கெடு‌க்கு‌ம் பல உணவுக‌ள் உ‌ள்ளன. தூ‌க்க‌த்தை‌க் கொடு‌க்கு‌ம் உணவுகளு‌ம் உ‌ள்ளன. அவ‌ற்றை‌த் தே‌ர்வு செ‌ய்து அளவோடு உ‌ண்பதுதா‌ன் தூ‌க்க‌த்‌தி‌ற்கு‌த் தேவையான ‌சீரான சுவாச‌த்தை அ‌ளி‌க்கு‌ம்.

இர‌வி‌ல் சா‌ப்‌பிடு‌‌ம் உணவானது அளவு குறைவான உணவாகவு‌ம், கார‌மி‌ல்லாத, வாயு சே‌ர்‌க்காத உணவாகவு‌ம் இரு‌ப்பது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம்.

உட‌ல் சு‌த்தமு‌ம், ந‌ல்ல கா‌ற்றோ‌ட்டமு‌ம் கூட தூ‌க்க‌த்‌தி‌ற்கு அடி‌ப்படையாகு‌ம். உற‌‌ங்க‌ப் போகு‌ம் மு‌ன் முக‌ம், கை கா‌ல்களை சு‌த்த‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ள்வது‌ம், நா‌ம் படு‌க்கு‌ம் இட‌ம் சு‌த்தமாகவு‌ம், கா‌ற்றோ‌ட்டமாகவு‌ம் இரு‌க்கு‌ம்படியு‌ம் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

சா‌ப்‌பி‌ட்டவுட‌ன் களை‌ப்போடு செ‌ன்று படு‌க்கை‌யி‌ல் ‌விழுவது, சோ‌ம்பலையு‌ம், கெ‌ட்ட கனவுகளையு‌ம் அ‌ளி‌க்கு‌ம். பக‌ல் தூ‌க்க‌ம் ‌நி‌ச்சயமாக இரவு‌த் தூ‌க்க‌த்தை‌க் கெடு‌க்கு‌ம். சா‌ப்‌பி‌ட்டு இர‌ண்டு ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு படு‌க்க‌ச் செ‌ன்றா‌ல் ‌நி‌ச்சயமாக ந‌ல்ல தூ‌க்க‌ம் வரு‌ம்.

தூ‌க்க‌ம் உடலு‌க்கு மட‌்டும‌ல்ல, மன‌த்‌தி‌ற்கு‌ம் ஓ‌ய்வ‌ளி‌க்‌கிறது. அதே போல தூ‌ங்காத ம‌னித‌ர்க‌ளி‌ன் மனமு‌ம் சோ‌ர்வடைவதை காணலா‌ம். ச‌ரியான தூ‌க்க‌ம் இ‌ல்லையே எ‌ன்ற எ‌ண்ணமே, மன‌தி‌ற்கு‌ள் கோபமாகவு‌ம், துக்கமாகவு‌ம் மாற‌க் கூடு‌ம். இதனா‌ல் தேவைய‌ற்ற ‌பிர‌ச்‌சினைக‌ள் ஏ‌ற்படலா‌ம்.

ந‌ல்ல ‌சீரான தூ‌க்க‌ம் மனதை ஆன‌ந்தமான ‌நில‌ை‌யி‌ல் வை‌த்‌திரு‌க்க உதவு‌ம். மனமே நமது அ‌ன்றாட கா‌ரிய‌ங்களு‌க்கு உறுதுணையாக இரு‌க்கு‌ம். மன‌ம் ஆன‌ந்தமாக இரு‌ந்தா‌ல் நமது வேலையு‌ம் ‌திரு‌ப்‌தியாக இரு‌க்கு‌ம்.

தூ‌க்க‌ம் வராத ‌நிலை‌யி‌ல் ‌புர‌ண்டு புர‌ண்டு படு‌ப்பதை ‌விட, உ‌ங்களு‌க்கு‌ப் ‌பிடி‌த்த ஏதேனு‌ம் ஒ‌ன்றை செ‌ய்து பாரு‌ங்க‌ள். ‌‌மன‌ம் உ‌ற்சாக‌ம் அடைவதா‌ல் வராத தூ‌க்கமு‌ம் ‌விரை‌வி‌ல் வ‌ந்து சேரு‌ம். ‌பிடி‌த்த வேலை எ‌ன்றா‌ல் பா‌ட்டு கே‌ட்பது, பு‌த்தக‌ம் படி‌ப்பது போ‌ன்றவை. தொலை‌க்கா‌ட்‌சி பா‌ர்‌ப்பதா‌ல் பலரது தூ‌க்க‌ம் பா‌தி‌க்க‌ப்படு‌கிறது.

தூ‌க்க‌ம் கெ‌ட்டு எ‌ந்த‌ப் ப‌ணியை செ‌ய்தாலு‌ம் அது வெ‌ற்‌றிகரமாக முடியாது. எனவே, தூ‌க்க‌த்‌தி‌ற்கு‌த் தேவையான ‌விஷய‌ங்களை நா‌ம் ச‌ரியான முறை‌யி‌ல் ‌பி‌ன்ப‌ற்ற வே‌ண்டு‌ம்.

நன்றி:வெப்துனியா

தினமும் தேவை குரோமியம்..!

இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம். 1999இல் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள்.

வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே தான் வந்துள்ளது. இதற்கு உண்மையான காரணம், நன்கு சுத்திகரிக்கப்பட்ட (ரீஃபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவது தானாம். இதில் குரோமியம் உப்பு குறைவாக இருப்பதும் ஒரு காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருட்களிலும் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலை உணவில் சேருங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம்ஆகிய உணவுகளையும் சாப்பிடலாம்.

சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கேளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.

விருந்தின்பேது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.

பல நோய்களுக்கு இந்தத் தாது உப்புக்குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றையாவது அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிந்தனை துளிகள்...

Join Only-for-tamil
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!

Join Only-for-tamil

சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்,
தந்தத்தை நம்பி யானைஇருக்கலாம்,
சொந்தத்தை நம்பி நீ இருக்காதே,
பந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே.

Join Only-for-tamil
ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பவன் யோகி
ஒரு நாளைக்கு இரு வேளை உண்பவன் போகி (போஜன பிரியன்)
ஒரு நாளைக்கு மூவேளை உண்பவன் ரோகி (நோயாளி)
ஒரு நாளைக்கு நாவேளை உண்பவன் துரோகி

Join Only-for-tamil

வள்ளலுக்கு பொன் துரும்பு.
சூரனுக்கு சேர்ந்த மரணம் துரும்பு.
அறிவோர்க்கு பெண் துரும்பு.
துறவோர்க்கு வேந்தன் துரும்பு

Join Only-for-tamil

எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.


