Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

பூமிக்கு அருகில் புதிய கிரகங்கள் !

பிரபஞ்சம் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டாலும், இன்னமும் அதன் ரகசியத்தை ஆய்வாளர்கள் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. உலகின் பல நாடுகள் விண்வெளி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. விண்வெளி ஆய்வுகளை அமெரிக்கா நீண்டகாலமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆயிரத்து 440 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஆய்வு திட்டம் அங்கு தீட்டப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், உடா மாநில பல்கலைக்கழக டைனமிக் பரிசோதனை கூடத்தில் 16 அங்குல தொலைநோக்கி உருவாக்கப்பட்டது.
"வைஸ்' என்று சுருக்கமாக அழைக்கப்படும், "வைட் பீல்டு இன்பிராரெட் சர்வே எக்ஸ்புளோளர்' என்ற இந்த விண்வெளி தொலைநோக்கி, கடந்த டிசம்பரில் பூமியில் இருந்து 300 மைல் தூரத்தில் விண்வெளியில் சுற்றி வரும்படி ஏவப்பட்டது. 11 நொடிக்கு ஒரு படம் என்ற அளவில் இந்த தொலைநோக்கி விண்வெளியை கேமராவால் சுட்டுத்தள்ளி, படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
இவ்வாறு அனுப்பப்பட்ட படங்கள் மூலம் விண்வெளி குறித்த பல்வேறு புதிய விஷயங்கள் கிடைத்து வருகின்றன. "வைஸ்' தொலைநோக்கி அனுப்பிய படங்கள் மூலமாக, கடந்த ஆறு மாதங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 95 கிரகங்கள் பூமிக்கு மிக அருகில் உள்ளன என தெரியவந்துள்ளது. மிக அருகில் என்றால், இக்கிரகங்கள் பூமியில் இருந்து 3 கோடி மைல்கள் தொலைவில் உள்ளன. இவற்றால் பூமிக்கு தற்போது எந்த அபாயமும் இல்லை.
"வைஸ்' தொலைநோக்கி, விண்வெளியில் தன் முதல் முழுமையான தேடுதலை சமீபத்தில் தொடங்கி உள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டு இறுதிக்குள், பிரபஞ்சம், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவை எவ்வாறு தோன்றின என்ற கேள்விக்கான விடை தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய கிரகங்களை மட்டும் இல்லாமல் 15 புதிய வால் நட்சத்திரங்களையும் அமெரிக்க தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. நட்சத்திரங்களை விட அளவில் சிறியதும், கிரகங்களை விட பெரியதுமான வளர்ச்சி குறைந்த நூற்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை, "வைஸ்' ஆய்வு செய்துள்ளது. இவற்றில் 20 குறித்த தகவல்கள் முழுமையாக கிடைத்துள்ளன. 45 ஆயிரம் கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, ஒளிமிக்க ஒரு பால் மண்டலத்தை, "வைஸ்' கண்டுபிடித்துள்ளது.
சாதாரண தொலைநோக்கியை விட, "வைஸ்' தொலைநோக்கி சக்தி வாய்ந்ததாக இருப்பதால், அது அனுப்பி வரும் விண்வெளி தகவல்கள் விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இன்பிரா ரெட் தொழில்நுட்ப தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. அதில் இருந்து இதுவரை உருவாக்கப்பட்ட தொலைநோக்கிகளில், "வைஸ்' தொலைநோக்கி தான் மிக சக்தி வாய்ந்தது.
"விண்வெளியில் காணப்படும் கடும் வெப்பம் மற்றும் அதிக ஒளி கொண்ட பொருட்களை நோக்கியே பெரும்பாலான தொலைநோக்கிகள் செயல்படும். ஆனால், அடர்த்தியான தூசிகளின் உள்ளேயே ஊடுருவி, தெளிவற்று காணப்படுபவைகளையும் தெளிவாக பார்க்கலாம்; குளிர்ச்சியான மற்றும் இருட்டில் மறைந்துள்ள பொருட்களையும் காணலாம் என்பதுதான், "வைஸ்' விண்வெளி தொலைநோக்கியின் சிறப்பு!' என்கிறார் ரிச்சர்டு பின்செல் என்ற விஞ்ஞானி. "பிரபஞ்சத்தில் பூமிக்கு அருகில் காணப்படும் பொருட்களை கொண்டு பால் மண்டலம் உருவானதை சிறிது சிறிதாக அறிந்து வருகிறோம். இனி கிடைக்கும் புள்ளி விவரங்களை கொண்டுதான் உண்மையான கண்டுபிடிப்புகள் வெளிவரும்!' என்கிறார் நாசா விஞ்ஞானி பீட்டர் இசென்ஹர்டு.

ரோபோ' குப்பைத் தொட்டி

இன்று பல நகரங்களில் குப்பை வண்டிகள் வீடு தேடி வந்து குப்பையைச் சேகரித்துச் செல்கின்றன. அது மாதிரி வீட்டுக்கு வந்து குப்பையை `விழுங்கி'ச் செல்லும் ரோபோவை ஐரோப்பிய விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கின்றனர்.

ஆள் உயரத்துக்கு இருக்கும் இந்த `ரோபோ' நீங்கள் தொலைபேசியில் அழைக்கும் நேரத்துக்கு வந்து உங்கள் வீட்டு வாயிலில் காத்திருந்து குப்பையைப் பெற்றுக்கொள்ளும்.

`டஸ்ட்கார்ட்' என்ற இந்த `ரோபோ' குப்பைத் தொட்டியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் பாலோ டாரியோ கூறுகையில், ``இது அடிப்படையில் ஒரு நகரும் குப்பைத் தொட்டிதான். ஆனால் இது அபாரமான உணர்திறனும், கட்டுப்பாட்டு அமைப்புகளும் கொண்டது'' என்கிறார்.

அவர் மேலும் தொடர்ந்து கூறுகையில், ``நாங்கள் மிகச் சிறந்த, மிகவும் நவீனமான ரோபோட்டிக்ஸ் பாகங்களைக் கொண்டு இந்த `ரோபோ' குப்பைத் தொட்டியை உருவாக்கியிருக்கிறோம். ஐரோப்பா முழுவதும் உள்ள, குப்பையை அகற்றும் நிர்வாகத்தினருக்கு இது பெரிய பிரச்சினையைத் தீர்த்து வைத்திருக்கிறது என்று கூறலாம். இதில் உள்ள இழுப்பறையில் நீங்கள் உங்களின் குப்பைகளை அல்லது மறுசுழற்சிக்கான பொருட்களை இட்டுவிடலாம். ஆனால் இந்த `டஸ்ட்கார்ட்'டின் விசேஷம் இத்துடன் முடிந்துவிடவில்லை!'' என்கிறார்.

அப்படியென்ன விசேஷம்?

முதலாவதாக, இந்தத் தானியங்கி குப்பைத் தொட்டியை பயமின்றி அப்படியே தெருக்களில் இறக்கி விட்டுவிடலாம். இதில் `சென்சார்களும்', `காமிராக்களும்' பொருத்தப்பட்டுள்ளதால், தான் எங்கே செல்கிறோம் என்று இதனால் உணர முடியும். இது தனது பாதையை `பார்த்து' அறிந்து, நிலையான பொருட்கள் மீது மோதாமல் செல்லும். அதேபோல பாதசாரிகள், சைக்கிள் ஓட்டிகள்... ஏன், தெருநாய் வந்தால் கூட விலகிச் சென்றுவிடும்.

இந்த குப்பைத் தொட்டி `காணும்' காட்சிகள் வெளி கட்டுப்பாட்டு மையம் ஒன்றுக்கும் தொடர்ந்து அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும். அங்கிருந்து பார்த்தும் இந்த `ரோபோ' குப்பைத் தொட்டியைக் கட்டுப்படுத்தலாம், திசை மாற்றலாம். குப்பைத் தொட்டியை யாரும் திருடிச் சென்றுவிடாமலும், அதைச் சேதப்படுத்திவிடாமலும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்கலாம்.

`டஸ்ட்கார்ட்' இயங்கும் பகுதியில் ஒரு `வயர்லெஸ் நெட்வொர்க்' அமைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து அவ்வப்போது தேவையான தகவல்களைப் பெற்று இது நகரும். சுருக்கமாகச் சொல்லப் போனால் இது ஒரு புத்திசாலித்தனமான குப்பை அள்ளும் `எந்திரன்'! நம்மூருக்கு `இவன்' எப்போது வருவான்?

பறக்கும் அதிசய மீன்!

படத்தில் நீங்கள் பார்ப்பது பறவை அல்ல. இது ஒரு வகை மீன். இந்த மீன், கடலில் தண்ணீரின் மேற்பரப்பில் இருந்து வெளியே பாய்ந்து, ஒன்பது அடி உயரம் வரை செல்லும். பின் சில அடி தூரம் சுற்றி விட்டு, மீண்டும் கடலில் தொப் என விழுந்து விடும். பறவை மீன் என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த மீனின் பெயர், "மந்தா ரேய்ஸ்!' மத்திய அமெரிக்காவில் கோஸ்டாரிகா கடல் பகுதியில் இந்த வகை மீன்கள் அதிகம் காணப்படுகின்றன. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த போட்டோகிராபர் தம்பதியரான ரோலன்ட் மற்றும் ஜூலியா ஆகிய இருவரும் நடுக்கடலில் படகில் சென்று, இந்த மீனை புகைப்படம் எடுத்தனர். "இந்த மீன் தண்ணீருக்கு வெளியே வரும் போது, தன் செதில்களை, இறக்கைகள் போல் விரித்து, படபடவென அடித்து பறக்கிறது. கடலில் சுறா மீன்களை படம் எடுக்கச் சென்ற எங்களுக்கு இந்த மீன் மிக அபூர்வ காட்சியாக அமைந்தது...' என்கின்றனர் இந்த இருவரும். இந்த வகை மீன்கள் 25 அடி நீளம் வரை வளரும். அதிக பட்சம் 2,000 கிலோ வரை இருக்கும். இந்த சைசில் உள்ள மீன்கள் பறப்பது மிகவும் அபூர்வ காட்சிதான்.

