Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

கடல் என்றாலே அலை

கடல் என்றாலே மனதுக்குள் இனம் புரியாத ஒரு ஆச்சரியம் அல்லது பய உணர்வு ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும் ஏற்படும். 1070 கி.மீ. நீளமுள்ள தமிழக கடற்கரையில் ஒவ்வொரு தமிழரும் ஏதாவதொரு காரணத்திற்காக சில முறையாவது செல்கிறோம். கால் நனைக்கவோ, பீச்சில் குடும்பத்துடன் அமர்ந்து குதூகலமாக பேசி மகிழவோ, குளிக்கவோ என எதற்கு சென்றாலும் சிறிது கவனக்குறைவாக இருந்தாலும் உங்களுள் ஒருவரை கடலின் அலைகளுக்கு எளிதாக பலியாக்கிவிட்டு வீடு திரும்ப வேண்டியிருக்கும்.

ஒரு சாதாரண நிகழ்வாக ஒவ்வொரு பண்டிகை தினத்திலும் எங்காவது ஒரு கடற் கரையில் ஒரு உயிர் பறிபோய்க் கொண்டே இருக்கிறது. இந்தச் செய்தி தொகுப்புகளை ஆராய்ந்து பார்த்தால் அப்படி இறந்துபோகும் சராசரி வயதினர் பெரும்பாலும் குழந்தை களோ பெரியவர்களோ பெண்களோ அல்ல. அடுத்த கட்ட கனவை மனதில் சுமந்து தன் குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையாய் விளங்கும் இளைஞர்களே அந்த சில நிமிட அமிழ்தலில் ஒட்டுமொத்த வாழ்க்கையையும், தன் பெற்றோரின் கனவையும், அலைகளில் கரைத்து விடுகிறார்கள்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை எந்த கடற்கரையில் வேண்டுமானாலும் சென்று பாருங்கள். ஏதாவது ஒரு இளைஞர்கள் கூட்டம் கடலில் உற்சாகத்துடன் குளித்து கொண்டு இருக்கும். காணும் பொங்கல், புத்தாண்டு, தீபாவளி, ஆடிப்பெருக்கு என எந்த பண்டிகை தினமானாலும் சரி, புகழ்பெற்ற புனித தலங்களான ராமேஸ்வரம், வேளாங் கண்ணி மற்றும் திருச்செந்தூர் போன்ற இடங்களில் நடைபெறும் திருவிழாக்களாக இருந்தாலும் சரி தமிழரின் ஒவ்வொரு முக்கிய விசேஷங்களிலும் கடற்கரைகளில்தான் பெரும் கூட்டம் கூடுகிறது.

சுற்றுலாவில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் கடலில் குளிக்கும்போது இன்னும் சற்று ஆழமாய் சென்றால் ஏற்படும் சாகச உணர்வுக்காக அலையில் விழுந்து சிலர் உயிரை தொலைக்கிறார்கள். சில மணி நேரங் களுக்குப் பிறகு அதே இடத்திற்கு வருபவர்கள் முந்தைய பலியைப் பற்றி அறியாமல் மீண்டும் இந்த பாதுகாப்பற்ற ஆபத்தான விடுமுறை கொண்டாட்டத்தை தொடர் கிறார்கள். கடல் அலைகளில் சென்று விளையாடும் ஆர்வம் உள்ள அளவுக்கு அதில் உள்ள ஆபத்துகளை தெரிந்து கொண்டு பாதுகாப்பாக இருக்கவும் தெரிந்து கொள்வது அவசியமாகும். எனவே தமிழக கடல் அலைகளின் தன்மையை பற்றியும் உயிர்காக்கும் சில பாதுகாப்பு முறைகளை பற்றியும் பார்ப்போம்.

பொதுவாக கடலில் தொடர்ந்து அடித்துக் கொண்டு இருக்கும் அலைகளின் காரணமாக கடல் நீர் கரைக்கு தள்ளப்பட்டு மீண்டும் இழுக்கப்படுகிறது. இந்த தொடர்ச்சியான நிகழ்வால் மேற்பரப்பில் உள்ள கடல் நீர் கரை நோக்கியும், அடிப்பரப்பில் உள்ள கடல்நீர் கடல் நோக்கியும் ஓடிக்கொண்டு இருக்கும். கடற்கரையில் உங்களை நோக்கி வரும் அலைகளை ரசித்து கொண்டு இருக்கும்போது காலடியில் உள்ள மணல் வேகமாக அரித்து செல்லப்பட்டு கால் மண்ணுக்குள் புதைவதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். அதற்கு காரணம் இந்த அடிப்பரப்பு நீரோட்டமே ஆகும். இதற்கு ஆங்கிலத்தில் அண்டர்டோ கரண்ட்ன்ட்ஸ் (ஞிஙூக்ஷக்சுஞ்ச்ஞு ஷஞிசுசுக்ஙூஞ்சூ) என்று பெயர்.