Join Only-for-tamil
ஒரே குறிக்கோள்
எல்லையற்ற ஊக்கம்
தளர்வில்லாத நெஞ்சுறுதி
சளைக்காத உழைப்பு
நேர்மையான பாதை -வெற்றி
கிடைக்காமலா போய்விடும்?

Join Only-for-tamil

”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”
-பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ்.
இவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர் “என் நண்பனின் புத்தகம்”.

Join Only-for-tamil

ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்ய தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது.
சரித்திரம் இலக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீரியமிழந்தவன் என்றும்
குத்திக்காட்டும்.
ஏதாவது செய்.


Join Only-for-tamil

உலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்சகாலம்.
ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல.
அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுக் கிட்டுப் போக்கனுமா?
அடிச்சு யாரைத் திருத்த முடியும்?
-முள்முடியில் தி.ஜானகிராமன்

Join Only-for-tamil
நேற்றைய பொழுதும் நிஜமில்லை
நாளைய பொழுதும் நிச்சயமில்லை
இன்றைக்கு மட்டுமே நம் கையில்

Join Only-for-tamil

”காலம்....!! விலைக்குக் கிட்டாது!
விரும்பியும் திரும்பாது!

Join Only-for-tamil
வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்

Join Only-for-tamil

அடம் பிடிக்கும் பைல்களை அழிக்க....

சில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும்.
Cannot delete file: Access is denied
There has been a sharing violation.
The source or destination file may be in use.
The file is in use by another program or user.
Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.
பைலை அணுக இயலவில்லை. இந்த பைலுக்கு உங்களுக்கு வழி இல்லை. பைல் பயன்பாட்டில் உள்ளது. இன்னொருவர் இதே பைலை பயன்படுத்திக் கொண்டுள்ளார். இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டுள்ளது. பைல் அழிக்கப்படாமல் இருக்க, டிஸ்க் பாதுகாக்கப்பட்டுள்ளது –– என்று பலவகையில் செய்திகள் கிடைக்கலாம். அழிக்க மறுக்கையில் மட்டுமின்றி, பைலுக்கு வேறு பெயர் இட முயற்சிக்கையில், ஓரிடத்திலிருந்து நகர்த்த முயற்சிக்கையிலும் இது போன்ற செய்திகள் கிடைக்கும்.
இவற்றை எல்லாம் மீறி நாம் பைலை அழிக்க எண்ணினாலும், இந்த செய்தி எதனால் வருகிறது என்று கண்டறிவதில் நேரம் செலவழியும். இதற்குத் தீர்வாக நமக்குக் கிடைத்திருப்பது அன்லாக்கர் (Unlocker) என்னும் புரோகிராம். இதனை http://ccollomb. free.fr/unlocker/#download என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.
இந்த பைலை இலவசமாக இணைய தளத்திலிருந்து இறக்கி, இன்ஸ்டால் செய்துவிட்டால், விண்டோஸ் இது போன்ற செய்தி தருகையில், அன்லாக்கர் புரோகிராமை, அந்த பைலின் பெயர் அல்லது போல்டரின் பெயரில் ரைட் கிளிக் செய்து இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். அப்போது பைலை அல்லது போல்டரை அழிக்க விடாமல் தடுக்கும் லாக்கர்கள் பட்டியலிடப்படும். மெனுவில் Unlock என்பதில் கிளிக் செய்தால், அனைத்து லாக்கர்களும் விலக்கிக் கொள்ளப்பட்டு, பைல் அழிக்கப்படும். அல்லது நீங்கள் விரும்பும் வேலையை மேற்கொள்ள வழி கிடைக்கும்.
அன்லாக்கர் போல இணையத்தில், அடம் பிடிக்கும் பைல்களை அழிக்கப் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. ஆனால் மற்றவற்றில் கிடைக்காத பல வசதிகளை அன்லாக்கர் கொண்டுள்ளது.
அவற்றைப் பயன்படுத்திப் பார்க்கையில் இதனை உணரலாம். அன்லாக்கர் தரும் அனைத்து வசதிகளையும் தரும் புரோகிராம்கள் எதுவும் இந்த புரோகிராம்களில் இல்லை. ஏதேனும் ஒன்றிரண்டு வசதி குறைவாகவே உள்ளது. மற்ற புரோகிராம்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
1. ப்ராசஸ் எக்ஸ்புளோரர் (Process Explorer): இதனைப் பெற http://www.sysinternals. com/ntw2k/freeware/p rocexp.shtml என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
2.பைல் அசாசின் (File Assassin): தளம் – http://www.malwareb ytes.org/fileassassin.php
3.ஹூ லாக் மி (Who Lock Me) -: தளம் http://www.dr-hoiby.com/WhoLockMe/ind ex.php

வேர்ட் டிப்ஸ்-ஹைலைட்டிங் கலர்:

