Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com
காற்று வாங்கப் போய் கொசுக் கடியுடன் திரும்புவதா?
கொசு வந்தாச்சு! மழைக்காலம் பிறந்தாலே, கொசுவுக்குக் கொண்டாட்டம் தான். மனிதர்களின் ரத்த வேட்டையைத் துவங்கி விடும்.கொசுக்களில் பல வகை உண்டு; பகல் நேரங்களில் கடிப்பவை, இரவு நேரங்களில் கடிப்பவை என! எவ்வகை கொசுவாயினும், அவற்றில் பெண் கொசுக்கள் முட்டையிட, ரத்தம் தேவை. தொடர்ந்து ஒவ்வொரு மனிதராக அது கடிக்கும் போது, ரத்தத்தின் மூலம் பரவும் மலேரியா, யானைக்கால் நோய் (பைலேரியா), மூளைக்காய்ச்சல் (என்செபாலிடிஸ்), டெங்கூ, சிக்குன்குனியா போன்ற நோய்கள் உருவாகின்றன.மலேரியா தொற்றுக் கிருமிகளை ஏந்தி வரும் ஒரு கொசு, நம்மைக் கடித்த 10 முதல் 14 நாட்களுக்குள், மலேரியா உருவாகும். காய்ச்சல், தலைவலி, உடல் வலி, பேதி ஆகியவை ஏற்படும்.ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்ச்சல் ஏற்படும். குளிரும்; திடீரென வியர்க்கும். உடலில், ரத்த சிவப்பணுக்கள் அளவு குறையும். இதனால், ரத்த சோகை உருவாகி, சோர்வு, சோம்பல் ஏற்படும். குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் இந்நோய் வந்தால் ஆபத்து.ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் மலேரியா காய்ச்சலை கண்டறியலாம். நோய் உறுதி செய்யப்பட்டால், முழு சிகிச்சை எடுக்க வேண்டியது மிக அவசியம். இந்த நோய்க்கு காரணமான ஒட்டுண்ணிகள், நம் கல்லீரலில் அமைதியாக வாழ்ந்தபடி இருக்கும். முழுமையான சிகிச்சை எடுக்காவிடில், மீண்டும் அதிதீவிரமாக தாக்கத் துவங்கி விடும். காய்ச்சல் குறைந்தவுடன், மருந்து மாத்திரை சாப்பிடுவதை பலரும் நிறுத்தி விடுவது துரதிருஷ்டவசமானது.கடும் காய்ச்சல் ஏற்பட்டால், முறையான மருத்துவரிடம் காண்பிக்கும் பழக்கமும் மக்களிடையே இல்லை. முறையாக மருத்துவம் படிக்காத டாக்டர்கள், பல மாத்திரைகளைக் கலந்து ஒரு பேப்பர் பாக்கெட்டில் போட்டு கொடுத்து விடுகின்றனர். இவை ஆன்டிபயாடிக், ஜுர மத்திரை, ஒரு ஸ்டிராய்டு, ஒரு மலேரியா தடுப்பு மாத்திரை என இருக்கும்.இது போன்ற, குத்து மதிப்பான சிகிச்சை, சில நேரங்களில் வெற்றி பெறலாம்; பாக்டீரியாவுக்கு ஆன்டிபயாடிக்கும், மலேரியாவுக்கு அதற்கென மாத்திரையும் கொடுக்கப்படுவதால். ஆனால், இறுதியில் இந்த இரண்டு நோய்களுமே, மீண்டும் திரும்பத் தாக்கத் துவங்கிவிடும். இதன் விளைவு, உடலிலுள்ள ஒட்டுண்ணிகள், மலேரியா நோய்க்கான மருந்தையே எதிர்க்கத் துவங்கி விடும். இது ஆபத்து.பைலேரியக் கொசுக்கள் கடித்தால் ரத்தத்தில் பைலேரியா கிருமி பரவும். யானைக்கால் நோய் ஏற்படும். கடும் காய்ச்சல், குளிர் ஏற்படும். நிணநீர் சுரப்பிகளை இந்த கிருமி அடைத்துக் கொள்ளும். இதனால், கை, கால்கள் வீங்கும். ஆண்களுக்கு விரைப்பை வீக்கமும் ஏற்படும். வீங்கிய இடங்களிலுள்ள தோல் தடிமனாகி விடும். இந்த தோல், மீண்டும் கிருமிகளால் பாதிக்கப்படும்.ரத்தத்தில் பைலேரியா புழுக்கள் உள்ளனவா என்பதை, இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை வைத்துப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆரம்ப நிலை பாதிப்பை, சரி செய்து விடலாம். அல்பெண்டிசால் மாத்திரைகள் இரண்டு வாரத்திற்கும், ஐவெர்மெக்டின் மாத்திரை ஒன்றும், டைஈத்தைல் கார்பாமேசைன் மருந்து 12 முதல் 14 நாட்கள் வரையும் சாப்பிட்டால், குணமாகும். நோய் தீவிரமடைந்தால், குணப்படுத்துவது கடினம்; அறுவை சிகிச்சை மூலம் தான் வீக்கத்தை நீக்க முடியும்."