மேற்பரப்பில் வரும் அலைகளின் சக்தியோடு ஒப்பிடும்போது இந்த அடிப்பரப்பு நீரோட்டம் சக்தி குறைந்தது. எனவே கடற்கரையில் நின்று கொண்டு இருக்கும் ஒருவரை நீண்ட தூரம் ஆழத்திற்கு இழுத்து செல்லும் அளவுக்கு இதற்கு பொதுவாக பலம் இருப்பதில்லை. ஆழம் குறைவான இடத்தில் நிற்கும் நீச்சல் தெரியாத ஒருவரை பெரிய அலை கீழே தள்ளுகிறது என வைத்துக் கொள்வோம். மேற்பரப்பில் தொடர்ந்து வரும் அலைகள் அவரை மீண்டும் எழவிடாமல் தள்ளிவிட்டுக் கொண்டே இருக்கும். அப்போது ஏற்படும் பய உணர்வில் வாய் மற்றும் மூக்கு வழியாக கடல்நீர் விழுங்கப்படுவதால் மயக்கம் ஏற்பட்டு இறக்க நேரிடுகிறது.

பெரும்பாலும் கடலில் மூழ்கி இறப்பவர்கள் நல்ல ஆரோக்கியமான இளைஞர்கள்தானே என்று நீங்கள் கேட்கலாம். கடல் அலைகளின் இயல்பை புரிந்து கொள்ளாமல் அதில் சிக்கி கொள்வதாலேயே நன்றாக நீச்சல் தெரிந்த இளைஞர்கள் கூட உயிரை விடுகின்ற னர் என்பதுதான் உண்மை. எனவே அலைகளின் சில அடிப்படை இயல்புகளை பற்றி பார்ப்போம்.

சாதாரணமாக பார்த்தால் அலைகள் தொடர்ந்து கரையில் அடித்துக்கொண்டு இருப்பது போல்தான் தோன்றும். ஆனால் அலைகள் ஒரு குழுவாகவே எப்போதும் கரைக்கு வரு கின்றன. ஒவ்வொரு குழுவிலும் ஆறு முதல் எட்டு அலைகள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக கரையில் வந்து அடிக்கின்றன. பிறகு ஏறத்தாழ ஒரு நிமிடத்திற்கு அலைகளின்றி இருக்கும் அமைதியைத் தொடர்ந்து அடுத்த அலை கரையில் வந்து மோதும். அடுத்த முறை நீங்கள் கடற்கரைக்கு செல்லும்போது இதை கூர்ந்து கவனித்து பார்த்தால் அலை களின் இந்த குழு அமைப்பு உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். கடலில் குளிக்கும் போது இந்த அலைக்குழுவின் சிறு அலைகளை பார்த்து சற்று ஆழத்திற்கு செல்லும்போது இந்த பெரிய அலைதான் பலமாக அறைகிறது.

இரு அலைக்குழுக்களுக்கு இடைப்பட்ட குறுகிய அமைதியான நிலையை நம் மீனவர்கள் அற்புதமாக கண்டுபிடிப்பார்கள். இந்த துல்லிய கணக்கீட்டு திறனால் அடுத்த அலைக்குழு கரையில் மோதுவதற்குள் வேகமாக படகை தள்ளிக்கொண்டு கடலுக்குள் சென்றுவிடு வார்கள். அதே முறையை பயன்படுத்திதான் கரைக்கும் திரும்புவார்கள். அதனால்தான் ரொம்ப தூரம் கடலில் இருந்து திரும்பி வரும் மீனவர்கள் அலைகள் மோதும் கரைப் பகுதிக்கு வந்தவுடன் சிறிது நேரம் காத்திருந்து லாவகமாக கரையேறுவார்கள். இது இயற்கை அன்னையிடம் அவர்கள் கற்ற ணுக்கமான பாடங்களில் ஒன்றாகும். அந்த சில சாகச நொடிகளில் சிறிய பிழை நேர்ந்தால்கூட படகும், மீன்பிடி வலையும் அலை களால் தூக்கிவீசப் பட்டுவிடும்.

இந்த அலைக்குழு இடைவெளியை கடக்க முயலும்போது நான் உயிர் தப்பிய சம்பவத்தை பற்றி இங்கு சொல்ல விரும்புகிறேன். கடலின் மீது இருந்த ஈடுபாட்டால் 2007-ம் ஆண்டு ராமேசுவரத்தில் இருந்து சென்னை வரை ஒரு சிறு பிளாஸ்டிக் துடுப்பு படகில் தனியாக பயணம் மேற்கொண்டேன். தமிழக கடல் முழுவதையும் நேரில் உணர வேண்டும் என்ற உள்ளுணர்வால் துவங்கிய இந்த பயணம். எனக்கு தெரிந்த சில கடற்சூழல் விஷயங்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டு கடற் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வு பயணமாக அமைந்தது. ஒரு நாளைக்கு பதினைந்து முதல் இருபது கிலோமீட்டர் பயணம் செய்து கடலோர கிராமங்களில் இரவு தங்கி மக்களிடம் பேசி அடுத்த நாள் பயணத்தை தொடர்ந்தவாறு பயணம் செய்து கொண்டு இருந்தேன்.