சமையல் எண்ணை... சில விஷயங்கள்...

ருசியாகச் சாப்பிட நினைப்பவர்களால் எண்ணையில் பொரிக்காமலும், வறுக்காமலும், வதக்காமலும் சாப்பிட முடியாது. ஆனால் சமையலுக்காக எண்ணையைப் பயன்படுத்தும்போது கீழ்க்கண்ட விஷயங்களைக் கவனத்தில் கொள்ளலாம்...

* வாணலியில் எண்ணை ஊற்றி உணவுப் பதார்த்தத்தை பொரிக்கும்போது மிக அதிக சூடு வேண்டாம். எண்ணையில் தீப்பற்றிக் கொள்ளும் அளவுக்கு சூடாக்குவது கூடவே கூடாது.

* ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அது மிகப் பெரிய தவறு.

* பிளாஸ்டிக் பாட்டிலில் எண்ணையை ஊற்றி சூரிய ஒளியில் படுமாறு வைக்க வேண்டாம்.

* எண்ணையை சமைப்பதற்கு எடுப்பதற்கு கரண்டிக்குப் பதில் `ஸ்பூனை' பயன்படுத்தினால் எண்ணையின் அளவு குறையும்.

உடற்பயிற்சி - நமக்கு தெரிய வேண்டிய சில உண்மைகள்

நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது நம்மில் பலர் தவறான அறிவுரையாலும், கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தாறுமாறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது. மேலும், நாம் டி.வி.யில் காணும் சில விளம்பரங்கள் "பதினான்கு நாட்களில் கட்டுடலுக்கு உத்தரவாதம்" என்றும், மற்றும் சில விளம்பரங்கள் "தினமும் நான்கு நிமிடங்கள் செய்தாலே அழகான உடல்கட்டு கிடைக்கும்" என்று கூறுகின்றன. இந்தக் கட்டுரை உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு அவர்களது குழப்பங்களை அகற்றவும், தவறான கருத்துக்களை நீக்கி, தெளிவு பெற்று, நோயற்ற வாழ்வு என்னும் குறைவற்ற செல்வத்தை அடையவும் உதவும் சிறிய முயற்சியாகும்.

கருத்து:1 தொந்தியைக் குறைப்பதற்கு சிறந்த வழி நமது உடலின் நடுப்பாகத்திற்கு (வயிற்றுப் பகுதிக்கு) பயிற்சி கொடுக்க வேண்டும்.

இது ஒரு தவறான கருத்து. நம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை. இப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும்.

கருத்து:2 வாரத்துக்கு இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்தாலே நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு போதுமானது.

இதுவும் தவறான கருத்து. எப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல மிதமான உடற்பயிற்சியும், நமக்கு தினசரி தேவை. ஏனென்றால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆகவே நமது தசைகளும், அவற்றுடன் தொடர்புடைய நமது இரத்த, சுவாச, செரிமான உறுப்புகளும் உறுதியாகவும், நல்ல நிலையில் இயங்க குறைந்தது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

கருத்து:3 எடையைக் குறைப்பதற்கு வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இதுவும் ஒரு தவறான கருத்து. வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே உதவும். அது நமது எடையைக் குறைக்க உதவாது. வேர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும். இதை விடுத்து உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக் கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

கருத்து:4 நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று

உண்மை. நடக்கும் போது இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் திசுக்களுக்குத் தேவையான சக்தி (கலோரிகள்) கிடைப்பதால் நமது உடல் நலம் நன்றாக இருக்கும்.

நாம் ஒரே இடத்தில் வெகுநேரம் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ வேலை செய்பவராக இருந்தால், நமது கால்களில் உள்ள இரத்தக் குழாய்களுக்கு அங்குள்ள இரத்தத்தை திரும்பவும் இதயத்துக்கு அனுப்ப போதுமான அளவு அழுத்தம் கிடைப்பதில்லை. இதனால் இரத்த ஓட்டம் உடலின் எல்லா பாகங்களுக்கும் சீராக இருப்பதில்லை. நடக்கும் போது நமது கால்களில் உள்ள தசைகள் இயங்கி, அருகிலுள்ள இரத்தக் குழாய்களை அழுத்தி இரத்தத்தை இதயத்துக்கு அனுப்பத் தேவையான சக்தியை அளிக்கின்றன. ஆகவே தினமும் 2 அல்லது 3 கி.மீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிறந்த உடற்பயிற்சி ஆகும்.

கருத்து:5 ஒரு மைல் தூரம் ஒடும்போது நாம் அதே அளவு தூரம் நடப்பதைக் காட்டிலும் அதிகமான கலோ¡¢களை எ¡¢க்கிறோம். இதனால் நமது உடல் எடை விரைவாகக் குறைகிறது.

மிகத் தவறான கருத்து. நாம் ஒடினாலும், நடந்தாலும், நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவு செய்கிறோம். இங்கு வேகம் ஒரு பொருட்டல்ல. ஆனால் 30 நிமிடங்கள் நாம் ஓடும்போது, அதே 30 நிமிடங்கள் நடப்பவரைக் காட்டிலும் அதிக தூரம் கடக்கிறோம். தூரம் அதிகமாவதால் நாம் செலவு செய்யும் சக்தியும், எரிக்கும் கலோரிகளும் அதிகமாகின்றன. எனவே அவரவர் வயது மற்றும் உடல் திறனுக்கேற்றவாறு நமது உடற்பயிற்சியை அமைத்துக் கொள்ளல் அவசியம்.

கருத்து:6 தசைகள் வி¡¢வுபடுத்த செய்யும் உடற்பயிற்சிகளை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்தால் தசைகளுக்கு வலிவும், வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.

இதுவும் தவறான கருத்து. இம்மாதிரியான பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும். உதாரணமாக குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் (Twisting) பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும்போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு வலியும், தசை நார்கிழிதல் முதலான மோசமான விளைவுகள் ஏற்படும். ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாக ஆனால் திரும்ப, திரும்ப செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.

கருத்து:7 நமது சுவாசமும், இதயத் துடிப்பும், உடற்பயிற்சி செய்து முடித்த 3-5 நிமிடங்களுக்குள் சீராக வேண்டும்.

சரியான கருத்து. உடற்பயிற்சி முடிந்து 5 நிமிடங்களுக்கு மேலாகியும், சீரான மூச்சு திரும்பவில்லை என்றால் நாம் மிக அதிகமாக தசைகளுக்கு பயிற்சி கொடுத்து விட்டோம் என்று பொருள். அளவுக்கதிகமான உடற்பயிற்சியானது நமது தூக்கத்தை கெடுப்பதுடன், அடுத்த நாள் களைப்பையும், சோர்வையும் உண்டாக்கிவிடும். ஆகவே உடற்பயிற்சியை மிதமாகவும், குதூகல உணர்வுடனும் செய்வது அவசியம்.

கருத்து:8 ஒரு நாளில் குறைந்த பட்சம் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்?

20 நிமிடங்களாவது நாம் ஒரு நாளில் உடற்பயிற்சி செய்வது அவசியம் கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம், முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன. நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும். இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது போதாது. குறைந்தது 20 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் "14 நாட்களில் கட்டுடல் நிச்சயம்" போன்ற விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள். வனப்பான உடல் பொலிவைப் பெறுவது என்பது, நாம் உடற்பயிற்சி ஆரம்பித்த போது நமது ஆரோக்கியம், உடல் தகுதி முதலியவை (Physical Fitnes) எப்படி இருந்தது என்பதைப் பொறுத்து அமையும். சிலருக்கு சில வாரங்களோ வேறு சிலருக்கு சில மாதங்களோ கூட ஆகலாம். ஆனால் ஒன்று நிச்சயம். எவராக இருப்பினும், நாளை, நாளை மறுநாள் என்று தள்ளிப் போடாமல் உடற்பயிற்சியை மிதமாகவும், தவறாமலும், ஒழுங்காகவும் செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் கட்டுடலுடனும், முழு உடல் தகுதியுடனும், ஆரோக்யமாக வாழலாம்.

ஆங்கில அகராதியில் புதிய தகவல் தொடர்பு சொற்கள்

ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் தயாரித்து வழங்கும் ஆங்கில அகராதி உலகப் புகழ் பெற்றது. குறிப்பிட்ட கால அளவில் இந்த அகராதியின் ஆசிரியர் குழு, புதிதாக ஆங்கில மொழியில் புழங்கும் சொற்களை அகராதியில் அதிகார பூர்வமாக இணைக்கும். அந்த வகையில் அண்மையில் வெளிவந்த புதிய அகராதி பதிப்பில், 2,000 சொற்கள் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் தகவல் தொடர்பு மற்றும் கம்ப்யூட்டர், இன்டர்நெட் பிரிவுகளில் புதிதாக உருவாகிப் பயன்படுத்தப்படும் பல சொற்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம். Tweetup Tweetமற்றும் Meetup என்ற சொற்களின் இணைப்பு. Twitter தளம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் என்பது இதன் பொருள்.
Defriend: இன்டர்நெட், மெயிலிங் லிஸ்ட் ஆகியவற்றில் நீங்கள் ஏற்படுத்திய உங்கள் நண்பர்கள் பட்டியலில் இருந்து ஒருவரை நீக்குவதனை இந்த சொல் குறிக்கிறது.
Chillax: சற்று குளிர்ச்சியாகவும் ஓய்வாகவும் (Chill + Relax) இரு Micor Blogging: ஒரு இணைய சேவை. சேவை ஒன்றில் சிறிய செய்தியினை அந்த சேவையைப் பெறும் அனைவருக்கும் அனுப்புவது.
Paywall: குறிப்பிட்ட இணைய தளத்தில் உள்ள தகவல்களை, கட்டணம் செலுத்திய பின்பே அனுமதிக்கும் சாப்ட்வேர் சுவர்.
Netbook: நெட்புக் கம்ப்யூட்டர் இன்னும் பெரிய அளவில் புழக்கத்திற்கு வரவில்லை என்றாலும், ஆக்ஸ்போர்ட் அகராதி இதற்கு அங்கீகாரம் தந்து எடுத்துக் கொண்டுள்ளது.
சில சொற்கள், மொழி இலக்கணப்படி முறையாக இல்லை என்றாலும், அகராதியில் இணைக்கப் பட்டுள்ளன. மொழியியலாளர்கள் இவற்றைக் கண்டு முகம் சுழித்தாலும், இவை அகராதியில் இடம் பிடிக்கின்றன. அவற்றில் சில, Wurfing: வேலை (Work+Surfing) பார்க்கும் போது, திருட்டுத்தனமாக இணையத்தில் உலா வருவது.
Earworm: சில ட்யூன்கள் நம் மனதில் இடம் பிடித்து, நம் தலைக்குள்ளாக ரீங்காரம் செய்து கொண்டே இருக்கும். அதனை இச்சொல் குறிக்கிறது.
Nonversation: வெட்டி அரட்டை என்று நம் மக்கள் கூறுவார்கள் இல்லையா? அதனை இந்த சொல் குறிக்கிறது. இப்படி பல சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன.

உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜிம்’முக்கு ஓடுகிறவர்கள் உண்டு. ஆனால் உடற்பயிற்சிக் கூடத்துக்குத் தினமும் தவறாமல் போவது மட்டும் அதிசயத்தை நிகழ்த்தி விடாது.

எல்லா விஷயங்களைம் போல உடற்பயிற்சிக்கும் சில விதிகளும் முறைகளும் இருக்கின்றன. அவற்றைச் சரியாக பின்பற்றவில்லை என்றால் உரிய பலனிருக்காது. சில நேரங்களில் பாதிப்பும் ஏற்படக்கூடும். ஜிம்’மில் ஏற்படக்கூடிய பொதுவான பாதிப்புகள் குறித்து உடல்தகுதி நிபுணர் அல்தியா ஷா விளக்குகிறார்…


சரியான முறை

அனைத்து பயிற்சிகளும் அதிகபட்ச பலனைத் தரும்படி குறிபிட்ட முறையில் அமைக்கபட்டிருக்கின்றன. ஒருவர் தனது திறனுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளிலேயே கடைசியாக அதிகபட்ச எடையைத் தூக்குவது அதிகமான பலனைத் தரும். ஆனால் சரியான முறையில் எடை தூக்க வேண்டும். இல்லாவிட்டால் அது வீணாக போகும். பலனேதும் இருக்காது.


அதிகமாகத் தூக்குவது

உங்கள் தசைகள் தாங்கக்கூடிய அளவை விட அதிகமான எடையைத் தூக்காதீர்கள். படிபடியாக எடையை அதிகரிப்பது தசை பலத்தைக் கூட்டுவதற்கான நல்ல வழியாகும். அத்துடன் நீங்கள் ஒருவருக்கு எடை தூக்க உதவும்போது எடை தூக்குபவருக்கு இடைறாக இல்லாமல் உங்கள் உடம்பை விலக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதன்மூலம் எடை தூக்குபவருக்குக் காயம் ஏதும் ஏற்படாமலும் தவிர்க்கலாம்.


சுத்தமே சுகாதாரம்

ஒரு ஜிம்’ உபகரணத்தை பயன்படுத்தும் முன்பும் பயன்படுத்திய பின்பும் அதை ஒரு துண்டால் நன்றாகத் துடைத்து விடுங்கள். அதன்மூலம் தொற்று வியாதியால் பாதிக்கபடாமலும் அது பரவாமலும் தவிர்க்கலாம். உடற்பயிற்சிக்கூட நடத்தை விதிகளின்படி உடற்பயிற்சி உபகரணங்களை சுத்தமாக வைத்திருப்பது வலிறுத்தபடுகிறது. குறிப்பாக இதயத் தசைக்கு வலுவூட்டும் எந்திரங்களை பயன்படுத்தும்போது! அம்மாதிரி வலியுறுத்தபட்டாலும் இல்லாவிட்டாலும் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. பக்கத்தில் உள்ள உபகரணங்களில் இருந்து கூட நீங்கள் பயன்படுத்த போகும் கருவிக்கு கிருமிகள் பரவக் கூடும் என்பதால் துடைத்துவிட்டு பயன்படுத்துவதே நல்லது.


வெறுங்காலுடன் போகாதீர்கள்

நேரடி சூரிய வெளிச்சம் இல்லாத மூடபட்ட பகுதிகள் கிருமிகள் பெருகுவதற்கு ஏற்ற சூழலாக அமைகின்றன. எனவே எப்போதும் காலணி அணிந்தே பயிற்சி செய்யுங்கள். அதன்மூலம் அத்லெட்ஸ் பூட்’ என்ற பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். இந்த பூஞ்சைத் தொற்றால் கால் விரல்களுக்கு இடையே அரிப்புடன் கூடிய செதில்களும் கொப்புளங்களும் ஏற்படும். காலணி அணிவது ஜிம்’மின் வழுவழுப்பான தரையில் வழுக்கி விழுவதையும் தடுக்கும்.


செல்போனை தவிருங்கள்

உடற்பயிற்சிக்குத்தான் உடற்பயிற்சிக் கூடம். எனவே அங்கே அதில் மட்டும் கவனமாக இருங்கள். ஜிம்’மில் போய் எஸ்.எம்.எஸ்.’ அனுப்புவதும் அரட்டையடிப்பதும் உங்கள் நேரத்தை மட்டும் வீணாக்குவதில்லை. காயமடையும் அபாயத்தைம் ஏற்படுத்துகிறது.


சரி பாருங்கள்

எந்த உபகரணத்தையும் பயன்படுத்தும் முன் அதில் நட்டு’கள் ஸ்க்ரூ’க்கள் எதுவும் லூசாக’ இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். எந்திரம் கடகட’வென்று ஆடினாலோ அசைவுகள் அதிகமாக இருந்தாலோ ஜிம்’ நிர்வாகியிடம் தெரிவித்து விட்டு வேறு உபகரணத்துக்கு மாறிக்கொள்ளுங்கள்.

பசிபிக் கடலில் அதிசயத் தீவு!

மனித உழைப்பின் இன்னொரு அதிசயமாக விளங்கபோகிறது பசிபிக் கடலில் உருவாக்கபடும் பிளாஸ்டிக் அதிசயத் தீவு. அந்த அழகுத்தீவு பற்றிய சில ரகசியங்கள் இங்கே...

* இது கடல் நீரில் மணல்மேடு உருவாக்கி எழுப்பபடும் தீவல்ல. பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து கட்டிட பயன்பாட்டு பொருட்களாக மாற்றபட்டு தீவு உருவாக்கபடுகிறது. மிதக்கும் பிளாஸ்டிக் தீவாக இது விளங்கபோகிறது.

* கடலில் இதுபோல் மிதக்கும் கட்டிடங்கள் பல ஏற்கனவே எழுப்பபட்டுள்ளன. எனவே இது புது முயற்சிமல்ல, முதல் முறையுமல்ல. ஜப்பானில் கடலுக்குள் விமானநிலையமும், துபாயில் ஓட்டலும், அரபு நாடுகளில் எண்ணைக் கிணறுகளும் கடலுக்குள் அமைக்கபட்டுள்ளன. பிளாஸ்டிக் மூலம் அமைக்கபடுவதுதான் இந்த தீவின் சிறப்பு.

* வெறும் அழகுக்காகவோ, சாதனைக்காகவோ இந்தத் தீவு உருவாக்கபடவில்லை. மனிதர்கள் வசிக்கும் சூழலுடன், ஒரு மாற்று வாழிடமாக இந்தத் தீவு அமைக்கபடுகிறது.

* இங்கு வானுயர்ந்த மாளிகைகள் கட்டி குடியிருக்க போவதில்லை. சாதாரண மக்கள் வசிப்பதுபோன்ற இயல்பான சூழலில் வீடுகள் உருவாக்கபடும். வாழும் வகைக்கும், சுற்றுச்சூழலுக்கும் சிறந்தது என்பதால் இதுபோல் அமைக்கபடுகிறது.

* பிளாஸ்டிக்கால் தீவு உருவாக்கபட்டாலும் இங்கு பிளாஸ்டிக் உபயோகம் இருக்காது. முழுவதும் மக்கும் பொருட்களே பயன்படுத்தும் பசுமைத் தீவாக இது விளங்கும்.

* இங்குள்ளவர்கள் எந்தத் தேவைக்கும் மற்ற நாடுகளை சார்ந்திராத வண்ணம் தண்ணீர் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய ஏற்பாடுகள் செய்யபடுகின்றன. வாழ்வாதாரத்துக்கான தொழில்கள் ஏற்படுத்தபட்டு வணிகம் செய்யபடும்.

* அதிசயத்தீவு 10 சதுர கிலோமீட்டர் பரபளவு கொண்டது. இது உலகின் மிக அழகான தீவான ஹவாய்த் தீவுக்கு சமமானது.

* வடக்கு பசிபிக் கியர் கடல் பகுதியில்தான் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் கண்டு பிடிக்கபட்டுள்ளது. அங்கேயே அவற்றை மறுசுழற்சி செய்து தீவு எழுப்பபடுகிறது. ஹவாய் தீவுக்கு வடகிழக்கு பகுதியில் இந்த பிளாஸ்டிக் தீவு உருவாகிறது.

* புவி வெப்பமடைதல் போன்ற சூழல் மாற்றத்தால் தற்போது உலகம் முழுவதும் 2 கோடி பேர் தங்கள் இயல்பான வாழ்விடங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். சகாரா பாலைவனத்தையொட்டிய பகுதியினர், அலாஸ்கா தீவைச் சேர்ந்தவர்கள் இப்படி இடம் பெயர்ந்துள்ளனர். இன்னும் 30 ஆண்டுகளில் 20 கோடிபேர் இதுபோன்ற நிலைக்கு ஆளாவார்கள் என்று கணிக்கபடுகிறது. அப்போது இந்த அதிசயத்தீவு போன்ற மாற்று வசிப்பிடங்களின் தேவை அதிகமாகும் என்று கணிக்கபடுகிறது. அதனால் மேலும் சில புதிய வாழ்விடங்கள் உருவாக்கபடும்.