ஏடிஸ் ஈஜிப்டி' கொசுக்களின் உடலில், புலிகள் போல வரி காணப்படும். பகல் நேரங்களில் மனிதர்களைக் கடிக்கும். இவற்றால், டெங்கூ, சிக்குன்குனியா நோய்கள் ஏற்படும். அதிக காய்ச்சல், உடல் முழுதும் தடிப்பு ஏற்படுதல், இணைப்புகளில் வலி, முதுகு வலி, தசை வலி ஏற்படும்.இந்த நோய்கள் இப்போது வேகமாகப் பரவும் தன்மை கொண்டவை. இந்நோயால் தாக்கப்பட்டவர்களில், மருந்து உட்கொண்டு, காய்ச்சல் குறைந்தாலும், மூட்டுகள் வலி, முதுகு வலி ஆகியவை தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த நோய்களுக்கு மருந்துகளும் கிடையாது.மூளைக்காய்ச்சலும், கொசுக்கள் மூலம் பரவுவதே. இதற்கும் சரியான மருந்து கிடையாது. ஆனால், உயிரைப் பறிக்கும் ஆபத்து, இந்த நோயில் உள்ளது. ஜப்பான் பி வகை மூளைக்காய்ச்சல் ஏற்படாமலிருக்க, தடுப்பு மருந்து உள்ளது.இத்தகைய நோய்கள் வந்த பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்வதை விட, வராமல் காப்பதே நல்லது.* பாத்திரங்களில் நீரைத் தேக்கி வைக்கக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள், தொங்கிக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் ஷீட்களை அவ்வப்போது நிமிர்த்திக் கட்ட வேண்டும்.* "ஏசி' மற்றும் கூலர்களிலுள்ள டிரேக்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அவற்றில் உப்பு தூவி வைத்தால், கொசுக்கள் அண்டாது.* பூந்தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.* திறந்த கிணறுகள், தொட்டிகளில் கொசுக்கள் புகா வண்ணம் வலை அடிக்க வேண்டும்.* அலங்கார மீன்களான, கபூசியா, போசிலி (கப்பி வகைகள்) ஆகியவை, கொசு முட்டைகளை உணவாக உட்கொள்ளும் பழக்கம் கொண்டவை. நகராட்சி அலுவலகங்கள், மலேரியா கட்டுப்பாட்டுத் திட்ட அலுவலர்கள் மற்றும் சில கடைகளில் இந்த மீன்கள் கிடைக்கும். இவற்றை பொதுக் கிணறுகள், நீர் நிலைகளில் வளர்த்தால், கொசு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.* வீட்டு ஜன்னல்கள், கதவுகளில், கொசு வலை அடித்து வைக்கலாம்.* இரவு நேரங்களில் அறையில் கொசு வலை கட்டித் தூங்கினால், கொசுக் கடியிலிருந்து தப்பிக்கலாம்.* முழுக்கை சட்டை, கால் மறையும் வகையில் பேன்ட் ஆகியவை அணிந்து படுத்தால் கொசு கடிக்காது.* கொசு கடியிலிருந்து தப்பிக்க, உடலில் பூசும் வகையிலான களிம்புகள் உள்ளன. ஆனால், அவற்றை நேரடியாக உடலில் பூசுவதை விட, ஆடைகளில் பூசிக் கொள்வது நல்லது. குழந்தைகள், கர்ப்பிணிகள் இந்தக் களிம்புகளைப் பயன்படுத்தக் கூடாது.* கொசு வத்திகள், சுருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இவை, மூச்சுக் குழலில் ஒவ்வாமை ஏற்படுத்தும். ஆஸ்துமா, அடுக்குத் தும்மல் ஆகியவற்றை உருவாக்கி விடும்.* பூச்சிக்கொல்லி மருந்துக் கெல்லாம் இப்போதைய கொசுக்கள் கட்டுப்படுவதில்லை. இந்தப் பூச்சிக் கொல்லிகளை, "ஸ்பிரே' செய்தால், இந்த மருந்தை எதிர்க்கும் சக்தியைக் கொசுக்கள் பெற்று விடும்; மனிதர்களுக்கு, மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படும்.