அச்சில் உள்ள ஆவணங் களைப் பயன்படுத்து கையில், முக்கியமான சில சொற்களை, ஹைலைட்டர் என்னும் பேனாவினால், வண்ணத்தில், சொற்களின் எழுத்துக்கள் தெரியும் வகையில் அமைப்போம். வேர்ட் தொகுப்பிலும் இதே போல் அமைக் கலாம். பல்வேறு வண்ணங்களில், சொற்களை குழுக்களாகப் பிரிக்கும் வகையில் அமைக்கலாம். தேவைப்படும்போது வண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம்.
இதற்குப் பயன்படும் டூலின் பெயர் ஹைலைட் டூல் (Highlight Tool). முதலில் வேர்ட் தொகுப்பில், மாறா நிலையில் இது மஞ்சள் வண்ணமாக இருக்கும். கலர் பிரிண்டரில் அச்சிட இது நன்றாக இருக்கும் என்பதால், இந்த வண்ணம் தரப்பட்டுள்ளது. இதனை மாற்ற விரும்பினாலும் மாற்றிக் கொள்ளலாம். மெனு பாரில் உள்ள ஐகான்களிடையே என்ற எழுத்துக்களுடன், ஹைலைட்டர் பேனாவுடன் ஒரு ஐகான் தென்படும். இதன் அருகில் கர்சரைக் கொண்டு சென்று, கீழாக உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால், எந்த வண்ணம் வேண்டுமோ, அந்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
டாகுமெண்ட்டில் குரல் வழிகாட்டி:
வேர்டில் டாகுமெண்ட் அமைக்கையில், வழிகாட்டும் வகையில், உங்கள் பேச்சு அங்கே இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? அவ்வாறு அமைத்திட, வேர்ட் வழி தருகிறது. பொதுவாக, ஆவணங்களில், ஆங்காங்கே குறிப்புகளைத் தனியாக அமைக்க, வேறு எழுத்து வகையில், அடைப்புக் குறிகளுக்குள் அவற்றை அமைப்போம். இங்கே நம் குரல் ஒலியிலேயே அவற்றை அமைக்கலாம். இதனை ஏற்படுத்த, உங்கள் கம்ப்யூட்டரில் மைக் இணைக்கப்பட்டு, இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதனை எப்படி அமைப்பது என்று இங்கு பார்க்கலாம்.
1. எங்கு இந்த ஒலி வழிகாட்டியினை அமைக்க வேண்டுமோ, அங்கு கர்சரைக் கொண்டு செல்லவும்.
2. Insert மெனுவில் இருந்து Object என்பதனைத் தேர்ந் தெடுக்கவும். இப்போது உங்களுக்கு ஆப்ஜெக்ட் டயலாக் பாக்ஸ் (Object dialog box) கிடைக்கும்.
3. இந்த விண்டோவில் Create New என்ற டேப் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
4. ஆப்ஜெக்ட் டைப் பட்டியலில், ஒலிக்கான ஐட்டம் ஒன்று கிடைக்கும். இது Sound அல்லது Wave Sound என இருக்கலாம். இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Display as Icon என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
5. பின்னர் ஓகே கிளிக் செய்திடவும்.
6. இனி,சவுண்ட் ரெகார்டர் என்னும் விண்டோஸ் துணை சாதன விண்டோ கிடைக்கும்.
இந்த விண்டோ, சவுண்ட் ஆப்ஜெக்ட் இன் (Sound Object in) என்ற பெயருடன் பைல் பெயரைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். இந்த சவுண்ட் ரெகார்டரைப் பயன்படுத்தி, உங்கள் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும், மைக் மூலம், நீங்கள் என்ன கூறவேண்டுமோ, அதனைக் கூறி முடிக்கவும்.சவுண்ட் ரெகார்டர் விண்டோவினைப் பின் மூடவும்.
அடுத்து உங்கள் டாகுமெண்ட்டை, அப்டேட் செய்திடவா என்று ஒரு ஆப்ஷன் கேட்கப்படும். இதற்கு Yes என்று கிளிக் செய்திடவும். உங்கள் டாகுமெண்ட்டில், எந்த இடத்தில் இந்த சவுண்ட் பைல் செருகப்பட்டுள்ளதோ, அந்த இடத்தில், ஸ்பீக்கர் ஐகான் ஒன்று காட்டப்படும்.
ஆவணத்தைப் படிப்பவர்கள், இந்த ஐகானில் இருமுறை கிளிக் செய்தால், உடன் சவுண்ட் பைல் இயக்கப்படும். கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்பீக்கரில் இது ஒலிக்கும். இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் இயக்கிக் கேட்கலாம்.

இதயத் துடிப்புக்கும், நாடித் துடிப்புக்கும் என்ன தொடர்பு?

'இதயத் துடிப்பு' என்பது இதய இயங்கும்போது ஏற்படுவது. அப்படி இதயம் துடிக்கும்போது பெருந்தமனியல் ரத்த ஓட்டம் ஏற்பட்டு ரத்தக் குழாய்கள் விரிவடையும். இதனால், ஏற்படுவதே நாடித் துடிப்பு. ஆக, இதயத் துடிப்பு எத்தனை முறை ஏற்படுகிறதோ அத்தனை முறை நாடித் துடிப்பும் ஏற்படும்.

இதயத் துடிப்பு எப்போது அதிகமாகும்?
இதயத் துடிப்பு பல்வேறு காரணங்களால் அதிகரிக்கக்கூடும். ஆனால், உடலியல் காரணங்களால் ஏற்படும் அதிகப்படியான இதயத் துடிப்பு, தானாகவே மீண்டும் பழைய நிலையை அடையும். ஆனால், நோய்கள் கரணமாக இதயத் துடிப்பு அதிகரித்தால், அந்தந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளித்தால்தான் இதயத் துடிப்பு சீராகும்.
உடற்பயிற்சி செய்யுப்போதும், கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கும், கோபம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும்போது, உடலில் வெப்பநிலை அதிகரிக்கும்போதும் இதயத் துடிப்பு அதிகமாகும். பிறகு தானாகக் குறைந்துவிடும்.

இதயத் துடிப்பு எப்போது குறையும்?
தூங்கும்போதும், நீண்ட நேரம் படுத்து ஓய்வெடுக்கும்போதும் இதயத் துடிப்பு பொதுவாகக் குறைந்து காணப்படும்.
ஒரு சராசரி மனிதனுக்கு இதயத் துடிப்பு என்பது நிமிடத்துக்கு 72 முறை. சில சமயங்களில், சிலருக்கு இது 60 முதல் 90&க்கும் அதிகமான அளவில் இருக்கும். அப்படி 90&க்கும் மேல் இருந்தால் அதை 'மிகை இதயத் துடிப்பு' என்றும், 60&க்குக் குறைவாக இருந்தால் 'குறை இதயத் துடிப்பு' என்றும் சொல்வார்கள்.
உடல் அமைப்பையும், எடையையும் பொறுத்து இதயத் துடிப்பு என்பது ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும். டென்னிஸ் போட்டியில் விம்பிள்டன் கோப்பை ஐந்து முறை வென்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஜான் போர்க்குக்கு சாதாரணமாகவே இதயம் நிமிடத்துக்கு 38 முறைதான் துடிக்குமாம்.
மனிதன் மட்டுமல்ல விலங்களுக்கும் இது பொருந்தும். யானைக்கு ஒரு நிமிடத்துக்கு இதயம் 25 முறைதான் துடிக்கும். அதுவே, கானாரி என்ற பறவைக்கும் இதயம் ஒரு நிமிடத்துக்கு 1000 முறை துடிக்குமாம்.

