பசிபிக் கடலில் அதிசயத் தீவு!
மனித உழைப்பின் இன்னொரு அதிசயமாக விளங்கபோகிறது பசிபிக் கடலில் உருவாக்கபடும் பிளாஸ்டிக் அதிசயத் தீவு. அந்த அழகுத்தீவு பற்றிய சில ரகசியங்கள் இங்கே...
* இது கடல் நீரில் மணல்மேடு உருவாக்கி எழுப்பபடும் தீவல்ல. பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து கட்டிட பயன்பாட்டு பொருட்களாக மாற்றபட்டு தீவு உருவாக்கபடுகிறது. மிதக்கும் பிளாஸ்டிக் தீவாக இது விளங்கபோகிறது.
* கடலில் இதுபோல் மிதக்கும் கட்டிடங்கள் பல ஏற்கனவே எழுப்பபட்டுள்ளன. எனவே இது புது முயற்சிமல்ல, முதல் முறையுமல்ல. ஜப்பானில் கடலுக்குள் விமானநிலையமும், துபாயில் ஓட்டலும், அரபு நாடுகளில் எண்ணைக் கிணறுகளும் கடலுக்குள் அமைக்கபட்டுள்ளன. பிளாஸ்டிக் மூலம் அமைக்கபடுவதுதான் இந்த தீவின் சிறப்பு.
* வெறும் அழகுக்காகவோ, சாதனைக்காகவோ இந்தத் தீவு உருவாக்கபடவில்லை. மனிதர்கள் வசிக்கும் சூழலுடன், ஒரு மாற்று வாழிடமாக இந்தத் தீவு அமைக்கபடுகிறது.
* இங்கு வானுயர்ந்த மாளிகைகள் கட்டி குடியிருக்க போவதில்லை. சாதாரண மக்கள் வசிப்பதுபோன்ற இயல்பான சூழலில் வீடுகள் உருவாக்கபடும். வாழும் வகைக்கும், சுற்றுச்சூழலுக்கும் சிறந்தது என்பதால் இதுபோல் அமைக்கபடுகிறது.
* பிளாஸ்டிக்கால் தீவு உருவாக்கபட்டாலும் இங்கு பிளாஸ்டிக் உபயோகம் இருக்காது. முழுவதும் மக்கும் பொருட்களே பயன்படுத்தும் பசுமைத் தீவாக இது விளங்கும்.
* இங்குள்ளவர்கள் எந்தத் தேவைக்கும் மற்ற நாடுகளை சார்ந்திராத வண்ணம் தண்ணீர் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய ஏற்பாடுகள் செய்யபடுகின்றன. வாழ்வாதாரத்துக்கான தொழில்கள் ஏற்படுத்தபட்டு வணிகம் செய்யபடும்.
* அதிசயத்தீவு 10 சதுர கிலோமீட்டர் பரபளவு கொண்டது. இது உலகின் மிக அழகான தீவான ஹவாய்த் தீவுக்கு சமமானது.
* வடக்கு பசிபிக் கியர் கடல் பகுதியில்தான் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் கண்டு பிடிக்கபட்டுள்ளது. அங்கேயே அவற்றை மறுசுழற்சி செய்து தீவு எழுப்பபடுகிறது. ஹவாய் தீவுக்கு வடகிழக்கு பகுதியில் இந்த பிளாஸ்டிக் தீவு உருவாகிறது.
* புவி வெப்பமடைதல் போன்ற சூழல் மாற்றத்தால் தற்போது உலகம் முழுவதும் 2 கோடி பேர் தங்கள் இயல்பான வாழ்விடங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். சகாரா பாலைவனத்தையொட்டிய பகுதியினர், அலாஸ்கா தீவைச் சேர்ந்தவர்கள் இப்படி இடம் பெயர்ந்துள்ளனர். இன்னும் 30 ஆண்டுகளில் 20 கோடிபேர் இதுபோன்ற நிலைக்கு ஆளாவார்கள் என்று கணிக்கபடுகிறது. அப்போது இந்த அதிசயத்தீவு போன்ற மாற்று வசிப்பிடங்களின் தேவை அதிகமாகும் என்று கணிக்கபடுகிறது. அதனால் மேலும் சில புதிய வாழ்விடங்கள் உருவாக்கபடும்.
* இங்கு மனிதர்கள் மாசுபடுத்தாத சுத்தமான காற்று கிடைக்கும். அதனால் நலமாக வசிக்க முடியும்.
* மிகுதியாக கிடைக்கும் கடற்பாசியை உணவாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்த முடிவு செய்யபட்டுள்ளது. கடற்பாசி கார்பன்டைஆக்சைடை கிரகித்து வாழும் என்பதால் காற்று மாசுபடாமல் இருப்பதற்கும் இதை வளர்க்கலாம்.
அதிசயத் தீவில் வசிக்கபோகும் அதிர்ஷ்டசாலிகள் யாரோ!