டாக்டர் கீதா மத்தாய், வேலூர்.

அவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?

"கூகுள்' இணையதளத்தின், "பிளாக்' எனப்படும் தனிநபர் விமர்சனங்கள், கட்டுரைகள் வெளியிடும் பகுதியில் அவதூறான செய்திகள் வெளியானால் அவற்றுக்கு அந்நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்றும், செய்திகளின் ஆசிரியரே பொறுப்பாவார் என்றும், அந்நிறுவன முன்னாள் ஊழியர் விளக்கம் அளித்துள்ளார்.
"கூகுள்' இணையதளம், கட்டுரைகள், பத்திரிகைகள், விமர்சனங்கள், ஆராய்ச்சிகள் போன்றவற்றை, விருப்பப்பட்டவர்கள் எழுதி வெளியிடுவதற்கு ஏதுவாக
www.blogger.comஎன்ற இணையதளச் சேவையை நடத்தி வருகிறது.இந்த, "பிளாக்'கில் இவ்வளவு தான் எழுத வேண்டும் என்ற வரையறை கிடையாது என்பதாலும், இது இ-மெயில் போன்று இலவச அடிப்படைச் சேவையாகக் கிடைக்கிறது என்பதாலும், பெரும்பாலோர் தங்கள் விமர்சனங்களை இதன் மூலம் தெரிவிக்கின்றனர்.ஆனால், வெளியிட முடியாத, அநாகரிகமான, அவதூறான செய்திகளையும் விமர்சனங்களையும் கூட, சிலர் தங்கள் பெயரைக் குறிப்பிடாமல் வெளிப்படுத்த, இந்த, "பிளாக்'கைப் பயன்படுத்துகின்றனர்.
அப்படி ஒரு, "பிளாக்'கில் ஒருவர் அவதூறான சில விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார் என்று, மூத்த பத்திரிகையாளர் ஒருவர், 2006, ஜூன் மாதமும், 2007, ஏப்ரலில் மற்றொருவரும், மும்பை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.அவர்கள் தம் மனுவில், அவதூறான செய்திகள் கொண்ட, "பிளாக்'கை வெளியிட அனுமதித்ததாக, "கூகுள்' நிறுவனத்தின் வெளியீட்டுப் பிரிவு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்காலிகமாக அந்த "பிளாக்' செயல்படத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.இதற்கிடையில், 2007, ஜூனில் "பிளாக்' ஆசிரியர் மீதும், நிறுவன வெளியீட்டுப் பிரிவு பொறுப்பாளர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க, மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.
2008, அக்டோபரில், "பிளாக்'குக்கு மும்பை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்தது."கூகுள்' இந்தியா நிறுவனத்தில் 2005ல் இருந்து 2007 வரை அதன் விற்பனை மற்றும் வெளியீட்டுப் பிரிவின் பொறுப்பாளராக இருந்தவர் சுந்தராமன். அவருக்கு எதிராக, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து 2009, மார்ச்சில் மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.இதையடுத்து சுந்தராமன் தாக்கல் செய்த மனுவில், தான், "கூகுள்' நிறுவனத்திலிருந்து விலகி மும்பையை விட்டு வெளியே சென்று விட்டதால், கோர்ட் சம்மனைப் பெறவில்லை என்று கூறினார். அதன்பின் 5,000 ரூபாய் ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.இந்த ஆண்டில், மாஜிஸ்திரேட்டின் நடவடிக்கையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் சுந்தராமன் தாக்கல் செய்துள்ள மனுவில், "கூகுள் நிறுவன ஊழியர்கள் எவருக்கும் அந்நிறுவனத்தையோ அதன் சேவைகளையோ கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது.