மூளைக்காய்ச்சல்

வைரஸ் கிருமிகளால் மூளையும், நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்டு செயல் இழந்து போய்விடுகின்றன. இதுதான் மூளைக் காய்ச்சல் எனப்படுகிறது. இதனால், உயிருக்கே ஆபத்து நேரலாம்.நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சரியான சிகிச்சை அளித்தால் பாதிப்பில் இருந்து மீளலாம். இந்த மூளைக்காய்ச்சல் நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்குத்தான் ஏற்படுகிறது. மூளைக்காய்ச்சல் நோயால் கை கால்கள் செயல் இழந்துபோதல், வலிப்பு, கண் பாதிப்பு, காது கேளாமே போன்ற நிரந்தரப் பாதிப்புகள் ஏற்படலாம்.மூளைக் காய்ச்சல் நோய் ஒருவருக்கு உடனடியாகவும் வரலாம். மெதுவாகவும் வரலாம்.

மூளையைப் பாதிக்கும் வைரஸ்கள்:
தாவாட்டி அம்மை, மணல்வாரி அம்மை, ரூபெல்லா, சைட்டோ மெகாலோ வைரஸ், எப்ஸ்டீன் வைரஸ், பாக்ஸ் வைரஸ், ஈக்குன் வைரஸ், ரேபிஸ் வைரஸ், டெங்கு வைரஸ் போன்றவை மூளையைப் பாதிக்கும் வைரஸ்கள்.நோயின் தீவிரத்தை தீர்மானிப்பவை.நோய்க் கிருமிகளின் வீரியம், நோயாளியின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புத் திறன், மூளையில் உள்ள நீரின் அழுத்தம் ஆகியவைதான் மூளைக்காய்ச்சல் நோயின் தீவிரத்தை தீர்மானிக்கின்றன.

வகைகள்:
மூளைக்காய்ச்சல் மூன்று வகைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
1. அறிகுறிகள் இல்லாமலும் நோயின் தாக்கம் குறைவாகவும் இருத்தல்.
2. மூளையின் பாதுகாப்பான் ஜவ்வைத் தாக்குவது.
3. மூளையில் பாதுகாப்பான ஜவ்வையும், மூளையையும் மிகத் தீவிரமாகத் தாக்கி நரம்பு மண்டலத்தை செயல் இழக்க வைப்பது.

அறிகுறிகள்:
1. அதிகமான காய்ச்சல்
2. தலைவலி
3. வாந்தி
4. மூளை நிலைகுலைதல்
5. நினைவிழத்தல்
6. வலிப்பு
7. இதயம் மற்றும் சுவாச உறுப்புகள் செயலிழத்தல்
8. அதிக ஆழ்ந்த மூச்சு
9. கண் தசை நார்கள் செயல் இழப்பு
10. கை, கால்கள் முடங்கிப் போதல்

சிகிச்சை:
மேலே சொன்ன அறிகுறிகள் இருந்தாலோ, குழந்தை திடீரென்று நினைவிழந்தாலோ, வலிப்பு வந்தாலோ உடனே குழந்தைகள் நல மருத்துவரிடம் குழந்தையைக் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்பாட்டால், மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தர வேண்டும்.
முக முக்கியமான மூன்று விஷயங்களுக்கான குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவேண்டியத மிக மிக அவசியம்.
* குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவது.
* குழந்தையின் மூன்று பாதிக்கப்படுவதைத் தடுப்பது.
* நோய்க்குக் காரணமான கிருமிகளை அழிப்பது.

மதுப்பழக்கத்துக்கு காரணம் மரபணு!

ஒருவருடைய தொடர் மதுப்பழக்கத்துக்கு மரபணுவும் காரணம் என்கிறது மருத்துவ அறிவியல். ஏனெனில் மது செரிமானம் ஆவதற்கு உதவும் நொதிப் பொருளில் அடங்கியுள்ளது மரபணு மர்மம்! மரபணுக்கள்தான் உடலின் தோற்றத்தையும், இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் உன்னத சக்தியாக உள்ளன. உடல் என்பது மரபணுக்களால் உருவாக்கப்படும் ஒரு நிரந்தரமற்ற மாயத் தோற்றம். இன்று நமது உடலில் வாழும் நகல் மரபணுக்கள், 600 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 20 தலைமுறைகளுக்கு முன்பு 10 லட்சத்து 48 ஆயிரத்த்டு 576 முன்னோர்களின் உடலில் வாழ்ந்திருக்கின்றன!

மதுவுக்கு அடிமையாகும் நிலை, மரபணுவால் தீர்மானிக்கப்படும் ஒரு மரபியல் நோயாகும். மதுவை சாப்பிட்ட பிறகு, அது செரிமானமாவதற்கு ஆல்கஹால் டிகைடிரோஜெனேஸ் எனும் நொதிப் பொருள் தேவை. இந்த நொதிப் பொருளை உருவாக்கும் மரபணுக்களில் இரண்டு வகைகள் உள்ளன. நமது நாட்டில் 60 சதவீதம் மனிதர்களுக்கு குடிப்பழக்கத்துக்கு அடிமையாக வைக்கும் மோசமான மரபணு வகை இருக்கிறது. ஆனால் ஜப்பான், கொரியா, சீனா போன்ற மங்கோலிய இனத்தவர்கள் வாழும் நாடுகளில் மதுவுக்கு அடிமையாவதைத் தடுக்கும் நல்ல வகை மரபணு பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. குழந்தைப் பருவத்திலேயே இத்தகைய தீய மரபணு இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை மதுவை தொடாமலேயே இருக்கும்படி எச்சரிக்கை செய்தால் மதுவுக்கு அடிமையாவதை தடுத்து விடலாம்.

இன்டர்நெட்டுக்கு இனி மொபைல் மட்டுமே


வரும் ஆண்டுகளில் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாடுகள் எப்படி மேற்கொள்ளப்படும் என ஆய்வு செய்திடும் அமைப்புகள், 2014 ஆம் ஆண்டு வாக்கில், இன்டர்நெட் பயன்பாட்டில் பெரிய அளவில் மாற்றம் வரும் என அறிவித்துள்ளனர். டெஸ்க்டாப் வழியாக இன்டர்நெட் இணைப்பு பெற்று வரும் பழக்கம் மறைந்து, அனைவரும் மொபைல் போன் வழியாகவே இன்டர்நெட் தேடலை மேற்கொள்வார்கள். இது ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மிக வேகமாக உயரும். ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகமாகும். தற்போது 16 கோடி ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இது உலக அளவில் அடுத்த ஆண்டுகளில் 90 கோடியாக உயரும். ஆனால், இது வெளியே பரவலாகத் தெரியும் அளவிற்கு இருக்காது. ஏனென்றால், உலகின் பல நாடுகளில், ஸ்மார்ட் போன் சாதாரண மக்களின் எட்டாக் கனியாகவே உள்ளது. பயன்பாட்டில் உள்ள மொபைல் போன்களில், பாதிக்கும் குறைவாகவே ஸ்மார்ட் போன் பயன்பாடு இருக்கும். கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை, டெஸ்க்டாப் முழுக்க மறையத் தொடங்கும். டேப்ளட் பிசிக்கள் இதன் இடத்தைப் பிடிக்கும். பெர்சனல் கம்ப்யூட்டர் பொதுமக்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் அதன் இடத்தை இழக்கும். இணைய இணைப்புக்கான நெட்வொர்க்குகளில் ஏற்படும் டிஜிட்டல் போக்கு வரத்து சிக்கல் இன்னும் அதிகமாகும். இன்னும் இரண்டு அல்லது நான்கு ஆண்டுகளில் வர இருக்கும் 4ஜி தொழில் நுட்பமும் இதனை மாற்ற முடியாது. ஏனென்றால், 2020 ஆம் ஆண்டு வாக்கில் 5000 கோடி மொபைல் இணைப்புகளை டிஜிட்டல் உலகம் சமாளிக்க வேண்டியதிருக்கும்.