* இங்கு மனிதர்கள் மாசுபடுத்தாத சுத்தமான காற்று கிடைக்கும். அதனால் நலமாக வசிக்க முடியும்.

* மிகுதியாக கிடைக்கும் கடற்பாசியை உணவாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்த முடிவு செய்யபட்டுள்ளது. கடற்பாசி கார்பன்டைஆக்சைடை கிரகித்து வாழும் என்பதால் காற்று மாசுபடாமல் இருப்பதற்கும் இதை வளர்க்கலாம்.

அதிசயத் தீவில் வசிக்கபோகும் அதிர்ஷ்டசாலிகள் யாரோ!

மின்னஞ்சல் பிழைச் செய்திகள்

சாப்பிடுகிறோமோ இல்லையோ, அன்றாடம் நமக்கு வந்திருக்கும் மின்னஞ்சல்களைப் பார்ப்பதுவும், அவற்றிற்கான பதில்களை அனுப்புவதும் நம் அன்றாட வேலையாக மாறி வருகிறது. இவை எல்லாம் சரியாகச் செல்லும் வரை நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் பல வேளைகளில், மின்னஞ்சல் பரிமாற்றத்திலும் நமக்குப் பல பிழைச் செய்திகள் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1.Delivery Error:: இந்த பிழைச் செய்தி சில வேளைகளில் 550 அல்லது 554 என்ற எண்ணுடன் குறிப்பிடப்படும். இது பொதுவாக அடிக்கடி பெறப்படும் பிழைச்செய்தியாகும். இதன் பொருள்: நீங்கள் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரி என ஒன்று இல்லவே இல்லை. இதற்கு எந்த மெயிலையும் அனுப்ப முடியாது என்பதுவே. இதற்குக் காரணம், முகவரி அமைப்பதில் ஏதேனும் சில எழுத்துப் பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். முகவரியில் உள்ள எண்கள் அல்லது வேறு குறியீடுகள் விடுபட்டிருக்கலாம்.
2.Unknown host: இதற்கான எண் எதுவும் இருக்காது. காரணங்கள்:1) முகவரியில் இறுதியில் உள்ள சர்வரின் பெயரில் எழுத்துப் பிழை, 2) அந்த பெயரில் இப்போது எந்த சர்வரும் இல்லை, அல்லது 3) அந்த சர்வரின் அமைப்பு இப்போது வேறாக இருக்கலாம்.
எனவே இந்த மின்னஞ்சல் முகவரியினை முழுமையாகச் சோதனை செய்திட வேண்டும். இதுவும் தீர்வு தரவில்லை என்றால், அஞ்சல் முகவரிக்கானவரை, வேறு வழிகளில் தொடர்பு கொண்டு சரியான முகவரியினைப் பெறவும்.
3. Mail not accepted: பிழை எண் 550 அல்லது 554 ஆக இருக்கலாம். யாருக்கு இந்த அஞ்சலை அனுப்பு கிறீர்களோ, அவருக்கான இந்த முகவரிக்கு ஒரு சிலர் மட்டுமே அஞ்சலை அனுப்பும் வகையில் வரையறை செய்யப்பட்டிருக்கலாம். அல்லது ஒரு குழு மட்டுமே அனுப்பும் வகையில் இருக்கலாம். இந்த அமைப்பினை அவர் மாற்றினால் தான் இந்த முகவரியினைப் பயன்படுத்தி, அஞ்சல் அனுப்ப முடியும்.
4. Service Unavailable: சில வேளைகளில் இது 550 என்ற எண்ணுடன் இருக்கும். அல்லது எண் இல்லாமல் இருக்கும். தற்போதைக்கு, இந்த முகவரிக்கான சர்வர் அஞ்சல் எதனையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை; அல்லது பராமரிப்பு காரணமாக அஞ்சல் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம். சில மணி நேரம் காத்திருந்த பின்னர், அஞ்சலை அனுப்பலாம்.
5. Sender’s address rejected:பிழை எண் 550 அல்லது 554 ஆக இருக்கலாம். இது உங்களுக்கு ஒரு மோசமான செய்தி. உங்கள் முகவரியினை ஸ்பேம் மெயில் அனுப்பும் முகவரியாக, உங்கள் அஞ்சலைப் பெறுபவர் வரையறை செய்துள்ளார். அல்லது அவர் சார்ந்துள்ள குழு அது போல அமைத்திருக்கும். அவரை வேறு வழியில் தொடர்பு கொண்டு, கறுப்பு பட்டியலில் இருந்து உங்களின் முகவரியினை நீக்குமாறு கேட்டுக் கொள்ளலாம்.
6.Inbox Full : சில வேளைகளில் 552 என்ற எண்ணுடன் இந்த பிழைச் செய்தி இருக்கலாம். குறிப்பிட்ட கால அவகாசத்தில், அஞ்சலைப் பெற வேண்டிய நபர், அதிக பட்ச மெயில்களைப் பெற்றிருக்கலாம். அவரின் அஞ்சல் பெறும் பெட்டியில் கொள்ளும் அளவிற்கு அஞ்சல்கள் பெறப்பட்டுள்ளதால், உங்கள் மெயில் திருப்ப அனுப்பப்பட்டுவிட்டது. எனவே மெயிலைப் பெற இருப்பவர், அவராக இந்த பாக்ஸில் உள்ள மெயில்களை நீக்கினால்தான், மேலும் அவருக்கு மெயில்கள் சென்றடையும்.
7.Message exceeds maximum file size: இந்த பிழைச் செய்தி சில வேளைகளில் 552 என்ற எண்ணுடன் தரப்படும். நீங்கள் உங்கள் அஞ்சலுடன் இணைத்துள்ள பைலின் அளவு, அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமானதாக இருப்பதாக பொருள். எனவே இணைக்கப்படும் பைலின் அளவை குறைக்க வேண்டும். அல்லது இணைப்பையே நீக்க வேண்டும். பைலின் அளவைக் குறைக்க இயலவில்லை என்றால், பைலை வேறு வழிகளில் அனுப்பலாம். வெளியாக பைல் மாற்றும் சேவைகள் தரும் பல தளங்கள் இதற்கென உள்ளன. இன்னும் பல பிழைச் செய்திகளை, மின்னஞ்சல் அனுப்பும்போது நாம் பெறலாம். இருப்பினும் மேலே காட்டப்பட்டுள்ள செய்திகளே நாம் அடிக்கடி சந்திக்கும் செய்திகளாகும்.

வேண்டாம் அசைவம்!

அசைவம் கூடாது என்று வலியுறுத்தியுள்ள வேதாத்திரி மகரிஷி, மாமிசம் உண்பதை ஏன் நிறுத்த வேண்டும்? என்பதற்கும் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகிறார் :

"மனிதனைத் தவிர, மற்ற உயிரினங்கள் தங்களுக்கு வேண்டிய உணவை தாங்களே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய திறமை இல்லாததால் அவை எல்லாம் பிற உயிர்களைக் கொன்று, உடலை உண்டு வாழ்கின்றன. இதை குற்றம் என்று கூற முடியாது.

விதை விதைத்து, தானே உணவை உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்ற ஆறறிவு மனிதர்களுக்கு இன்னொரு உயிரை உணவாக உட்கொள்ள வேண்டிய பழக்கம் தேவையில்லை. அதனால், மனிதன் பிற உயிரை உணவுக்காக கொல்வது நீதி ஆகாது. உணவுக்காக உயிர்க்கொலை செய்வதை தவிர்க்க வேண்டும்.

மாமிசமானது பிற உயிரினங்களை துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி பெறப்படுவதாகும். அது, நம் உடல் அணுக்களில் கலந்தால் நம் எண்ணத்திலும் வன்முறை வளர வாய்ப்பை ஏற்படுத்தாதா? உலக சரித்திரத்தை எடுத்துப் பார்த்தால் புலால் உண்கின்ற சமுதாயங்களில் குற்றங்கள், போர்கள் அதிகமாக நிகழ்ந்தது தெரிய வரும்.

தாவர ஆகாரத்தை சாப்பிடுவதால் குடலுக்கு வலிமை ஏற்படும். சுலபமாக உடலுடன் கலந்து சத்தாக மாறிவிடும். ஆனால், மாமிசம் உண்பதால் குடல் வலிமையும், ஜீரண பலமும் குறைந்து, உடல் உள் உறுப்புகள் சோம்பல் நிலையை அடைந்துவிடும்.

மாமிசம் உண்பவர்கள் ஒரே தாவலில் தாவர உணவுக்கு வந்துவிட தேவையில்லை. அப்படி முயன்றால், ரத்தத்தில் ரசாயன மாறுபாடு ஏற்பட்டு, நரம்புகளுக்கு பலவீனம் உண்டாகிவிடும். சிலருக்கு நோய்களும் ஏற்படலாம். நீங்கள் சைவத்துக்கு மாற விரும்பினால் படிப்படியாகவே அந்த மாறுதலை மேற்கொள்ள வேண்டும்.

உணவு மாற்றத்தை உடலும், மனமும் ஒத்துக்கொள்கின்ற வகையில் மாமிச உணவை சிறிது சிறிதாக குறைத்து, தாவர உணவு வகைகளை அதிகப்படுத்தி, 2, 3 மாதங்கள் இவ்வாறு உட்கொண்டால் சாத்வீக உணவு முறையினை பழக்கமாக்கிக் கொள்ளலாம்.

குழந்தை முதலே தாவர உணவு உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் கஷ்டமே தோன்றாது'' என்கிறார் வேதாத்திரி மகரிஷி.