அதேபோல், "பிளாக்'கில் வரும் செய்திகளை அகற்றவோ, தடை செய்யவோ அதிகாரம் கிடையாது.வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை மக்களிடம் தெரிவிக்க, கூகுள், ஒரு தளம் மட்டுமே அமைத்து கொடுக்கிறது. மற்றபடி, வாடிக்கையாளர்களின் சொந்த கருத்துக்களுக்கு அந்நிறுவனமோ அதன் ஊழியர்களோ பொறுப்பேற்க முடியாது."பிளாக்' வெளியீடு என்பதை, "பப்ளிகேஷன்' என்பதாகக் கருத முடியாது' என்று கூறியுள்ளார்.அவர் மனு மீதான விசாரணை விரைவில் துவங்க உள்ளது.


அவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?

"கூகுள்' இணையதளத்தின், "பிளாக்' எனப்படும் தனிநபர் விமர்சனங்கள், கட்டுரைகள் வெளியிடும் பகுதியில் அவதூறான செய்திகள் வெளியானால் அவற்றுக்கு அந்நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்றும், செய்திகளின் ஆசிரியரே பொறுப்பாவார் என்றும், அந்நிறுவன முன்னாள் ஊழியர் விளக்கம் அளித்துள்ளார்.
"கூகுள்' இணையதளம், கட்டுரைகள், பத்திரிகைகள், விமர்சனங்கள், ஆராய்ச்சிகள் போன்றவற்றை, விருப்பப்பட்டவர்கள் எழுதி வெளியிடுவதற்கு ஏதுவாக
www.blogger.comஎன்ற இணையதளச் சேவையை நடத்தி வருகிறது.இந்த, "பிளாக்'கில் இவ்வளவு தான் எழுத வேண்டும் என்ற வரையறை கிடையாது என்பதாலும், இது இ-மெயில் போன்று இலவச அடிப்படைச் சேவையாகக் கிடைக்கிறது என்பதாலும், பெரும்பாலோர் தங்கள் விமர்சனங்களை இதன் மூலம் தெரிவிக்கின்றனர்.ஆனால், வெளியிட முடியாத, அநாகரிகமான, அவதூறான செய்திகளையும் விமர்சனங்களையும் கூட, சிலர் தங்கள் பெயரைக் குறிப்பிடாமல் வெளிப்படுத்த, இந்த, "பிளாக்'கைப் பயன்படுத்துகின்றனர்.
அப்படி ஒரு, "பிளாக்'கில் ஒருவர் அவதூறான சில விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார் என்று, மூத்த பத்திரிகையாளர் ஒருவர், 2006, ஜூன் மாதமும், 2007, ஏப்ரலில் மற்றொருவரும், மும்பை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.அவர்கள் தம் மனுவில், அவதூறான செய்திகள் கொண்ட, "பிளாக்'கை வெளியிட அனுமதித்ததாக, "கூகுள்' நிறுவனத்தின் வெளியீட்டுப் பிரிவு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்காலிகமாக அந்த "பிளாக்' செயல்படத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.இதற்கிடையில், 2007, ஜூனில் "பிளாக்' ஆசிரியர் மீதும், நிறுவன வெளியீட்டுப் பிரிவு பொறுப்பாளர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க, மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.