ஷார்ட் கட் கீ தொகுப்புகள்

இணையத்தில் பல தளங்களில் இந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் தளத்தில் இவற்றை வெளியிட்டுள்ளது. பல வலைமனைகளிலும் இவை இடம் பெற்றுள்ளன. ஏதேனும் ஒரு தேடுதல் சாதனம் மூலம் ஷார்ட்கட் கீ தொகுப்புகளைத் தேடினால், இந்த தளங்களின் முகவரி கிடைக்கும். இருப்பினும் அண்மையில் நான் கண்ட ஒரு தளம் இந்த வகையில் குறிப்பிடத்தக்கதாய் உள்ளது.
அதன் முகவரி: http://www. shortcutworld.com
இந்த தளத்தில் நுழைந்தவுடன், உலகின் மிகப் பெரிய ஷார்ட்கட் கீ தொகுப்புகளின் தகவல் தளம் என்ற விளக்கத்துடன் நமக்கு இந்த தளம் கிடைக்கிறது. இதில் பயர்பாக்ஸ், குரோம், வேர்ட் 2010, எக்ஸெல், போட்டோஷாப், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஜிமெயில், ஒன் நோட் 2010, உபுண்டு டெஸ்க்டாப், வி.எல்.சி. மீடியா பிளேயர், விண்டோஸ் மீடியா பிளேயர் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பு களுக்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகள் கிடைக்கின்றன. இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் இந்த பிரிவுகள் காட்டப் படுகின்றன. இவற்றில் கிளிக் செய்து, சம்பந்தப் பட்ட தளங்களைப் பெற்று, தகவல்களைப் பெறலாம்.

மாரடைப்பு வந்த பின் பாதுகாத்து கொள்வது எப்படி?

ஒருவருக்கு மாரடைப்பின் அறிகுறிகள் தென்பட துவங்கியதும் எவ்வளவு விரைவாக மருத்துவ சிகிச்சை பெறுகிறோமோ, அந்தள விற்கு, இருதய தசையின் செய லிழப்பை தவிர்க்கவோ அல்லது பாதிக்கப்பட்ட இருதய தசையின் அளவை குறைக்கவோ முடியும்.
இதனால் பின்னாளில் வரும் இருதய பலவீனம், இருதயத்தை சுற்றியுள்ள மின்வலைகளின் செயல் பாடுகளில் ஏற்படும் திடீர் குறை பாடுகள் (அதிவேகமாக அல்லது குறைவாக இருதயம் துடிப்பது) போன்றவற்றால் நேரும் வேண் டாத, விபரீத விளைவுகளை தவிர்க் கலாம். குறிப்பாக மாரடைப்பின் அறிகுறிகள் தென்பட துவங்கிய பின், ஒரு மணி நேரம் மிக முக்கியமானது.
ஏனெனில், அந்த ஒரு மணி நேரத்தில் தான் 80 சதவீத மரணங் கள் நிகழ்கின்றன. மாரடைப்பு என சந்தேகம் வந்தவுடன், காலம் தாழ்த் தாமல் விரைவாக பெறப் படும் முதலுதவி சிகிச்சை முறையால் பல பக்க விளைவுகளை தவிர்க்கலாம். துரதிர்ஷ்டவசமாக நம்மில் பலர் மாரடைப்பின் பலவித அறிகுறி களை அறிந்திராததாலோ, அஜீரண கோளாறு என்று நினைத்தோ, நமக்கெல்லாம் மாரடைப்பு வராது என்று நம்பியோ, முக்கியமான முதல் ஓரிரு மணி நேரத்தை வீணாக்கி விடுகிறோம்.
வணிக உலகில், "நேரம் தான் பணம்' என்பர். அதைப் போல மாரடைப்பை பொறுத்தவரையில், "நேரம் தான் உயிர்!' எனவே, மாரடைப்பின் அறிகுறி என சந்தேகித்ததும், காலத்தை சிறிதும் வீணாக்காமல், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று, பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியமானது.
மாரடைப்புக்கான சிகிச்சை முறை: மாரடைப்பு என சந்தேகித்ததும் மருத்துவரால் செய்யப்படும் முதலுதவி, நோயாளிக்கு ஆக்சிஜன் கொடுப்பது, ஆஸ்பிரின் மாத்திரை தருவது, நாக்கின் அடியில் வைக்கப்படும் மாத்திரை தருவது. நெஞ்சு வலியும், மனப்பதட்டமும் குறைய மருந்துகள்.
இருதய துடிப்பு அதிவேக மாகவோ அல்லது மிகவும் குறை வாகவோ இருக்கும் போது செய்யப் படும் உயிர்காக்கும் சிகிச்சை முறை.
இத்தகைய முதலுதவி மூலம் மட்டுமே மாரடைப்பால் ஏற்படும் வலியை குறைக்கலாம். மாரடைப்பின் தாக்கத்தையும், தீவிரத்தையும் கட்டுப் படுத்தலாம். உரிய நேரத்தில் முதலுதவி பெறுவதால், மாரடைப் பால் நேரும் திடீர் மரணங்களை தவிர்க்கலாம்.
மாரடைப்பு உறுதியான பின், செய்யப்படும் சிகிச்சை முறைகள்:
1) மருந்துகள் மூலம் சிகிச்சை 2) செயல்முறை மூலம் சிகிச்சை அளித்தல்.
மருந்து மூலம் சிகிச்சை: இதில் பலவகை மருந்துகள் சிகிச்சை முறையில் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் முக்கியமானவை ரத்தக் கட்டியை கரைக்கும் மருந்து.
* அடைபட்ட இருதய ரத்தக் குழாயில் உள்ள ரத்தக்கட்டியை கரைத்து, மீண்டும் பாதித்த பகுதிக்கு ரத்த ஓட்டத்தைக் கூடிய விரைவில் சரி செய்யும் பொருட்டு, உடலின் ரத்தநாளத்தின் வழியே இம்மருந்து செலுத்தப்படுகிறது.
* இத்தகைய மருந்து, மாரடைப்பு துவங்கிய இரண்டு முதல் ஆறு மணி நேரத்திற்குள் செலுத்தப்பட்டால் மிகுந்த பலனளிக்கக் கூடியதாக இருக்கும்.
* ஆனால், சூழலுக்கு ஏற்ப இருதய வலி துவங்கி 12 முதல் 24 மணி நேரம் வரை கூட சிலருக்கு இம்மருந்து செலுத்தப்படலாம்.
* அத்துடன் இருதயத் தசை களை, மாரடைப்பு ஏற்படுகிற அந்த சமயத்திலும், பிற்காலத்திலும் பாது காப்பதற்காக ஒரு சில முக்கியமான மாத்திரைகளும் தரப்படும்.
* அவற்றுள் சிலவற்றை நீண்ட வருடங்கள்... ஏன், வாழ்நாள் வரை கூட உட்கொள்ள வேண்டி யிருக்கும். செயல்முறை (Procedure) சிகிச்சை குறித்து அடுத்த கட்டுரையில் காணலாம்.
- டாக்டர் எஸ்.கே.பி.கருப்பையா,இருதய மருத்துவ நிபுணர், மதுரை