காற்று வாங்கப் போய் கொசுக் கடியுடன் திரும்புவதா?
கொசு வந்தாச்சு! மழைக்காலம் பிறந்தாலே, கொசுவுக்குக் கொண்டாட்டம் தான். மனிதர்களின் ரத்த வேட்டையைத் துவங்கி விடும்.கொசுக்களில் பல வகை உண்டு; பகல் நேரங்களில் கடிப்பவை, இரவு நேரங்களில் கடிப்பவை என! எவ்வகை கொசுவாயினும், அவற்றில் பெண் கொசுக்கள் முட்டையிட, ரத்தம் தேவை. தொடர்ந்து ஒவ்வொரு மனிதராக அது கடிக்கும் போது, ரத்தத்தின் மூலம் பரவும் மலேரியா, யானைக்கால் நோய் (பைலேரியா), மூளைக்காய்ச்சல் (என்செபாலிடிஸ்), டெங்கூ, சிக்குன்குனியா போன்ற நோய்கள் உருவாகின்றன.மலேரியா தொற்றுக் கிருமிகளை ஏந்தி வரும் ஒரு கொசு, நம்மைக் கடித்த 10 முதல் 14 நாட்களுக்குள், மலேரியா உருவாகும். காய்ச்சல், தலைவலி, உடல் வலி, பேதி ஆகியவை ஏற்படும்.ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்ச்சல் ஏற்படும். குளிரும்; திடீரென வியர்க்கும். உடலில், ரத்த சிவப்பணுக்கள் அளவு குறையும். இதனால், ரத்த சோகை உருவாகி, சோர்வு, சோம்பல் ஏற்படும். குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் இந்நோய் வந்தால் ஆபத்து.ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் மலேரியா காய்ச்சலை கண்டறியலாம். நோய் உறுதி செய்யப்பட்டால், முழு சிகிச்சை எடுக்க வேண்டியது மிக அவசியம். இந்த நோய்க்கு காரணமான ஒட்டுண்ணிகள், நம் கல்லீரலில் அமைதியாக வாழ்ந்தபடி இருக்கும். முழுமையான சிகிச்சை எடுக்காவிடில், மீண்டும் அதிதீவிரமாக தாக்கத் துவங்கி விடும். காய்ச்சல் குறைந்தவுடன், மருந்து மாத்திரை சாப்பிடுவதை பலரும் நிறுத்தி விடுவது துரதிருஷ்டவசமானது.கடும் காய்ச்சல் ஏற்பட்டால், முறையான மருத்துவரிடம் காண்பிக்கும் பழக்கமும் மக்களிடையே இல்லை. முறையாக மருத்துவம் படிக்காத டாக்டர்கள், பல மாத்திரைகளைக் கலந்து ஒரு பேப்பர் பாக்கெட்டில் போட்டு கொடுத்து விடுகின்றனர். இவை ஆன்டிபயாடிக், ஜுர மத்திரை, ஒரு ஸ்டிராய்டு, ஒரு மலேரியா தடுப்பு மாத்திரை என இருக்கும்.இது போன்ற, குத்து மதிப்பான சிகிச்சை, சில நேரங்களில் வெற்றி பெறலாம்; பாக்டீரியாவுக்கு ஆன்டிபயாடிக்கும், மலேரியாவுக்கு அதற்கென மாத்திரையும் கொடுக்கப்படுவதால். ஆனால், இறுதியில் இந்த இரண்டு நோய்களுமே, மீண்டும் திரும்பத் தாக்கத் துவங்கிவிடும். இதன் விளைவு, உடலிலுள்ள ஒட்டுண்ணிகள், மலேரியா நோய்க்கான மருந்தையே எதிர்க்கத் துவங்கி விடும். இது ஆபத்து.பைலேரியக் கொசுக்கள் கடித்தால் ரத்தத்தில் பைலேரியா கிருமி பரவும். யானைக்கால் நோய் ஏற்படும். கடும் காய்ச்சல், குளிர் ஏற்படும். நிணநீர் சுரப்பிகளை இந்த கிருமி அடைத்துக் கொள்ளும். இதனால், கை, கால்கள் வீங்கும். ஆண்களுக்கு விரைப்பை வீக்கமும் ஏற்படும். வீங்கிய இடங்களிலுள்ள தோல் தடிமனாகி விடும். இந்த தோல், மீண்டும் கிருமிகளால் பாதிக்கப்படும்.ரத்தத்தில் பைலேரியா புழுக்கள் உள்ளனவா என்பதை, இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை வைத்துப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆரம்ப நிலை பாதிப்பை, சரி செய்து விடலாம். அல்பெண்டிசால் மாத்திரைகள் இரண்டு வாரத்திற்கும், ஐவெர்மெக்டின் மாத்திரை ஒன்றும், டைஈத்தைல் கார்பாமேசைன் மருந்து 12 முதல் 14 நாட்கள் வரையும் சாப்பிட்டால், குணமாகும். நோய் தீவிரமடைந்தால், குணப்படுத்துவது கடினம்; அறுவை சிகிச்சை மூலம் தான் வீக்கத்தை நீக்க முடியும்."ஏடிஸ் ஈஜிப்டி' கொசுக்களின் உடலில், புலிகள் போல வரி காணப்படும். பகல் நேரங்களில் மனிதர்களைக் கடிக்கும். இவற்றால், டெங்கூ, சிக்குன்குனியா நோய்கள் ஏற்படும். அதிக காய்ச்சல், உடல் முழுதும் தடிப்பு ஏற்படுதல், இணைப்புகளில் வலி, முதுகு வலி, தசை வலி ஏற்படும்.இந்த நோய்கள் இப்போது வேகமாகப் பரவும் தன்மை கொண்டவை. இந்நோயால் தாக்கப்பட்டவர்களில், மருந்து உட்கொண்டு, காய்ச்சல் குறைந்தாலும், மூட்டுகள் வலி, முதுகு வலி ஆகியவை தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த நோய்களுக்கு மருந்துகளும் கிடையாது.மூளைக்காய்ச்சலும், கொசுக்கள் மூலம் பரவுவதே. இதற்கும் சரியான மருந்து கிடையாது. ஆனால், உயிரைப் பறிக்கும் ஆபத்து, இந்த நோயில் உள்ளது. ஜப்பான் பி வகை மூளைக்காய்ச்சல் ஏற்படாமலிருக்க, தடுப்பு மருந்து உள்ளது.இத்தகைய நோய்கள் வந்த பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்வதை விட, வராமல் காப்பதே நல்லது.* பாத்திரங்களில் நீரைத் தேக்கி வைக்கக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள், தொங்கிக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் ஷீட்களை அவ்வப்போது நிமிர்த்திக் கட்ட வேண்டும்.* "ஏசி' மற்றும் கூலர்களிலுள்ள டிரேக்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அவற்றில் உப்பு தூவி வைத்தால், கொசுக்கள் அண்டாது.* பூந்தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.* திறந்த கிணறுகள், தொட்டிகளில் கொசுக்கள் புகா வண்ணம் வலை அடிக்க வேண்டும்.* அலங்கார மீன்களான, கபூசியா, போசிலி (கப்பி வகைகள்) ஆகியவை, கொசு முட்டைகளை உணவாக உட்கொள்ளும் பழக்கம் கொண்டவை. நகராட்சி அலுவலகங்கள், மலேரியா கட்டுப்பாட்டுத் திட்ட அலுவலர்கள் மற்றும் சில கடைகளில் இந்த மீன்கள் கிடைக்கும். இவற்றை பொதுக் கிணறுகள், நீர் நிலைகளில் வளர்த்தால், கொசு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.* வீட்டு ஜன்னல்கள், கதவுகளில், கொசு வலை அடித்து வைக்கலாம்.* இரவு நேரங்களில் அறையில் கொசு வலை கட்டித் தூங்கினால், கொசுக் கடியிலிருந்து தப்பிக்கலாம்.* முழுக்கை சட்டை, கால் மறையும் வகையில் பேன்ட் ஆகியவை அணிந்து படுத்தால் கொசு கடிக்காது.* கொசு கடியிலிருந்து தப்பிக்க, உடலில் பூசும் வகையிலான களிம்புகள் உள்ளன. ஆனால், அவற்றை நேரடியாக உடலில் பூசுவதை விட, ஆடைகளில் பூசிக் கொள்வது நல்லது. குழந்தைகள், கர்ப்பிணிகள் இந்தக் களிம்புகளைப் பயன்படுத்தக் கூடாது.* கொசு வத்திகள், சுருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இவை, மூச்சுக் குழலில் ஒவ்வாமை ஏற்படுத்தும். ஆஸ்துமா, அடுக்குத் தும்மல் ஆகியவற்றை உருவாக்கி விடும்.* பூச்சிக்கொல்லி மருந்துக் கெல்லாம் இப்போதைய கொசுக்கள் கட்டுப்படுவதில்லை. இந்தப் பூச்சிக் கொல்லிகளை, "ஸ்பிரே' செய்தால், இந்த மருந்தை எதிர்க்கும் சக்தியைக் கொசுக்கள் பெற்று விடும்; மனிதர்களுக்கு, மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படும்.
டாக்டர் கீதா மத்தாய், வேலூர்.

அவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?

