சமையல் எண்ணை... சில விஷயங்கள்...
ருசியாகச் சாப்பிட நினைப்பவர்களால் எண்ணையில் பொரிக்காமலும், வறுக்காமலும், வதக்காமலும் சாப்பிட முடியாது. ஆனால் சமையலுக்காக எண்ணையைப் பயன்படுத்தும்போது கீழ்க்கண்ட விஷயங்களைக் கவனத்தில் கொள்ளலாம்...
* வாணலியில் எண்ணை ஊற்றி உணவுப் பதார்த்தத்தை பொரிக்கும்போது மிக அதிக சூடு வேண்டாம். எண்ணையில் தீப்பற்றிக் கொள்ளும் அளவுக்கு சூடாக்குவது கூடவே கூடாது.
* ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அது மிகப் பெரிய தவறு.
* பிளாஸ்டிக் பாட்டிலில் எண்ணையை ஊற்றி சூரிய ஒளியில் படுமாறு வைக்க வேண்டாம்.
* எண்ணையை சமைப்பதற்கு எடுப்பதற்கு கரண்டிக்குப் பதில் `ஸ்பூனை' பயன்படுத்தினால் எண்ணையின் அளவு குறையும்.