மனிதத் தூண்கள்!-எலும்புகள்

கட்டிடத்துக்கு இரும்புக் கம்பிகளைப் போல நமது உடம்புக்கு அடிப்படை ஆதாரமாகத் திகழ்பவை எலும்புகள். நமது எலும்புகள் வலுவானவைதான். ஆனால் அவையும் உடையவும், வளையவும், சிதையவும் கூடும். சத்தான உணவு, கவனம் மூலம் எலும்புகளைக் காக்கலாம். உணவில் போதுமான அளவு கால்சியச் சத்து, நல்ல உடற்பயிற்சி, ஆரோக்கியமான பழக்கங்கள் ஆகியவை எலும்புகளை உங்கள் ஆயுளுக்கும் அசைக்க முடியாத உறுதியுடன் திகழ வைக்கும்.

வகைகள்

தட்டை எலும்புகள்- மண்டையோட்டின் தட்டுகள், முதுகுத்தண்டு எலும்பு

நீண்ட எலும்புகள்- தொடை எலும்புகள், கை எலும்புகள்

குறுகிய எலும்புகள்- மணிக்கட்டு, கணுக்கால் பகுதி எலும்புகள்

ஒழுங்கற்ற எலும்புகள்- முதுகுத்தண்டுப் பகுதி எலும்புகள்

உருண்ட எலும்புகள்- கை, முழங்கால், பாதங்களில் உள்ள `பாட்டெல்லா' மற்றும் சிறு எலும்புகள்

எலும்புகளின் பணிகள்

முழு உடம்புக்கும் தோற்றம், தசை இயக்கத்துக்கு ஆதரவு.

முக்கியமான உறுப்புகளுக்கும், மென்மையான திசுக்களுக்கும் பாதுகாப்பு. கால்சியம், பிற தாதுக்களைச் சேமிப்பது.

எலும்பு மஜ்ஜையில் ரத்த செல்களின் உற்பத்தி.

காதில் உள்ள மாலியஸ், இன்கஸ், ஸ்டேப்ஸ் எலும்புகள், ஒலியைக் கடத்துகின்றன.

பிறப்புக் குறைபாடுகள்

`ஆஸ்டியோஜெனிசிஸ் இம்பெர்பக்டா'- அசாதாரணமான விதத்தில் எலும்புகள் உடைவது. குணப் படுத்த முடியாது. சிகிச்சை முயற்சிகளில் அறுவைச் சிகிச்சையும், `பிசிக்கல் தெரபி'யும் அடங்கும்.

`கான்ஜெனிட்டல் ஆம்புட்டேஷன்'- கை, கால் விரல்களில் ஒன்று இல்லாமல் இருப்பது. 2000 குழந்தைகளில் ஒன்றுக்கு இம்மாதிரியான பாதிப்பு ஏற்படலாம்.

உடையும் எலும்புகள்

`ஆஸ்டியோபோரோசிஸ்' என்பது எலும்புச் சிதைவு நோயாகும். ஒரு எலும்பு முறிவு ஏற்படும்வரை இது தெரியாது என்பதால், அமைதி நோய் எனப்படுகிறது. இந்நோய் ஏற்பட்டால், எலும்பின் வெளிப்பூச்சு மெல்லியதாகும், அடர்த்தியான தேன்கூடு போன்ற எலும்புத் திசுக்களில் பெரிய துளைகள் உண்டாகும். கால்சிய இழப்பால் ஏற்படும இந்நோய், ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக ஈஸ்ட்ரோஜென் குறைவு ஏற்படும் பெண்களை இது தாக்குகிறது. காரணம், கால்சியத்தைக் கிரகிப்பதற்கு உதவுவது ஈஸ்ட்ரோஜென்தான். இந்நோயைக் குணப்படுத்த வழியில்லை. கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் `டி' நிறைந்த உணவு, போதுமான அளவு உடற்பயிற்சி, புகை, மதுபானம் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படாமல் தடுக்கும்.

சூரியக் குளியலின் நன்மை

கால்சியத்தைக் கிரகிப்பதற்கு வைட்டமின் `டி' உதவுகிறது. இந்த ஒரு வைட்டமினைத்தான் உணவால் மட்டுமே அளிக்க முடியாது. சூரியனிலிருந்து நேரடியாக சருமத்தால் வைட்டமின் `டி'யை கிரகித்துக்கொள்ள முடியும். அதனால், எப்போதும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்காதீர்கள்.

எலும்புகளைக் குணமாக்குவது

தடுப்பு, ஆதார அமைப்பு- முறிந்த எலும்பைச் சுற்றி நிலையான பொருட்களை இணைப்பது. அசைவைத் தடுப்பது.

மட்டை- முறிந்த எலும்பைச் சுற்றி உறுதியான பொருளை வைத்துக் கட்டுவது. தோலைப் பாதுகாப்பதற்காக தோலையடுத்து மென்மையான பொருள் வைக்கப்பட வேண்டும்.