"கூகுள்' இணையதளத்தின், "பிளாக்' எனப்படும் தனிநபர் விமர்சனங்கள், கட்டுரைகள் வெளியிடும் பகுதியில் அவதூறான செய்திகள் வெளியானால் அவற்றுக்கு அந்நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்றும், செய்திகளின் ஆசிரியரே பொறுப்பாவார் என்றும், அந்நிறுவன முன்னாள் ஊழியர் விளக்கம் அளித்துள்ளார்.
"கூகுள்' இணையதளம், கட்டுரைகள், பத்திரிகைகள், விமர்சனங்கள், ஆராய்ச்சிகள் போன்றவற்றை, விருப்பப்பட்டவர்கள் எழுதி வெளியிடுவதற்கு ஏதுவாக
www.blogger.comஎன்ற இணையதளச் சேவையை நடத்தி வருகிறது.இந்த, "பிளாக்'கில் இவ்வளவு தான் எழுத வேண்டும் என்ற வரையறை கிடையாது என்பதாலும், இது இ-மெயில் போன்று இலவச அடிப்படைச் சேவையாகக் கிடைக்கிறது என்பதாலும், பெரும்பாலோர் தங்கள் விமர்சனங்களை இதன் மூலம் தெரிவிக்கின்றனர்.ஆனால், வெளியிட முடியாத, அநாகரிகமான, அவதூறான செய்திகளையும் விமர்சனங்களையும் கூட, சிலர் தங்கள் பெயரைக் குறிப்பிடாமல் வெளிப்படுத்த, இந்த, "பிளாக்'கைப் பயன்படுத்துகின்றனர்.
அப்படி ஒரு, "பிளாக்'கில் ஒருவர் அவதூறான சில விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார் என்று, மூத்த பத்திரிகையாளர் ஒருவர், 2006, ஜூன் மாதமும், 2007, ஏப்ரலில் மற்றொருவரும், மும்பை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.அவர்கள் தம் மனுவில், அவதூறான செய்திகள் கொண்ட, "பிளாக்'கை வெளியிட அனுமதித்ததாக, "கூகுள்' நிறுவனத்தின் வெளியீட்டுப் பிரிவு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்காலிகமாக அந்த "பிளாக்' செயல்படத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.இதற்கிடையில், 2007, ஜூனில் "பிளாக்' ஆசிரியர் மீதும், நிறுவன வெளியீட்டுப் பிரிவு பொறுப்பாளர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க, மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.
2008, அக்டோபரில், "பிளாக்'குக்கு மும்பை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்தது."கூகுள்' இந்தியா நிறுவனத்தில் 2005ல் இருந்து 2007 வரை அதன் விற்பனை மற்றும் வெளியீட்டுப் பிரிவின் பொறுப்பாளராக இருந்தவர் சுந்தராமன். அவருக்கு எதிராக, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து 2009, மார்ச்சில் மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.இதையடுத்து சுந்தராமன் தாக்கல் செய்த மனுவில், தான், "கூகுள்' நிறுவனத்திலிருந்து விலகி மும்பையை விட்டு வெளியே சென்று விட்டதால், கோர்ட் சம்மனைப் பெறவில்லை என்று கூறினார். அதன்பின் 5,000 ரூபாய் ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.இந்த ஆண்டில், மாஜிஸ்திரேட்டின் நடவடிக்கையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் சுந்தராமன் தாக்கல் செய்துள்ள மனுவில், "கூகுள் நிறுவன ஊழியர்கள் எவருக்கும் அந்நிறுவனத்தையோ அதன் சேவைகளையோ கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது.
அதேபோல், "பிளாக்'கில் வரும் செய்திகளை அகற்றவோ, தடை செய்யவோ அதிகாரம் கிடையாது.வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை மக்களிடம் தெரிவிக்க, கூகுள், ஒரு தளம் மட்டுமே அமைத்து கொடுக்கிறது. மற்றபடி, வாடிக்கையாளர்களின் சொந்த கருத்துக்களுக்கு அந்நிறுவனமோ அதன் ஊழியர்களோ பொறுப்பேற்க முடியாது."பிளாக்' வெளியீடு என்பதை, "பப்ளிகேஷன்' என்பதாகக் கருத முடியாது' என்று கூறியுள்ளார்.அவர் மனு மீதான விசாரணை விரைவில் துவங்க உள்ளது.


அவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?

"கூகுள்' இணையதளத்தின், "பிளாக்' எனப்படும் தனிநபர் விமர்சனங்கள், கட்டுரைகள் வெளியிடும் பகுதியில் அவதூறான செய்திகள் வெளியானால் அவற்றுக்கு அந்நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்றும், செய்திகளின் ஆசிரியரே பொறுப்பாவார் என்றும், அந்நிறுவன முன்னாள் ஊழியர் விளக்கம் அளித்துள்ளார்.
"கூகுள்' இணையதளம், கட்டுரைகள், பத்திரிகைகள், விமர்சனங்கள், ஆராய்ச்சிகள் போன்றவற்றை, விருப்பப்பட்டவர்கள் எழுதி வெளியிடுவதற்கு ஏதுவாக
www.blogger.comஎன்ற இணையதளச் சேவையை நடத்தி வருகிறது.இந்த, "பிளாக்'கில் இவ்வளவு தான் எழுத வேண்டும் என்ற வரையறை கிடையாது என்பதாலும், இது இ-மெயில் போன்று இலவச அடிப்படைச் சேவையாகக் கிடைக்கிறது என்பதாலும், பெரும்பாலோர் தங்கள் விமர்சனங்களை இதன் மூலம் தெரிவிக்கின்றனர்.ஆனால், வெளியிட முடியாத, அநாகரிகமான, அவதூறான செய்திகளையும் விமர்சனங்களையும் கூட, சிலர் தங்கள் பெயரைக் குறிப்பிடாமல் வெளிப்படுத்த, இந்த, "பிளாக்'கைப் பயன்படுத்துகின்றனர்.
அப்படி ஒரு, "பிளாக்'கில் ஒருவர் அவதூறான சில விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார் என்று, மூத்த பத்திரிகையாளர் ஒருவர், 2006, ஜூன் மாதமும், 2007, ஏப்ரலில் மற்றொருவரும், மும்பை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.அவர்கள் தம் மனுவில், அவதூறான செய்திகள் கொண்ட, "பிளாக்'கை வெளியிட அனுமதித்ததாக, "கூகுள்' நிறுவனத்தின் வெளியீட்டுப் பிரிவு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்காலிகமாக அந்த "பிளாக்' செயல்படத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.இதற்கிடையில், 2007, ஜூனில் "பிளாக்' ஆசிரியர் மீதும், நிறுவன வெளியீட்டுப் பிரிவு பொறுப்பாளர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க, மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.
2008, அக்டோபரில், "பிளாக்'குக்கு மும்பை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்தது."கூகுள்' இந்தியா நிறுவனத்தில் 2005ல் இருந்து 2007 வரை அதன் விற்பனை மற்றும் வெளியீட்டுப் பிரிவின் பொறுப்பாளராக இருந்தவர் சுந்தராமன். அவருக்கு எதிராக, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து 2009, மார்ச்சில் மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.இதையடுத்து சுந்தராமன் தாக்கல் செய்த மனுவில், தான், "கூகுள்' நிறுவனத்திலிருந்து விலகி மும்பையை விட்டு வெளியே சென்று விட்டதால், கோர்ட் சம்மனைப் பெறவில்லை என்று கூறினார். அதன்பின் 5,000 ரூபாய் ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.இந்த ஆண்டில், மாஜிஸ்திரேட்டின் நடவடிக்கையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் சுந்தராமன் தாக்கல் செய்துள்ள மனுவில், "கூகுள் நிறுவன ஊழியர்கள் எவருக்கும் அந்நிறுவனத்தையோ அதன் சேவைகளையோ கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது.
அதேபோல், "பிளாக்'கில் வரும் செய்திகளை அகற்றவோ, தடை செய்யவோ அதிகாரம் கிடையாது.வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை மக்களிடம் தெரிவிக்க, கூகுள், ஒரு தளம் மட்டுமே அமைத்து கொடுக்கிறது. மற்றபடி, வாடிக்கையாளர்களின் சொந்த கருத்துக்களுக்கு அந்நிறுவனமோ அதன் ஊழியர்களோ பொறுப்பேற்க முடியாது."பிளாக்' வெளியீடு என்பதை, "பப்ளிகேஷன்' என்பதாகக் கருத முடியாது' என்று கூறியுள்ளார்.அவர் மனு மீதான விசாரணை விரைவில் துவங்க உள்ளது.

Dear Brothers,
Please find some of the Job sites which may helpful to someone in need...