2008, அக்டோபரில், "பிளாக்'குக்கு மும்பை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்தது."கூகுள்' இந்தியா நிறுவனத்தில் 2005ல் இருந்து 2007 வரை அதன் விற்பனை மற்றும் வெளியீட்டுப் பிரிவின் பொறுப்பாளராக இருந்தவர் சுந்தராமன். அவருக்கு எதிராக, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து 2009, மார்ச்சில் மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.இதையடுத்து சுந்தராமன் தாக்கல் செய்த மனுவில், தான், "கூகுள்' நிறுவனத்திலிருந்து விலகி மும்பையை விட்டு வெளியே சென்று விட்டதால், கோர்ட் சம்மனைப் பெறவில்லை என்று கூறினார். அதன்பின் 5,000 ரூபாய் ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.இந்த ஆண்டில், மாஜிஸ்திரேட்டின் நடவடிக்கையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் சுந்தராமன் தாக்கல் செய்துள்ள மனுவில், "கூகுள் நிறுவன ஊழியர்கள் எவருக்கும் அந்நிறுவனத்தையோ அதன் சேவைகளையோ கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது.
அதேபோல், "பிளாக்'கில் வரும் செய்திகளை அகற்றவோ, தடை செய்யவோ அதிகாரம் கிடையாது.வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை மக்களிடம் தெரிவிக்க, கூகுள், ஒரு தளம் மட்டுமே அமைத்து கொடுக்கிறது. மற்றபடி, வாடிக்கையாளர்களின் சொந்த கருத்துக்களுக்கு அந்நிறுவனமோ அதன் ஊழியர்களோ பொறுப்பேற்க முடியாது."பிளாக்' வெளியீடு என்பதை, "பப்ளிகேஷன்' என்பதாகக் கருத முடியாது' என்று கூறியுள்ளார்.அவர் மனு மீதான விசாரணை விரைவில் துவங்க உள்ளது.

Dear Brothers,
Please find some of the Job sites which may helpful to someone in need...

www.almehan.ae
http://www.uaedubai jobs.com
http://www.alluaejo bs.com
http://www.dubaijob s.net
http://www.bayt. com
http://www.uaestaff ing.com
http://www.nadia- me.com
http://www.jobsindu bai.com
http://www.naukrigu lf.com
http://www.itjobsgu lf.com
http://www.gulftale nt.com
http://www.mybetter future.com
http://http: //jobs.theemirat esnetwork. com
http://ae.timesjobs .com
http://aljazeerajob s.com/jobs/ jobs-in-dubai- uae.html
http://www.allarabi a.com
http://uae.monsterg ulf.com/
http://www.recruitg ulf.com
http://www.apnijobs .com/
http://www.jobs- me.com
http://jobs. efinancialcareer s.com/Accounting _Finance/ UAE.htm
http://www.fsi. jobs
http://www.jobs123. com/
http://www.arabianb usiness.com/ jobs
http://www.gulfcons tructionjobs. com/
http://www.ixpats. com/jobs
http://www.careerje t.ae/
http://www.recruitg ulf.com/Jobs- in-UAE.asp
http://www.emirates village.com/
http://dubai- bb.com/dubai- classifieds- 40.html
http://www.balajob. com/index. php
http://www.charterh ouseme.ae
http://www.gnads4u. com/jobs
http://www.retailjo bsdubai.com
http://uae.monsterg ulf.com/it- jobs-uae. html
http://www.dubaijob snetwork. com
http://www.syriajob s.net/
http://www.workindu baiuae.com
http://www.guide2du bai.com/jobs/
http://aljazeerajob s.com
http://www.riskcare ers.com/jobs/ jobs-in-UAE
http://www.jobs4med ical.co.uk/ medical-jobs- in-uae.php
http://www.gulftale nt.com/home/ index.php
http://gulfjobseeke r.com
http://www.jobs- in-gulf-uae- bahrain-qatar- oman-dubai. linksseo. com/
http://www.bestduba ijobs.com
http://www.gulfjobs bank.com/
http://www.jobsouk. com
http://www.jobsup. com/
http://www.careermi dway.com
http://www.allabudh abijobs.com/
http://www.gulfresu meblaster. com
http://www.wizeefa. com
http://www.kareerbu ddy.com/public/ index.php
http://www.fsi. jobs/advantages. asp
http://www.apnijobs .com/jobs/ uae
http://jobs. efinancialcareer s.ie/UAE. htm
http://www.emirates -ads.ae/jobs. aspx
http://www.naukrihu b.com/overseas- jobs/gulf/ uae/
http://www.hotelier career.com/
http://www.naukridu bai.com/
http://www.precisio ndubai.com