எடையை இணைப்பது- முறிந்த எலும்புப் பகுதியுடன் எடையை இணைத்துத் தொங்கவிடுவது. அறுவைச்சிகிச்சை- உடைந்த எலும்பைச் சரிசெய்ய தகடு அல்லது கம்பியைப் பொருத்துவது. சிக்கலான எலும்பு முறிவுகளில் இது மேற்கொள்ளப்படுகிறது.

எலும்பின் தாதுப்பொருள் அடர்த்தி

எலும்பின் ஒரு சதுர சென்டிமீட்டர் தாதுக்களின் அளவு, எலும்பின் தாதுப்பொருள் அடர்த்தி எனப்படுகிறது. எலும்பு வியாதியை இது காட்டும். எலும்பு தாதுப்பொருள் அடர்த்தியை அறிய, `இரட்டைச் சக்தி எக்ஸ்ரே அப்சார்ப்டியோமெட்ரி' (டி.எக்ஸ்.ஏ) என்பது சிறந்த சோதனை முறையாகும். இதன்படி, -2.5 அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் `ஆஸ்டியோ போரோசிஸ்'. -1 முதல் -2.5 வரை இருப்பது குறைவான எலும்பு அடர்த்தியைக் குறிக்கும். 0 என்பது என்பது ஆரோக்கியமான நிலையாகும்.

எலும்புகளில் 50 சதவீதம் நீர் உள்ளது. இதன் உள்பகுதியில் உள்ள அடர்த்தியான திசுவில் 75 சதவீதம் நீர் உள்ளது.

முறிந்த எலும்பு, 12 வாரங்களில் இணைந்து விடும்.

உடம்பிலேயே மிகவும் வலுவானது தாடை எலும்பாகும்.

எலும்புகள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதன்மூலம் அவை, வளர்ச்சியடையும், உயிருள்ள திசுக்களாகத் திகழ்கின்றன.

குழந்தைகளின் எலும்புகள் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தங்களைப் புதுப்பித்துக்கொள்கின்றன.

கை மூட்டில் இடித்துக்கொள்ளும்போது `ஷாக்' அடித்ததுபோன்ற `சுருக்'கென்ற வலி ஏற்படுகிறது. அதற்குக் காரணம் அந்த எலும்பில் உள்ள `உல்னார்' நரம்பாகும்.

குழந்தைப் பருவத்தில் எலும்புகளின் அளவு 7 மடங்கு அதிகரிக்கிறது.

தோட்டப் பராமரிப்பு வேலை, எலும்புகளின் ஆரோக்கியம் காப்பதற்கு நல்ல பயிற்சியாகும்.

பறவைகளின் அலகுகள் உண்மையில் `கெரட்டினால்' சூழப்பட்ட எலும்புகளாகும். தோல், முடி, நகத்தில் காணப்படும் புரதம், கெரட்டின்.

லினக்ஸ் எனக்குத் தேவையா ?