www.almehan.ae
http://www.uaedubai jobs.com
http://www.alluaejo bs.com
http://www.dubaijob s.net
http://www.bayt. com
http://www.uaestaff ing.com
http://www.nadia- me.com
http://www.jobsindu bai.com
http://www.naukrigu lf.com
http://www.itjobsgu lf.com
http://www.gulftale nt.com
http://www.mybetter future.com
http://http: //jobs.theemirat esnetwork. com
http://ae.timesjobs .com
http://aljazeerajob s.com/jobs/ jobs-in-dubai- uae.html
http://www.allarabi a.com
http://uae.monsterg ulf.com/
http://www.recruitg ulf.com
http://www.apnijobs .com/
http://www.jobs- me.com
http://jobs. efinancialcareer s.com/Accounting _Finance/ UAE.htm
http://www.fsi. jobs
http://www.jobs123. com/
http://www.arabianb usiness.com/ jobs
http://www.gulfcons tructionjobs. com/
http://www.ixpats. com/jobs
http://www.careerje t.ae/
http://www.recruitg ulf.com/Jobs- in-UAE.asp
http://www.emirates village.com/
http://dubai- bb.com/dubai- classifieds- 40.html
http://www.balajob. com/index. php
http://www.charterh ouseme.ae
http://www.gnads4u. com/jobs
http://www.retailjo bsdubai.com
http://uae.monsterg ulf.com/it- jobs-uae. html
http://www.dubaijob snetwork. com
http://www.syriajob s.net/
http://www.workindu baiuae.com
http://www.guide2du bai.com/jobs/
http://aljazeerajob s.com
http://www.riskcare ers.com/jobs/ jobs-in-UAE
http://www.jobs4med ical.co.uk/ medical-jobs- in-uae.php
http://www.gulftale nt.com/home/ index.php
http://gulfjobseeke r.com
http://www.jobs- in-gulf-uae- bahrain-qatar- oman-dubai. linksseo. com/
http://www.bestduba ijobs.com
http://www.gulfjobs bank.com/
http://www.jobsouk. com
http://www.jobsup. com/
http://www.careermi dway.com
http://www.allabudh abijobs.com/
http://www.gulfresu meblaster. com
http://www.wizeefa. com
http://www.kareerbu ddy.com/public/ index.php
http://www.fsi. jobs/advantages. asp
http://www.apnijobs .com/jobs/ uae
http://jobs. efinancialcareer s.ie/UAE. htm
http://www.emirates -ads.ae/jobs. aspx
http://www.naukrihu b.com/overseas- jobs/gulf/ uae/
http://www.hotelier career.com/
http://www.naukridu bai.com/
http://www.precisio ndubai.com
மைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்
உங்களுக்கென்று ஒரு நிறுவனம் இயங்கி, அதற்கான இணைய தளம் ஒன்றை உருவாக்க எண்ணினால், நீங்கள் அவசியம் மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் தொகுப்பினைப் பயன்படுத்த வேண்டும். இந்த தொகுப்பின் மூலம் தொழில் ரீதியான ஓர் இணைய தளம், தளப் பெயர், இமெயில் வசதி மற்றும் அதனைத் தாங்கி இயக்கும் வசதி என அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் பெறலாம். இவை அனைத்துமே இலவசம் என்பது இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று. இதனைப் பெற நீங்கள் முதலில் அணுக வேண்டிய தள முகவரி http://officelive.com/enus/. தளத்தில் நுழைந்தவுடன் அங்குள்ள "Create a Free Website" என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். உடன் இதில் பதிவு (Sign In) செய்திட செய்தி கிடைக்கும். அனைத்தும் பதிவு செய்து உறுதியானவுடன், மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் மெயின் விண்டோவிற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு தான் உங்களுக்குத் தேவையான இமெயில் வசதி, தளப் பெயர், தள வடிவமைப்பு ஆகியவற்றைப் பெறலாம். நீங்களே உங்கள் தளத்தினை வடிவமைக்கலாம். அதற்கான டூல்கள் இங்கு தரப்பட்டுள்ளன. இங்கு சென்று இந்த டூல்களைப் பற்றித் தெரிந்த பின்பே, இணையதளம் ஒன்றினை வடிவமைப்பது எவ்வளவு எளிது என்று அறிந்து கொள்ளலாம்."Design Site" லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இரண்டு விண்டோக்கள் திறக்கப்படும். ஒரு விண்டோவில் வெப்சைட் மேனேஜர் பக்கம் கிடைக்கிறது. இன்னொன்றில் வெப் டிசைன் டூல்கள் தரப்படுகின்றன. இதற்குக் கீழாக ஹோம் பேஜ் ஒன்று தரப்பட்டு நீங்கள் எடிட் செய்வதற்கு ரெடியாக இருக்கும். அதிலேயே உங்கள் தளத்திற்கான "About Us" மற்றும் "Contact Us" தயாராக இருப்பதனைக் காணலாம். இதன் பின்னர், அதில் தரப்பட்டுள்ள எளிதான யூசர் இன்டர்பேஸ் மூலம் தளத்தினை வடிவமைக்கலாம். ஏற்கனவே மைக்ரோசாப்ட் தரும் ஷேர் பாய்ண்ட் பயன்படுத்தியவர்களுக்கு இது இன்னும் எளிதாகத் தோன்றும்.தளத்தின் ஹெடர் டெக்ஸ்ட்டை விரும்பியபடி மாற்றலாம். அதற்கான பாப் அப் விண்டோக்கள் அடுத்தடுத்து கிடைக்கின்றன. டெக்ஸ்ட்டை நமக்கேற்ற வகையில் பார்மட் செய்திடலாம். இதில் நம் இலச்சினையைச் சேர்த்து அமைக்கலாம். எளிதான டூல்களும், வழி நடத்தும் குறிப்புகளும் இணைந்து நம் இணைய பக்கத்தினை எளிதாக உருவாக்க உதவுகின்றன. மேலும் இது இலவசம் என்பது கூடுதல் சிறப்பாகும். எதற்கும் ஒருமுறை சென்று பார்த்து பயன்படுத்திப் பாருக்கள்.
நேரமும் ஓய்வும் நிறைய கிடைக்க...!
"ஓய்வு நேரத்தின் உண்மையான பிரச்சினையே, உங்கள் ஓய்வு நேரத்தினை மற்றவர்கள் அபகரித்துக்கொள்ளாமல் பார்த்துக் கொள்வதே!'' என்றார் மேலை நாட்டு அறிஞர் ஆர்தர் லேசி.
உங்கள் பொன்னான நேரத்தைச் சீரமைத்து உங்கள் நிறைவேறாத ஆசைக்கனவுகளை நனவாக்கிட சிறிதளவு முயற்சியும், பயிற்சியும் மேற்கொண்டால் போதும்.
இதோ அதற்கான சுலபமான யோசனைகள்:
* உங்கள் அன்றாட வாழ்வை ஆக்கிரமிக்கும் செயல்கள் எவை எவை என்பதை பட்டியலிடுங்கள். அவற்றில் சில முக்கியமற்ற செயல்களுக்கு நேரம் ஒதுக்குவதை நீக்கி விடுங்கள்.
* உங்கள் அன்றாட வாழ்வின் அத்தியாவசிய தேவைகள் என்னென்ன என்பதை பட்டியலி டுங்கள். நீங்கள் விரும்பும் ஆசைக்கனவுகள் என்னென்ன என்பதையும் பட்டியலி டுங்கள்.
* தொலைக்காட்சி முன் அதிகநேரம் இருப்பது, வெட்டியாக ஊர் சுற்றுவது போன்ற காலத்தை விரயமாக்கும் செயல்கள் உங்களிடம் காண பட்டால் அவற்றை ஒதுக்கிவிட்டு அந்தநேரத் தை உங்கள் லட்சிய வழிகளுக்கு பயன்படுத் துங்கள்.
* உங்களால் செய்ய முடியாமல் சிதறிக் கிடக்கும் செயல்களை ஒருங்கிணையுங்கள். 2 அல்லது 3 நாட்கள் இழுத்தடிக்கும் வேலை களை ஒரே நாளில் செய்து முடித்து காலத்தைச் சேமிக்க சற்று சிந்திங்கள். தகவல் தொடர்புகளை வளர்த் தால் அதிக அளவு நேரத்தைச் சேமிக்கலாம். அதேநேரம் ஈமெயில் உங்களை நாள்முழுக்க ஆக்கிரமித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* பிறரிடமிருந்து வரும் அத்தியாவசிய வேண்டுகோள்களைத் தவிர, பிறவற்றிற்கு முடியாது என்று கூறும் பழக்கத்தை உருவாக்குங்கள். அனைத்து வேண்டுகோள்களுக்கும் முடியும் என்று கூறினால் உங்களுக்கு ஓய்வு நேரம் என்பதே கிடைக்காது.
* உங்கள் அலுவலக அலுவல்கள் அனைத்தையும் நீங்கள் ஒருவரே செய்ய நினைக்கும் பழக்கத்தை மாற்றி உங்கள் பணியாளர்களிடமும் சிலவற்றை ஒப்படைத்துச் செய்துமுடிக்கச் சொல்லுங்கள்.
* மாலை வேளைகளில் உங்கள் குழந்தைகளிடம் விளையாடி அன்றாட பாடங்களைச் சொல்லிக் கொடுப்பது, பொழுதுபோக்காக பூங்காக்களில் உல்லாசமாக உலா வருவது, நீங்கள் விரும்பும் பயனுள்ள புத்தகங்களை படிப்பது போன்றவற்றில் முழுமனதுடன் ஈடுபடுங்கள்.
இவ்வாறு செய்வதால் நேரம் மிச்சமாகும். அந்த நேரத்தை ஓய்வுக்கும், மகிழ்ச்சிக்கும் ஒதுக்கி நீங்கள் ஆனந்தமாய் வாழலாம்.

பயர்பாக்ஸ் ஷார்ட் கட் கீ தொகுப்புகள்

இணையத்தில் எளிதாகவும், வேகமாகவும் உலா வர கீழே தரப்பட்டுள்ள சுருக்கு வழிகள் நமக்கு அதிகம் பயன்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் நம் இணையப் பயணத்தில் நேரம் மிச்சமாவதுடன், நம் உழைப்பும் தேவையற்ற வகையில் செலவாகாது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.Alt + Left Arrow: இணைய தளம் ஒன்றை பின்பக்கமாகத் தள்ளுகிறது. அதாவது குறிப்பிட்ட தளத்திற்கு முன் உள்ள பக்கத்திற்கு உங்களை மாற்றுகிறது.Alt + Right Arrow: மேலே கூறியதன் மாற்றாகச் செயல்படும்F5: அப்போதைய டேப், பிரேம் மற்றும் இணைய தளத்தினைப் புதுப்பிக்கும்F11: அப்போதைய இணைய தளத்தினை முழுத் திரையில் காட்ட உதவும். மீண்டும் பழைய நிலைக்குக் காட்டவும் இதனைப் பயன்படுத்தலாம்.Esc: இறக்கப்படும் ஓர் இணைய தளத்தினை நிறுத்திவிடலாம்.Ctrl + ( or +): இந்த கீ இணைப்பில், பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தின் டெக்ஸ்ட் எழுத்துக்கள் அளவு பெரியதாகலாம், சிறியதாகலாம்.Ctrl + Enter: இணைய தள முகவரி ஒன்றின் பெயர் மட்டும் கொடுத்து, இவற்றைத் தட்டினால் முழுவதுமாகக் கிடைக்கும். (.com என்பதில் முடியும் தளப் பெயர் மட்டும்) எடுத்துக்காட்டாக, http://www.google.com என்பதற்கு google என டைப் செய்து, இந்த கீகளை அழுத்தவும்.
Shift + Enter: மேலே சொன்னபடி ".net" என முடியும் தளங்களுக்கு இந்த கீகளைப் பயன்படுத்த வேண்டும் .Ctrl + Shift + Enter: மேலே குறிப்பிட்டுள்ளபடி ".org" என முடியும் தளங்களுக்கு இந்த கீகளைப் பயன்படுத்த வேண்டும்.Ctrl + Shift + Del: இந்த கீகளைப் பயன்படுத்தி Clear Data என்ற விண்டோவினைத் திறந்து, நம் பெர்சனல் டேட்டாக்களை நீக்கலாம்.Ctrl + D: அப்போது பயன்பாட்டில் உள்ள தளத்திற்கான புக் மார்க் ஒன்றை ஏற்படுத்தும்.Ctrl + I: இருக்கின்ற அனைத்து புக்மார்க்குகளையும் காட்டும்.Ctrl + J: டவுண்லோட் விண்டோவினைக் காட்டும்.Ctrl + N: புதிய பிரவுசர் விண்டோவினைத் திறக்கும்.Ctrl + P: அப்போதைய இணையப் பக்கத்தினை அச்சிட.Ctrl + T: புதிய டேப் ஒன்று திறக்கப்படும்.Ctrl + F4 or Ctrl +W: அப்போதைய டேப்பினை அப்போதைக்கு மூடும்.Ctrl + Shift + T: அப்போது மூடப்பட்ட டேப்பில் இருந்த விண்டோவினைத் திறக்கும்.Ctrl + Tab: திறக்கப்பட்டுள்ள ஒவ்வொரு டேப்கள் வழியாகச் செல்ல இவை உதவும்.Spacebar: இணையதளப் பக்கத்தில் கீழாக ஒரு பக்கம் செல்ல இந்த கீகள் பயன்படுத்தப்படுகின்றன.Shift + Spacebar: இணையதளப் பக்கம் ஒன்று மேலாகச் செல்லும்.Alt + Down arrow: டெக்ஸ்ட் பாக்ஸில் டைப் செய்த அல்லது கீழ்விரி மெனுவில் தந்த டெக்ஸ்ட் அனைத்தையும் காட்டும்.