கோடியக்கரை வரை அமைதியாக இருந்த இந்த பயணம். அதற்கு பிறகு மிக கடினமாக மாறத் தொடங்கியது. அன்றைய பயணத்தின் முடிவில் நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த கிராம கடற்பகுதியில் சுமார் 500 மீட்டர் தூரத்தில் கரைக்கு வருவதற்காக படகை செலுத்திக் கொண்டிருந்தேன். அன்று கடலும் இயல்பைவிட மிக சீற்றமாகவே இருந்தது. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதுபோல நான் புத்தகங்களில் படித்து இருந்ததைவிட அலைகள் மிக பிரமாண்டமாக வந்துகொண்டு இருந்தன. சரியான அலைக்குழு இடைவெளியை கணித்து கரையோரத்தில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் வரச்சொல்லி சமிக்கை செய்தனர். துடுப்பை வேகமாக தள்ளி கரையை நோக்கி வந்துகொண்டு இருந்தபோது திடீரென ஒரு உயரமான அலை எனக்குப் பின்னால் துரத்த தொடங்கியது. அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் அந்த அலை படகை தலைகீழாக தூக்கத் தொடங்கியது. படகு என் கட்டுப்பாட்டை இழந்தபோது அந்த பெரிய அலை தலைகீழாக என்னை படகுடன் கடலுக்குள் அழுத்தியது. படகையும் என்னையும் பிணைத்து வைத்திருந்த கயிறு என் இடுப்பை நன்றாக சுற்றிக் கொண்டது. வாயிலும் மூக்கிலும் வேகமாக மணல் கலந்த தண்ணீர் ஏறிக்கொண்டு இருக்க கவிழ்ந்த படகின் அடியில் தலைகீழாக தொங்கி கொண்டு இருந்தேன்.

நல்ல வேளையாக அடுத்த அலை தாக்கியவுடன் கயிறை அறுத்துக் கொண்டு படகு என்னை விட்டு விலகி சென்றது. சில நிமிடங்களுக்குப் பிறகு கரையை நோக்கி நீந்தி வந்து சேர்ந்தேன். உயிரை காக்கும் லைப் ஜக்கேட் (மிதவை உடை) அணிந்து இருந்ததால் என்னால் சுலபமாக பிழைக்க முடிந்தது. இதுபோன்று முன்னறிவிப்பு இன்றி திடீரென வரும் பெரிய அலைகள் எந்த ஒரு அலைக்குழுவிலும் சேர்வதில்லை. இவற்றை ஆங்கிலத் தில் ஸ்லீப்பர் வேவ்ஸ் என்று சொல்வார்கள். இந்த பெரிய முரட்டு அலை சாதாரண அலைக்குழுக்களைவிட வேகமாக கரையைத்தாக்கும். அந்த சமயத்தில் குளிக்கும் அப்பாவிகளின் பாதுகாப்பிற்கு இந்த முரட்டு அலை எந்த உத்திரவாதமும் தருவதில்லை. மெரினா கடற்கரை, மகாபலிபுரம், புதுச்சேரி மற்றும் கன்னியாகுமரி கடற்கரைகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் இந்த வகை அலையில் சிக்கி இறந்துள்ள சம்பவங் களும் நடந்துள்ளன.

தமிழகத்தின் கடலோரங்களில் உள்ள முக்கியமான சுற்றுலா மையங்களில் அலைகளின் அமைப்பு எல்லா இடங்களிலும் எல்லா மாதங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கரையின் அமைப்பை பொருத்தும் கால நிலைகளை பொருத்தும் இது மாறக்கூடியது. மிகவும் சரிவாக கரைகள் இருந்தால் பெரிய அலைகள் நேரடியாக கடற்கரை வரை வரும். எனவே இவை ஒற்றை அலை கடற்கரைகள் ஆகும். மீனவர்கள் இதை புனுவுக்கடல் என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு மெரினா மற்றும் பாண்டிச்சேரி கடற்கரைகளை சொல்லலாம்.

ஆனால் தமிழகத்தின் வேறு சில இடங்களில் கடற்கரை மிதமான சரிவுடன் காணப்படும். இந்த பகுதிகளில் பெரிய அலைகள் தூரத்திலேயே நின்றுவிடுவதால் கரையை நோக்கி சிறிய மற்றும் நடுத்தர அலைகள் மட்டுமே வரும். மீனவர்களை இதை தரைக்கடல் என அழைப்பார்கள். உதாரணத்திற்கு வேளாங்கண்ணி மற்றும் வேதாரண்யம் கடற்கரையை சொல்லலாம்.

டாக்டர் வே.பாலாஜி, கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர், தஞ்சாவூர்.