Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

சமையல் எண்ணை... சில விஷயங்கள்...

ருசியாகச் சாப்பிட நினைப்பவர்களால் எண்ணையில் பொரிக்காமலும், வறுக்காமலும், வதக்காமலும் சாப்பிட முடியாது. ஆனால் சமையலுக்காக எண்ணையைப் பயன்படுத்தும்போது கீழ்க்கண்ட விஷயங்களைக் கவனத்தில் கொள்ளலாம்...

* வாணலியில் எண்ணை ஊற்றி உணவுப் பதார்த்தத்தை பொரிக்கும்போது மிக அதிக சூடு வேண்டாம். எண்ணையில் தீப்பற்றிக் கொள்ளும் அளவுக்கு சூடாக்குவது கூடவே கூடாது.

* ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அது மிகப் பெரிய தவறு.

* பிளாஸ்டிக் பாட்டிலில் எண்ணையை ஊற்றி சூரிய ஒளியில் படுமாறு வைக்க வேண்டாம்.

* எண்ணையை சமைப்பதற்கு எடுப்பதற்கு கரண்டிக்குப் பதில் `ஸ்பூனை' பயன்படுத்தினால் எண்ணையின் அளவு குறையும்.