கேளுங்க...காது கொடுத்துக் கேளுங்க!(காது கோளாறு)
"நான் சொல்வதை காது கொடுத்துக் கேட்கிறானா?'' பிரச்சினைகள் வரும்போது இளைஞர்களை பார்த்து பெரியவர்கள் கூறும் வார்த்தை இது. உலகில் கேட்பதில்தான் அதிக ஞானம் பெறமுடியும். வள்ளுவரும் `செவிச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை' என்று கூறி இருக்கிறார்.
கண்கள் மனிதனுக்கு 80 சதவீத அறிதலைத் தருகிறதாம். ஆனால் கண்ணிருந்தும், காது இல்லாவிட்டால் நமக்கு உலகத் தொடர்பே அற்றுபோகும். ஆமாம், எல்லாமே பேசாத உலகமாகத்தான் தெரியும். ஒரு நிமிடம் காதை பொத்தி பாருங்கள், உண்மை புரியும். கேட்க முடியாவிட்டால் பேச்சும் வராது தெரிமா? ஒலி `டெசிபல்' என்ற அலகால் அளக்கபடுகிறது. மனிதனால் 20 முதல் 2,000 ஹெர்ட்ஸ் அலைநீளம் உள்ள ஒலியைக் கேட்க முடியும். டெசிபல் அளவில் 80 டெசிபல் ஒலியை ஆபத்தில்லாமல் கேட்கலாம். அதிக ஒலி உள்பட பல்வேறு காரணங்களால் காது கேட்பதில் கோளாறு ஏற்படும்.
சிலருக்கு பிறவியிலேயே காது கேட்காமல் போவதும் உண்டு. இதற்கு கர்ப்பிணி உண்ணும் மாத்திரையும் ஒரு காரணமாக இருக்கிறது. மற்றபடி பாரம்பரியம் காரணமாக இருக்கலாம்.
காதில் அழுக்கு சேருவது, செவிப்பறையில் ஓட்டை விழுவது, எலும்புகளில் அரிப்பு ஏற்படுவது என வேறு சில காரணங்களும் காது கேட்கும் திறனை பாதிக்கும். வெளிக்காது, நடுக்காது, உள்காது என 3 பகுதிகளாக காதை பிரிக்கிறார்கள். நடுக்காதில் இருக்கும் செவிப்பறை மற்றும் எலும்புகள் கேள்திறனில் முக்கியபங்கு வகிக்கிறது. உள்காதில் ஒலியுணர் நரம்புகளும், அதற்கு துணைபுரியும் திரவங்களும் இருக்கின்றன. பெரும்பாலான காது பாதிபுகளுக்கு சிகிச்சைகள் இருக்கின்றன. முக்கிய நரம்புகள் பாதிக்கபட்டால்கூட வேறு நரம்புகளில் இருந்து பிரித்தெடுத்து புது நரம்பு வளர்த்து பொருத்தும் அளவுக்கு மருத்துவதொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. முக்கு, தொண்டை, தாடையில் ஏற்படும் பாதிப்புகள் கூட காதில் பிரச்சினையை உருவாக்கலாம். இது முளையின் தவறால் நடக்கிறது. காது நரம்புகள் முளைக்கு அருகில் இருப்பதாலும், மற்ற நரம்புகளுடன் தொடர்பு இருப்பதாலும் முளையின் தகவல்கள் இடம்மாறி வருவதால் காது பாதிப்பதாக உணரப்படுகிறது.
காதில் எறும்பு அல்லது பூச்சி புகுந்துவிட்டால் உடனே காது குடையக்கூடாது. வெளிச்சம் வரும் திசையில் காதைத் திருப்பினாலே பூச்சிகள் வெளியேறிவிடும். இல்லாவிட்டால் சிறிது தண்ணீர் அல்லது எண்ணையை காதில் விடவேண்டும். இது பலன்தராவிட்டால் டாக்டரைஅணுக வேண்டும். சீழ் வடிவது காதுகேட்கும் திறனை பாதிக்கும். இது ஊட்டச்சத்து குறைவு, காது மாசடைவதால் வரக்கூடியதாகும். துர்நாற்றம் வீசாமல் வரும் சீழ் ஆபத்தில்லாதது. நாற்றம் அதிகமாக இருக்கும் சீழ் கேட்டல் திறனை பாதிக்கும்.
இதனால் நடுக்காதில் சதை வளர ஆரம்பிக்கும். இதை கவனிக்காமல் விட்டால் காது மொத்தமாக கேட்காமல் போய்விடும். இந்த பாதிப்பு `கொலஸ்டியட்டோமா' எனபடுகிறது. ஆபரேஷன் செய்தாலும் (சிலவேளைகளில்) காதுகேட்கும் திறன் திரும்புமா? என்பது சந்தேகம்தான். குரும்பி எடுக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. குச்சி, பின், சாவி, பென்சில், பேப்பர், பட்ஸ் என கையில் கிடைப்பதை வைத்து குரும்பியை எடுக்கிறார்கள். உண்மையில் குரும்பி இருப்பது காதுக்கு அவசியமானது. அது காதை பாதுகாக்கும். அதிகமான குரும்பி தானாகவே வெளியேறிவிடும்.
பட்ஸ் உபயோகிபது குரும்பியை உள்ளே தள்ளத்தான் செய்யும். சொட்டுமருந்து, அல்லது தேங்காய் எண்ணை முலம் குரும்பியை வெளியில் எடுக்கலாம். சிறு கல், பாசி போன்ற பொருட்கள் காதில் விழுந்தால் உடனே டாக்டரை அணுகுவது நல்லது. காதில் ஈரத்தன்மை இருந்தால் தானாகவே பூஞ்சை வளர ஆரம்பித்துவிடும். இதனால் காது அடைக்கும், சீழ் வடியும். இதுபோன்ற பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே டாக்டரிடம் காட்ட வேண்டும். சுயமாக சொட்டுமருந்து வாங்கி பயன்படுத்தக்கூடாது.
எண்ணைவிடுவது, சொட்டுமருந்து விடுவதெல்லாம் பூஞ்சையை வளர்க்கும் உரம்போலத்தான் செயல்படும். இதை தடுக்க பூஞ்சையை சுத்தம் செய்துவிட்டு பூஞ்சைக்கு எதிரான சொட்டுமருந்தை பயன்படுத்த வேண்டும். பூஞ்சை ஒருமுறை வந்தால் மீண்டும் வளரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். கேட்கும் வேலையை மட்டும் காது செய்வதில்லை. உடல் வெப்பநிலையை சமநிலைபடுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. காது, முக்கு, தொண்டை முன்றும் நெருங்கிய தொடர்பு உடையவை. காது கேட்பதில் தொடைக்கு பங்கு உண்டு.
மனிதர்களைவிட விலங்குகள் காதை நுட்பமாக பயன்படுத்துகின்றன. பூகம்பம் முதலான இயற்கைச் சீற்றங்களையும் முன்கூட்டியே அவை கண்டுகொள்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மன்னர்கள் காலத்தில் மனிதர்களும் பூமியில் காதை வைத்து எதிரியின் படை எவ்வளவு தூரத்தில் வருகிறது, எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று கணித்தார்களாம். கா து பிரச்சினைகளுக்கு உடலில் அணிந்து கொள்ளும் வகையிலான `காது கேட்டல் உதவி உபகரணங்கள்' கிடைக்கின்றன. இதில் சிலவற்றை சட்டை பையில் வைத்துக்கொள்ளலாம். இந்த வகைக் கருவிகள் பின்விளைவு ஏற்படுத்துவதில்லை. காதுகேட்கும் திறன் பெருமளவு பாதிக்கபட்டவர்கள் பெரும்பாலும் இதுபோன்ற கருவிகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
மிகச்சிறிய கருவிகள் பல உள்ளன. பி.டி.. கருவி (காதின் பின்னால் அணிவது), .டி.. கருவி (காதுக்குள் பொருத்திவிடுவது), .டி.சி. கருவி (உட்காதில் பொருத்துவது), சி..சி. கருவி (கண்ணுக்கே தெரியாத ஆழத்தில் பொருத்துவது) ஆகியவை குறிபிடத்தக்கவை. இப்போதெல்லாம் எங்கும் சத்தம் அதிகமாக இருக்கிறது. இது காதுகளை வெகுவாக பாதிக்கும். ரெயில் இயங்கும் டெசிபல் அளவுக்கு மேல் ஒலிவரும் இடங்களில் காதுபாதுகாப்புக் கருவி இல்லாமல் பணி செய்யக்கூடாது.
காதில் பஞ்சுவைத்துக் கொள்வது ஓரளவு பாதுகாப்பு தரலாம். 140 டெசிபல் அளவுக்கு மேல் உள்ள சத்தத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் கேட்கக்கூடாது. அதிக ஒலிகள் காதை மட்டும் பாதிக்காமல் மனபாதிப்புகளையும் உருவாக்கும். வயிற்றில் புண், அஜீரணம் போன்ற கோளாறுகளையும் ஏற்படுத்தலாம். பார்வையும், கருவையும்கூட பாதிக்கும்.