Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

முதன்முதலாக காலரா கிருமிகளையும், மற்ற நோய்க் கிருமிகளையும் கண்டுபிடித்தவர் ஜெர்மன் விஞ்ஞானி ராபர்ட் கோக். 1883-ம் ஆண்டில் நோய்க் கிருமிகளை அவர் கண்டுபிடித்தார். அவர் பெயரால் அமைந்துள்ள ஆய்வகம், இன்று காலரா கிருமிகளை முறியடிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ராபர்ட் கோக் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். காசநோய்க் கிருமிகள், காலரா கிருமிகள், காயங்களில் தொற்றும் கிருமிகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து, அவற்றைத் தடுக்கும் முறைகளையும் முதன்முதலில் கண்டுபிடித்தார்.

அதற்குப் பின்புதான் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஏற்படுகின்ற பல கொடிய நோய்களை அடையாளம் கண்டுபிடிக்கும் முறைகள் வகுக்கப்பட்டன. இன்றைக்கும்கூட கிருமிகளால் உண்டாகும் நோய்களைப் பற்றிய ஆய்வுகளுக்கு ராபர்ட் கோக்கின் கண்டுபிடிப்புகளே ஆதாரமாய் விளங்குகின்றன.