கம்ப்யூட்டர்
யன்பாட்டினை அண்மைக் காலத்தில் பல்வேறு நோக்கங்களூக்காக மேற்கொள்ளும் பலர், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாமா ன்றும், அவ்வாறு மாறலாம் என்றால், அதற்கான காரணங்களாக எவற்றை நீங்கள் கூறுவீர்கள் என்ற வகையில் கடிதங்களை அனுப்பி உள்ளனர்.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்று உலகில் பரவலாகப் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தும் சிஸ்டமாக இருந்தாலும், லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்துவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் தொழில் நுட்ப ஆய்வாளர்கள் மட்டுமே விரும்பிப் பயன்படுத்திய சிஸ்டமாக லினக்ஸ் இருந்து வந்தது. பின்னர் சாதாரணப் பயனாளரும் இதனைப் பயன்படுத்தலாம் என்ற நிலை உருவாகிப் பலரின் விருப்பமான சிஸ்டமாக லினக்ஸ் உருவானது. அதற்கான சில காரணங்களை இங்கு காணலாம்.
1. பாதுகாப்பு: லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கட்டுக் கோப்பான யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, யூனிக்ஸ் சிஸ்டத்தைப் பயன்படுத்துகையில், அதனைப் பயன்படுத்துபவர்கள் சரியாக அடையாளம் காணப்பட்டே பயன்படுத்த முடியும். லினக்ஸ் சிஸ்டத்தில் இந்த பாதுகாப்பு வசதி இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பான இயக்க ஒருங்கு முறை என்று வருகையில், லினக்ஸ், விண்டோஸ் சிஸ்டத்திற்கு மேலானதாகவே உள்ளது. இன்று கம்ப்யூட்டர் உலகில் உலா வரும் பெரும்பாலான வைரஸ்கள் மற்றும் மால்வேர் தொகுப்புகள் விண்டோஸ் இயக்கத்தினையே குறி வைத்து உருவாக்கப்பட்டு இயங்குகின்றன. இவை லினக்ஸ் சிஸ்டத்தில் ஊடுறுவிச் செயல்படுவது அரிதாகவே உள்ளது.
2.இலவசம்: லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் இன்னொரு சிறப்பு, இது முழுமையாக இலவசமாகக் கிடைப்பதுதான். லினக்ஸ் சிஸ்டத்தின் பலவகையான பதிப்புகள் இன்று அதிக அளவில், வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றை மிக எளிய வகையில் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தலாம். விண்டோஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் ஒப்பிடுகையில், இந்த இலவசம் என்பது அனைவரையும் ஈர்க்கும் காரணமாகவே இருந்து வருகிறது.
3.இயக்க வேகம்: லினக்ஸ் சிஸ்டம் இயங்க எடுத்துக் கொள்ளும் நேரம் மிக மிகக் குறைவு. விண்டோஸ் இயக்கத்துடன் ஒப்பிடுகையில் இதன் பயனை நாம் அனுபவிக்கலாம். எடுத்துக் காட்டாக, அண்மையில் பலராலும் விரும்பிப் பயன்படுத்தும் லினக்ஸ் உபுண்டு பதிப்பு இயங்க 10 விநாடிகளே எடுத்துக் கொள்கிறது. வேறு எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இந்த வேகம் இல்லை என்பது உண்மை. விண்டோஸ் அடிக்கடி இயங்காமல் சண்டித்தனம் செய்திடும் என்பது அதனைப் பயன்படுத்துபவர் அனைவருக்கும் கிடைத்த அனுபவமாகவே இன்று வரை இருந்து வருகிறது. மேலும் பல காரணங்களால் இயங்கும் வேகமும் படிப்படியாகக் குறைந்திடும் என்பதுவும் இன்னொரு சிக்கலான செயல்பாடாகவே உள்ளது. இந்த வகையில் எந்த பிரச்னையும் லினக்ஸ் சிஸ்டத்தில் இல்லை என்பதே உண்மை. இன்ஸ்டால் செய்து பல மாதங்கள் பயன்படுத்திய பின்னரும், பல புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னரும், லினக்ஸ் சிஸ்டத்தின் இயங்கும் வேகம் அப்படியே குறையாமல் இருக்கும்.
4. ஹார்ட்வேர் எதுவா னாலும் சரி: உங்கள் கம்ப்யூட்டர் எப்போது வாங்கப்பட்டிருந்தாலும், எந்த சிப் கொண்டு வடிவமைக்கப் பட்டிருந்தாலும், அதில் லினக்ஸ் சிஸ்டத்தைப் பதிந்து இயக்க முடியும். விண்டோஸ் இயக்கம் தனக்கென குறைந்த பட்சம் சில தகுதிகள் கொண்ட ஹார்ட்வேர் இருந்தாலே இயங்கும். உங்கள் கம்ப்யூட்டர் பழைய ஹார்ட்வேர் ஆக இருந்தாலும், குறைவான மெமரி கொண்டு இருந்தாலும் அதற்கேற்ற லினக்ஸ் பதிப்பினை இலவசமாக இறக்கிப் பதிந்து பயன்படுத்தலாம்.
5. தவறாத மேடை: லினக்ஸ் எந்த வேளையிலும் முடங்கிப் போகாத ஒரு இயக்கம். எனவே அடிக்கடி கிராஷ் ஆகி விட்டது என்ற பாடலைப் பாடும் விண்டோஸ் பயனாளர்களுக்கு இது ஒரு மாற்று மருந்தாக உள்ளது. இதனால் தான் பல பெரிய நிறுவனங்கள் தங்கள் சர்வர்களில் லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்துவதனையே விரும்புகிறார்கள்.
6. லினக்ஸ் பயனாளர் குழுமம்: பன்னாட்டளவில், லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் தங்களுக்கென குழுக்களை அமைத்துக் கொண்டு, இந்த சிஸ்டம் குறித்த தகவல்களை அளித்து வருகின்றனர். சந்தேகங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு தீர்த்துக் கொள்கின்றனர். சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டி, தீர்வுகளை இலவசமாக வழங்கி வருகின்றனர். சாதாரண பிரச்னையிலிருந்து, தங்களுக்கேற்ற வகையில் சிஸ்டத்தை அமைப்பது வரையிலான எந்த பிரச்னைக்கும் இந்த குழு உறுப்பினர்களிடன் தீர்வு கிடைக்கிறது.
7. பதிப்புகள் பல: லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், நம் தேவைகளுக்கேற்ப, பலவகையான பதிப்புகளில் இலவசமாகவே கிடைக்கின்றன. ஒவ்வொன்றின் வகை மற்றும் இயங்கும் தன்மையும் பலவிதமாக இருக்கின்றன. 32 பிட், 64 பிட் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கானவை, சர்வர்களில் வெவ்வேறு திறனுக்கானவை என இவை கிடைக்கின்றன. பொதுவாக எடுத்துக் கொண்டால், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த GNOME and KDE என இரு வகைகள் உள்ளன. இவ்வாறு பலவகை இருப்பதனால், லினக்ஸ் பயன்படுத்த விரும்பும் ஒருவர் சற்று குழப்பத்திற்கு ஆளாகலாம். ஆனால் ஒருவர் தன் தேவைகளை முன்னிறுத்தினால், மேலே சுட்டிக் காட்டியபடி, லினக்ஸ் பயன் பாட்டுக் குழுவினர் இதற்கான அறிவுரையை வழங்குவார்கள்.
8.பல முன்னேற்றங்கள்: டோர்வால்ஸ் (Linus Torvalds) முதலில் லினக்ஸ் சிஸ்டத்தை உருவாக்கிய போது, அது இந்த அளவிற்கு பயன்பாட்டிற்கும், ஆய்விற்கும் உள்ளாகும் என எண்ணவில்லை. இன்று ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள், லினக்ஸ் சிஸ்டத்தினை அனைவரின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கி தருகின்றனர். லினக்ஸ் பயன்படுத்துவதனை ஒரு நல்ல அனுபவமாக இவை முன்னிறுத்துகின்றன. இதனால் லினக்ஸ் பயன்படுத்துபவர்கள், தங்கள் பயன்பாட்டினை மேம்படுத்தும் வகையில் என்ன வகையான பதிப்புகள் வந்துள்ளன என்று பார்த்து, அவற்றைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடிகிறது. இவ்வாறு தங்களுக்கான லினக்ஸ் பதிப்பினைத் தேர்ந்தெடுக்கும் ஒருவர், இதற்கென தனியே எந்த ஒரு பயிற்சியையும் மேற்கொள்ளத் தேவையில்லை. தேர்ந்தெடுத்த சிஸ்டத்தினைப் பயன்படுத்தி பழகினாலே போதும்.
9. திறவூற்று தன்மை: ஓப்பன் சோர்ஸ் என்று அழைக்கப்படும் திறவூற்று தன்மைக்கு லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர் பெற்றது. அதாவது, இந்த சிஸ்டம் உருவாக்கப்பட்ட குறியீட்டு வரிகளை எவரும் எளிதாகப் பெற்று, தங்கள் தேவைக்கேற்றபடி இந்த சிஸ்டத்தினை உருவாக்க முடியும். இந்த தன்மைதான், இன்று லினக்ஸ் சிஸ்டத்தில் பல பயன்பாடுகளுடன் கூடிய தொகுப்புகள் உருவாகக் காரணமாக உள்ளது. தொடர்ந்து புதிய பதிப்புகளும் தயாராகிக் கிடைக்கின்றன. பெரும்பாலும் இவை இலவசமாகவே தரப்படுகின்றன.
மேலே தரப்பட்டுள்ள அனைத்து காரணங்களையும் இன்னும் தீவிரமாக ஆய்வு செய்தால், அவற்றை விரிவாகப் பார்க்கலாம். லினக்ஸ் பயன்பாட்டினை இன்னும் சிறப்பானதாக அவை காட்டும். லினக்ஸ் தொகுப்பை இதுவரை பயன்படுத்தாலம் இருந்தால், நீங்களும் இது குறித்து உங்கள் சிந்தனையைத் திருப்புங்களேன்.